புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
21 Posts - 70%
heezulia
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
1 Post - 3%
viyasan
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
213 Posts - 42%
heezulia
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_m10நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 22, 2011 8:11 pm

First topic message reminder :

மூதுரையை தொடர்ந்து நல்வழியை ஈகரை உறவுகளுக்கு அளிக்கும் முயற்சியை தொடர்ந்துள்ளேன்....

நல்வழி என்பது நல்லவர்கள் சொல்லும் வழி, நல்ல கதிக்கு செல்லும் வழி என்ற பொருள்படும். மூதுரையை போல், மக்கள் வாழ அறிவுரையை கூறும் பாடல்களை உடையது நல்வழி, ஒரு சில பாடல்கள் நாம் பள்ளியில் படித்து இருந்தாலும், நூலில் உள்ள அனைத்து பாடல்களையை படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டியதில்லை. இப்படி நாம் படித்து ரசித்த பாடல்களையும், பார்க்காமல் விட்ட பாடல்களையும் இத்திரியில் பொருளுடன் பதிக்கிறேன், உங்கள் ஆதரவுடன் .........

தவறு நேர்ந்தால் சுட்டி காட்டவும்........


கடவுள் வாழ்த்து

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.

1. நன்மையே செய்க

புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுஙகால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.

2. ஈயாமையின் இழிவு

சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே

இடும்பொய்யை மெய்யென் றிராதே-இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
காலம் நோக்கிச் செய்க

4. காலம் நோக்கிச் செய்க

எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.

5. கவலையுறுதல் கூடாது

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

6. பேராசை கூடாது

உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு

7. ஞானிகள் பற்றற்றிருப்பர்

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

8. மரியாதையே தேடத்தக்கது

ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்

9. குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து

10. இட்டு உண்டு இரும்

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

11.பசி கொடியது

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

12. உழவின் உயர்வு

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு

13. விலக்க இயலாதன

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்-ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.

14. மானமே உயிரினும் சிறந்தது

பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை-சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்

15. திருவைந்தெழுந்தின் சிறப்பு

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்

16. வியத்தகு விழுப்பொருள்

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி

17. தீவினையே வறுமைக்கு வித்து

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்

18. இடிப்பார்க்கு ஈவர்

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங் கொடுத்தாலுந் தாம்.

19. பேரின்பம் நாடாப் பேதமை

சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்

20. பரத்தையரால் செல்வம் பாழாம்

அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.

21.வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் நலன்

நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும்-ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்
தருஞ்சிவந்த தாமரையாள் தான.

22.பாவிகளின் பணம்

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகள் அந்தப் பணம்.

23. வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ்

வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே-மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.

24. வாழ்க்கை மாண்பு ஐந்து

நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ்-மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி யில்லா மனை.

25. வரவறிந்து செலவிட வேண்டும்

ஆன முதலில் அதிகஞ் செலவானான்
மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

26. பசி வந்திடப் பத்தும் பறக்கும்

மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.

27. எல்லாம் இறை செயல்

ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.

28. மனவமைதி வேண்டும்

உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

29. கொடையாளருக்கு எல்லாரும் உறவினர்

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.

30. விதியின் தன்மை

தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி.

31. நல்லன நான்கு

இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாதலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.

32. செல்வநிலையாமையறிந்து உதவுக

ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடுந்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

33. வன்சொல்லும் இன்சொல்லும்

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

34. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை

கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள்
செல்லாது அவன்வாயிற் சொல்.

35. உரைப்பினும் பேதை உணரான்

பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலுந் தோன்றா துணர்வு.

36. பிறர்மனை விரும்பாமை

நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.

37. வீடடைவார்க்கு விதியில்லை

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
விண்ணுறுவார்க் கில்லை விதி.

38. இறைவனுடன் இரண்டற்று நில்

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

39. முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

40. ஒத்த கருத்தமை ஒண்தமிழ் நூல்கள்

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

பொருளுரை தொடரும் ............



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Sep 26, 2011 6:15 pm

தங்களது உரை சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.
கீழே உள்ள வலைப்பூ முகவரி காண்க
vairamani-lakshmi.blogspot.com


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 29, 2011 10:08 am

. பேராசை கூடாது

உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில்-வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு

பொருள் விளக்கம்

கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ?

7. ஞானிகள் பற்றற்றிருப்பர்

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

பொருள் விளக்கம்

எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.

8. மரியாதையே தேடத்தக்கது

ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்
மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்

பொருள் விளக்கம்

உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள்.



தொடரும்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Sep 29, 2011 11:16 am

prlakshmi wrote:தங்களது உரை சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.
கீழே உள்ள வலைப்பூ முகவரி காண்க
vairamani-lakshmi.blogspot.com

தாங்கள் அளித்த ஊக்கத்திற்கு நன்றி ..... நன்றி




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 12:16 pm

சதாசிவம்....எனக்கு அந்த அளவு தமிழ் இலக்கணம், இலக்கியங்களை பற்றி தெரியாது,,,,அதில் ஈடுபாடுமில்லை....ஆனால், நீங்கள் இவ்வாறு பற்றுடன் செய்யும் தொண்டுக்கு நிச்சயம் பாராட்டு சொல்லியே ஆக வேண்டும்... .உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் .....

தூய தமிழின் வார்த்தைகளின் அர்த்தங்கள் கூட எனக்கு தெரியாது என்பது உண்மையே,,,,ஈகரையில் இணைத்ததால் இதை கொஞ்ச அறிகிறேன்..அதற்க்கும் என் நன்றிகள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 30, 2011 10:10 am

9. குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து

பொருள் விளக்கம்

கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர், நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.

10. இட்டு உண்டு இரும்

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

பொருள் விளக்கம்

பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர் திரும்ப இந்த பூமிக்கு வருவதில்லை, பல முயற்சி செய்தாலும் இறப்பை தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க/தப்பிக்க முடியாது. இறப்பு உறுதியாக இறுதியில் வரும். ஆதலால் நமக்கு மட்டும் என்று சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருள்களை அடுத்தவருக்கு கொடுத்து நாம் வாழ வேண்டும் .

11.பசி கொடியது

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

பொருள் விளக்கம்

ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேலையும் உன்னையை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.




தொடரும் ...



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 30, 2011 10:59 am

உமா wrote:சதாசிவம்....எனக்கு அந்த அளவு தமிழ் இலக்கணம், இலக்கியங்களை பற்றி தெரியாது,,,,அதில் ஈடுபாடுமில்லை....ஆனால், நீங்கள் இவ்வாறு பற்றுடன் செய்யும் தொண்டுக்கு நிச்சயம் பாராட்டு சொல்லியே ஆக வேண்டும்... .உங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் .....

தூய தமிழின் வார்த்தைகளின் அர்த்தங்கள் கூட எனக்கு தெரியாது என்பது உண்மையே,,,,ஈகரையில் இணைத்ததால் இதை கொஞ்ச அறிகிறேன்..அதற்க்கும் என் நன்றிகள்.

நன்றி உமா
நன்றி
எனக்கும் பெரிய அளவிற்கு இலக்கணமோ, இலக்கியமோ தெரியாது, படித்தது முழுவதும் ஆங்கில வழியில் தான்.

வார்த்தைகளை பதம் பிரித்து படிக்க கற்றுக் கொண்டால், தமிழ் மிக சுலபமானது, சுவையானது என்பதை அனைவருக்கும் சொல்லும் முயற்சி தான் இந்த நல்ல தமிழ் அறிவோம், உங்கள் வாழ்த்துக்கு நன்றி......



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 01, 2011 6:00 pm

வணக்கம் ஐயா.....
என் தேர்வுகள் முடிந்த பின் நல்வழியை, தொடர்ந்திட எண்ணி அதன் படி முதல் மூன்று நல்வழிகளை படித்து விட்டேன்...

தீதினை மற நல்வினையினை பெற
நன்மையை செய் எனவும்
இடு இல்லாதாற்கு -பெறு
மேலோன் என்ற பேரு எனவும்
மெய்யென்ற உடல் பொய்யாகும்
ஈகை நமை மெய்யாக்கும் எனவும்

நீங்கள் கூறிய எளிமையான விளக்கம்.....எனக்கு புரிந்து கொள்வதை எளிமையாக்கியது....நன்றிகள் ஐயா..



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 02, 2011 11:43 am

12. உழவின் உயர்வு

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு

பொருள் விளக்கம்


ஆற்றங்கரையில் உள்ள மரம், அரச வாழ்க்கை போகம் ஆகியவை நிலையில்லாமல் அழிந்து விடும். உழுதுண்டு வாழும் வாழ்வை விட மேலான வாழ்க்கை வேறு ஒன்று இங்கு இல்லை, மற்ற வேலை அனைத்தும் உழவை விட குறைவானவை தான்.

தொடரும் .....



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 02, 2011 11:44 am

பிஜிராமன் wrote:வணக்கம் ஐயா.....
என் தேர்வுகள் முடிந்த பின் நல்வழியை, தொடர்ந்திட எண்ணி அதன் படி முதல் மூன்று நல்வழிகளை படித்து விட்டேன்...

தீதினை மற நல்வினையினை பெற
நன்மையை செய் எனவும்
இடு இல்லாதாற்கு -பெறு
மேலோன் என்ற பேரு எனவும்
மெய்யென்ற உடல் பொய்யாகும்
ஈகை நமை மெய்யாக்கும் எனவும்

நீங்கள் கூறிய எளிமையான விளக்கம்.....எனக்கு புரிந்து கொள்வதை எளிமையாக்கியது....நன்றிகள் ஐயா..

நன்றி கவிஞசரே ..... நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Oct 02, 2011 12:08 pm

தமிழுக்கு ஒரு நல்ல சேவை செய்து கொண்டு வருகிறீர்கள்..
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!



[You must be registered and logged in to see this image.]

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக