ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

+2
மகா பிரபு
முஹைதீன்
6 posters

Go down

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? Empty கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

Post by முஹைதீன் Thu Sep 29, 2011 5:41 pm

சுவிஸ் வங்கி ரகசியங்கள்
கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

கருப்புப் பணத்தின் அடிப்படை ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு, அடித்துப் பிடுங்கல், ஏமாற்றுதல், சூழ்ச்சியால் திசை திருப்பல். ஊழலும், ஏய்ப்பும்தான் கருப்புப் பணத்தின் விதை.
சம்பளம் வாங்குபவர்களுக்கு சம்பளத்திலேயே பிடித்தமெல்லாம் போக மிச்சம்தான் கைக்கு வரும். ஆனால் அரசியல்வாதிகள், முதலாளிகள், பெரும் பணக்காரர்கள், சினிமா போன்றவற்றில் இது கிடையாது. அவர்கள் கொடுக்கும் கணக்கிலிருந்துதான் வரி விதிக்கப்படும். இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஏய்ப்பும் ஊழலும். எப்படியெல்லாம் ஏய்க்கிறார்கள். ஊழல் எங்கிருந்தெல்லாம் செய்யப்படலாம். எவ்வாறெல்லாம் பணத்தினை லஞ்சமாய், திசை திருப்பலாய்ப் பிடுங்கலாம் என்பதெல்லாம் இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.
ஏய்த்த, ஊழல் செய்த பணத்தினை உள்நாட்டில் வைத்திருப்பது ஆபத்து. அதனால் இதனைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்திருக்கவேண்டும். ஒரு வேளை உள்நாட்டில் ஏதாவது குளறுபடிகள் நடந்தால், பணம் பத்திரமாய் இருக்க வேண்டும். தேவையென்றால் உலக கரன்சிகளில் மாற்றி வைத்திருந்தால், வேறெங்காவது போய் கடை பரப்ப ஏதுவாக இருக்கும். நாம் வைத்திருக்கும் பணம் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் முக்கியமாய் ரகசியமாகவும் இருக்க வேண்டும். பணமிருப்பது தெரிந்தால் எதிரிகள் இறுதி முயற்சியாய் போட்டும் தள்ளலாம். இத்தனை எதிர்பார்ப்புகளோடு எங்கே பணம் வைக்க முடியும் ?
சுவிட்சர்லாந்து.
ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையின் சரிவில் இருக்கும் ஒரு குட்டி நாடு. சுவிஸ் சாக்லெட்கள், ஆல்ப்ஸ் மலையின் ஸ்கீயிங் போன்றவற்றுக்கு மிகப் பிரசித்தம். அதைவிடப் பிரசித்தம் – சுவிஸ் வங்கிகள்.
உலகின் நம்பர் 1 ரகசிய வங்கிகளின் தாயகம். நேர்மையான காரணங்களில் ஆரம்பித்து அடாவடியான செயல்களில் ஈடுபட்டு சேர்த்த பணம் வரை கழுத்தை வெட்டினாலும் காட்டிக் கொடுக்காத நேர்மையோடு இருக்கும் ஒரே நாடு. சுவிஸ் வங்கிகள் மட்டும்தான் இதைச் செய்கின்றன என்று அர்த்தமல்ல. உலகில் பல்வேறு குட்டித் தீவுகள், பிரிட்டிஷ் அரசுக்குக் கீழே வரும் காலனிகள், அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற குட்டித் தீவுகள் எனப் பலவும் இந்த மாதிரியான ஆஃப்ஷோர் பேங்கிங்கிற்கு (Offshore Banking) பிரசித்தி பெற்றவையே. ஆனாலும், ரகசிய வங்கிப் பரிவர்த்தனைகளில் சுவிஸ்தான் சச்சின் தெண்டுல்கர்.
சுவிட்சர்லாந்து, 300 ஆண்டுகளாய் யாரோடும் சண்டைக்கு போகாத, மல்லுக்கு நிற்காத தேசம். மொத்த ஐரோப்பாவும் திசைக்கு ஒருவராய் தோள் தட்டி நின்ற இரண்டாம் உலகப் போரின்போது கூட வெளியே நின்ற தேசம். சுவிட்சர்லாந்தில் வங்கிகள் எப்படி உருவாகின என்பது ஒரு சுவாரசியமான கதை.
1713-இல் ஆரம்பிக்கிறது இந்தக் கதை. ‘கிரேட் கவுன்சில் ஆப் ஜெனிவா’வில் அந்த வருடத்தில் தான் ரகசிய வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விவரங்களின் மீதான உச்சக்கட்டப் பாதுகாப்பு & யாரிடத்திலும் பகிராமை என்கிற கூறுகளோடு சட்டம் இயற்றினார்கள். அன்றைக்கு ஆரம்பித்ததுதான் சுவிஸ் வங்கிகளின் இன்றைய ப்ரீமியம் மதிப்புக்கான காரணம். இன்று வரைக்கும் ஒரு வேளை ஒரு வங்கியாள் விவரங்களை வெளியே கொடுத்தாலும் அது சிவில் கேஸ் மட்டுமே. கிரிமினல் கேஸ் கிடையாது. அதனால், வாய் மூடிய, செவி திறந்த பேங்கர்கள் சுவிட்சர்லாந்தினை சொந்த ஊராய் நினைத்துக் கொண்டு கப்பலேறினார்கள்.
சுவிஸ் வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாய் பிரபலமாகத் தொடங்கின. பிரபுக்கள், தனவந்தர்கள், ராஜவம்சத்தினர் முக்கியமாய் பிரெஞ்ச் ராஜவம்சத்தினர் என பதினெட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த இந்த வாடிக்கையாளர் கூட்டம், இருபத்தியோறாம் நூற்றாண்டில் நல்லவர்கள், சர்வாதிகாரிகள், முதலாளிகள், நிறுவனங்கள், மாபியாக்கள், போதை மருந்து கடத்துபவர்கள், ஊழல் அரசியல்வாதிகள், புரோக்கர்கள் என மாபெரும் மனித சமூக அடையாளங்களோடு நிறைந்திருக்கிறது. பக்கத்தில் போய் கேட்டால், சுவிஸ் அதிகாரிகள் “அதெல்லாம் சும்மா, நாங்க உஜாலா சுத்தம், வேணும்னா டெஸ்ட் பண்ணிக்கிடுவோம்” என்று சீன் போடுவார்கள். இதற்கும் ஒரு காரணம் இரண்டாம் உலகப் போரில் ஆரம்பித்தது.
இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். ஹிட்லர் ஒவ்வொரு பிரதேசமாய் சுவாகா பண்ணிக் கொண்டிருந்த வேளை. ஐரோப்பாவிலிருந்த யூதர்கள் தங்களுடைய வாழ்நாள் பணத்தினை சுவிஸ் வங்கிகளில் சேர்க்க ஆரம்பித்தார்கள். ஹிட்லர் அப்போது ஜெர்மனியில் ஒரு சட்டமியற்றினார். ஜெர்மானியர்கள் எவரெல்லாம் அந்நிய நாட்டில் பணம் வைக்கிறார்களோ அவர்களுக்கு மரண தண்டனை. போர் உச்சக்கட்டத்திலிருந்த நேரம். இந்த சட்டம் இயற்றப்பட்டவுடனே, சுவிட்சர்லாந்து அரசு இன்னமும் தங்களின் வங்கி ரகசியத்தைப் பேண ஆரம்பித்தது. பின்னாளில், போர் நடந்த சமயத்தில், நாஜி ஆட்களே கொள்ளையடித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் நிரப்பியதும் நடந்தது.
இந்த நேரத்தில்தான் சுவிஸ் வங்கிகள் எதிர்பார்க்காத காரியத்தினை செய்தன. நாஜிக்கள், யூதர்களின் ஆவணங்களை அழிக்க ஆரம்பித்தார்கள். யாருக்குமே கிடைக்காத பரிசு அது. போரால் உலகமே சின்னா பின்னாமாகிக் கொண்டிருந்தபோது போரில் கலந்து கொள்ளாத ஒரு நாட்டில் பணமும், தங்கமும் கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஹோலோகாஸ்டில் சாகடிக்கப்பட்ட யூதர்களின் பணத்தையெல்லாம் சுவிஸ் வங்கிகள் விழுங்கிவிட்டது என்கிற குற்றச்சாட்டு பின்னாளில் வந்து அது இன்று வரை ஓடிக் கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் காரணம் சுவிஸ் ப்ராங்கின் [அந்நாட்டு நாணயம்] நிலையான தன்மை. கரன்சிகள் அனைத்தும் ஏற்றத்தாழ்வுகளோடே இருக்கும் என்பது பொருளியல் விதி. ஆனால் கிட்டத்திட்ட நிலையாய் இருக்கும் ஒரே கரன்சி – சுவிஸ் ப்ராங்க். அதுவுமில்லாமல், வங்கியில் இருக்கும் பணத்திற்கு ஈடாய் 40% தங்கமாய் வைத்திருக்கும் ஊரும் சுவிஸ்தான். பணத்துக்குப் பணம். பாதுகாப்புக்கு தங்கம். அதனால்தான் எல்லாரும் அங்கே ஓடுகிறார்கள்.
சுவிஸ் வங்கிகள் நம்மூர் வங்கிகள் போலத் தான். சேமிப்பு, நடப்புக் கணக்குகள்; சில்லறை வங்கிச் சேவை; வரிகள் போன்றவையெல்லாம் உண்டு. ஆனால், சுவிஸ் வங்கிகளின் உலகப் பெருமை என்பது அவர்களின் நம்பர்டு அக்கவுண்ட் (Numbered Accounts) என்பதில் ஆரம்பிக்கிறது.
எம்.ஜி.ஆர் சமாதிக்கு வரும் மொட்டை போட்ட ஊரார்கள் எல்லார்க்கும் சொல்லப்படும் கதை – ‘காது வைச்சுக் கேளுங்க, எம்.ஜி.ஆர் கட்டியிருந்த கடிகாரம் இன்னமும் ஓடிக்கிட்டு இருக்கு. அதுல தான் அவரோட சுவிஸ் பேங்க் நம்பர் இருக்கு’. பிலிப்பென்ஸின் முன்னாளைய அதிபரின் மனைவி இமால்டா மார்கோஸ். வருமானத்திற்கு மீறிப் பணம் சேர்த்ததாகக் குற்றச்சாட்டு. $430 மில்லியன் சுவிஸ் வங்கிகளில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அம்மணி இப்போது மீண்டும் ஹாயாக வலம் வர ஆரம்பித்து விட்டார். சுகார்தோ சுவிஸ் வங்கியில் போடக் கொடுத்த காசு, ஊர் உலகமெல்லாம் சுற்றி, கடைசியில் கோயமுத்தூரில் ஒரு பேக்டரியில் வந்து விழுந்தது நான் நேரில் கேட்ட நிஜக்கதை. ஐந்து மாதங்களுக்கு முன் எகிப்தில் காலாவதியான ஹோஸ்னி முபாரக், இன்னும் அகப்படாமல்இருக்கும் லிபிய கடாபி என எல்லார்க்கும் சுவிஸ் வங்கியில் இருக்கிறது ஒரு நம்பர்டு அக்கவுண்ட்.
இந்த நம்பர்டு அக்கவுண்ட்தான் கருப்புப் பண சேமிப்புக் கூடம். நம்பர்டு கணக்கில் உங்கள் பெயரோ, முகவரியோ இருக்காது. உங்களுடைய கணக்கு என்பது 34 இலக்க எண் அல்லது ஒரு புனைபெயர். உங்களைப் பற்றிய தகவல்கள் வெகு ரகசியமாய், உங்கள் கணக்கினைத் துவங்கும் அதிகாரி மற்றும் வங்கியின் உயர்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். வங்கியில் இருந்தாலும் வேறு யாருக்கும் தெரியாது. குறைந்த பட்ச வைப்பு: $100,000 பின்னாளில் நடக்கும் பரிவர்த்தனைகள் குறைந்த பட்சம் $50,000 க்கு மேலிருக்க வேண்டும். நம்பர்டு கணக்கில் மட்டும்தான் உலகிலேயே நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கு, வங்கிக்கு வட்டி செலுத்தவேண்டும். 10 வருடங்கள் பரிவர்த்தனைகள் இல்லாமல் போனால் உங்களை உலகில் தேட ஆரம்பிப்பார்கள். விவரங்களை நீங்கள் ஒழுங்காய் கொடுத்திருந்தால் பணம் வாரிசுக்குப் போகும். இல்லையென்றால், வங்கிக்கு. விழுந்தால் உமக்கு, விழாவிட்டால் சுவிஸுக்கு என்கிற லாட்டரித்தனமான வர்த்தகம்.
இந்தக் கணக்கிற்குதான் பணக்கார உலகம் ஆலாய்ப் பறக்கிறது. ஹசன் அலி லண்டனுக்கு சீசன் டிக்கெட் எடுக்கிறார். அக்கால இடி அமீனிலிருந்து இன்று வந்த நடிகர் வரை ஆசைப்படுகிறார். எல்லா அரசியல்வாதிகளும் லண்டனுக்கு டூர் போகிறார்கள். லண்டனில் சுவிஸ் வங்கி சேவை ஆலோசனை நிறுவனங்கள் தடுக்கி விழுந்தால் கிடைக்கும். எல்லார் கனவும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பது. இம்மாதிரியான சேவைகளால்தான் பரிமாற்றங்கள், பரிவர்த்தனைகள் அதீதப் பணம், அதன் மூலம் வரும் திமிர், கர்வம்,தடைகளற்ற வாசல் திறப்புகள், அதிகார மமதை. சேர்த்த பணத்தினை விஸ்தரிக்க வழியில்லாமல் போனால், யாருக்கும் அதிகமாய் சம்பாதிக்கத் தோன்றவே தோன்றாது. ஆனால் சுவிஸ் வங்கிகள் வெறும் பாதுகாப்பு மட்டுமல்ல, அங்கிருந்து உலக வர்த்தகத்தில் பணத்தினைப் போட்டு இன்னமும் பெருக்கலாம். கரன்சி சந்தைகள், ஆயில், கமாடிட்டி, ரியல் எஸ்டேட், குதிரைப் பந்தயம், க்ரூஸ் கப்பல்கள், படகுகள் என நீளும் பணப்பெருக்க முயற்சிகளில் எதில் வேண்டுமானாலும் இறங்கலாம்.
சுவிட்சர்லாந்தின் மொத்த வங்கிப் பொருளாதார கணக்கினை இரண்டே வங்கிகள் தான் கட்டுப்படுத்துகின்றன். UBS என்றழைக்கப்படும் யுனைட்டட் பேங்க் ஆப் சுவிட்சர்லாந்து மற்றும் கிரெடிட் ஸ்யூஸே (Credit Suisse) வங்கி. நடக்கும் பரிவர்த்தனைகளில் 50% இவ்விரண்டு வங்கிகளின் மூலமே நடக்கும்.
மன் மோகன் சிங் / பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் பெரியவர்கள், பட்டியல் வந்து விட்டது, வெளியிட மாட்டோம், ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்றெல்லாம் சொல்வது UBS வெளியிட்ட அறிக்கை மட்டுமே.


நன்றி : http://topsitv.blogspot.com/2011/09/blog-post_3158.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? Empty Re: கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

Post by மகா பிரபு Thu Sep 29, 2011 6:00 pm

இது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு.

எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம். இந்தியாவில் இருந்து சுவிஸ்க்கு பணத்தை எப்படி கொண்டு போகிறார்கள்? ஹவாலா மோசடி என்பது என்ன? அறிந்தவர்கள் சொல்லலாமே!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? Empty Re: கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

Post by சுரேஷ் Thu Sep 29, 2011 7:13 pm

மகா பிரபு wrote:இது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு.

எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம். இந்தியாவில் இருந்து சுவிஸ்க்கு பணத்தை எப்படி கொண்டு போகிறார்கள்? ஹவாலா மோசடி என்பது என்ன? அறிந்தவர்கள் சொல்லலாமே!

ஹவாலா பணம் என்றால் என்ன?

http://www.eegarai.net/t68625-topic


நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? Empty Re: கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

Post by மகா பிரபு Thu Sep 29, 2011 10:13 pm

தகவலுக்கு நன்றி சுரேஷ்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? Empty Re: கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

Post by jesudoss Fri Sep 30, 2011 12:42 am

யாரும் அறிந்திராத மிக அருமையான தகவலை தந்ததற்கு நன்றி நண்பரே
நன்றி நன்றி நன்றி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? 154550 கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? 154550 கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? Empty Re: கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

Post by சுரேஷ் Fri Sep 30, 2011 4:58 am

மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி சுரேஷ்.

:நல்வரவு: நன்றி நன்றி நன்றி


நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்


பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? Empty Re: கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

Post by அருள் Fri Sep 30, 2011 11:30 am

நல்ல தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி திரு. மொஹிதின். அருள்
அருள்
அருள்
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Back to top Go down

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? Empty Re: கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

Post by அருண் Fri Sep 30, 2011 1:58 pm

கருப்பு பணம் பற்றிய எங்களுக்கு அறிய தந்தமைக்கு நன்றி..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ? Empty Re: கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum