புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுப் பழக்கம் Poll_c10மதுப் பழக்கம் Poll_m10மதுப் பழக்கம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
மதுப் பழக்கம் Poll_c10மதுப் பழக்கம் Poll_m10மதுப் பழக்கம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுப் பழக்கம் Poll_c10மதுப் பழக்கம் Poll_m10மதுப் பழக்கம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
மதுப் பழக்கம் Poll_c10மதுப் பழக்கம் Poll_m10மதுப் பழக்கம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
மதுப் பழக்கம் Poll_c10மதுப் பழக்கம் Poll_m10மதுப் பழக்கம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மதுப் பழக்கம் Poll_c10மதுப் பழக்கம் Poll_m10மதுப் பழக்கம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுப் பழக்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 3:08 am

கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம் என பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறோம் என, நெஞ்சை நிமிர்த்தி சொல்வதில் பெருமை தான். அதேவேளையில், கலாசார சீரழிவு, ஒழுக்கக் கேட்டிலும் நாம் மேற்கத்திய நாடுகளுக்கு, இணையாக வளர்ந்து வருவது வேதனையான விஷயம்.

எப்படி அமெரிக்க கோதுமையோடு, பார்த்தீனியம் விதைகளும் நம் நாட்டுக்குள் இறக்குமதியாகி, கேடு விளைவித்து வருகிறதோ, அதுபோல் நவீன தொழில்நுட்பத்தோடு, மேற்கத்திய கலாசாரமும் இங்கு இறக்குமதியாகி, நமது சமூகத்தை சீரழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

புகை, மது, திருமணத்துக்கு முன் உறவு- இதெல்லாம் கூடாது என நமது முன்னோர்கள் ஒதுக்கினார்கள். ஆனால், நாகரிகம் என்ற போர்வையில், இதையெல்லாம் நியாயப்படுத்த பார்க்கிறது இன்றைய இளைய தலைமுறை.

இந்திய இளைஞர்களிடையே புகைப் பழக்கமும், மது பழக்கமும் அதிகரித்து வருவது சமீபத்திய ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது.

இதில், திடுக்கிடும் தகவல் என்னவெனில், மது குடிக்கும் இந்திய இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது தான். 2000ம் ஆண்டு நடந்த ஆய்வில் இந்தியாவில் 5 சதவீத பெண்களுக்கு மதுப் பழக்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால், ஐ.டி. நிறுவனங்களின் வருகைக்குப் பின், இப்போது 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெங்களூருவில் படித்த இளம் ஆண்களுக்கு இணையாக இளம் பெண்களும் மது அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி. தொழில் இந்தியாவுக்கு எத்தனையோ நன்மைகளை கொடுத்திருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், சில தீமைகளை கொண்டு வந்துள்ளதுதான் துரதிருஷ்டமானது.

கர்ப்ப காலத்தில் மதுவின் ஆபத்து

மேற்கத்திய நாடுகளில் பெண்கள் குடிப்பது சர்வ சாதாரணம். இவ்வாறு குடிப் பழக்கம் உள்ள பெண்கள் அந்த பழக்கத்தை விட முடியாமல், கர்ப்ப காலத்திலும் குடிப்பதால், கர்ப்பத்தில் உள்ள குழந்தை, மன ரீதியிலும், உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கர்ப்பகாலத்தில் குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை, 4 லட்சம் என ஓர் ஆய்வில் தெரியவந்தது. 1,000 குழந்தைகளில் 2 குழந்தைகள் கர்ப்ப கால மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மது அரக்கன், வளரும் கருவையும் விட்டு வைக்கவில்லை. விழித்துக் கொண்ட மருத்துவ உலகம், "அட, கர்ப்ப காலத்திலாவது குடிப்பதை நிறுத்திவிடுங்கள். அப்போது தான் உங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்' என வலியுறுத்தி வருகிறது. இந்த பிரசாரம், இந்தியாவுக்கும் தேவைப்படும் சூழ்நிலை, இப்போது உருவாகி உள்ளது.

பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக, அந்த காலத்தில் பிரசவத்தின் போது பெண்களுக்கு மது கொடுக்கும் பழக்கம், இந்தியாவில் இருந்துள்ளது. ஆனால், மயக்க மருத்துவ துறை வளர்ச்சியால் அதற்கெல்லாம் இப்போது அவசியமில்லாமல் போனது.

தொப்புள் கொடி உறவு

கர்ப்பத்தின் போது மதுக் குடிப்பதால், தாயின் ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால், குழந்தையின் தொப்புள் கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் சென்று பல்வேறு கேடுகளை செய்கிறது.

நாள் ஒன்றுக்கு 15 மி.லி., வரை ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால், போதைக்காக மகிழ்ச்சிக்காக, கிளர்ச்சிக்காக குடிப்பவர்கள் 150 மி.லி.,யில் கூட நிறுத்தமாட்டார்கள்.

கர்ப்ப காலத்தில் மது குடிப்பதால், தாயின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, வாரிசுகளின் எதிர்காலத்தையும் சூன்யமாக்கிவிடும்.

ஆரோக்கிய மனிதர் மது குடித்தால் கூட, முதலில் நரம்பு மண்டலத்தில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

தொப்புள்கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் ஊடுருவும் ஆல்கஹால், முதலில் நரம்பு மண்டலத்தை தான் பதம் பார்க்கிறது. நரம்பு மண்டலம் பாதிக்கும்போது, உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு குழந்தையின் குணாதிசயங்களும் முற்றிலுமாக மாறுபடுகிறது. குழந்தை மூர்க்கனாக, மூடனாக பிறக்கும் வாய்ப்புள்ளது.

நமது குணாதிசயங்கள் கருவிலேயே தீர்மானிக்கப்படுவதால், கர்ப்ப பையில் மதுவை ருசிக்கும் குழந்தையின் பழக்க, வழக்கங்கள் முற்றிலுமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

மூளையில் தொடங்கி...

மூளையில் தொடங்கி, குழந்தையின் கபாலம், கண், இதயம், தண்டுவடம் உட்பட எந்த உறுப்பையும் மது விட்டு வைக்காது என்பது, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவுத் திறன் மிக குறைவாக இருக்கும்.

இதனால் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த முடியாது.

இதயத்தில் பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும். குறைந்த எடை அல்லது அதிக எடையுடன் பிறக்கும். கண் சிறுத்து போகும்.

மதுவினால் ஏற்படும் பாதிப்பு குழந்தை பருவத்தோடு நின்றுவிடுவதில்லை, உயிர் பிரியும் வரை உடனிருந்து தொல்லை கொடுக்கும்.

இது தவிர, மதுக் குடிப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், பிரசவ கால சிக்கல் ஏற்படும்.

எனவே, எப்போதும் மது நல்லதல்ல. அதுவும் கர்ப்பத்தின் போது, ஒரு துளி மதுவும் குழந்தைக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து, பெண்கள் மதுவுக்கு விடை கொடுப்பது நல்லது.

கர்ப்பத்தின் போது மது குடிப்பதால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்

* தலை அளவு சிறுத்திருத்தல்
* பிறவி இதயக் குறைபாடுகள்
* சிறுநீரகங்களில் குறைபாடு
* சராசரி உயரத்தை விட குறைந்த உயரம்
* குறைந்த எடை
* பார்வை திறன் மங்குதல்
* செவித் திறன் குறைபாடு
* புத்தி மந்தம்
* மற்றவருடன் அனுசரித்து செல்லாமை
* மூர்க்கதனம், முரட்டுதனம்
* ஞாபகத் திறன் குறைவு
* படிப்பில் கவனக் குறைவு
* கற்றலில் குறைபாடு
* பேச்சுத் திறன், மொழித் திறன் குறைவு

அளவோடு குடிப்பது நல்லதா?

மதுவை அளவோடு குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற வாதத்தில் சிறிதும் உண்மை இல்லை. 15 மி.லி., வரை ஆல்கஹாலை உடல் ஏற்கும் என்பது உண்மை தான். ஆனால், போதைக்காக குடிப்பவர்கள், 15 மி.லி.,யுடன் நிறுத்த முடியாது. பெண்கள் பீர் குடிக்கலாம். அதில் தீங்கு அதிகம் இல்லை என்ற கருத்தும் அபத்தமானது. கர்ப்பத்தின் போது ஒரு துளி மதுவும், குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

தினமலர்



மதுப் பழக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக