ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்

3 posters

Go down

"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Empty "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்

Post by krishnaamma Thu Sep 22, 2011 5:22 pm

காணக்கிடைக்காத அரிய பொருள் ஒன்று, தங்கள் கைகளில், தங்களுக்கே உரியதாய் இருக்கும் அந்த மகிழ்ச்சியை, உற்சாகத்துடன் வர்ணிக்கின்றனர், அந்த மாணவியர். அவர்களது கண்களில், ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள்; முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் பிரகாசிக்கப் பேசுகின்றனர், அவர்கள்.

""என் கைகளிலும் லேப்-டாப் தவழும் என்று, நான் கனவிலும் நினைத்ததில்லை,'' என்றார், ஒரு மாணவி. ""என் வாழ்க்கையிலேயே இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்ததே இல்லை,'' என்றார், மற்றொருவர். ""உலகமே எங்கள் கைகளில் வந்தது போல் இருந்தது,'' என்கின்றனர், வேறு இரு மாணவியர். கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இவர்கள், தமிழக அரசின் இலவச லேப்-டாப் பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாணவி லோகமாலினி: நினைக்கவே சந்தோஷமாய் இருக்கிறது. நம் கையிலு<ம், "லேப்-டாப்' இருக்கும், நாமும் அதை அன்றாடம் பயன்படுத்துவோம் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவே இல்லை. லேப்-டாப்பை பயன்படுத்தி, படிப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இவரது தந்தை நஞ்சப்பன், கூலித் தொழிலாளி.

இந்துமதி பிரியா: படிப்புக்கு லேப்-டாப் மிகவும் பேருதவியாக இருக்கும். படங்கள் வரைந்து பழகவும், அகராதியில் பொருள் தேடவும், பாடங்கள் படிக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. லேப்-டாப் கிடைத்த தினத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவரது தந்தை முருகேசன், ஒர்க் ஷாப் தொழிலாளி.

ஆர்த்தி: லேப்-டாப் கிடைக்கப் போகிறது என்று அறிந்ததும், நானும், என் பெற்றோரும், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியடைந்தோம். உள்நாட்டு செய்திகள் முதல் வெளிநாட்டுச் செய்திகள் வரை அறிந்து கொள்வதற்கு, லேப்-டாப் பயன்படும். பலருக்கும் கிடைக்காத, விலை மதிப்பான பொருள் நம்மிடம் இருக்கிறது எனும் போது, பெருமிதமாக இருக்கிறது. இவரது தந்தை பொன்னுசாமி, ஆட்டோ டிரைவர்.

அபிராமி: 18 ஆயிரம் ரூபாய் விலை மதிப்பு கொண்ட லேப்-டாப், நமக்கு இலவசமாக கிடைத்திருக்கிறது என்பதை உணரும்போது தான், நாம் எந்தளவுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்பதையும் உணர முடிகிறது. இதை பயன்படுத்தி, படிப்பை மேம்படுத்த முயற்சிப்பேன். இவரது தந்தை கணேசன், ஒர்க் ஷாப் தொழிலாளி.

நிஷா: லேப்-டாப்பில் பாடங்களை படிக்கும் போது, ஆர்வமும், மேலும் படிக்க வேண்டும் என்ற உற்சாகமும் ஏற்படுகிறது. இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி, மிகுந்த பெருமைப்படுகிறேன். இவரது தந்தை மத்தியாஸ், மளிகை கடை நடத்துகிறார்.

உஷாராணி: உலக நடப்புகள், அறிவியல், வரலாறு போன்றவற்றை, ஓரிரு வினாடிகளில் அறிந்து கொள்ள முடியும். இது கையில் இருந்தால், தெரியாத விஷயம் என்று எதுவும் இல்லை. அந்த வகையில், லேப்-டாப் வழங்கிய அரசுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல வேண்டும். இவரது தந்தை முருகேசன், கூலித் தொழிலாளி.

நாகலஷ்மி: என் அண்ணன் படிக்கும் போதெல்லாம், இத்தகைய திட்டங்கள் இல்லை. அதனால், எனக்கு லேப்-டாப் கிடைத்தவுடன், குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்பட்டோம். இவரது தந்தை ராதாகிருஷ்ணன், பெயின்டிங் வேலை பார்க்கிறார்.

சவும்யா தேவி: இதற்கு முன், லேப்-டாப் கம்ப்யூட்டரை நான் பார்த்ததே இல்லை. எப்படியிருக்கும் என்று கூட தெரியாது. அதை கையில் வாங்கிய போது, என்னால் நம்பவே முடியவில்லை. "நடப்பதெல்லாம் உண்மை தானா' என்று கிள்ளிப் பார்க்காத குறை தான். இவரது தந்தை பொன்னுசாமி, ஒர்க் ஷாப் தொழிலாளி.

கார்த்திக்: என் பெற்றோர், "இதை பயன்படுத்தி, நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும்' என்றனர். எனக்கும் அதே எண்ணம் இருக்கிறது. நிச்சயம், இந்த லேப்-டாப்பை பயன்படுத்திக் கொள்வேன். இவரது தந்தை திருப்பதி, மளிகை கடை நடத்துகிறார்.

கோபாலகிருஷ்ணன்: கல்லூரியில் படிக்கும் வசதியான மாணவர்கள் லேப்-டாப் கையில் வைத்திருப்பதை பார்த்தால் ஏக்கமாக இருக்கும். "நம்மிடம் இல்லையே' என்று வருத்தம் ஏற்படும். அப்படியிருந்த எனக்கு, உலகமே என் கைகளில் வந்துவிட்டதை போல், நான் உணர்கிறேன். இவரது தந்தை செல்வம், கட்டட தொழிலாளி. எண்ணிப் பார்த்திராத அதிசயம் ஒன்று நிகழ்ந்து விட்ட பூரிப்பில், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர், லேப்-டாப் பெற்ற மாணவ, மாணவியர். நிச்சயம் அந்த மகிழ்ச்சி, அவர்களது பெற்றோருக்கும் இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Empty Re: "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்

Post by kitcha Thu Sep 22, 2011 5:29 pm

நல்லது நடந்தா சரி "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் 224747944 "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் 2825183110 "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Empty Re: "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Sep 22, 2011 7:22 pm

முதலில் படிப்புக்கு என்று தான் சொல்லுவார்கள் பின் இதனால் தான்
மதிபெண்கள் குறைந்தது என்றும் சிலர் சொல்லலாம்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Empty Re: "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» சாம்பாரின் நெடிய வரலாறு தெரியுமா ? எப்போ வந்தது ? எப்படி வந்தது
» பூரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum