புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
65 Posts - 63%
heezulia
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:38 pm

First topic message reminder :

புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு!
எள்ளலை எடுத்தெறி!
நிகழ்ச்சியை வரிசைசெய்!
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே!


பாடல் - 1 உரைக்குறிப்புகள் : (எண் அடிகள் எண்)

1. புகழ்ச்சியின் மயக்கு-பிறர் கூறும் புகழ்ச்சியுரைகளால் ஏற்படும் உணர்வுக் கிறக்கம்; அறுத்தல்-அடியோடு நீக்குதல்.

2. புன்மை-இழிவாம் தன்மை; உதறுதல்-பற்றப் பற்றத் தவிர்த்தல்.

3. இகழ்ச்சி-செயப்பெறும் நல்வினைகளின் மேல் அறியாமையால் கூறப்பெறும் இகழ்ச்சியுரைகள்.

4. எள்ளல்-அருமை வினைகளை எளிமையாகக் கருதி உரைக்கப்பெறும் புன்சொற்கள்.

5. வரிசை-செயப்பெறும் வினைகளை அறிவானும் வினையானும் வகைப்படுத்தி இடத்தானும் காலத்தானும் பொருந்த அமைத்துக் கொள்ளுதல்.

6. நினைவை உறுதி செய்தல்-செயத் தக்கவற்றுக்கும் தகாதனவற்றிற்கும் வேராகிற நினைவுகளை அறிவான் தேறி செயலுக்குரியனவாகத் தெரிந்தெடுத்தல்.

7,8. மகிழ்ச்சி என்பதும் துயரம் என்பதும் செயப் பெறும் வினைகட்கு ஏற்ப மனம் அவ்விடத்துப் பெறும் உணர்வு முடிபுகளுக்கான பெயர்களாகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:42 pm

சிற்றுயிர் எறும்பும்
சுற்றுதல் காண்,நீ!
மற்றுயிர் எல்லாம்
இயங்குதல் மதித்துணர்!
அற்றெனில் நீ,ஏன்
அமர்ந்திங் கிருப்பது?
கற்றுவா; எண்ணிவா;
காற்றில் நனைந்துவா!


பாடல் - 11 உரைக் குறிப்புகள்:

1,2. சிற்றுயிர் வகைகளில் ஒன்றான எறும்பும் அயர்வின்றிச் சுற்றிச் சுற்றி யியங்குதலைக் காண்க என்பதாம்.

3,4. அதே போலும், எல்லா உயிர்களும் அதனதன் நிலை யியக்கங்களில் மாறுபடாது இயங்கி நிற்றலைப் பெருமையோடு போற்றி உணர்க!

5,6. உயிரிகள் அவ்வாறு முறையாக அவ்வவற்றின் நிலைக்கேற்ப அயர்வின்றி இயங்குதலைக் உணர்ந்தபின், அதே உயிர் வகைகளின் மேனிலையுயிரான மாந்தவினத்தே ஒரு கூறான நாம் மட்டும் எதற்காக ஓரிடத்திலேயே அமைந்து கொண்டு வாளாவிருக்க வேண்டும்? நாமும் நம் உயிர் நிலைக்கேற்ற உயர் இயக்கங்களில் மேம்பட்டு அயர்வின்றி இயங்குதல் வேண்டும் என்பதாம்.

7,8. தொடர்ந்து கற்றலில் திளைத்து வருக! மாந்த உயிரினத்திற்கு மட்டும் அரிதின் அமர்ந்த எண்ணத்திடை மூழ்குக! மனம் எண்ணத்திடை மூழ்கையில் உடல் காற்று நிரம்பிய வெட்ட வெளியிடை மூழ்கட்டும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:42 pm

மலைமுக டேறு
மடுவினில் இறங்கு!
கலைகுவி சோலையுள்
காற்றாய் நுழைந்துபோ!
அலைவீட் டுள்புகு!
ஆற்றினில் நீந்து!
புலைநினை வழிந்திட
இயற்கையுள் புதை,நீ!


பாடல் - 12 உரைக் குறிப்புகள்:

1. எண்ணத்தாலுமன்றி மெய்யாலும் உயரமான மலைகளின் உயர்ச்சியாம் முகட்டில் ஏறி உணர்க! உடலை உயர்த்துகையில் எண்ணங்களும் தாமே உயர்வன காண்க!

2. ஆழமான நீர்நிலையிலும் இறங்கியாடுக! (உயர்ச்சியில் ஏறுதலும், ஆழத்தில் இறங்குதலும் வாழ்வமைப்பில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ளவுமாகலின்.)

3,4. கலையழகு குவிந்துள்ள பூஞ்சோலைகளில் காற்று நுழைந்து போவது போலும் மனமணைந்து நுழைந்து இயற்கை யின்பம் துய்த்தல் வேண்டும் என்பதாம்.

5. நீர்க்கூரையால் வேயப்பெற்றது போலும் எம்பி அளாவி மறையும் அலைகளின் உட்புகுந்தும் அருவிகளுட் குடைந்து சென்று இன்பம் பெறுக!

6. படுகையில் நெடுங்கிடையாக ஓடும் ஆற்று நீரிலும் நீந்தி மகிழ்க!

7,8. மேற்காட்டியவாறு கொள்ளும் இயற்கையீடுபாடு மன விரிவையும், மனச் செப்பத்தையும் உருவாக்குதலின் நம்மையறியாமல் நம்முட் புகும் இழிவான நினைவுகள் அழிந்து போகும் என்க!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:43 pm

உயிரை மலர்த்து!
உணர்வை அகல்செய்!
பயிர்,நீ! கதிர்,நீ!
பழம்பெரும் வான்,நீ!
துயர்கொளும் சிறிய
துகளிலை; நீ,ஓர்
உயிரொளிப் பிழம்பு;
உலக உடம்பு!


பாடல் - 13 உரைக் குறிப்புகள்:

1. உயிரை மேலும் ஒளியுடையதாகச் செய்வதே வாழ்வாகலின் அதனை மலர்ச்சியுறச் செய்க என்றபடி.

2. சென்றதிலேயே செல்லாமல் மற்றதினும் செல்லுமாறு உணர்வை அகலச் செய்க!

3,4. மண்ணில் ஊன்றிய பயிர்போலும், நாமும் உலவும் பயிர் போலவாம் என்க! உலகுக்கு ஒளிதரும் கதிரவன் போல் நாமும் உள்ளொளி சான்ற மாந்தக் கதிர் என்க! வானிடை நின்று நீந்தும் உலக உயிர் நாம் ஆகலின் நாமும் வானே போலும் என்க!

5,6. நாம் அலைவுற்றுத் துன்புறும் நுண்சிறு துகளில்லை.

7,8. ஒளி சான்ற உயிர்ப்பிழம்பு! உலகம் போலும் நாமும் ஓர் உடம்புலகம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:43 pm



சிற்றிறை வன்,நீ!
சிந்தனை வெள்ளம்!
அற்றிடாப் பிறவி!
அறிவுக் கொழுந்து!
வற்றிடா ஊற்று;
வளர்பெரும் புடவி!
குற்றிடா நெற்று!
கோடிக் குமுகம்!


பாடல் - 14 உரைக் குறிப்புகள்:

1. உலக மூலக்கூறாம் இறைமைப் பொருளினின்று தோன்றிய நாமும் சிறிய ஓர் இறைமைப் பொருளே என்க.

2. நாம் ஓர் எண்ண நீர்ப் பெருக்கு!

3. இவ்வுடம்போடு கூடிய இவ்வுயிர்ப் பிறவி இத்துடன் அற்றுப் போவதன்று; தொடர்ந்து பிற உயிர்த் தொடர்ச்சியையும் உண்டாக்குவது.

4. அறிவுச் சுடர் வீசும் உயிர்க் கொழுந்து நாம்.

5. எப்பொழுதும் வற்றாத அறிவு ஊற்று நாம்! (நீரூற்று வற்றிப் போவது போல் நம்பாலிருக்கும் அறிவூற்று எக்காலும் வற்றாத தன்மைத்தாகலின் அஃதுடையேம் என்க.)

6. மேலும் மேலும் விரிந்து கொண்டே வளர்ந்து பெருகும் புடவி போன்ற உயிர்ப் பிறவி நாம்.

7,8. குற்றப்படாத நெற்று விதை போலும் நாம் உலக நல விளைவுக்கான நல் வித்து. முன்னோன் ஒருவனினின்று தோன்றிய நாமும் பின்னே ஒரு குமுகத்தை உருவாக்கும் திறன் படைத்துள்ளோம் என அறிக!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:44 pm



சிறுமையை எண்ணிச்
சிறுத்துப்போ காதே!
வெறுமையை நினைந்து
வெயர்த்தழி யாதே!
குறுமை நினைவுகள்
குறுமையாம் வாழ்க்கை!
நறுமை நினைவுகள்
நல்லொளிப் பிறவி!

பாடல் - 15 உரைக் குறிப்புகள்:

1,2. கீழ்மை நினைவுகள் கீழ்மைப் படுத்துவவாகலின், அவை நம்மைப் பயனற்ற சிறியேமாக்கி விடும் என்க.

3,4. பயனற்ற வெற்று நிலைகளில் மனத்தைப் பதித்து அதற்கென ஏங்கி வெம்பிப் புழுங்கி மனம் வெயர்த்து அழிவுறாதிருப்போமாக!

5,6. குறுகிய நோக்கும், எண்ணமும் வாழ்க்கையைக் குறுக்கிக் கீழ்நோக்கித் தள்ளுமாகலின் அவ்வெளிதாந் தன்மையை நாமும் அடையாது நம்மினின்று நீக்குவோமாக!

7,8. நறிய நல்லெண்ணங்களுக்கான பிறப்பை நல்லொளி பெறச் செய்ய வல்லதாகலின் அவற்றில் நம் மனத்தைப் பதித்தல் வேண்டுமென்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:44 pm



உண்மை வலியது!
உள்ளமும் வலியது!
திண்மை தருவதும்
தேர்வதும் அதுதான்.
மண்மேல் அனைத்தும்
மடிந்துமட் குவன!
எண்மேல் எண்ணிய
ஒருவனாய் இரு,நீ!


பாடல் - 16 உரைக் குறிப்புகள்

1. ஆற்றல் சான்றது உண்மை.

2. அந்த ஆற்றலை உள்ளமும் பெற்றிருக்கிறது. (நம் உள்ளமும் உண்மையை உள்ளார்ந்து பெறுமானால் நாமும் ஆற்றலுடையேமாய் மாறுவோம்.)

3,4. தகைமை நிலைகளில் திண்மையைத் தருவதும், நல்லது தீயது ஆய்ந்து பார்த்து நன்மையைத் தேர்வதும் அந்த உண்மை சான்ற உள்ளந்தான் என்பதறிக.

5,6. மற்று, இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் மட்கி அழிவனவாகவே உள்ளன.

7,8. ஒருகால் அழியுந் தன்மையை உடைய இவ்வுலகில் அழியாது நிற்பது புகழாகலின், அப்புகழால் நிலைப்பேறு பெற்றிருக்கும் சான்றோரின் எண் வரிசையில் மேலும் எண்ணப் பெற்ற ஒரு சான்றோனாக நாம் விளங்குதல் வேண்டும் என்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:44 pm



புன்மை சிறியது!
பொய்மையும் சிறியது!
புன்மேல் பனித்துளி
போலும் உடம்பதன்
மின்போல் வாழ்க்கையில்
மீந்துவ துயர்வே!
புன்மையும் புரையும்
பொக்கன; புதைவன!


பாடல் - 17 உரைக் குறிப்புகள்:

1. புல்லிய மனத்தன்மை ஆற்றல் நிலையினும், வினை நிலையினும் மிகவும் சிறுமையுடையதாகும்; இழிந்ததாகும்.

2. அப்புன்மைத் தன்மை போன்றே பொய்மைத் தன்மையும் சிறுமையுடையதும், இழிந்ததும் ஆகும்.

3-6. காலத்தாலும், சூழ்நிலைத் தகவாலும் புல்லின்மேல் வந்து பொருந்திய சிறிய பனித்துளி போல, உயிரை வந்து சார்ந்திருக்கும் இவ்வுடம்பொடு கூடிய வாழ்க்கையும் மின்னல் போலும் விரைந்து தோன்றி மறையக் கூடியதேயாம்! இவ்வாழ்வு உண்மை சார்ந்த உள்ளதொடு தக அமையப் பெற்றால் மீதமாவது என்பது உயர் பயன் ஒன்றுமே!

7,8. புல்லிய மனத்தன்மையும், மனப் பொய்ம்மையும் விரைவில் மாயக் கூடியனவாகும்! புதைந்து போவனவாகும். எனவே அவற்றைக் கைக்கொள்ளற்க என்றபடி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:44 pm



தருக்குகொள் ளாதே!
தன்முனைப் பகற்று!
செருக்குச் சேற்றினில்
சிதைந்தவர் பலபேர்!
உருக்குலைத் திடும்,அது;
உன்னையும் உம்மையும்!
திருக்குலைத் திடும்,அது;
தீமையும் விளைவிக்கும்!


பாடல் -18 உரைக் குறிப்புகள்:

1. தான் ஒருவனே இந்நிலைக்கு வாய்த்துள்ளதாக என்றும், எதிலும் அறிவுச் செருக்கும், வினைச் செருக்கும், மனச் செருக்கும் கொள்ளாதிருக்க!

2. தன்முனைப்பு எண்ணங்களை மனவறையினின்றும் அப்புறப்படுத்தி விடுக!

3,4. அகந்தை கொண்டு அஃதால் வரும் மகிழ்வொடு தன்னிலையினின்று இழிந்தும் அழிவுச் சேற்றில் தள்ளப்பட்டுச் சிதைந்து போயினார் இவ்வுலகத்துப் பலராவர்.

5,6. அம் மனச் செருக்கு நம்மின் பண்புருவைக் குலைத்தழிப்பது; அழிப்பதோடு, நம்மைச் சார்ந்தோர் எவராயினும் அவர்க்கும் அழிவு தர வல்லது!

7,8. மேலும், அது நம்பால் உள்ள வேறுபாடற்ற நடுநிலைத் தன்மையால் அமைந்திருக்கின்ற அக அழகைக் குலைப்பதோடு, தீங்கையும் விளைவித்து விட வல்லதாகும். (திரு என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் உண்மையின், அச் செருக்காந்தன்மை நம்மின் பொருட் செல்வத்தையும், அறிவுச் செல்வத்தையும் மற்றும் செல்வ நிலைகளாகக் குறிக்கப் பெறுவன வேறு எதனையும் குலைத்தழிக்கும் என்றும் பொருள் கொள்க!)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:45 pm



உலகுக் குரியனாய்
உன்னை உயர்த்திடு!
உலகுக் குரியராய்
உயர்த்து மாந்தரை
கலகக் கொள்கையில்
கால்கோ ளாதே!
விலகப் பயில்,நீ!
வீணுரை வீணரை!


பாடல் - 19 உரைக் குறிப்புகள்:

1,2. இவ்வுலக மக்களுக்கு நாம் உரிமையினம் என்னும் பரந்த பெருமனத்தை உடையேமாக உயர்த்திக் கொள்ளுக! (நாம் சிற்றிறைவரும் உலக உடம்பரும் அல்லமோ?)

3,4. அந்நிலைக்கு உயர்த்திக் கொண்டால் மட்டும் போதுவதோ? நம் இனத்தாராகிய இவ்வுலக மாந்தர் அனைவரையும் அதே போன்று மாந்த நலத்துக்குத் தாமும் அத்தகையரே என்னுமாறு உயர்த்துதல் வேண்டும். (அவர் தந்தமக்குரியராய் தந்தலச் சேற்றில் சிக்கியுழல்தலான் அவர்களையும் அந்நிலையினின்றும் மீட்க வேண்டும் என்றவாறு.)

5,6. கெடும்பையும் குழப்பத்தையும் உருவாக்கி மக்கள் நலந்தீய்க்கும் எக் கொள்கையிலும் சென்று பொருந்தற்க!!

7,8. வெறுமையான உரைகளை நீளப்பெய்து, நம் அரிய நேரத்தையும் ஆற்றலையும் வீண்டிக்கும் தகவிலா வீணர்களிடமிருந்து விலகி நிற்கப் பயின்று கொள்க!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:45 pm



மாந்த ஒளி,நீ!
மந்த விலங்கில்லை!
ஏந்தல் எனநட!
இளைத்தும் தலைநிமிர்!
காந்தப் பார்வையால்
மக்களைக் கவர்ந்திழு!
சேந்து,அவர் நினைவை
செம்மை நினைவுவார்!


பாடல் - 20 உரைக் குறிப்புகள்:

1,2. ஒளியார்ந்த மாந்த உயிரோம் நாம்! அறிவிலும் மனத்திலும் கீழ்ப்பட்ட விலங்கு அல்லேம்; நம் பிறப்பும் தோற்றக் கரணியமும் உயர்ச்சி நோக்கியது!

3. எனவே, மாந்த உயிரிலேயே உயரியவர் நாம் எனும் பெருமிதத்தோடு நடையை மேற் கொள்க!

4. பொருளாலும், உருவாலும் இளைத்துப் போகும் சூழல் வந்து நேரினும், அதுபோதும் நாம் தலை நிமிர்ந்தே நிற்றல் வேண்டும்.

5,6. காந்தம் போலும் ஈர்ப்புப் பார்வையால் மாந்த இனத்தைக் கவர்ந்து நம் வழியில் செலுத்துவோமாக!

7,8. தகவிலாப் பிறரின் தாறுமாறான நினைவுகளையெல்லாம் அவர் மனத்தினின்று சேந்திப் புறத்தெறிவோமாக. மேலும் அவரின் நெஞ்சக் குளங்களில் செவ்விய நல்லெண்ணங்களை வார்த்து நிரப்புவோமாக!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக