ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?

3 posters

Go down

அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Empty அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?

Post by முஹைதீன் Sun Sep 25, 2011 3:44 pm


அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?


டாலர் மதிப்பு சரிவதைக் காரணம் காட்டி மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன பெட்ரோலிய நிறுவனங்கள். 98 உலக நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப் படுகிறது என இந்தியா உலக அரங்கில் மார்தட்டிக் கொள்ளலாம். வல்லரசான அமெரிக்காவில் பெட்ரோலின் விலை இந்தியாவை விடக் குறைவாம்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து விட்டது என காரணம் கூறி வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது புதிதாக டாலர் மதிப்பு சரிந்து விட்ட காரணத்தையும் கண்டுபிடித்து பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தும் மொத்த பெட்ரோலின் அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்தியாவில் எடுக்கப் படும் கச்சா எண்ணெய்க்குச் சர்வதேசச் சந்தையோ அல்லது டாலர் சரிவோ வரப் போவதில்லை.

எனினும் இது குறித்த உண்மை நிலையை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பொது மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. காரணம் இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் கச்சா எண்ணெயின் லாபத்தை ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருவதுதான்.

அண்மையில் கூட கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீட்டுச் செலவைப் பலமடங்கு உயர்த்திக் காட்டி பல்லாயிரம் கோடி ரூபாய்களை பெட்ரோலிய அமைச்சகத்துக்குப் பட்டை நாமம் சாத்தியுள்ளது என தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக கணக்கு காட்டி கொள்ளையடித்த ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடான கணக்கு எழுத சொல்லிக் கொடுக்கவா வேண்டும்!.

குஜராத்தில் முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுனர் நியமித்து விட்டார் என்று மக்களவையை நடத்த விடாமல் ருத்ர தாண்டவம் ஆடிய பாஜக, ரிலையன்ஸ் குறித்த தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கைக் குறித்து வாய் திறக்கவில்லை.

சாதாரண அடித்தட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கக் கூடிய டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டிய மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆளாளுக்குத் தங்கள் பங்குக்கு வரிகளைப் போட்டு ரூ 30 க்கு விற்க வேண்டிய பெட்ரோலை ரூ 70 க்கு விற்று வருகின்றன. தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை விட பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் வரி அதிகம்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆடம்பர ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரி விதிப்பே கிடையாது. ஆனால் அத்தியாவசிய பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி விதிக்காத எந்த மாநிலமாவது இந்தியாவில் உண்டா? 2004 ம் ஆண்டு ரூ 35 க்கு விற்ற பெட்ரோலின் இன்றைய விற்பனை விலை ரூ 71. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த 7 வருடங்களில் பெட்ரோலின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
எத்தனை அடித்தாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா என்ற நிலையில் இருக்கும் மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவ்வாறு அநியாய அரசியல் செய்பவர்களை மாற்ற முடியாது. ஏதோ சில அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதோடு நில்லாமல் இத்தகைய அநியாயங்களை எதிர்த்து மக்கள் ஒன்று திரள வேண்டும். ஊழலை எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்துவதோடு எனது கடமை முடிந்து விட்டது எனக் கருதாமல் இத்தகைய மோசடித்தனங்களைப் பாமர மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியை ஒவ்வொருவரும் செய்ய முன்வரவேண்டும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல்,டீசல் விலை குறித்து வாயே திறக்காத நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிக்கும்போதும் கண்டுகொள்ளப்போவதில்லை. சாதாரண மக்களின் தினசரி வாழ்வைப் பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருக்கும் எரிபொருளின் விலையினைக் கட்டுக்குள் கொண்டுவர தனியாரின் கையில் கொடுக்கப்பட்ட விலை நிர்ணயிப்பு அதிகாரத்தை அரசே திரும்ப எடுத்துக்கொள்ளும்வரை, மாதத்துக்கு மும்மாரி கொள்ளையடிக்கும் நிறுவனங்களின் இந்த அராஜகம் நிற்கப்போவதில்லை!

அத்தியாவசியம் - ஆடம்பரம், இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் வரிவிதிப்புக் கொள்கையை அமல்படுத்திக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்களும், லஞ்சத்தைக் கட்சிகளுக்கு நன்கொடையாகவும், அரசியல்வாதிகளின் குடும்பத்தினர்களுக்குப் பங்குகளாகவும் தரும் தனியார் நிறுவனங்கள் கொளுத்து வளர அப்பாவி பொது ஜனங்களைச் சுரண்டும் ஆட்சியாளர்களும் இருக்கும் வரை இந்தியா ஒரு போதும் முன்னேற்றங் காணப் போவதில்லை என்பதை உரக்கவே சொல்லுவோம்.








--




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Empty Re: அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?

Post by ரபீக் Sun Sep 25, 2011 3:46 pm

பகிர்வுக்கு நன்றி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Empty Re: அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?

Post by prabatneb Sun Sep 25, 2011 4:10 pm

காங்கிரஸ் அல்லது பாஜாகா யாராக இருந்தாலும் மக்களை பற்றி என்ன கவலை. அவர்களுக்கு தேவை எலக்ஷனுக்கு நிதி, கட்சிக்கு நிதி, தனக்கு நிதி. இருக்கும் நிதியை வைத்து பெறுவார் ஓட்டு. மக்களாவது மன்னாவது.
prabatneb
prabatneb
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Back to top Go down

அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்? Empty Re: அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum