ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரகத்தில் உழலுவதோ?

4 posters

Go down

நரகத்தில் உழலுவதோ? Empty நரகத்தில் உழலுவதோ?

Post by kirikasan Thu Sep 22, 2011 3:04 pm

தேரேறு என்கிறான் தேவன் - நானுந்
தெரியாத வன்போலத் திரும்பியே நின்றேன்
பூவாரி எறிகிறான் என்னைப் - பார்த்துப்
புன்னகை பூத்துமே கைகொண்டு காட்டி
போயேறு என்கிறான் வானில் - அங்கு
பூத்ததோர் வெள்ளியை புதிதாகக் காட்டி
ஏதேது என்றதைக் கேட்க - ஆகா
இனியுந்தன் வாழ்வங்கு இன்பமேயென்றான்

நீரூறு விழிகளைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
விளையாடி வேடிக்கை செய்தும் சிரித்தான்
நோயுறு தேகமும் நொந்து - இங்கு
நிற்கவும் முடியாது போனதே என்றால்
காயமே பொய்யாடா என்று - கை
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை என்றால்
பாயிலே கிடஎன்று என்னைத் - தள்ளிப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தரணியில் வாழ்வோர்க்கு எதிரியோ, என்றேன்
பேயிலும் இழிவென்ற பிறவி இந்த
பிணமோ இக்குருதியில் பேராசை கொண்டாய்

நாளிலே மணம்கொண்டு வீசும் - அது
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - உடல்
தீயிலே போட்டிட சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினைதானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதைநீ மேகம் வந்தால் - அங்கு
தீயாக மாறிநீ திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமா யறியேன்
கொல்வது என்றுதான் வந்தால் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தேதென்று கொண்டாய்
இல்லைவே றிதுதானே நரகம் - காண்
இதுவே உன்மழலையின் சொல்லான நகரம்

கொள்வது எல்லாமே துன்பம் - வான்
கொட்டிடும் மழையிலே கொடிபோலும் மின்னல்
உள்ளதோர் அளவேயுன் இன்பம் -அதில்
ஊதி யடிக்கின்ற புயல் போலும் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடேநீவாழும் -இந்த
உலகவாழ் வினிதென்று எண்ணுதல் ஏனோ

நில் இன்னும் சிறுகாலம் வாழ்வேன் - என்
நெஞ்சினி லாசையும் நிற்குது என்றேன்
நல்லதென் கூற்றினை கேளாய் -பின்
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
அல்லலும் துன்பமும் கொள்ள -உனக்
கத்தனைஆசையா, அற்புதம் மனிதா!
நல்லதோர் புவி செய்ய நீவிர் அதை
நரகமென் றாக்கிந லிந்தின்பங் கண்டீர்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நரகத்தில் உழலுவதோ? Empty Re: நரகத்தில் உழலுவதோ?

Post by பிஜிராமன் Thu Sep 22, 2011 3:20 pm

எமன் தன் பாசக் கயிற்றை வீசிட அதைப் பற்றி பிடித்து.....
விவாதிக்குமாறு இருக்கும் உங்கள் கவிதையை பகிர்ந்தமை அருமை..அல்லது நம் உலகம் நரகமாக மாறி வருவதால் இறைவன் உங்களை காப்பதற்காக கூபிடுகிறான் நீங்கள் இன்னும் வேலை இருக்கிறது என்று கூறுகிறீர்களா....எதாக இருந்தாலும் அருமை....நன்றிகள்.....கிரிகாசன்...... நரகத்தில் உழலுவதோ? 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நரகத்தில் உழலுவதோ? Empty Re: நரகத்தில் உழலுவதோ?

Post by kitcha Thu Sep 22, 2011 3:22 pm

அருமையான கவிதை நரகத்தில் உழலுவதோ? 224747944 நரகத்தில் உழலுவதோ? 2825183110


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நரகத்தில் உழலுவதோ? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நரகத்தில் உழலுவதோ? Empty Re: நரகத்தில் உழலுவதோ?

Post by சாவித்ரி Thu Sep 22, 2011 3:26 pm

//பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை என்றால்
பாயிலே கிடஎன்று என்னைத் - தள்ளிப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தரணியில் வாழ்வோர்க்கு எதிரியோ, என்றேன்
பேயிலும் இழிவென்ற பிறவி இந்த
பிணமோ இக்குருதியில் பேராசை கொண்டாய்// அருமையான வரிகள் கிரிகாசன் அவர்களே.. நன்கு சிந்திக்க வைத்தது உங்கள் வரிகள். மிகவும் அருமை.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

நரகத்தில் உழலுவதோ? Empty Re: நரகத்தில் உழலுவதோ?

Post by kirikasan Thu Sep 22, 2011 5:02 pm

நல்லது நண்பர்களே! நன்றிகள் பாராட்டுக்கு!

இரண்டுநாளாக எழுந்துநடக்க முடியவில்லை. முதுகுவலி என்பார்களே அது என்று நினைக்கிறேன். அவசரமாக குனிந்துவேலைசெய்யும்போது பிடிக்குமல்லவா! அதனாலே எழுந்த கற்பனை!
நன்றிகள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நரகத்தில் உழலுவதோ? Empty Re: நரகத்தில் உழலுவதோ?

Post by kitcha Thu Sep 22, 2011 5:09 pm

kirikasan wrote:நல்லது நண்பர்களே! நன்றிகள் பாராட்டுக்கு!

இரண்டுநாளாக எழுந்துநடக்க முடியவில்லை. முதுகுவலி என்பார்களே அது என்று நினைக்கிறேன். அவசரமாக குனிந்துவேலைசெய்யும்போது பிடிக்குமல்லவா! அதனாலே எழுந்த கற்பனை!
நன்றிகள்



சாதாரண முதுகுவலி என்றால் ஓகே,இல்லை பேக்பெயின் சம்பந்தமான பிரச்சனை என்றால்,உடனே டாக்டரை பார்க்கவும், அதிக கவனம் தேவை.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நரகத்தில் உழலுவதோ? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நரகத்தில் உழலுவதோ? Empty Re: நரகத்தில் உழலுவதோ?

Post by kirikasan Thu Sep 22, 2011 5:21 pm

நன்றிகள் கிச்சா எனக்கு முன்னரே இரண்டுதடவை வந்திருக்கிறது. திடீரென்று திரும்பினாலே குனிந்து தீடீரென்று ஏதாவதோ செய்தால் வரும். ஒரு சொக் அடித்ததுபோல் (மின்னல் தாக்கியதுபோல்)இடுப்பில் இருந்தது .அவ்வளவுதான் நடக்க இருக்க ஏன் படுக்கவே முடியவில்லை. இன்று மூன்றாம்நாள் . கொஞ்சம் தேறி தாத்தா போல் தடிபிடித்து நடக்க முடிகிறது.

டாக்டரிடம் போகவில்லை. பார்ப்போம் குணமடைகிறது.
நன்றிகள்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

நரகத்தில் உழலுவதோ? Empty Re: நரகத்தில் உழலுவதோ?

Post by kitcha Thu Sep 22, 2011 5:28 pm

kirikasan wrote:நன்றிகள் கிச்சா எனக்கு முன்னரே இரண்டுதடவை வந்திருக்கிறது. திடீரென்று திரும்பினாலே குனிந்து தீடீரென்று ஏதாவதோ செய்தால் வரும். ஒரு சொக் அடித்ததுபோல் (மின்னல் தாக்கியதுபோல்)இடுப்பில் இருந்தது .அவ்வளவுதான் நடக்க இருக்க ஏன் படுக்கவே முடியவில்லை. இன்று மூன்றாம்நாள் . கொஞ்சம் தேறி தாத்தா போல் தடிபிடித்து நடக்க முடிகிறது.

டாக்டரிடம் போகவில்லை. பார்ப்போம் குணமடைகிறது.
நன்றிகள்!



இதற்கு முன் இப்படி வந்ததுண்டா,இல்லை இது தான் முதல் தடவையா.

உடனே ஒரு நல்ல பிஸியோதெரபி டாக்டரை பாருங்கள்.இல்லையென்றால் கிராமத்தில் ஒரு சில நாட்டு வைத்தியர்கள் இருப்பார்கள்,அவர்களிடம் சென்று பார்த்தாலும் ஓகே.

இது பேக்பெயின் பிரச்சனை என்றே நினைக்கிறேன்.காலதாமதம் வேண்டாம்,


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நரகத்தில் உழலுவதோ? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நரகத்தில் உழலுவதோ? Empty Re: நரகத்தில் உழலுவதோ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum