புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Poll_c10பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Poll_m10பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Poll_c10பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Poll_m10பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Poll_c10பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Poll_m10பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்!


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 27, 2011 3:05 pm

பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Underground-Parking-300x199சென்னையின் மல்டிப்ளெக்ஸ்கள், புதிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தாலும், உள்ளே ஒருமுறை போய் வரும் சாமானியர்கள் நிச்சயம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக வேண்டியுள்ளது.

காரணம் இவற்றின் பிரமாண்டங்களோ, பிடுங்கப்படும் அதிகபட்ச கட்டணங்களோ இல்லை. பூமியைக் குடைந்து குடைந்து அங்கே உருவாக்கப்பட்டிருக்கும் பாதாள வாகன நிறுத்துமிடங்கள்.

முன்பெல்லாம் அதிகபட்சம் தரைக்குக் கீழே ஒரு தளம் அமைக்கப்பட்டு அங்கே வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்திருப்பார்கள். அடையாறு பார்க், தாஜ், லீ மெரிடியன் போன்றவற்றில் இப்படித்தான் உள்ளன.

ஆனால் இப்போது அமையும் பெரும் கட்டடங்களில் அதிகபட்சம் 5 தளங்கள் அதளபாதாளத்திலேயே அமைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே வாகனங்கள் நிறுத்துவதற்காகவாம். அவ்வளவு முன்யோசனையாம். இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கட்டடத்தின் பாதாள பார்க்கிங், அடுத்த கட்டட பாதாள வாசலில் போய் முடியுமோ என்னவோ!

இங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு வருவதற்குள் நாம் படும் பாடு இருக்கிறதே… இங்கே வாகனங்களை ஒழுங்கு செய்ய பணிக்கப்பட்டுள்ள செக்யூரிட்டிகளுக்கு ஏதோ ‘அண்டர்வேல்டு டான்’ என்ற நினைப்பு. படுத்துகிறார்கள் (பேஸ்மெண்டில் இருப்பதால் நிஜமாகவே அப்படி ஒரு நினைப்பிருக்குமோ!!)பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! HYATT_main-300x199

இந்த கொடுமை ஒருபக்கமிருக்கட்டும்…. எந்த அளவு இவை பாதுகாப்பானவை என்ற கேள்விக்கான பதில்தான் கொடூரமானது. ஹயாத் ரீஜென்ஸி, அம்பா மால் போன்ற கட்டடங்களில் வேலைகள் முழுமையாக முடியும் முன்னரே பாதாள நிறுத்துமிடங்களில் வாகனங்களைத் துரத்துகிறார்கள்.

கிண்டி, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்வட்ட சாலை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் இப்போது அமையும் பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பெரும் கட்டடங்களுக்கு பார்க்கிங் வசதி இப்படித்தான் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் நிலநடுக்க வளையத்துக்குள் இல்லாத காலத்தில், ஒரு தளத்தை மட்டும் பூமிக்கு அடியில் அமைத்து வந்தவர்கள், இப்போது சென்னையும் நிலநடுக்க ஆபத்துக்குள்ளிட்ட பகுதி என தெரியவந்த பிறகு ஐந்து அல்லது ஆறு தளங்களை பாதாளத்தில் அமைப்பது எந்த வகையில் அறிவுப்பூர்வமானது என்பதை இந்தக் கட்டடங்களுக்கு அனுமதி அளித்தவர்கள் பதில் சொல்வார்களா?

தீ விபத்து போன்ற எதிர்பாராத நெருக்கடிகளில் இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள், அங்கேயே தங்கியிருக்கும் ஏராளமான ஊழியர்கள் கதி என்னாகும்? கடந்த ஆண்டு டெல்லியில் இதுபோன்ற பார்க்கிங் பகுதியில் திடீர் சரிவு ஏற்பட அதில் சிக்கி 5 பணியாளர் மரணமடைந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். எக்கச்சக்க வாகனங்களும் சேதமடைந்தன.

சென்னையில் இட நெருக்கடி என்பது உண்மைதான். அதைச் சரிகட்டத்தான் துணைநகரம் என்ற பெயரில் விவசாயத்தை காலி செய்துவிட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாதிரி பெரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்களை போதிய இடமிருந்தால் மட்டுமே சென்னை நகருக்குள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், நகருக்கு வெளியே விரிவாக்கம் செய்யப்படும் புதிய பகுதிகளில் விஸ்தாரமாக அமைக்க வகை செய்ய வேண்டும்.

பூகம்ப ஆபத்து, மண் தளர்வு என புவியியல் ரீதியான பேராபத்துகள் சூழ்ந்துள்ள இந்த காலத்தில் தரைப்பகுதிக்கு கீழே பூமியைக் குடைந்து கொண்டே போவது பேரழிவுக்கே வழிவகுக்கும்.

கண்சிமிட்டும் நேர அளவில் ஒரு வேக அதிர்வை இயற்கை தன் அதிருப்தியாகக் காட்டினால் கூட, இந்த கட்டடங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்து போகும் அபாயம் உள்ளது என நிலவியல் வல்லுநர்கள் எச்சரிப்பதை அரசுகள் புறக்கணிப்பது கூடாது!

என்வழி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Image010ycm
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 3:10 pm

இதுபோன்ற வாகன நிறுத்துமிடங்கள் இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்திருப்பார்கள். அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு உங்களை யார் அங்கேயே தங்கச் சொன்னது. மொத்தத்தில் அதனுள் 10 நிமிடம் செலவழிக்கும் உங்களுக்கு இவ்வளவு கேள்விகள் ஏன் என்பது மட்டும் புரியவில்லை.



பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 27, 2011 3:14 pm

சிவா wrote:இதுபோன்ற வாகன நிறுத்துமிடங்கள் இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்திருப்பார்கள். அங்கு சென்று காரை நிறுத்திவிட்டு உங்களை யார் அங்கேயே தங்கச் சொன்னது. மொத்தத்தில் அதனுள் 10 நிமிடம் செலவழிக்கும் உங்களுக்கு இவ்வளவு கேள்விகள் ஏன் என்பது மட்டும் புரியவில்லை.


ஃபிகரை கூட்டிட்டு மணிக்கணக்கில் மால்களில் செலவழிபவர்கள் நிறையபேர் உள்ளனர்... அவர்களின் கவலையின் வெளிப்பாடாக இருக்கலாம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 3:17 pm

பிகரைக் கூட்டிக் கொண்டு ஏன் கார் பார்க்கிற்குள் போக வேண்டும். காரை பார்க் செய்ததும் நேராக shopping complex-க்குள் செல்ல வேண்டியதுதானே!



பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 27, 2011 3:20 pm

சிவா wrote:பிகரைக் கூட்டிக் கொண்டு ஏன் கார் பார்க்கிற்குள் போக வேண்டும். காரை பார்க் செய்ததும் நேராக shopping complex-க்குள் செல்ல வேண்டியதுதானே!

காம்ப்லெக்ஸ்சுக்குள் சென்று வருவதற்குள் கார் சேதமடைந்தாலும் நஷ்டம்தானே...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 27, 2011 3:22 pm

dsudhanandan wrote:

காம்ப்லெக்ஸ்சுக்குள் சென்று வருவதற்குள் கார் சேதமடைந்தாலும் நஷ்டம்தானே...

அதற்கு அவர்கள் தனியாக இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பார்கள்.



பில்டிங் ஸ்ட்ராங்… ‘பேஸ்மெண்ட்’ படு மோசம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக