ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் வருவான் ...

Go down

கண்ணன் வருவான் ... Empty கண்ணன் வருவான் ...

Post by மீனு Tue Sep 22, 2009 7:18 am

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - வசுதேவரும் தேவகியும்!


தேவகியை நாம் பலநாட்கள் கழிச்சுப் பார்க்கிறோம். ரொம்ப இளைச்சுப்போய் முப்பது வயதிலேயே தலையும் நரைத்துப் போய் கண்களில் உயிரை வைத்துக் கொண்டு, தன்னுடைய மகன் எப்போ வருவான், தங்கள் அனைவருக்கும் மீட்சியைக் கொடுப்பான் என எதிர்பார்ப்புடன் இருக்கிறாள். அடுத்தடுத்துத் தான் பெற்ற ஆறு குழந்தைகளைக் கண்ணெதிரே கொல்லப்படுவதைக் கண்டவள். அவள் இதயம் என்ன இரும்பா? இல்லை கல்லா? எப்படித் தாங்கினாள்? கேட்கத் தோன்றுகிறது அல்லவா? எந்தத் தாய்க்கும் நேராத சோகம். அதோடு மட்டுமா? ஏழாவது குழந்தை பிறக்கும் முன்னரே வலுக்கட்டாயமாய் வெளியே எடுக்கப் பட்டு அவள் கணவனின் மற்றொரு மனைவியிடம் வளர்க்கக் கொடுக்கப் பட்டது. எட்டாவது குழந்தையோ பிறந்தே ஆகவேண்டும், அதை உடனே கொல்லவேண்டும் என்றே கம்சனின் திட்டம். அதற்காக அல்லும், பகலும் கண்காணிக்கப் பட்டாள். தூங்கும்போதும், விழித்திருக்கும்போதும் அவளுக்குத் தனியே இருக்கச் சுதந்திரம் இல்லை. இறை அருளாலேயே அன்றிரவு மழையும், இடியுமாக வந்து அவளைப் பூதனையின் கழுகுப் பார்வையிலிருந்து காத்துக் குழந்தையையும் கோகுலத்துக்கு அனுப்ப முடிந்தது. ஆனால் ஏன் இப்படி? ஒரு இளவரசியாக இருந்தும் ஏன் இப்படித் துன்புற்றாள்? அனைவரும் கேட்கும் கேள்வி இது!


இந்த தேவகி படும் துயரம் சகிக்க முடியாத ஒன்று. கண்களின் எதிரே அடுத்தடுத்துத் தான் பெற்றெடுத்த குழந்தைகள் கொல்லப் பட்டு சோகத்தை அனுபவித்து, எட்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கவேண்டும் என்ற ஒரே லக்ஷியத்தோடு வாழ்ந்தாள். சிலர் கேட்கின்றனர். புத்திசாலித் தனமான கேள்வியாய்ப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் தெரியும். வசுதேவரையும், தேவகியையும் ஏன் கம்சன் சேர்த்தேச் சிறையில் அடைத்தான்?? தனித் தனியாய்ப் பிரித்து வைத்திருக்கலாமே என்று கேட்கின்றனர். ஆனால் இறைவனின் படைப்புக்கும் இம்மாதிரியான காரியங்களுக்கும் காரணம் இல்லாமல் போகாது. தேவகியும், வசுதேவரும் இம்மாதிரியான ஒரு துக்கத்தை அனுபவிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு விதிக்கப் பட்ட ஒன்று. இதை அறிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் பின்னால் போய்ப் பார்க்கவேண்டும். காச்யபர் ஒரு ரிஷி. தக்ஷனின் மகள்களான திதி, அதிதி இருவரையும் காச்யபருக்குத் திருமணம் செய்து கொடுத்தான் தக்ஷன். அக்காள் தங்கைகள் தான் என்றாலும் இருவருமே ஒற்றுமை இன்றியே இருந்தனர். அதிதி என்பவள் இளையவள். அவளுக்கு வெகு விரைவில் குழந்தை பிறந்தது. அவனே தேவர்களுக்குத் தலைவனாய் இருப்பான் என்றும் இந்திர பதவி வகிப்பான் என்றும் தெரிய வந்தது.

திதிக்குக் குழந்தை பிறக்கவில்லை. தன் தங்கை அதிதிக்குக் குழந்தையும் பிறந்து மஹா பராக்கிரமசாலியான இந்திரனாகவும் அது ஏற்பட்டதை அறிந்து சற்றுப் பொறாமையுடனேயே காச்யபரிடம் போய்ப் பிள்ளை வரம் கேட்டாள் திதி. இந்திரனைப் போன்ற சகல உலகங்களும் போற்றும் வண்ணம் ஒரு குழந்தையை வேண்டினாள். அவளை தேவிக்கு விரதம் இருக்கச் சொன்னார் காச்யபர். முறைப்படி விரதம் இருந்தாள் திதி. உரிய நாளில் கருவுற்றாள். அவள் கருவுற்றதைக் கேள்விப் பட்ட அதிதிக்குப் பொறாமை மேலோங்க, நெஞ்சில் வஞ்சம் ஏற்பட்டது. தன் உடன் பிறந்த அக்காவாகவே இருந்தாலும் அவள் மகன் தன் மகனை விட மேலோங்கி இருப்பதை அவளால் பொறுக்கமுடியாது போல் இருந்தது. ஆகவே தன் மகனான இந்திரனை அழைத்து, “உன் பெரியம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தை உனக்கு எதிரியாகி விடுவான். உன் இந்திர பதவிக்கும் ஆபத்து ஏற்படும். சகல உலகும் திதியின் குழந்தையைப் போற்றிப் புகழும்.” என்று கூறி வருந்தினாள். தாயின் துயர் கண்ட இந்திரன் பதவி ஆசையால் இயல்பாய்ப் பெரிய தாயாரிடம் ஏற்பட்ட பாசத்தைக் கூட மறந்து அவள் சிசுவைக் கர்ப்பத்திலேயே கொன்றால் என்ன என்று எண்ணினான். இதை எவ்விதம் முடிப்பது என யோசித்து திதியிடம் சென்றான். திதி மிகச் சிறந்த தேவி பக்தை. தேவிக்கு வழிபாடுகள் செய்யும் அவளுக்கு உதவிகள் செய்வது போல் நடித்துப் பணிவிடைகள் செய்தான் இந்திரன். திதியும் அதை உண்மையான அன்பு என எண்ணி இருந்தாள்.

ஒருநாள் வழிபாட்டின்போது விரதம் இருந்த அசதியாலும், கர்ப்பிணிகளுக்கே இயல்பான தளர்ச்சியாலும் திதி தன்னை மறந்து தூங்கினாள். தூங்கும்போது அவள் வாய் சிறிதே திறந்திருந்தது. இந்திரன் தன் சக்தியால் மிகச் சிறிய வடிவெடுத்து அவள் வாயின் வழியாக உள்ளே நுழைந்து கர்ப்பைப் பையை அடைந்து கர்ப்பத்தைச் சிறு சிறு துண்டுகளாக ஆக்கிக் கொன்றான். பின்னர் வெளியேறித் தன் தாயிடம் சென்று வெற்றி வீரனாய்த் தான் வந்திருப்பதைப் பெருமையுடனும் மகிழ்வுடனும் தெரிவித்தான். அவன் தாயும் மகனின் திறமையை எண்ணி மகிழ்ந்தாள். அப்போது கர்ப்பம் கலைந்ததால் கண் விழித்த திதி தன் தங்கையிடம் தன் துயரத்தைச் சொல்லி அழவேண்டும் என எண்ணிச் சென்றபோது தாயும், மகனும் பேசி மகிழ்ந்ததைக் கேட்டு மனம் மிகவும் நொந்து போனாள். தன் உடன் பிறந்த தங்கையே தன் குழந்தைக்கு எமனாய் வந்ததை எண்ணிக் கதறி அழுத வண்ணமே அவள் தன் தங்கையிடம், “என் குழந்தையைக் கர்ப்பத்திலேயே கொன்ற நீ, உன் குழந்தைகள் பிறந்ததுமே அடுத்தடுத்துக் கொல்லப் படுவதைக் கண் முன்னால் காண்பாய்! நீ பெற்ற குழந்தைகளை உன்னால் வளர்க்க முடியாமல், பாலூட்டிச் சீராட்டித் தாலாட்ட முடியாமல் குழந்தையை எண்ணி எண்ணிக் கலங்குவாய். எனக்கு இப்போது ஏற்பட்டிருப்பதை விட அதிக மடங்கு புத்திரசோகம் உனக்கு ஏற்படட்டும்.” என்று சாபம் கொடுத்தாள். அதிதி தன் கணவரான காச்யபரிடம் நடந்ததைச் சொல்லித் தன் அக்காவின் சாபத்தையும் சொல்லி மன்னிக்குமாறு கேட்க, அவரோ, “திதி தான் மன்னிக்கவேண்டும்.” என்று சொல்லி அவளிடம் அழைத்து வந்தார். இருவரையும் சேர்த்துப் பார்த்த திதி, காச்யபரும் இந்தச் செயலுக்கு உடந்தை என எண்ணிக் கொண்டு, “என் தங்கைக்கு நான் இட்ட சாபம் உங்களையும் சேர்த்தே!” என்று சொல்லிவிடுகிறாள். ஒருபாவமும் அறியாத காச்யபர் அவசரப் பட்டுவிட்டாயே திதி என எண்ணிக்கலங்கினார். என்றாலும் சாபம் விடவில்லை. இந்த அதிதிதான் தேவகியாகவும், காச்யபரே வசுதேவனாகவும் பிறந்து புத்திர சோகத்தில் துடிதுடித்தனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum