ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

+2
வித்யாசாகர்
nandhtiha
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by nandhtiha Tue Sep 22, 2009 5:06 pm

வணக்கம்
அன்புச் சகோதரி மீனுவுக்கு
இதோ உனக்காக ஒரு சிலேடைக் கவிதை

சங்கத்தைத் தாங்குதலால் தண்மை பொருந்துதலால்
எங்கும் பரவி இருத்தலால்-அங்கத்தில்
ஐந்து மமைவுறலா லாரணங்கே ஒர்ந்துபார்
செந்தமிழே மாலாகும் தேர்

அழகிய பெண்ணே

தமிழ்ச் சங்கம் வளர்த்ததாலும் குளுமை பொருந்தியதாலும் உலகில் எல்லா மொழிகளுக்கும் உயிரெனப் பாவி
இருத்தலாலும் தமிழ்த்தாய் தன் அங்கத்தில் ஐம்பெருங்காப்பியத்தை அணிதலால்
செந்தமிழும்

பாஞ்சஜன்யம் என்னும் சங்கைத்தாங்குதலாலும் குளிர்ச்சி பொருந்திய தண்ணீரில் சயனித்திருப்பதாலும்
(குளுமை பொருந்திக் காக்கும் கடவுளாதலாலும்) தன்னுடைய அங்கத்தில் ஐந்து விதமான
ஆயுதங்களத் தரித்தலாலும்
திருமாலும்

ஒன்றெனத் தெரிந்து கொள்வாயாக
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by வித்யாசாகர் Tue Sep 22, 2009 6:04 pm

"சங்கத்தைத் தாங்குதலால் தண்மை பொருந்துதலால்
எங்கும் பரவி இருத்தலால்-அங்கத்தில்
ஐந்து மமைவுறலா லாரணங்கே ஒர்ந்துபார்
செந்தமிழே மாலாகும் தேர்"


வைகளெல்லாம் உங்களை போன்றோரால் மட்டுமே.. முடிகிறது சகோதரி..

ஆயினும் என் போன்றோருக்கு மன்னிக்கவும் குறிப்பாக எனக்கு, இதை ஏன் எழுதினீர்களென்று கூட சரியாக புரிவதில்லை போல் உணர்கிறேன். மன்னிக்கவும்.

"ஈகரைக்கென இத்தனை உழைக்கிறாயே.., எல்லோரின் மனதையும் அன்பால் கொள்ளை கொண்டுள்ளாயே.., நல்ல குணங்களை கொண்டுள்ளாயே..,இவைகள் தெய்வ குணங்களுக்கு சமம் என்று மனதார வாழ்த்துகிறீர்களா?"

என்று கேட்டுவிட மட்டும் நான் வரவில்லை அன்பு சகோதரி. "எப்படி இருக்கிறீர்கள் நலமா?
இறைவன் உங்களை நலமோடே வைத்திருக்கட்டும்; எங்களை நன்கு வழி நடத்தட்டும்" என்று இலை மறை காயாக வாழ்த்த அந்த திருமாலின் தாழ் பணிந்து.. நலம் விசாரிக்கவும் வந்தேன் சகோதரி.
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by மீனு Tue Sep 22, 2009 6:21 pm

அன்பின் நந்திதா அக்கா , உங்க இந்த கவிதை புரிந்து கொள்ளுமளவு எனக்கு தமிழ் அறிவு எனக்கு இல்லை என்பது எனக்கு வலியை தருகின்றது ,என் அன்பு சகோதரிக்கு என்று இந்த கவிதையை தந்திருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகின்றதே,அதே நேரம் புரியாமல் உள்ளது அக்கா ,ஆனா இதன் விளக்கத்தை நான் எப்படியாவது முயற்ச்சி செய்து விளங்கிப்பேன் என்ற நம்பிக்கையுடன் என் அன்பு அக்காவுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் சமர்பிக்கின்றேன் ,
அன்பு மீனு அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை 154550


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by nandhtiha Tue Sep 22, 2009 6:36 pm

வணக்கம்
அன்புடை இளவல் வித்யாசாகர் மற்றும் அன்புச் சகோதரி மீனுவுக்கு
நான் நலமாக இருக்கிறேன். ஆனால் வரும்செய்திகள் நலமாக இருக்க விடுமா என்று தெரியவில்லை. புத்தனைப் பின்பற்றும் பித்தர்கள் கொத்துக் கொத்தாய்க் கொல்கிறார்களே இவர்கள் சித்தம் தெளிய வழியில்லையா என்று சிந்திக்கும் போது கொந்தளிக்கிறது உள்ளம். உலகம் என்பது உயர்ந்தோர் மேன என்றது தொல்காப்பியம். உலகத்தில் உயர்ந்தோர்களே இல்லாதொழிந்து விட்டார்களா? அன்பு இளவல் வித்யாவுக்கு நின் எழுதுகோல் உறக்கத்திலிருக்கும் நெஞ்சங்களில் உழுது அவைகளை எழுப்பட்டும். பரணி பாடி நின் தமிழ் தரணியை வெல்லட்டும். உங்களுக்குத் திறமை இருக்கிறது. அது வாழ்க வளர்க!!
அன்புச் சகோதரி மீனுவுக்கு. அந்தப்பாடலின் பொருளையும் கொடுத்துள்ளேன். படித்துப் பார்க்கவும். இது ஒரு மகடூஉ முன்னிலைப்பாடல்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by மீனு Tue Sep 22, 2009 6:43 pm

நன்றிகள் அக்கா ,நமக்கு புரியவில்லை என்றதும் உங்கள் நேரத்தை பொருட்படுத்தாது நமக்கு விளங்க வைத்ததுக்கு நன்றிகள் பல அக்கா , மீனுவுக்கு திறமை இருக்கு என்று அக்கா வாயாலே பாராட்டு கிடைத்தது என்றால் என் வாழ்வில் கிடைத்த பெரிய பாராட்டு இதுதான் அக்கா.. நன்றிகள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by வித்யாசாகர் Tue Sep 22, 2009 6:49 pm

வணக்கம்!

மிக்க நன்றி சகோதரி.

இயன்றளவு கவிதைகளும் காற்றின் ஓசையும் படிக்கிரீர்களென நம்புகிறேன்.

என் அனைத்து கவிதைகளையும் இல்லைஎன்றாலும் காற்றின் ஓசை முழுக்க முழுக்க சமூக சீர்திருத்த உணர்வுகளை கருத்தில் கொண்டு எழுத நினைத்திருப்பது, நேரம் கிடைப்பின் விமர்சனம் கொடுக்க விட்டாலும் பரவாயில்லை, அதை படித்து மட்டும் வாருங்கள். தவறு இருப்பின் தங்களை தானே எழுத வைக்கும் என்பது எனக்கும் ஈகரைக்கும் தெரியும்.

வாழ்க! தங்களின் முயற்சிகள் வெல்க!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by nandhtiha Tue Sep 22, 2009 6:57 pm

வணக்கம்
தவறாது உங்கள் சமூகக் கவிதைகளைப் படித்து வருகிறேன்.மனதுக்குள் பாராட்டிக் கொண்டும் இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by வித்யாசாகர் Tue Sep 22, 2009 7:02 pm

நன்றி சகோதரி! வணக்கம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by nandhtiha Tue Sep 22, 2009 9:02 pm

வணக்கம்
பெருமதிப்புக்குரிய சிவா அவர்கள் ஒரு புலவர் பாடிய பாட்டினை ஈகரையில் பதிப்பித்தார். அதில் பணத்தட்டு என்ற சொல்லை வைத்துப் புலவர் தன் சொல் வன்மையைக் காட்டினார், அதில் பணத் தட்டு என்றால் என்ன என்று புரியவில்லை என்று என் அன்புக்குரிய சகோதரி கேட்டிருந்தாள் அதற்குள் இருந்த இருபொருட்களின் அர்த்த விசேஷத்தை எடுத்துக் கூறினேன். உடனே ஒரு சிலேடைக் கவி எழுதினால் என்ன என்று தோன்றியது அதனால் தான் எழுதினேன். உங்களுடைய எல்லா சமூகக் கவிதைகளையும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னிடம் உள்ள குறை சொற் குற்றம் இருந்தாலும் பொருட் குற்றம் வரலாகாது என்று நினைப்பது. காரணம் தமிழறிந்த பெரியவர்களின் மனதில் கவி எழுதியவரைப் பற்றித் தவறான கருத்து உருவாகி விடக்கூடாது என்பது தான். ஆனால் அதனைச் சிலர் புரிந்து கொள்ளாதது என் வினைப் பயன் தான். வேறென்ன சொல்ல? உங்களை வாழ்த்தத்தகுதி இருக்கிறதோ இல்லையோ நானறியேன். ஆனால் மனம் வாழ்த்துகிறது
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by வித்யாசாகர் Tue Sep 22, 2009 10:12 pm

எங்களின் முழு அன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய சகோதரியே, தகுதியை பற்றி எல்லாம் பேசி எங்களை தூர நிறுத்தி விடாதீர்கள். முதலில் வாழ்த்த வயது வேண்டாம் அன்பான மனது போதுமென்ற எண்ணத்தில் தான் உங்களுக்குக் கூட வாழ்த்துக்கள் என்றென், அப்படி இருக்க என்னை வாழ்த்த எந்த தகுதியும் வேண்டாம் சகோதரி.

உங்களை போன்றோரின் நாவில் வாழ்த்தும் வார்த்தைகளாய் நிற்க நான் பேறல்லவா பெற்றிருக்கவேண்டும். அதுபோல் யாவர் கருத்தும் புடம் போடுவதற்குத் தானே யொழிய பழிப்பதர்கல்லவே. அதையும் மீறி காய்க்கும் மரங்கள் கல்லடி படத் தானே செய்யும் சகோதரி. மரங்கள் நாம் கல்லடி படுகிறோமே இனி காய்க்கவேண்டாமென நிறுத்திக் கொள்வதில்லையே, அந்த பட்சத்தில் நாம் மரமாக இருந்துக் கொள்வோம் சகோதரி.

அன்பு கூர்ந்து நான் எழுதுவதில் ஏதேனும் குறிப்பிடத் தக்க தவறோ பொருட்குற்றமோ இருப்பின் எனக்கு அறியப் படுத்த வேண்டுகிறேன். அதிக பச்சம் நான் எழுதும் ஒவ்வொரு எழுத்திற்கும் என்னிடம் விளக்கம் இருக்குமென்றே நம்புகிறேன். எனினும் யானைக்கே அடி சறுக்க எனக்கெப்படி சருக்காதென்பேன்.
அதுபோல் மனிதன் தனக்காக வாழ்ந்து தன்னை மனிதனாகவும், பிறருக்காக வாழ்ந்து மகானாகவும் தன்னை இருவேறு அடையாளப் படுத்திக் கொள்வதை தாங்களும் அறிவீர்கள்.

இதில் தாங்களெந்த அடையாளத்திற்க்காய் வாழ்கிறீர்களென்ன்பதை நாங்களறிவோம். பிறகேன் சகோதரி புரிந்துக் கொள்ளாதவர்களை பற்றி நினைத்து வருந்துகிறீர்கள். உலகம் மொத்தமும் ஒருவரை சரியென்று ஏற்றுக் கொண்டால் அந்த உலகத்திற்கு அவரை பற்றி முழுதாக தெரிய வில்லை என்றே கூறலாம். விதிவிலக்கு யாரேனும் இருந்து போகட்டும்.

நாணயத்திற்க்கு இரண்டு பக்கமிருக்கையில் ஓரு பக்கமே பார்க்கத் தெரிந்தவர்க்கு ஒன்று அதன் மதிப்பு தெரியாது அல்லது வரலாறு தெரியாது தானே. நம்மை தெரியாதவர்கள் நம்மை பற்றி ஏதேனும் பேசிவிட்டுப் போகட்டும், எங்கோ செய்த பிழைக்கு தண்டனை என்று எடுத்துக் கொள்வோம். தெரிந்தவர்களுக்கு நாம் தானே இலக்கு. அவர்களுக்காக வாழ்வோம் சகோதரி.

நான் கூட இத்தனை புத்தகம் எழுதி என்ன கண்டோமென நிறைய வருந்தி இருக்கிறேன். இந்த சமூகத்திற்கு நம் கருத்தெல்லாம் வேப்பிலை என வருந்தி இருக்கிறேன், ஆனால் என்றோ நானெழுதிய முதல் புத்தகம் படித்துவிட்டு சென்ற மாதம் கல்லூரியில் படிக்கும் ஓரு மாணவன் என் நட்பு கிடைத்தால் அது பேறென்று எழுதி இருக்கிறார். கனவு தொட்டில் நாவலை பலர் படித்துவிட்டு கடிதம் எழுதுகிறார்கள்.
கனவுத் தொட்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டு வந்துள்ளது. என் புகழுக்காக இதை இங்கே தெரியப் படுத்தவில்லை சகோதரி, நல்லதென்று நாம் செய்யும் அத்தனை காரியங்களும் என்றோ ஓரு தினத்தில் இந்த சமூகத்திற்கு புரிய வரும். யாரோ ஒருவருக்கு அது வழி காட்டும், அந்த வழி காட்டலில் நம் அத்தனை உழைப்பும் தனக்கான காரணத்தை தானே கண்டுக் கொள்ளும் சகோதரி.


முடிவை ஒன்று சொல்லி முடிக்கிறேன் எதற்கும் வருத்த படாதீர்கள், எதை உங்கள் கடமை என நினைக்கிறீர்களோ அதை செவ்வனே செய்யுங்கள். உடல் நலமும் பார்த்துக் கொள்ளுங்கள். ஈகரை உங்களுக்காய் காத்துக் கொண்டே தானே இருக்கிறது. எங்களின் தவறு எனது பிழை எதுவாயினும் எடுத்துச் சொல்லுங்கள்.

எனக்கான அறிவுரையை, வாழ்த்தை, கருத்து கூறலை.. உங்களிடம் இருந்து எப்பொழுதும் பெறவே காத்திருக்கிறேனென்பதை பணிவன்புடன் தெரிவிக்கிறேன். நன்றி வணக்கம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை Empty Re: அன்புச் சகோதரிக்கு ஒரு சிலேடைக் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum