ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க

2 posters

Go down

 படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க Empty படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க

Post by முஹைதீன் Thu Sep 22, 2011 5:05 pm



என் மெயிலுக்கு வந்தவை நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்





மல்லிகை

பிரசவத்திற்கு வீட்டுக்கு வந்திருக்கும் நம் மகள், என் தலை முடியைப் பார்த்து, ''என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு,''என்றதும் குறுக்கே புகுந்த நீங்கள் ''இது நரையா? முப்பது வருடம் மல்லிகைப் பூவை சூடிச்சூடி இவள் கூந்தலும் மல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது,''என்றீர்கள். ''அப்பா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டாரே?''என்றாள் மகள். கட்டிக் கொண்டவளை விட்டுக் கொடுக்க அவருக்குத் தெரியாது,மகளே.


நனையும் குழந்தை

கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய் கனத்துப் பெய்யும் மழையில் தன் கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று தன் முதுகையே கூடாரமாக்குவாள். அப்படியும் அக்குழந்தை நனையும் தாயின் கண்ணீர்த்துளிகளால்.


விழும் போது

விடிகாலை சேவல் கூவியது. 'நான் எழும் போது இந்த சேவல் தான் எத்தனை அன்போடும் நட்போடும் என்னை வாழ்த்துகிறது?'_சூரியன் பூரித்துப் போனது. மாலை நேரம்.சூரியன் மேற்கே அஸ்தமிக்கத் தொடங்கியது. ''நான் விழுந்து கொண்டிருக்கிறேனே! என்னைத் தாங்க யாரும் வரமாட்டார்களா? எழும் போது வாழ்த்துக் கூறிய சேவல் நண்பன் கூட வரவில்லையே!''_ஏங்கியது சூரியன். ''எழும் போது தாங்க வருபவன் எல்லாம் விழும் போது தாங்க வருவதில்லை.'' சூரியன் உணர்ந்து சொல்லியது..


தண்ணீர்

தண்ணீரைக் காட்டி ஞானி கேட்டார், ''இதுவே மேலும் குளிர்ந்தால்...?'' 'பனிக்கட்டி'என்றான் சீடன். ''கொதித்தால்...?'' 'நீராவி'
ஞானி சொன்னார், ''மனிதனும் குளிரும் போது திடமாகிறான். கொதிக்கும் போது ஆவியாகிறான்.''


அழகும் பலனும்

புல் வெளி. அண்ணாந்து ஆகாயம் நோக்கிய சின்னப்புல் சொன்னது, ''இந்த அந்தி நேர மேகம் தான் எத்தனை அழகு! தகதகவென தங்க நிறத்தோடு. அந்த அழுக்கு மேகத்தைத் தான் பிடிக்கவில்லை. கன்னங்கரேல் என்று.'' அம்மாப்புல் அமைதி காத்தது. தகித்தது புல்வெளி. சின்னஞ்சிறு புல் ஒரு துளி நீருக்காக ஏங்கியது. நா உலர்ந்தது. உயிர் மெல்ல மெல்ல வறண்டது. அதே நேரத்தில், அழுக்கு மேகம் இடியோசையோடு மழையாய்ப் பொழியத் துவங்கியது. புல்வெளி எங்கும் பூரிப்பு. அருகில் இருந்த அம்மாப்புல் சொன்னது: ''அழுக்கு மேகம் தன்னையே அழித்துக் கொண்டது பார்த்தாயா? அழகாய் இருப்பவை எல்லாமே பயனுள்ளவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பயனுள்ளவை எல்லாம் அழகாக இருக்க வேண்டும் என்பதில்லை.''


விடாமுயற்சி

கடலோரம். அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி. குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள். முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார், ''உனக்கு என்ன தெரிகிறது?'' 'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.' அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான், 'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.' குரு சொன்னார், ''சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு.''


சேதம்

ஒரு யானை தோட்டத்தில் நுழைந்தால் அது உண்பதை விட சேதமாவதே அதிகமாக இருக்கும். தேனீ தேன்எடுப்பது மட்டும் வித்தியாசமானது. அது தேனை எடுப்பதால் பூவிற்கு எந்த சேதமும் மாற்றமும் ஏற்படுவதில்லை. ஒரு பூவைப் பார்த்து அதில் தேனீ தேன் எடுத்ததா இல்லையா என்பதை அறிய முடியாது.


நிழல்

நான் மாறும் போது தானும் மாறியும் நான் தலை அசைக்கும் போது தானும் தலை அசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்.


மலரின் அழகு

தெய்வத்தின் காலடியில் சமர்ப்பிக்கப் படுவதை விட,ஒரு பெண்ணின் கூந்தலில் இடம் பெறுவதை விட ,மேசையின் மீது பூக்கிண்ணத்தில் செருகப் படுவதை விட செடியிலே இருக்கும் போது தான் மலர் அழகாக இருக்கும்.


தெளிவு

தண்ணீர் தெளிவானது. கண்ணாடி தெளிவானது. அதே போல் தான் மனமும்..தண்ணீரில் அசுத்தமும் கண்ணாடியில் தூசும் மனதில் ஆபாசமும் படிந்தால் தெளிவற்ற தன்மை ஏற்படுகிறது..நமக்கெல்லாம் தெளிவில்லாத போது தான் அடுத்தவரைப் பார்த்து சிரிக்கத் தோன்றும். தெளிவு வந்து விட்டால் தன்னைத்தானே பார்த்து சிரிக்கிறவர்களாகி விடுவோம். நம்முடைய அகந்தையில் செய்யப்படுகின்ற காரியங்களும் முட்டாள்தனங்களும் நகைப்பிற்குரியவை.


சுமை

குடையும் ஒரு சுமை தான் மழை இல்லாத போது. படிப்பும் ஒரு சுமை தான் வேலையில்லாதபோது.


பசுவின் புகழ்

பன்றி, பசுவிடம் தன் ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன். இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .'' பசு கூறியது : நீ கூறுவது உண்மையே. அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''


நான் எங்கே?

நண்பனே. என்னை நீ எங்கே தேடி அலைகிறாய்? நான் உன் அருகிலேயே இருக்கிறேன். நான் ஆலயத்திலும் இல்லை;மசூதியிலும் இல்லை. என்னை உண்மையில் தேடினால் ஒரு கணத்தில் என்னைக் கண்டு பிடித்து விடுவாய். நான் உன் நம்பிக்கையில் இருக்கிறேன் நண்பனே! ---கபீர்தாசர்


மாற்றம்

ஆந்தையைப் பார்த்து காடை கேட்டது,''எங்கு செல்கிறாய்?'' ஆந்தை: கீழ் திசை நோக்கி
காடை: ஏன்?
ஆந்தை: எனது அலறல் சப்தத்தைக் கேட்டு மக்கள் வெறுப்படைகிறார்கள்.
காடை: நீ செய்ய வேண்டியது அலறல் சப்தத்தை மாற்றிக் கொள்வதே.அது உன்னால் முடியாத பட்சத்தில் நீ எங்கு சென்றாலும் வெறுக்கப் படுவாய். _சீனக் குட்டிக் கதை


வித்தியாசம்

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.மற்றொன்று உதைக்கப் படுகின்றது.தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப்படுவான்பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்.


மதிப்பு

ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதற விட்ட நமக்குத் தெரியாது. அதை எடுத்துச் செல்லும் எறும்புக்குத் தான் தெரியும்.



நன்றி: தமிழ் தாயகம்




The Almighty God says,

When a servant thinks of Me, I am near.
When he invokes Me, I am with him.
If he reflects on Me in secret, I reply in secret,
And if he acknowledges Me in an assembly,
I acknowledge him in a far superior assembly.

- Prophet Muhammad as reported by Abu Huraira







__._,_.___


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

 படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க Empty Re: படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க

Post by உதயசுதா Thu Sep 22, 2011 6:12 pm

இதில் ஏற்கனவே சிலவற்றை நான் படிச்சு இருக்கேன்.இருந்தாலும் முழுசும் படிச்சு ரசித்தேன் மொகைதீன்.
பகிர்வுக்கு நன்றி


 படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க U படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க D படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க A படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க Y படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க A படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க S படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க U படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க D படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க H படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க Empty Re: படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க

Post by முஹைதீன் Thu Sep 22, 2011 6:19 pm

நன்றி சுதா அவர்களே
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

 படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க Empty Re: படித்து ரசிக்க அல்லது ரசித்து படிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum