புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு! Poll_c10வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு! Poll_m10வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு! Poll_c10 
5 Posts - 63%
heezulia
வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு! Poll_c10வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு! Poll_m10வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு! Poll_c10வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு! Poll_m10வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 28, 2011 4:31 pm

வறுமைக் கோடு நிர்ணயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் - ஓர் ஒப்பீடு!
- சி.சரவணன்

அண்மையின் மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது. அதாவது, தினசரி ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று சொல்லி இருக்கிறது.

இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களில் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.965 மற்றும் ரூ.781-க்கும் அதிகமாக செலவு செய்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருத இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தினசரி நகரங்களில் ரூ.32-க்கும், கிராமங்களில் ரூ.26-க்கும் அதிகமாக செலவிடுபவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்காக வழங்கப்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளை பெற முடியாது.

அதே நேரத்தில், சென்னை, புதுடெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ.3,860-ஐத் தாண்டினால் அந்தக் குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு தானியங்களுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5.50, பருப்பு வகைகள், பால் மற்றும் சமையல் எண்ணெய்க்காக நாள் ஒன்றுக்கு முறையே ரூ.1.02, ரூ.2.33 மற்றும் ரூ.1.55 செலவிட்டால் போதுமானது என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்ன என்றால், நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துக்காக மாதம் ஒன்றுக்கு ரூ.49.10-க்கும் அதிகமாக செலவு செய்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

மாதம் ஒன்றுக்கு மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக முறையே ரூ.39.70 மற்றும் ரூ.29.60 செலவிடுபவர்களை ஏழையாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடு தற்காலிகமானதுதான் என்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் தெண்டுல்கர் குழு அறிக்கைபடி இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீடு சரிதானா என்றால் ஆரம்ப பள்ளிக் கூடத்தில் படிக்கும் பிள்ளைக் கூட இல்லை என்று சொல்லிவிடும். காரணம், நகரங்களில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கான ஒரு நாள் செலவு 32 ரூபாயை விட அதிகமாக இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஒரு நாளில் மூன்று வேலை பால் மற்றும் பிஸ்கட், மூன்று வேளை சாப்பாடு, பள்ளிக் கூடத்துக்கு சென்று வரும் போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கில் எடுத்தால் சர்வ சாதாரணமாக 50 ரூபாயை தாண்டிவிடும்.

அடுத்து, வளர்ந்த ஒரு இந்தியரை எடுத்துக் கொண்டால் அவர் நகரங்களில் மதிய வேளையில் ஓரளவுக்கு நல்ல திருப்திகரமான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றாலே சுமார் 35 ரூபாய் தேவைப்படும். இந்த ஒரு வேளை உணவுக்கே திட்டக் கமிஷன் குறிப்பிடும் தொகை செலவாகி விட்டால் மற்ற வேளைகளில் பட்டினியா கிடப்பது?

இந்த அறிக்கையில் கொடுமையான விஷயம் என்னவென்றால் நகர்புறங்களில் வசிப்பவர்களின் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவு மாதம் ஒன்றுக்கு 49.10 ரூபாயை தாண்டினால் அவர்கள் பணக்காரர்களாம். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் முக்கியமான பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ஒரு ச.அடியின் வாடகையை 50 ரூபாய்க்கு அதிகமாக இருக்கிறது. போக்குவரத்து செலவை பற்றி கேட்கவே வேண்டாம். கூப்பீடு தூரத்துக்கு போக வேண்டும் என்றாலே ஆட்டோவுக்கு குறைந்தது 20 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.

அடுத்த மிகப் பெரிய கேலிக் கூத்து..!

மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக மாதம் 39.70 ரூபாய் செலவு செய்யும் நகர் புற இந்தியர்கள் பணக்காரர்களாம். நகரங்களில் மணிக் கணக்கில் காத்திருந்து டாக்டர்களின் ஆலோசனை பெற ஒரு முறைக்கு குறைந்தது 100 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதில், அவர் மருந்து - மாத்திரைகள் எழுதிக் கொடுத்தால் குறைந்தது, ஐநூறு ரூபாய் காலி.

இந்தியாவில் வறுமை கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து காட்டவே செயற்கையான முறையில் இயல்பு வாழ்க்கைக்கு மாற்றமாக திட்டக் குழு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் தனிநபர் வருமானம் போன்றவற்றால், உலகின் பணக்கார நாடு என்ற பெருமைக்குரிய அமெரிக்கா தற்போது அந்நிலையை படிப்படியாக இழந்து வருகிறது.

இன்றைய நிலையில் உலகில் மோசமாக நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடு அமெரிக்கா.
அங்கு அமெரிக்காவில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 22,314 டாலருக்கு (சுமார் ரூ.10.50 லட்சம்) குறைவாக இருந்தால் அந்த குடும்பம் வறுமையில் வாடுவதாக எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல், தனிநபராக இருந்தால் அவரது ஆண்டு வருமானம் 11,139 டாலருக்கு (சுமார் ரூ.5.25 லட்சம்) குறைவானால் அவரும் வறுமையில் வாழ்பவராக கருதப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானத்தோடு ஒப்பிடும் போது இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம், கிட்டத்தட்ட 272 மடங்கு குறைவு. இந்தியாவை விட அமெரிக்காவில் செலவுகள் நிச்சயமாக 272 மடங்கு அதிகம் என்று சொல்ல முடியாது.

அமெரிக்காவின் வசிக்கும் நம் தமிழ் நண்பர்களிடம் பேசிய போது ஒரு விஷயம் பிடிபட்டது. நம் ஊரில் ஒரு குடும்பத்தின் மாத வருமானம் சுமார் 10,000 ரூபாய் இருந்தால் ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அமெரிக்காவில் மாத வருமானம் சுமார் 1,150 டாலர் இருந்தால் ஒரு குடும்பம் சமாளிக்க முடியும். அந்த வகையில் அந்த நாட்டின் வறுமைக் கோட்டு கணக்கெடுப்பு சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லாம். அதையொட்டி பார்க்கையில், நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் என்பதற்கான வருமான அளவை மாத வருமானம் 10,000 ரூபாய் என்று நிர்ணயிப்பது நியாயமாக இருக்கும்.

அரசு செய்யுமா?

நன்றி
http://news.vikatan.com/?nid=4078

சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Wed Sep 28, 2011 5:26 pm

நல்ல ஒப்பீடு....

பகிர்வுக்கு நன்றி...



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக