Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்
Page 1 of 1
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக திகழ்ந்த மன்சூர் அலிகான் பட்டோடி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.
மன்சூர் அலிகான் பட்டோடி
1961-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை இந்திய டெஸ்ட் அணியில் விளையாடியவர் மன்சூர் அலிகான் பட்டோடி. இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்று சிறப்பு மிக்க கேப்டன்களில் ஒருவர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நுரையீரல் நோயால் மன்சூர்அலிகான் பட்டோடி பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து அவரது உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் நேற்று மாலை 5.55 மணிக்கு மணிக்கு பிரிந்தது.
வரலாறு படைத்த கேப்டன்
1961-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த மன்சூர் அலிகான் பட்டோடி, 1962-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு வந்தது. அப்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் விளையாடி கொண்டிருந்தது. கேப்டனாக இருந்த நரி கான்ட்ராக்டருக்கு பயிற்சி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டதால், மன்சூர் அலிகான் பட்டோடி கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டன் பொறுப்பை ஏற்கும் போது அவரது வயது 21 ஆண்டு 77 நாட்கள். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்றவர் என்ற சிறப்பை பெற்றார். இந்த பெருமை 2004-ம் ஆண்டு வரை அவரது வசம் இருந்தது.
இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் அவர் கேப்டனாக இருந்துள்ளார். இதில் இந்தியா 9 டெஸ்டில் வெற்றியும், 19-ல் தோல்வியும், 12-ல் டிராவும் கண்டுள்ளது.
1968-ம் ஆண்டு பட்டோடி தலைமையிலான இந்திய அணி நிïசிலாந்து மண்ணில் அந்த அணியை தோற்கடித்தது. வெளிநாட்டு மண்ணில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அதே தொடரை இந்தியா அணி 3-1 என்ற கணக்கில் வென்ற போது, அன்னிய மண்ணில் கிடைத்த முதல் தொடர் வெற்றியாகவும் சரித்திரத்தில் பதிவானது. இதை கவுரவப்படுத்தும் வகையில், அந்த ஆண்டின் விஸ்டன் சாதனை புத்தகத்திலும் அவர் இடம் பெற்றார்.
6 சதம் அடித்தவர்
பட்டோடி வலது கை பேட்ஸ்மேன் ஆவார். மிதவேகப்பந்து வீச்சாளரும் கூட. 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,763 ரன்கள் (சராசரி 34.91) சேர்த்துள்ளார். இதில் 6 சதமும், 16 அரைசதமும் அடங்கும். 1964-ம் ஆண்டு டெல்லியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 203 ரன்கள் குவித்தது அவரது அதிகபட்சமாகும்.
ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடியதில்லை. 1975-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை போட்டி நடுவராக 2 டெஸ்ட் மற்றும் 10 ஒரு நாள் போட்டிகளில் பணியாற்றினார். ஆனால் பெரும்பாலும் கிரிக்கெட் நிர்வாக பொறுப்புகளில் இருந்து அவர் ஒதுங்கியே இருந்தார்.
கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனைகளுக்காக 1964-ம் ஆண்டு அர்ஜுனா விருதினையும், 1967-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.
பாலிவுட் குடும்பம்
பட்டோடியின் மனைவி பாலிவுட் முன்னாள் பிரபல நடிகை ஷர்மிளா தாகூர் ஆவர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகன் சயீப் அலிகான், இந்தியில் முன்னணி நடிகராக உள்ளார். மகள் சோகா அலிகானும் நடிகை ஆவார். மற்றொரு மகள் சபா அலிகான் நகை வடிவமைப்பாளராக இருக்கிறார். பட்டோடியின் மறைவுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
---------
கிரிக்கெட்டுக்கு இழப்பு
பட்டோடியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தெண்டுல்கர் கூறுகையில், `பட்டோடியின் மறைவு கிரிக்கெட் உலகுக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை நான் சில முறை சந்தித்து பேசியிருக்கிறேன். அவரை போன்ற ஒரு ஹீரோவை கிரிக்கெட் உலகம் இழந்துள்ளது. அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன்' என்றார்.
கவாஸ்கர் கூறுகையில், `உண்மையிலேயே இது மிகவும் துயரமான செய்தி. சில வாரங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பட்டோடி கோப்பை வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் அவரை பார்த்தேன். அப்போது அவர் இயல்பாகவே காணப்பட்டார். அதன் பிறகு கிடைத்துள்ள இந்த செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானது. தனது காலத்தில் எல்லோராலும் பாராட்டபடத்தக்க ஒரு கிரிக்கெட் வீரராக பட்டோடி விளங்கினார்' என்றார். தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், `ஆக்ரோஷமாகவும், ஸ்டைலாகவும் ஆடக்கூடிய ஒரு வீரர். சிக்சர்கள் அடிக்கும் முறை அவரது கிரிக்கெட் தகுதியை வெளிப்படுத்தும். கவர் திசையில் அற்புதமான பீல்டிங் செய்ததால் அவர் டைகர் என்று அழைக்கப்பட்டார்' என்றார். `இந்திய கிரிக்கெட்டுக்கு இன்று துக்கமான நாள். எல்லோருக்கும் அவர் உந்துதல் அளிக்கக்கூடியவராக இருந்தார். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கும் பேரிழப்பு' என்று டிராவிட் குறிப்பிட்டார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி
» இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா
» விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்
» இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் ஓய்வு பெறுகிறது
» இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவிசாஸ்திரி:
» இந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா
» விஜயகாந்துக்கு குடிபழக்கமே கிடையாது : மன்சூர் அலிகான்
» இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் ஓய்வு பெறுகிறது
» இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவிசாஸ்திரி:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|