Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலு வைக்க சில டிப்ஸ் :)
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கொலு வைக்க சில டிப்ஸ் :)
ஆச்சு, மகாளயம் முடிந்து விட்டது, இன்று மகாளைய அமாவாசை இன்று பரணில் இருக்கும் கொலு பொம்மைகளை எடுத்து, படி கட்டி கொலு வைக்க வேண்டியது தான். அப்படி வைக்கும் போது உபயோகப்பட சில டிப்ஸ். நீங்களும் இங்கு எழுதுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)
வணக்கம் அம்மா நல்ல திரி எங்கள் வீட்டில் செய்யும் முறைகளையும் கொஞ்சம் சொல்கிறேன் ....
1. முதலில் படிகளை அழகுபடுத்த அதை நன்கு சுத்தம் செய்து துணி போட்டு ஒவொரு படியிலும் ஏதாவது அழகிய வேலைப்பாடு செய்தால் பார்க்க நன்றாக இருக்கும் .
2. அடுத்து கோலம் போடும்போது கலர் பொடி அல்லது துருவிய உலர்த்த தேங்காயீயை கோல பொடியில் கலந்து கோலம் போட்டால் நன்றாக இருக்கும்
அடுத்து கேட்டு சொல்கிறேன் அம்மா
1. முதலில் படிகளை அழகுபடுத்த அதை நன்கு சுத்தம் செய்து துணி போட்டு ஒவொரு படியிலும் ஏதாவது அழகிய வேலைப்பாடு செய்தால் பார்க்க நன்றாக இருக்கும் .
2. அடுத்து கோலம் போடும்போது கலர் பொடி அல்லது துருவிய உலர்த்த தேங்காயீயை கோல பொடியில் கலந்து கோலம் போட்டால் நன்றாக இருக்கும்
அடுத்து கேட்டு சொல்கிறேன் அம்மா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)
இது தினமலரில் படித்தது
செப்.28ல், நவராத்திரி ஆரம்பமாகிறது. இதையொட்டி கொலு வைக்க தயாராகி
வருவீர்கள். இந்த வருடம் நவராத்திரக்காக கொலு வைப்பவர்கள் 27.9.2011 அன்று
மகாளய அமாவாசையாக இருப்பதால் அன்றைய தினத்தில் நல்ல நேரம் பார்த்து கொலு வைக்கலாம். வருஷம்தோறும் ஒரே மாதிரியான பொம்மைகளை அடுக்கி போரடிச்சு போச்சா! இந்த வருஷம், மேற்குவங்காளத்தில் இருந்து புதுசா புதுசா, சின்னதா, அழகா பொம்மைகள் வந்திருக்கு! அதுபற்றி தெரிஞ்சுகிட்டு வாங்கிட்டு
வாங்களேன்! கொலு வைக்கும் போது, ஒற்றைப்படை எண்ணில், மேடை படி அமைப்பது வழக்கம். ஒவ்வொரு வருஷமும், புதுசா மூணு பொம்மையாவது வாங்கவேண்டுங்கிறது சம்பிரதாயம். நம் வீட்டுக்கு மட்டுமல்ல! கோயில்களில் நடக்கிற கொலுவுக்கும் பொம்மை வாங்கிக் கொடுப்பது மிகப்பெரிய கைங்கர்யம். ஆளுக்கு மூணு பொம்மை வாங்கிக் கொடுத்தாலும், ஒரு ஊரே வாங்கிக் கொடுக்கும் போது, கோயிலில் பொம்மைகள் குவிஞ்சிடும்! இந்த வருஷம் பூம்புகார் நிலையங்களுக்கு, தஞ்சாவூர், காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து விற்பனைக்காக பொம்மைகள் வந்துள்ளன. காதிபவன், சர்வோதய சங்கம், பூம்புகார் விற்பனை நிலையங்களுக்கு போனா இதையெல்லாம் பார்க்கலாம்.களிமண், பேப்பர்கூழ், பீங்கான் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த பொம்மைகள் 15ரூபாயில் இருந்து
1600ரூபாய் வரைக்கும் விற்குது!
பெங்கால் பொம்மைகள்:
பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி விழாவிற்காக இந்த ஆண்டு பெங்கால்
பொம்மைகள்அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவை கோல்கட்டாவில் இருந்து
வரவழைக்கப் பட்டுள்ளன. வடக்கத்திய கிராமிய ஆண், பெண் பொம்மைகள், காய்கறி விற்கும் பெங்காலி பெண், தச்சர், கொல்லர், குயவர், பூஜை செய்யும்
சிவாச்சாரியார், கூடை பின்னுபவர் போன்ற பொம்மைகள் 75ரூபாயில் இருந்து
ரூ.120 வரை விற்குது!.
பஜனை கோஷ்டி பொம்மை:
பெங்களூரு, மும்பை, திருப்பதி,
தமிழகத்திலுள்ள பெரிய நகரங்களில் இஸ்கான் அமைப்பு நிர்வகிக்கும் ராதா
கிருஷ்ணன் கோயிலுக்கு நீங்க போயிருப்பீங்க! அங்கே கோஷ்டியாக பஜனை
பாடுபவர்களை பார்த்தால் நமக்கும் ஆடத்தோன்றும். அந்தக் கோஷ்டியை பொம்மையாக
வடித்து விற்பனைக்கு அனுப்பியிருக்காங்க! இதற்கு இஸ்கான் செட் பொம்மைன்னு
பெயர். ஜால்ரா,ஹார்மோனியம், ஸ்ருதி சேர்ப்பவர், பாடுபவர் என்னும் நான்கு பேர்
கொண்ட இந்த செட்டின் விலை ரூ.400. நார்த் இந்தியன் தாத்தா பாட்டி பொம்மை
செட் எல்லாரையும் கவரும். விலை ரூ170. இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்,
பாட்டி சொல்றதை சம்மதிப்பது போல தாத்தாவும், தாத்தா சொல்றதைக் கேட்பது போல
பாட்டியும் ஸ்பிரிங் கழுத்துடன் தலையாட்டுவது ரசிக்கும்படியா இருக்குது!
விதவிதமான கிருஷ்ணர்:
மகாவிஷ்ணுவின் அவதாரங்களான
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், ராமன், பலராமன்,
கிருஷ்ணர், கல்கி ஆகிய தசாவதார செட்டின் விலை ரூ500. குழலூதும் கண்ணன்,
வெண்ணெய் திருடுபவன், ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், புன்னைவன கிருஷ்ணன்,
பசுமேய்க்கும் கிருஷ்ணன் என்று விதவிதமான கிருஷ்ணர் சிலைகளும் இருக்குது!
விலை ரூ. 200 முதல் ரூ400 வரை. ஆறுகோபியர் கண்ணனைச் சூழ்ந்து நடனமாடும்
கோபியர் செட் ரூ400. செராமிக் என்னும் பீங்கானால் ஆன பிள்ளையார், ஐயப்பன்,
போகசக்தி அம்பாள் மற்றும் குதிரை, முயல், நாய் சிலைகளும் இங்குள்ளன.
இச்சிலைகள் விருத்தாசலத்தில் இருந்து வந்திருக்கு! மெழுகினால் செய்யப்பட்ட
காய்கறி, பழங்கள்,லவ்பேர்ட்ஸ், நூலினால் பின்னப்பட்ட பொம்மைகள், ராஜேஸ்வரி
சபை செட், பர்வதமலை செட், பெருமாள் செட்டும் புதுரகம்.
தஞ்சாவூர்
பொம்மைகள்: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காலத்தால் அழியாதவை. குழந்தையின்
அழுகையை நிறுத்த, டென்ஷனைக் குறைக்க இந்த பொம்மைகளுக்கு சக்தியுண்டு
என்பர். செட்டியார், ஆச்சி, டான்சிங் கேர்ள் என பலவிதமான தலையாட்டி
பொம்மைகளும் வந்திருக்கு! விலை ரூ80முதல் ரூ1000 வரை. மயில், குருவி,
குயில், கிளி, லவ்பேர்ட்ஸ் ஜோடியாக விற்கப்படுகின்றன. ஒருஜோடி ரூ50க்கும்,
இரண்டு ஜோடிரூ75க்கும் உள்ளன.
கொலு வைப்பது ஏன்:
நவராத்திரி வந்தால் கொலு வைக்க
வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு
பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால்,
ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான
ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி
இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி
என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு,
புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள்
பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும்
என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு
என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை
அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா
உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள
வேண்டும்.
கொலு மேடைக்கு பூஜை செய்வது எப்படி?
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு
ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும்.
குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து,
மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க
வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை
அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.
பொம்மைகளை அடுக்கும் முறை
மனிதனாகப்
பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வநிலைக்கு உயர வேண்டும்.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவது
மரபு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலம் போடவேண்டும்.
கொலு மேடையின் உயரம் கைக்கெட்டும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது
நல்லது. கீழிருந்து மேலாக படிகளில் பொம்மைகளை அடுக்க வேண்டும்.
முன்னரெல்லாம் களிமண்ணால் செய்யப்பட்ட எறும்பு, புழு உள்ளிட்ட பொம்மைகளைக்
கூட தங்கள் கையாலேயே செய்து வைத்தனர். இப்போது கடைகளில் கிடைக்கும்
பொம்மைகளையே வைப்பதால், அழகுக்கு தரும் முக்கியத்துவம் ஆன்மிகத்துக்கு
தரப்படுவதில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த ஆண்டில் இருந்தாவது,
எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து
செய்யலாமே!
செப்.28ல், நவராத்திரி ஆரம்பமாகிறது. இதையொட்டி கொலு வைக்க தயாராகி
வருவீர்கள். இந்த வருடம் நவராத்திரக்காக கொலு வைப்பவர்கள் 27.9.2011 அன்று
மகாளய அமாவாசையாக இருப்பதால் அன்றைய தினத்தில் நல்ல நேரம் பார்த்து கொலு வைக்கலாம். வருஷம்தோறும் ஒரே மாதிரியான பொம்மைகளை அடுக்கி போரடிச்சு போச்சா! இந்த வருஷம், மேற்குவங்காளத்தில் இருந்து புதுசா புதுசா, சின்னதா, அழகா பொம்மைகள் வந்திருக்கு! அதுபற்றி தெரிஞ்சுகிட்டு வாங்கிட்டு
வாங்களேன்! கொலு வைக்கும் போது, ஒற்றைப்படை எண்ணில், மேடை படி அமைப்பது வழக்கம். ஒவ்வொரு வருஷமும், புதுசா மூணு பொம்மையாவது வாங்கவேண்டுங்கிறது சம்பிரதாயம். நம் வீட்டுக்கு மட்டுமல்ல! கோயில்களில் நடக்கிற கொலுவுக்கும் பொம்மை வாங்கிக் கொடுப்பது மிகப்பெரிய கைங்கர்யம். ஆளுக்கு மூணு பொம்மை வாங்கிக் கொடுத்தாலும், ஒரு ஊரே வாங்கிக் கொடுக்கும் போது, கோயிலில் பொம்மைகள் குவிஞ்சிடும்! இந்த வருஷம் பூம்புகார் நிலையங்களுக்கு, தஞ்சாவூர், காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து விற்பனைக்காக பொம்மைகள் வந்துள்ளன. காதிபவன், சர்வோதய சங்கம், பூம்புகார் விற்பனை நிலையங்களுக்கு போனா இதையெல்லாம் பார்க்கலாம்.களிமண், பேப்பர்கூழ், பீங்கான் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த பொம்மைகள் 15ரூபாயில் இருந்து
1600ரூபாய் வரைக்கும் விற்குது!
பெங்கால் பொம்மைகள்:
பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி விழாவிற்காக இந்த ஆண்டு பெங்கால்
பொம்மைகள்அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவை கோல்கட்டாவில் இருந்து
வரவழைக்கப் பட்டுள்ளன. வடக்கத்திய கிராமிய ஆண், பெண் பொம்மைகள், காய்கறி விற்கும் பெங்காலி பெண், தச்சர், கொல்லர், குயவர், பூஜை செய்யும்
சிவாச்சாரியார், கூடை பின்னுபவர் போன்ற பொம்மைகள் 75ரூபாயில் இருந்து
ரூ.120 வரை விற்குது!.
பஜனை கோஷ்டி பொம்மை:
பெங்களூரு, மும்பை, திருப்பதி,
தமிழகத்திலுள்ள பெரிய நகரங்களில் இஸ்கான் அமைப்பு நிர்வகிக்கும் ராதா
கிருஷ்ணன் கோயிலுக்கு நீங்க போயிருப்பீங்க! அங்கே கோஷ்டியாக பஜனை
பாடுபவர்களை பார்த்தால் நமக்கும் ஆடத்தோன்றும். அந்தக் கோஷ்டியை பொம்மையாக
வடித்து விற்பனைக்கு அனுப்பியிருக்காங்க! இதற்கு இஸ்கான் செட் பொம்மைன்னு
பெயர். ஜால்ரா,ஹார்மோனியம், ஸ்ருதி சேர்ப்பவர், பாடுபவர் என்னும் நான்கு பேர்
கொண்ட இந்த செட்டின் விலை ரூ.400. நார்த் இந்தியன் தாத்தா பாட்டி பொம்மை
செட் எல்லாரையும் கவரும். விலை ரூ170. இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்,
பாட்டி சொல்றதை சம்மதிப்பது போல தாத்தாவும், தாத்தா சொல்றதைக் கேட்பது போல
பாட்டியும் ஸ்பிரிங் கழுத்துடன் தலையாட்டுவது ரசிக்கும்படியா இருக்குது!
விதவிதமான கிருஷ்ணர்:
மகாவிஷ்ணுவின் அவதாரங்களான
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், ராமன், பலராமன்,
கிருஷ்ணர், கல்கி ஆகிய தசாவதார செட்டின் விலை ரூ500. குழலூதும் கண்ணன்,
வெண்ணெய் திருடுபவன், ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், புன்னைவன கிருஷ்ணன்,
பசுமேய்க்கும் கிருஷ்ணன் என்று விதவிதமான கிருஷ்ணர் சிலைகளும் இருக்குது!
விலை ரூ. 200 முதல் ரூ400 வரை. ஆறுகோபியர் கண்ணனைச் சூழ்ந்து நடனமாடும்
கோபியர் செட் ரூ400. செராமிக் என்னும் பீங்கானால் ஆன பிள்ளையார், ஐயப்பன்,
போகசக்தி அம்பாள் மற்றும் குதிரை, முயல், நாய் சிலைகளும் இங்குள்ளன.
இச்சிலைகள் விருத்தாசலத்தில் இருந்து வந்திருக்கு! மெழுகினால் செய்யப்பட்ட
காய்கறி, பழங்கள்,லவ்பேர்ட்ஸ், நூலினால் பின்னப்பட்ட பொம்மைகள், ராஜேஸ்வரி
சபை செட், பர்வதமலை செட், பெருமாள் செட்டும் புதுரகம்.
தஞ்சாவூர்
பொம்மைகள்: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காலத்தால் அழியாதவை. குழந்தையின்
அழுகையை நிறுத்த, டென்ஷனைக் குறைக்க இந்த பொம்மைகளுக்கு சக்தியுண்டு
என்பர். செட்டியார், ஆச்சி, டான்சிங் கேர்ள் என பலவிதமான தலையாட்டி
பொம்மைகளும் வந்திருக்கு! விலை ரூ80முதல் ரூ1000 வரை. மயில், குருவி,
குயில், கிளி, லவ்பேர்ட்ஸ் ஜோடியாக விற்கப்படுகின்றன. ஒருஜோடி ரூ50க்கும்,
இரண்டு ஜோடிரூ75க்கும் உள்ளன.
கொலு வைப்பது ஏன்:
நவராத்திரி வந்தால் கொலு வைக்க
வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு
பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால்,
ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான
ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி
இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி
என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு,
புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள்
பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும்
என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு
என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை
அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா
உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள
வேண்டும்.
கொலு மேடைக்கு பூஜை செய்வது எப்படி?
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு
ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும்.
குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து,
மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க
வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை
அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.
பொம்மைகளை அடுக்கும் முறை
மனிதனாகப்
பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வநிலைக்கு உயர வேண்டும்.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவது
மரபு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலம் போடவேண்டும்.
கொலு மேடையின் உயரம் கைக்கெட்டும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது
நல்லது. கீழிருந்து மேலாக படிகளில் பொம்மைகளை அடுக்க வேண்டும்.
முன்னரெல்லாம் களிமண்ணால் செய்யப்பட்ட எறும்பு, புழு உள்ளிட்ட பொம்மைகளைக்
கூட தங்கள் கையாலேயே செய்து வைத்தனர். இப்போது கடைகளில் கிடைக்கும்
பொம்மைகளையே வைப்பதால், அழகுக்கு தரும் முக்கியத்துவம் ஆன்மிகத்துக்கு
தரப்படுவதில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த ஆண்டில் இருந்தாவது,
எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து
செய்யலாமே!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)
அருமை ரேவதி
நான் டைப் செய்தது, கரண்ட் போனப்போ போய்விட்ட்து இதோ மீண்டும் செய்கிறேன்
நான் டைப் செய்தது, கரண்ட் போனப்போ போய்விட்ட்து இதோ மீண்டும் செய்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)
எங்க வீட்டில் இந்த கொலு வைக்கும் பழக்கம் இல்லை....
அதனால் எனக்கு ஏதும் தெரியாது.... நீங்கள் கொலு வைத்தால் படங்களை இணையுங்கள்...பார்த்து ரசிக்கிறேன்..
அதனால் எனக்கு ஏதும் தெரியாது.... நீங்கள் கொலு வைத்தால் படங்களை இணையுங்கள்...பார்த்து ரசிக்கிறேன்..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)
கொலு பொம்மைகள் எவ்வளவு படிகள் வைத்தாலும் பார்க் வைத்தால் தான் கொலு முழுமை பெற்றது போல் இருக்கும் எனக்கு அந்த பார்க் வைக்க சில டிப்ஸ் இங்கே
1. நாம் பல் குத்த உபயோகிக்கும், tooth pick ஐ கொஞ்சம் இடைவெளி விட்டு பூ தொடுப்பது போல் தொடுக்கவும். உங்க பார்க் க்கு அருமையான 'fence' ready:)
2. பாதாம் , பிஸ்தா, வேர்கடலை போன்றவற்றின் ஓடுகள் பார்க் இன் நடைபாதை ஓரத்தை அலங்கரிக்க உதவும்.
3. வால்நட்டின் ஓடுகள் பாறைகளாக உபயோகப்படும்.
4. பார்க் இல் பல்பு வைக்க, முத்து பொருத்திய குண்டூசி உதவும். :idea:
5. பார்க் இல் செடி போட, கண்டிப்பாக கடுகோ எள்ளோ உபயோகிக்காதீங்க . வீட்டில் அவை இரண்டும் வளரக்கூடாது
6. கோதுமை மற்றும் கேழ்வரகு போடுங்கள், நல்ல உயரமாய் குச்சி குச்சி யாய் வளரும்.
7. உப்யோகமாய் வளர்க்கணும் என்றால், அதாவது, நவராத்திரி ஆனதும் வளர்ந்த பயிரை தூக்கி போடாமல் உபயோகிக்கணும் என்றால், வெந்தயம் அல்லது கொத்தமல்லி யை போடுங்கள். நவராத்திரி முடிந்ததும் ஒருநாள் இல்ல 2 நாள் சமையலுக்கு ஆகும்
8. வெந்தயத்தை அப்படியெவும், கொத்தமல்லி விதை யை 'செருப்பு காலால் தேய்த்த' பிறகும் விதைக்க போடணும்.
9. ஒரு ட்ரே இல் கொஞ்சம் மஞ்சள் பொடி தூவி, பிளாஸ்டிக் சீட் வைத்து அதன் மேல் மண் பரப்பி பிறகு விதை தூவவும். இதனால் மண்ணுக்கு எறும்பு வராமல் தடுக்கலாம்
10. மண்ணில் 'welcome' போல் ஏதாவது எழுதி , அதில் விதைகளை ஊன்றினால், அதே போல் செடி வளரும்
1. நாம் பல் குத்த உபயோகிக்கும், tooth pick ஐ கொஞ்சம் இடைவெளி விட்டு பூ தொடுப்பது போல் தொடுக்கவும். உங்க பார்க் க்கு அருமையான 'fence' ready:)
2. பாதாம் , பிஸ்தா, வேர்கடலை போன்றவற்றின் ஓடுகள் பார்க் இன் நடைபாதை ஓரத்தை அலங்கரிக்க உதவும்.
3. வால்நட்டின் ஓடுகள் பாறைகளாக உபயோகப்படும்.
4. பார்க் இல் பல்பு வைக்க, முத்து பொருத்திய குண்டூசி உதவும். :idea:
5. பார்க் இல் செடி போட, கண்டிப்பாக கடுகோ எள்ளோ உபயோகிக்காதீங்க . வீட்டில் அவை இரண்டும் வளரக்கூடாது
6. கோதுமை மற்றும் கேழ்வரகு போடுங்கள், நல்ல உயரமாய் குச்சி குச்சி யாய் வளரும்.
7. உப்யோகமாய் வளர்க்கணும் என்றால், அதாவது, நவராத்திரி ஆனதும் வளர்ந்த பயிரை தூக்கி போடாமல் உபயோகிக்கணும் என்றால், வெந்தயம் அல்லது கொத்தமல்லி யை போடுங்கள். நவராத்திரி முடிந்ததும் ஒருநாள் இல்ல 2 நாள் சமையலுக்கு ஆகும்
8. வெந்தயத்தை அப்படியெவும், கொத்தமல்லி விதை யை 'செருப்பு காலால் தேய்த்த' பிறகும் விதைக்க போடணும்.
9. ஒரு ட்ரே இல் கொஞ்சம் மஞ்சள் பொடி தூவி, பிளாஸ்டிக் சீட் வைத்து அதன் மேல் மண் பரப்பி பிறகு விதை தூவவும். இதனால் மண்ணுக்கு எறும்பு வராமல் தடுக்கலாம்
10. மண்ணில் 'welcome' போல் ஏதாவது எழுதி , அதில் விதைகளை ஊன்றினால், அதே போல் செடி வளரும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)
எங்களுக்கு பழக்கம் உண்டு உமா , இன்று இவர் ஆஃபிஸ் லிருந்து வந்ததும் தான் வைக்கணும் நேற்று இரவு ஓரளவு டெகோரேட் செய்து விட்டோம் படி கட்டி பொம்மை வைக்கணும் இன்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)
krishnaamma wrote:எங்களுக்கு பழக்கம் உண்டு உமா , இன்று இவர் ஆஃபிஸ் லிருந்து வந்ததும் தான் வைக்கணும் நேற்று இரவு ஓரளவு டெகோரேட் செய்து விட்டோம் படி கட்டி பொம்மை வைக்கணும் இன்று
படங்களை பதியனும்.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)
கொலு படிக்கட்டு எப்பவும் வெள்ளை துணியால் ( வேஷ்டி ரொம்ப நல்லது )
இருக்கணும். அப்ப தான் பொம்மைகள் பளீரென்று இருக்கும்.
மேலே முதல் படி இல் வழக்கம் இருந்தால் கலசம் வைக்கணும். பிறகு பிள்ளையார் , பெருமாள் சிவன் போன்ற தெய்வங்கள்.
அடுத்த படி இல் தசாவதாரம், முருகர் வள்ளி செட், ராதா கிருஷ்ணர் போன்றவை வைக்கலாம்.
அடுத்த படி இல் சாய்பாபா, ராகவேந்திரர் போன்ற மனித தெய்வங்களை வைக்கலாம்.
அடுத்த படி இல் ஆச்சரியர்களான, சங்கரர், இராமானுஜர், மத்வர் போன்றவர்களை வைக்கலாம் .
அடுத்த படி இல் ராம கிருஷ்ண பரம ஹம்ஸர் , விவேகானந்தர் , வள்ளுவர் போன்றவர்களை வைக்கலாம்.
அடுத்த படி இல் தேச தலைவர்கள் பொம்மைகளை வைக்கலாம்.
கடைசி படி இல் செட்டியார் , செட்டிச்சி பொம்மைகள், உப்பு, பருப்பு , புளி யுடன் வைக்கணும். + மரப்பாச்சி பொம்மைகள் வைக்கணும்.
பிறகு, பார்க், ரயில்வே ஸ்டேஷன் என உங்களுக்கு பிடித்ததை தரை இல் வைக்கலாம் அது படி கணக்கில் வராது. ஒற்றை படை இல் படி வைக்கணும்
இருக்கணும். அப்ப தான் பொம்மைகள் பளீரென்று இருக்கும்.
மேலே முதல் படி இல் வழக்கம் இருந்தால் கலசம் வைக்கணும். பிறகு பிள்ளையார் , பெருமாள் சிவன் போன்ற தெய்வங்கள்.
அடுத்த படி இல் தசாவதாரம், முருகர் வள்ளி செட், ராதா கிருஷ்ணர் போன்றவை வைக்கலாம்.
அடுத்த படி இல் சாய்பாபா, ராகவேந்திரர் போன்ற மனித தெய்வங்களை வைக்கலாம்.
அடுத்த படி இல் ஆச்சரியர்களான, சங்கரர், இராமானுஜர், மத்வர் போன்றவர்களை வைக்கலாம் .
அடுத்த படி இல் ராம கிருஷ்ண பரம ஹம்ஸர் , விவேகானந்தர் , வள்ளுவர் போன்றவர்களை வைக்கலாம்.
அடுத்த படி இல் தேச தலைவர்கள் பொம்மைகளை வைக்கலாம்.
கடைசி படி இல் செட்டியார் , செட்டிச்சி பொம்மைகள், உப்பு, பருப்பு , புளி யுடன் வைக்கணும். + மரப்பாச்சி பொம்மைகள் வைக்கணும்.
பிறகு, பார்க், ரயில்வே ஸ்டேஷன் என உங்களுக்கு பிடித்ததை தரை இல் வைக்கலாம் அது படி கணக்கில் வராது. ஒற்றை படை இல் படி வைக்கணும்
Last edited by krishnaamma on Mon Oct 12, 2015 11:10 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)
உமா wrote:krishnaamma wrote:எங்களுக்கு பழக்கம் உண்டு உமா , இன்று இவர் ஆஃபிஸ் லிருந்து வந்ததும் தான் வைக்கணும் நேற்று இரவு ஓரளவு டெகோரேட் செய்து விட்டோம் படி கட்டி பொம்மை வைக்கணும் இன்று
படங்களை பதியனும்.....
கண்டிப்பாக உமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கொலு எப்படி வைக்க வேண்டும்
» கொலு டிப்ஸ்!
» நவராத்திரி கொலு - டிப்ஸ்
» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
» கூகுள் புஷ்ஷை நிறுத்தி வைக்க + சில ஜிமெயில் டிப்ஸ்!
» கொலு டிப்ஸ்!
» நவராத்திரி கொலு - டிப்ஸ்
» கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்...
» கூகுள் புஷ்ஷை நிறுத்தி வைக்க + சில ஜிமெயில் டிப்ஸ்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|