புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.
பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.
வரலாறு
வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.
தமிழ் மருத்துவ வரலாறு
முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.
வரலாற்றின் தேவை
மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.
வரலாற்றின் இன்றியமையாமை
உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.
தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.
பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.
வரலாறு
வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.
தமிழ் மருத்துவ வரலாறு
முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.
வரலாற்றின் தேவை
மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.
வரலாற்றின் இன்றியமையாமை
உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.
திருமந்திரம்
திருமந்திரம்' மனித உயிரின் தோற்றம் முதல் இறுதிவரையுள்ள அனைத்து நிலைகளையும் கூறுகிறது. உடலில் பஞ்சபூதங்களின் நிலையையும், பிறப்பில் குட்டை' முடம், கூண்' மந்தம், ஊமை' குருடு, அலி போன்றவை உண்டாவதற்குரிய காரணங்களையும் உரைக்கிறது.122
மனித உடம்பில் உள்ள 300 எலும்புகள்' 72000 நாடிகள் குறிப்பிடப் படுகின்றன.123
நாடிகள்10; வாயுக்கள்10; குணம் 6; வாயில்9;புலன்5; பூதம்5;பூதங்களின் விகற்பம்15; ஆக 60-ம் தத்துவமாகக் கூறப்பட்டுள்ளன. சித்தாந்தத்தின் தத்துவம் தொண்ணூற்றாறு என்றும்' அவற்றுள் தத்துவம் முப்பத்தாறு + தாத்துவீகம் அறுபதும் திருமந்திரத்தில் வெவ்வேறிடங்களில் விவரிக்கப்படுகின்றன.124 மனித உடம்பில் உருவாகும் நோய்களின் எண்ணிக்கை 4448 என்கிறது.125 நோய்கள் தோன்றுவதற்குரிய காரணங்களை விளக்கி நோயைக் கண்டறிய நோயின் குறி குணங்களை விவரிக்கிறது.126 கண்ணோய், சுரம்' சன்னி, வாயு' கருப்பச் சூலை, மேகம்' குன்மம்' குட்டம், கிராணி போன்ற நோய்களுக்கும், பிற நோய்களுக்கும் மருந்து உரைக்கப் பட்டுள்ளது.127 உடம்பில் மூப்பு நிலை தோன்றாமல் இருக்கவும் இளமையாக இருக்கவும் 108 கற்பங்கள் கூறுவதுடன், அவற்றினால் உடல் காய சித்தியாகும் என்கிறது.128
மரணம் என்பதும் மறு பிறப்பு என்பதும் சித்தர் கொள்கைக்கு எதிரானவை என்பதால்' மரணமில்லாப் பெருவாழ்வு வாழ சாகாக் கலை என்னும் முறை விவரிக்கப்படுவதுடன், அதற்குரிய நெறிகளையும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் விளக்கியுள்ளது.129 மரணத்தை வென்றிடும் யோகமுறைகளைப் பயில அதற்குரிய நாள்' நட்சத்திரம், காலம் ஆகியவற்றுடன் யோகம் பயிலக் கூடாத நாள்களையும் குறிப்பிடுகிறது.130 மனித உடம்பில் ஆறு ஆதாரங்களை எடுத்துரைத்து அவற்றுக்கும் இராசி' நட்சத்திரம் ஆகியவற்றுக்கும் உரிய தொடர்பையும் விளக்குகிறது.131
மனித உடலில் இயங்குகின்ற மூச்சுக் காற்றான பிராணன், எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த நாடிகளில் இயங்க வேண்டும் என்பதையும், சந்திரனின் வளர்பிறை' தேய்பிறை ஆகிய இரண்டிற்கும் மூச்சுக் காற்றுக்கும் உள்ள தொடர்பையும் அறியச் செய்கிறது.132 திருமந்திரத்தினாலும் பிற சித்த மருத்துவ நூல்களினாலும் பல கோட்பாட்டு முறைகளை அறிய முடிகின்றது. அவை' உயிரியல் கோட்பாடு, உடலியல் கோட்பாடு, பஞ்சபூதக் கோட்பாடு, மருத்துவக் கோட்பாடு, மருந்தியல் கோட்பாடு, வாழ்வியல் கோட்பாடு என்பவையாகும். இத்தகைய கோட்பாட்டு முறைகளினால் மருத்துவத் தையும் மனித வாழ்வையும் மேம்படுத்த' மருத்துவ முறைகளைத் தமிழுக்கு வழங்கியவர்களாகத் திருமூலர்' அகத்தியர், போகர்' திருவள்ளுவர், சட்டைமுனி' கோரக்கர், கொங்கணர்' இடைக்காடர், புலத்தியர்' புலிப்பாணி, தேரையர்' யூகி போன்ற முனிவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கின்றனர்.
திருமூலர் முதலிய சித்தர்களால் உருவாக்கப்பட்ட உயிர், உடல், மருத்துவக் கோட்பாடுகள்,சோழர்களின் ஆட்சிக் காலங்களில் சிறந்த நிலையில் போற்றக் கூடியவையாக இருந்திருக்கின்றன. சோழர்களின் ஆட்சிக் காலங்களில் உருவாகிய கோயில்கள் மனித உயிர், உடல் ஆகியவற்றின் குறியீட்டு முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய கோயில்களிலும்' கோயில் வளாகங்களிலும் மருத்துவ மனைகள் உருவாக்கி' மருத்துவம் செய்யப்பட்டது.
குறிப்பாக' தில்லை நடராஜப் பெருமானின் திருவுருவம்' விஞ்ஞானம், சமயம்' கலை ஆகிய அனைத்தையும் ஒன்றாக்கி விளக்கும் ஓர் உண்மை ஒளியாகும். சோழப் பேரரசன் இராசராசன் காலத்தில் தான் இத்திருவுருவம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. அதன் பின்னரே அனைத்துச் சிவாலயங்களும் இம்முறையில் அமையலாயின133 என்றுரைப்பது கருதத்தக்கது.
தில்லைத் திருக்கோயிலுள் அமைந்துள்ள சித்சபை என்னும் பொன்னம்பலத்தின் மேல் ஒன்பது தங்கக்கலசங்கள் உள்ளன. அவை மனித உடலிலுள்ள ஒன்பது ஆற்றல்களைக் குறிக்கும். பொன்னம் பலத்தில் 64 கைம்மரங்கள் உள்ளன. அவை 64 கலைகளாகும்.21600 பொன்னால் செய்யப்பட்ட ஓடுகள் வேயப்பட்டுள்ளன. அவை, மனிதன் ஒவ்வொரு நாளும் விடுகின்ற சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும். அவற்றில் 72000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை மனித உடம்பில் இயங்கும் நாடிகளைக் குறிப்பிடும்.
இதயம்' உடம்பின் நடுவே இல்லாமல் இடப்புறத்தே இருப் பதைப் போல' கோயிலின் மூலக்கிரகம் சிறிது தள்ளியே அமைந் திருக்கிறது. மனித இருதயத்துக்குச் செல்லும் இரத்தம் நேரில் செல்லாமல் பக்கங்களிலிருந்தே செல்வது போல, அக்கோயிலுக்குள் செல்லும் வழிகள் நேராக இல்லாமல் இருபக்கங்களிலும் அமைந் திருக்கின்றன. கனக சபையில் உள்ள ஐந்து வெள்ளிப் படிகள், ஐந்து பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்தெழுத்தை உணர்த்துவன;வெள்ளிப் பலகணிகள் தொண்ணூற்றாறும், தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவன. கோயிலுள் அமைந்துள்ள கொடி மரம், மனிதனின் வாய்க்குள் உள்ள அண்ணாக்கைக் குறிக்கும். மனிதனின் இதயத்தில் இருக்கின்ற இறைவனே தில்லைத் திருக்கோயிலில் இருக்கின்றார் என்பதனை உணர்த்தவே, மனித உடல் போலவே பொன்னம்பலம் அமைந்திருக்கிறது134 என்று பொன்னம்பலத் தத்துவத்தைத் தல புராணம் விளக்குகிறது. இக்கோயிலில்' மிகப் பழமையான கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அது திருமூலரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும், திருமூலர், வியாக்கிரபாதர்' பதஞ்சலி ஆகிய மூன்று சித்தர்களின் மூர்த்தங்கள் இருக்கின்றன.
மேற்கண்ட இத்தல புராணத்தின் தகவல்களினால், சித்தர்களின் கோட்பாட்டு முறைகளைப் பின்பற்றிய சோழர்கள்' சைவக் கோயில்களில் இடம் பெறச் செய்ததுடன் அவற்றின் சிறப்பினை அனைவரும் அறியச் செய்தனர். அத்துடன் மருத்துவத் தொழிலையும் வளர்த்துப் போற்றியிருக்கின்றனர்.
திருமந்திரம்' மனித உயிரின் தோற்றம் முதல் இறுதிவரையுள்ள அனைத்து நிலைகளையும் கூறுகிறது. உடலில் பஞ்சபூதங்களின் நிலையையும், பிறப்பில் குட்டை' முடம், கூண்' மந்தம், ஊமை' குருடு, அலி போன்றவை உண்டாவதற்குரிய காரணங்களையும் உரைக்கிறது.122
மனித உடம்பில் உள்ள 300 எலும்புகள்' 72000 நாடிகள் குறிப்பிடப் படுகின்றன.123
நாடிகள்10; வாயுக்கள்10; குணம் 6; வாயில்9;புலன்5; பூதம்5;பூதங்களின் விகற்பம்15; ஆக 60-ம் தத்துவமாகக் கூறப்பட்டுள்ளன. சித்தாந்தத்தின் தத்துவம் தொண்ணூற்றாறு என்றும்' அவற்றுள் தத்துவம் முப்பத்தாறு + தாத்துவீகம் அறுபதும் திருமந்திரத்தில் வெவ்வேறிடங்களில் விவரிக்கப்படுகின்றன.124 மனித உடம்பில் உருவாகும் நோய்களின் எண்ணிக்கை 4448 என்கிறது.125 நோய்கள் தோன்றுவதற்குரிய காரணங்களை விளக்கி நோயைக் கண்டறிய நோயின் குறி குணங்களை விவரிக்கிறது.126 கண்ணோய், சுரம்' சன்னி, வாயு' கருப்பச் சூலை, மேகம்' குன்மம்' குட்டம், கிராணி போன்ற நோய்களுக்கும், பிற நோய்களுக்கும் மருந்து உரைக்கப் பட்டுள்ளது.127 உடம்பில் மூப்பு நிலை தோன்றாமல் இருக்கவும் இளமையாக இருக்கவும் 108 கற்பங்கள் கூறுவதுடன், அவற்றினால் உடல் காய சித்தியாகும் என்கிறது.128
மரணம் என்பதும் மறு பிறப்பு என்பதும் சித்தர் கொள்கைக்கு எதிரானவை என்பதால்' மரணமில்லாப் பெருவாழ்வு வாழ சாகாக் கலை என்னும் முறை விவரிக்கப்படுவதுடன், அதற்குரிய நெறிகளையும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் விளக்கியுள்ளது.129 மரணத்தை வென்றிடும் யோகமுறைகளைப் பயில அதற்குரிய நாள்' நட்சத்திரம், காலம் ஆகியவற்றுடன் யோகம் பயிலக் கூடாத நாள்களையும் குறிப்பிடுகிறது.130 மனித உடம்பில் ஆறு ஆதாரங்களை எடுத்துரைத்து அவற்றுக்கும் இராசி' நட்சத்திரம் ஆகியவற்றுக்கும் உரிய தொடர்பையும் விளக்குகிறது.131
மனித உடலில் இயங்குகின்ற மூச்சுக் காற்றான பிராணன், எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த நாடிகளில் இயங்க வேண்டும் என்பதையும், சந்திரனின் வளர்பிறை' தேய்பிறை ஆகிய இரண்டிற்கும் மூச்சுக் காற்றுக்கும் உள்ள தொடர்பையும் அறியச் செய்கிறது.132 திருமந்திரத்தினாலும் பிற சித்த மருத்துவ நூல்களினாலும் பல கோட்பாட்டு முறைகளை அறிய முடிகின்றது. அவை' உயிரியல் கோட்பாடு, உடலியல் கோட்பாடு, பஞ்சபூதக் கோட்பாடு, மருத்துவக் கோட்பாடு, மருந்தியல் கோட்பாடு, வாழ்வியல் கோட்பாடு என்பவையாகும். இத்தகைய கோட்பாட்டு முறைகளினால் மருத்துவத் தையும் மனித வாழ்வையும் மேம்படுத்த' மருத்துவ முறைகளைத் தமிழுக்கு வழங்கியவர்களாகத் திருமூலர்' அகத்தியர், போகர்' திருவள்ளுவர், சட்டைமுனி' கோரக்கர், கொங்கணர்' இடைக்காடர், புலத்தியர்' புலிப்பாணி, தேரையர்' யூகி போன்ற முனிவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கின்றனர்.
திருமூலர் முதலிய சித்தர்களால் உருவாக்கப்பட்ட உயிர், உடல், மருத்துவக் கோட்பாடுகள்,சோழர்களின் ஆட்சிக் காலங்களில் சிறந்த நிலையில் போற்றக் கூடியவையாக இருந்திருக்கின்றன. சோழர்களின் ஆட்சிக் காலங்களில் உருவாகிய கோயில்கள் மனித உயிர், உடல் ஆகியவற்றின் குறியீட்டு முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அத்தகைய கோயில்களிலும்' கோயில் வளாகங்களிலும் மருத்துவ மனைகள் உருவாக்கி' மருத்துவம் செய்யப்பட்டது.
குறிப்பாக' தில்லை நடராஜப் பெருமானின் திருவுருவம்' விஞ்ஞானம், சமயம்' கலை ஆகிய அனைத்தையும் ஒன்றாக்கி விளக்கும் ஓர் உண்மை ஒளியாகும். சோழப் பேரரசன் இராசராசன் காலத்தில் தான் இத்திருவுருவம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. அதன் பின்னரே அனைத்துச் சிவாலயங்களும் இம்முறையில் அமையலாயின133 என்றுரைப்பது கருதத்தக்கது.
தில்லைத் திருக்கோயிலுள் அமைந்துள்ள சித்சபை என்னும் பொன்னம்பலத்தின் மேல் ஒன்பது தங்கக்கலசங்கள் உள்ளன. அவை மனித உடலிலுள்ள ஒன்பது ஆற்றல்களைக் குறிக்கும். பொன்னம் பலத்தில் 64 கைம்மரங்கள் உள்ளன. அவை 64 கலைகளாகும்.21600 பொன்னால் செய்யப்பட்ட ஓடுகள் வேயப்பட்டுள்ளன. அவை, மனிதன் ஒவ்வொரு நாளும் விடுகின்ற சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும். அவற்றில் 72000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை மனித உடம்பில் இயங்கும் நாடிகளைக் குறிப்பிடும்.
இதயம்' உடம்பின் நடுவே இல்லாமல் இடப்புறத்தே இருப் பதைப் போல' கோயிலின் மூலக்கிரகம் சிறிது தள்ளியே அமைந் திருக்கிறது. மனித இருதயத்துக்குச் செல்லும் இரத்தம் நேரில் செல்லாமல் பக்கங்களிலிருந்தே செல்வது போல, அக்கோயிலுக்குள் செல்லும் வழிகள் நேராக இல்லாமல் இருபக்கங்களிலும் அமைந் திருக்கின்றன. கனக சபையில் உள்ள ஐந்து வெள்ளிப் படிகள், ஐந்து பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்தெழுத்தை உணர்த்துவன;வெள்ளிப் பலகணிகள் தொண்ணூற்றாறும், தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவன. கோயிலுள் அமைந்துள்ள கொடி மரம், மனிதனின் வாய்க்குள் உள்ள அண்ணாக்கைக் குறிக்கும். மனிதனின் இதயத்தில் இருக்கின்ற இறைவனே தில்லைத் திருக்கோயிலில் இருக்கின்றார் என்பதனை உணர்த்தவே, மனித உடல் போலவே பொன்னம்பலம் அமைந்திருக்கிறது134 என்று பொன்னம்பலத் தத்துவத்தைத் தல புராணம் விளக்குகிறது. இக்கோயிலில்' மிகப் பழமையான கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அது திருமூலரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும், திருமூலர், வியாக்கிரபாதர்' பதஞ்சலி ஆகிய மூன்று சித்தர்களின் மூர்த்தங்கள் இருக்கின்றன.
மேற்கண்ட இத்தல புராணத்தின் தகவல்களினால், சித்தர்களின் கோட்பாட்டு முறைகளைப் பின்பற்றிய சோழர்கள்' சைவக் கோயில்களில் இடம் பெறச் செய்ததுடன் அவற்றின் சிறப்பினை அனைவரும் அறியச் செய்தனர். அத்துடன் மருத்துவத் தொழிலையும் வளர்த்துப் போற்றியிருக்கின்றனர்.
சோழர்கால மருத்துவம்
சோழர்கள் தென்னிந்தியாவில் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை அரசாண்டிருக்கின்றார்கள். இவர்கள் தங்களது வலிமையை நிலைநாட்ட இந்தியாவின் வட பகுதியிலும், கடல் கடந்தும் சென்றிருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் மருத்துவச் சாலைகள் (ஆதுலர் சாலைகள்) அமைத்தும் அவை இயங்குவதற்குக் கொடை வழங்கியும் இருக்கின்றார்கள்.
“சோழர்கால மருத்துவப் பணியை அறியத் துணையாக அமைவது அக்காலக் கல்வெட்டுகள். அவை, திருமுக்கூடல்' திருப்பத்தூர், திருவாவடுதுறை' கிரகளூர், கூகூர்' கடத்தூர் ஆகிய இடங்களில் காணப்படுபவையாகும்"135
செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்' திருமூடல் எனும் ஊரில் அமைந்துள்ள, வெங்கடேசப் பெருமாள் கோயிலிலுள்ள வீர இராசேந்திர சோழனின் 5-ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ‘வீரசோழன்' என்ற பெயரில் மருத்துவமனை, கோயில் நிருவாகத்தின் கீழ் நடத்தப் பட்டதாகவும்' அங்கே ஒரு மருத்துவ விடுதியும் இயங்கியிருந்த தாகவும் தெரிவிக்கிறது.
அம்மருத்துவ மனையில் நாடி பார்த்து மருந்தெழுதிக் கொடுப் பவர் ‘சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாம பட்டன்' எனும் பெயரில் இருந்ததாகவும், அவர் ஆண்டுக்கு 90 கலம் நெல்லும் 80 காசும் ஊதியமாகப் பெற்றிருக்கிறார்.136
அறுவை செய்யும் மருத்துவர், ‘சல்லியக் கிரியைப் பண்ணுவான்' எனப்பட்டார். அவருக்கு ஆண்டுக்கு 30 கலம் நெல்லும்' 2 காசும் ஊதியமாகும்.137
மருத்துவப் பணி மகளிர், ‘மருந்து அடும் பெண்டுகள்' எனப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டொன்றுக்கு 30 கலம் நெல்லும், ஒரு காசும் ஊதியமாக வழங்கப்பட்டிருக்கின்றது.138
மருத்துவ மூலிகைகளையும், எரிப்புக்கான விறகையும் கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவியாக இருப்பவருக்கு 30 கலம் நெல்லும் ஒரு காசும் ஊதியமாகும்.
அறுவைத் தொழில் செய்யும் நாவிதர்கள் பணியாற்றி யிருக்கின்றனர். அவர்கள் மருத்துவர் என்றும் அழைக்கப்பட்டனர். பிள்ளைப் பேற்றின் போது, இவர்களின் மனைவிமார் ஈடுபட்டிருக் கின்றனர். அப்பெண்டிர் ‘மருத்துவச்சி' என்றழைக்கப்பெற்றனர். இவர்களுக்கு, 15 கலம் நெல் மட்டும் ஊதியமாக அளிக்கப் பெற்றது.139
வீர சோழன் மருத்துவமனையில் ஓராண்டிற்கு வேண்டிய மருந்துகள் இருப்பில் இருந்ததாகவும்' அவை அளவுடன் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.140
சோழர்கள் தென்னிந்தியாவில் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதிவரை அரசாண்டிருக்கின்றார்கள். இவர்கள் தங்களது வலிமையை நிலைநாட்ட இந்தியாவின் வட பகுதியிலும், கடல் கடந்தும் சென்றிருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் மருத்துவச் சாலைகள் (ஆதுலர் சாலைகள்) அமைத்தும் அவை இயங்குவதற்குக் கொடை வழங்கியும் இருக்கின்றார்கள்.
“சோழர்கால மருத்துவப் பணியை அறியத் துணையாக அமைவது அக்காலக் கல்வெட்டுகள். அவை, திருமுக்கூடல்' திருப்பத்தூர், திருவாவடுதுறை' கிரகளூர், கூகூர்' கடத்தூர் ஆகிய இடங்களில் காணப்படுபவையாகும்"135
செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம்' திருமூடல் எனும் ஊரில் அமைந்துள்ள, வெங்கடேசப் பெருமாள் கோயிலிலுள்ள வீர இராசேந்திர சோழனின் 5-ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ‘வீரசோழன்' என்ற பெயரில் மருத்துவமனை, கோயில் நிருவாகத்தின் கீழ் நடத்தப் பட்டதாகவும்' அங்கே ஒரு மருத்துவ விடுதியும் இயங்கியிருந்த தாகவும் தெரிவிக்கிறது.
அம்மருத்துவ மனையில் நாடி பார்த்து மருந்தெழுதிக் கொடுப் பவர் ‘சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாம பட்டன்' எனும் பெயரில் இருந்ததாகவும், அவர் ஆண்டுக்கு 90 கலம் நெல்லும் 80 காசும் ஊதியமாகப் பெற்றிருக்கிறார்.136
அறுவை செய்யும் மருத்துவர், ‘சல்லியக் கிரியைப் பண்ணுவான்' எனப்பட்டார். அவருக்கு ஆண்டுக்கு 30 கலம் நெல்லும்' 2 காசும் ஊதியமாகும்.137
மருத்துவப் பணி மகளிர், ‘மருந்து அடும் பெண்டுகள்' எனப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டொன்றுக்கு 30 கலம் நெல்லும், ஒரு காசும் ஊதியமாக வழங்கப்பட்டிருக்கின்றது.138
மருத்துவ மூலிகைகளையும், எரிப்புக்கான விறகையும் கொண்டு வந்து மருந்து தயாரிக்க உதவியாக இருப்பவருக்கு 30 கலம் நெல்லும் ஒரு காசும் ஊதியமாகும்.
அறுவைத் தொழில் செய்யும் நாவிதர்கள் பணியாற்றி யிருக்கின்றனர். அவர்கள் மருத்துவர் என்றும் அழைக்கப்பட்டனர். பிள்ளைப் பேற்றின் போது, இவர்களின் மனைவிமார் ஈடுபட்டிருக் கின்றனர். அப்பெண்டிர் ‘மருத்துவச்சி' என்றழைக்கப்பெற்றனர். இவர்களுக்கு, 15 கலம் நெல் மட்டும் ஊதியமாக அளிக்கப் பெற்றது.139
வீர சோழன் மருத்துவமனையில் ஓராண்டிற்கு வேண்டிய மருந்துகள் இருப்பில் இருந்ததாகவும்' அவை அளவுடன் குறிப்பிடப் பட்டிருக்கின்றன.140
படுக்கை வசதி
இந்த மருத்துவ மனையில் 15 படுக்கைகள் இருந்தன. நோயாளி யை ‘வியாதிப்பட்டுக் கிடப்பார்' என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ஒரு நாழி அரிசி மானியமாக வழங்கப் பட்டிருக்கிறது. மருத்துவமனை விளக்குகளுக்கு நாளொன்றுக்கு 2.30 காசும், விளக்கு ஒன்றுக்கு ஆழாக்கு எண்ணெயும் வழங்கப் பட்டிருக்கிறது" (ARE 248/1923).
சுந்தர சோழர் மருத்துவ மனை
இராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவை பிராட்டியார் பெயரில், ‘சுந்தர சோழ விண்ணகர் ஆதுலர்சாலை' என்ற மருத்துவ மனை ஒன்று நிறுவப்பட்டு அதற்கு நிதியாக ‘மருத்துவக்காணி' யாக நிலமும் அளித்துள்ளது எனத் தெரிகிறது. (ARE.248/1923).
திருப்புகலூர் மருத்துவமனை
விக்கிரம சோழன், முடிகண்ட சோழப் பேராற்றின் வடகரையில் மருத்துவம் செய்யவும், உணவளிக்கவும்' ஒரு மருத்துவமனையும், மடமும் ஏற்படுத்தினான் என்று, இவனுடைய 2-ஆம் ஆண்டுத் திருப்புகலூர்க் கல்வெட்டு கூறுகிறது.
மருத்துவக் கல்லூரி
திருவாவடுதுறையில் ஒரு கல்லூரி இயங்கியிருக்கிறது. மருத்துவம் படித்த மாணவர்கள் முன்னூற்றி அறுபத்து நால்வர்க்கு உணவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று' விக்கிரம சோழனின் 3-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.141
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவி
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மடம் உணவு வழங்கி வந்திருக்கிறது.
மருத்துவப் பண்டிதர்க்கு உதவி
மருத்துவம் செய்யும் மருத்துவப் பண்டிதர்களுக்கு 12 வேலி நிலம் கொடையாக அளிக்கப்பட்டதாக இரண்டாம் குலோத்துங்கனின் 13-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு குறிக்கிறது.142
சோழர்கால மருத்துவர்கள்
சோழர் காலத்தில் தொழில் புரிந்த மருத்துவர் பலர் இருந்திருக்கின்றனர். இவர்கள்' அரசோடு தொடர்புடையவர்கள்; அரசின் ஊதியம், மானியம் போன்றவற்றைப் பெற்றவர்கள் எனத் தெரிகிறது. இவர்களின் பெயர்கள் சிலவற்றைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவர்கள், சவர்ணன் அரையன் சந்திர சேகரன்' கோதண்டராம அசுவத்தாம பட்டன்' மங்களாதி ராசன் சீராளன் என்பவர்கள். இம்மருத்துவர்கள் சைவ சிகாமணி சிவகீர்த்தி கடக மெடுத்த கூத்த பிரான் எனச் சிறப்புப் பெயர் பெற்றிருக்கின்றனர்.143
இந்த மருத்துவ மனையில் 15 படுக்கைகள் இருந்தன. நோயாளி யை ‘வியாதிப்பட்டுக் கிடப்பார்' என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ஒரு நோயாளிக்கு ஒரு நாளைக்கு ஒரு நாழி அரிசி மானியமாக வழங்கப் பட்டிருக்கிறது. மருத்துவமனை விளக்குகளுக்கு நாளொன்றுக்கு 2.30 காசும், விளக்கு ஒன்றுக்கு ஆழாக்கு எண்ணெயும் வழங்கப் பட்டிருக்கிறது" (ARE 248/1923).
சுந்தர சோழர் மருத்துவ மனை
இராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவை பிராட்டியார் பெயரில், ‘சுந்தர சோழ விண்ணகர் ஆதுலர்சாலை' என்ற மருத்துவ மனை ஒன்று நிறுவப்பட்டு அதற்கு நிதியாக ‘மருத்துவக்காணி' யாக நிலமும் அளித்துள்ளது எனத் தெரிகிறது. (ARE.248/1923).
திருப்புகலூர் மருத்துவமனை
விக்கிரம சோழன், முடிகண்ட சோழப் பேராற்றின் வடகரையில் மருத்துவம் செய்யவும், உணவளிக்கவும்' ஒரு மருத்துவமனையும், மடமும் ஏற்படுத்தினான் என்று, இவனுடைய 2-ஆம் ஆண்டுத் திருப்புகலூர்க் கல்வெட்டு கூறுகிறது.
மருத்துவக் கல்லூரி
திருவாவடுதுறையில் ஒரு கல்லூரி இயங்கியிருக்கிறது. மருத்துவம் படித்த மாணவர்கள் முன்னூற்றி அறுபத்து நால்வர்க்கு உணவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று' விக்கிரம சோழனின் 3-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.141
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உதவி
மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மடம் உணவு வழங்கி வந்திருக்கிறது.
மருத்துவப் பண்டிதர்க்கு உதவி
மருத்துவம் செய்யும் மருத்துவப் பண்டிதர்களுக்கு 12 வேலி நிலம் கொடையாக அளிக்கப்பட்டதாக இரண்டாம் குலோத்துங்கனின் 13-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு குறிக்கிறது.142
சோழர்கால மருத்துவர்கள்
சோழர் காலத்தில் தொழில் புரிந்த மருத்துவர் பலர் இருந்திருக்கின்றனர். இவர்கள்' அரசோடு தொடர்புடையவர்கள்; அரசின் ஊதியம், மானியம் போன்றவற்றைப் பெற்றவர்கள் எனத் தெரிகிறது. இவர்களின் பெயர்கள் சிலவற்றைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவர்கள், சவர்ணன் அரையன் சந்திர சேகரன்' கோதண்டராம அசுவத்தாம பட்டன்' மங்களாதி ராசன் சீராளன் என்பவர்கள். இம்மருத்துவர்கள் சைவ சிகாமணி சிவகீர்த்தி கடக மெடுத்த கூத்த பிரான் எனச் சிறப்புப் பெயர் பெற்றிருக்கின்றனர்.143
மருத்துவர் இருவகை
மருத்துவ மனைகளில் மருத்துவம் செய்த மருத்துவர்கள் இருவகையினராக இருந்திருக்கின்றனர். ஒருவர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் (Physician) மற்றொருவர், உடற்கூறுகளை ஆராய்ந்து அறுவை சிகிச்சை (Surgeon) செய்பவர். இவரைச் ‘சல்லியக் கிரியை பண்ணுவான்' என்பர்.
மருத்துவக்காணிவழக்கு
மருத்துவம் செய்வதற்காக அளிக்கப்பட்ட ‘வைத்தியக் காணி' நிலத்தை முறை தவறி அனுபவித்து வந்தமைக்காக, ‘காஸ்யபன் அரையன் அரைசான ராஜகேஸரி மங்கலப் பேரையனின்' காணி நிலமும், மனையும் செல்லாது எனச் சபையோரால் அறிவிக்கப்பட்டு, மீண்டும் அவனுக்கு அந்த நிலம் கிடைக்க நடந்த வழக்கைப் பற்றி, கீரக்களூர் கிராம அகத்தீஸ்வரர் கோயிலுள்ள இரண்டாம் இராசேந்தி ரனின் 11-ஆம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.144
மூலிகைப் பயிர்
‘செங்கழுநீர்' என்னும் மருத்துவ மூலிகைச் செடியைப் பற்றித் தாரமங்கலம்' செங்கம் ஆகிய இடங்களிலுள்ள சோழர்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இம் மூலிகையைப் பயிரிடுவதற்கு அரசிடம் உரிமை பெறவேண்டியிருந்திருக்கிறது. ‘வழுதிலை' என்னும் கண்டங்கத்திரி பயிரிடப்பட்டதாகச் சேலம் மாவட்டச் சோழர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சோழர் காலத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவக் கல்லூரி களும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தேர்ந்த மருத்துவர்கள் மருத்துவர் களாகப் பணியாற்றியிருக்கின்றனர். மருத்துவப் புலவர்கள்
மருத்துவத்தை மாணவர்களுக்குக் கற்பித்திருக்கின்றனர். மருத்துவ மனைகளைக் கோயில்கள் நடத்தியிருக்கின்றன. மருத்துவ மனைகளுக்கு அரசர்களாலும் அரசமாதேவியர்களாலும் நிலங்கள் கொடையாக அளிக்கப் பட்டிருக்கின்றன. மருத்துவம் இலவசமாகப் பார்க்கப் பட்டிருக்கிறது. சோழர்காலத்தில் ஆயுர்வேத மருத்துவமே சிறப்பாக நடை பெற்றிருக்கிறது என்கிறார் தொல்பொருள் துறையைச் சார்ந்த தே. கோபாலன்.145
மருத்துவம் சார்ந்த தகவல்களை, மருத்துவத்தின் கொள்கை' கோட்பாடுகளை அறிய சங்க இலக்கியங்கள் துணை புரிவது போல' மருத்துவமனை, மருந்து' மருத்துவ மூலிகைப் பயிர், மருத்துவத் துக்கும் மருத்துவத் தொழிலாளர்களுக்கும் அரசின் உதவி போன்ற தகவல்களைத் தருவனவாக அமைவது, சோழர்காலக் கல்வெட்டு களாகும். மருத்துவம்' பொதுச் சுகாதாரம் என்னும் நிலைக்குச் சோழர்காலத்தில் தான் வளர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
மேலை நாட்டு மருத்துவமும், தமிழ் மருத்துவமும்
இன்றைய உலகில் உள்ள மருத்துவமுறைகள் சிலவற்றின் வளர்ச்சிக்குத் (சித்த) தமிழ் மருத்துவத்தின் பிரிவுகள் துணை புரிந்துள்ளன என்பர். ‘இயற்கை மருத்துவம்' என்பது தமிழ் மருத்துவ முன்னோர்களின் ‘உணவே மருந்து' என்னும் கொள்கையினைக் கொண்டிருக்கிறது. இதனுள் அடங்கிய ஆசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைக் கொண்டு தனி மருத்துவமாக வளர்ந்துள்ளது என்பர்.
மருத்துவ மனைகளில் மருத்துவம் செய்த மருத்துவர்கள் இருவகையினராக இருந்திருக்கின்றனர். ஒருவர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் (Physician) மற்றொருவர், உடற்கூறுகளை ஆராய்ந்து அறுவை சிகிச்சை (Surgeon) செய்பவர். இவரைச் ‘சல்லியக் கிரியை பண்ணுவான்' என்பர்.
மருத்துவக்காணிவழக்கு
மருத்துவம் செய்வதற்காக அளிக்கப்பட்ட ‘வைத்தியக் காணி' நிலத்தை முறை தவறி அனுபவித்து வந்தமைக்காக, ‘காஸ்யபன் அரையன் அரைசான ராஜகேஸரி மங்கலப் பேரையனின்' காணி நிலமும், மனையும் செல்லாது எனச் சபையோரால் அறிவிக்கப்பட்டு, மீண்டும் அவனுக்கு அந்த நிலம் கிடைக்க நடந்த வழக்கைப் பற்றி, கீரக்களூர் கிராம அகத்தீஸ்வரர் கோயிலுள்ள இரண்டாம் இராசேந்தி ரனின் 11-ஆம் ஆண்டு ஆட்சிக்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.144
மூலிகைப் பயிர்
‘செங்கழுநீர்' என்னும் மருத்துவ மூலிகைச் செடியைப் பற்றித் தாரமங்கலம்' செங்கம் ஆகிய இடங்களிலுள்ள சோழர்காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இம் மூலிகையைப் பயிரிடுவதற்கு அரசிடம் உரிமை பெறவேண்டியிருந்திருக்கிறது. ‘வழுதிலை' என்னும் கண்டங்கத்திரி பயிரிடப்பட்டதாகச் சேலம் மாவட்டச் சோழர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சோழர் காலத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவக் கல்லூரி களும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தேர்ந்த மருத்துவர்கள் மருத்துவர் களாகப் பணியாற்றியிருக்கின்றனர். மருத்துவப் புலவர்கள்
மருத்துவத்தை மாணவர்களுக்குக் கற்பித்திருக்கின்றனர். மருத்துவ மனைகளைக் கோயில்கள் நடத்தியிருக்கின்றன. மருத்துவ மனைகளுக்கு அரசர்களாலும் அரசமாதேவியர்களாலும் நிலங்கள் கொடையாக அளிக்கப் பட்டிருக்கின்றன. மருத்துவம் இலவசமாகப் பார்க்கப் பட்டிருக்கிறது. சோழர்காலத்தில் ஆயுர்வேத மருத்துவமே சிறப்பாக நடை பெற்றிருக்கிறது என்கிறார் தொல்பொருள் துறையைச் சார்ந்த தே. கோபாலன்.145
மருத்துவம் சார்ந்த தகவல்களை, மருத்துவத்தின் கொள்கை' கோட்பாடுகளை அறிய சங்க இலக்கியங்கள் துணை புரிவது போல' மருத்துவமனை, மருந்து' மருத்துவ மூலிகைப் பயிர், மருத்துவத் துக்கும் மருத்துவத் தொழிலாளர்களுக்கும் அரசின் உதவி போன்ற தகவல்களைத் தருவனவாக அமைவது, சோழர்காலக் கல்வெட்டு களாகும். மருத்துவம்' பொதுச் சுகாதாரம் என்னும் நிலைக்குச் சோழர்காலத்தில் தான் வளர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
மேலை நாட்டு மருத்துவமும், தமிழ் மருத்துவமும்
இன்றைய உலகில் உள்ள மருத்துவமுறைகள் சிலவற்றின் வளர்ச்சிக்குத் (சித்த) தமிழ் மருத்துவத்தின் பிரிவுகள் துணை புரிந்துள்ளன என்பர். ‘இயற்கை மருத்துவம்' என்பது தமிழ் மருத்துவ முன்னோர்களின் ‘உணவே மருந்து' என்னும் கொள்கையினைக் கொண்டிருக்கிறது. இதனுள் அடங்கிய ஆசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றைக் கொண்டு தனி மருத்துவமாக வளர்ந்துள்ளது என்பர்.
சீன மருத்துவ முறைகள், தமிழிலுள்ள வர்ம நூல்களிலிருந்து உருவாக்கப் பெற்றவையாம்.
தமிழ் மருத்துவத்தின் தொக்கணமுறைகள், நவீன மருத்துவத்தின் உடற்பயிற்சி முறைகளில் சிறந்த பகுதிகளாக விளங்குகின்ற தென்பர். தமிழ் மருத்துவத்தில் வழக்கொழிந்த அறுவை மருத்துவமுறை, நவீன மருத்துவத்தில் இடம் பெற்று வளர்ந்துள்ளது. தமிழ் மருத்துவ நூலான ‘அகத்தியர் நயன விதி' குறிப்பிடுகின்ற அறுவைக் கருவிகள்26 (சத்திராயுதங்கள்). அவற்றில்,
கத்தி Surgical Knife
கத்திரிகை Scissors and Forceps
சலாகை Catheter
குழல் Syringe
ஊசி Needle
போன்ற பல கருவிகள் நவீன மருத்துவத்தில் பயன்படுகின்றன. மேலை' கீழை நாடுகளில் காணப்பெறுகின்ற தமிழ் மருத்துவச் சுவடிகளால்' இவை நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.146
நம் நாட்டிலிருந்து சென்ற புத்த மதம் மேலைநாடுகளில் நிலை பெற்றிருப்பதைப் போல' இங்கிருந்து சென்ற மருத்துவ முறைகளும் நன்கு வளர்ந்த நிலையில் மேலை நாட்டு மருத்துவமாகவே மாறிவிட்டன என்பதைத் தமிழ் மருத்துவத்தின் தடயங்கள் காட்டுகின்றன.
தமிழ் மருத்துவத்தின் தொக்கணமுறைகள், நவீன மருத்துவத்தின் உடற்பயிற்சி முறைகளில் சிறந்த பகுதிகளாக விளங்குகின்ற தென்பர். தமிழ் மருத்துவத்தில் வழக்கொழிந்த அறுவை மருத்துவமுறை, நவீன மருத்துவத்தில் இடம் பெற்று வளர்ந்துள்ளது. தமிழ் மருத்துவ நூலான ‘அகத்தியர் நயன விதி' குறிப்பிடுகின்ற அறுவைக் கருவிகள்26 (சத்திராயுதங்கள்). அவற்றில்,
கத்தி Surgical Knife
கத்திரிகை Scissors and Forceps
சலாகை Catheter
குழல் Syringe
ஊசி Needle
போன்ற பல கருவிகள் நவீன மருத்துவத்தில் பயன்படுகின்றன. மேலை' கீழை நாடுகளில் காணப்பெறுகின்ற தமிழ் மருத்துவச் சுவடிகளால்' இவை நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.146
நம் நாட்டிலிருந்து சென்ற புத்த மதம் மேலைநாடுகளில் நிலை பெற்றிருப்பதைப் போல' இங்கிருந்து சென்ற மருத்துவ முறைகளும் நன்கு வளர்ந்த நிலையில் மேலை நாட்டு மருத்துவமாகவே மாறிவிட்டன என்பதைத் தமிழ் மருத்துவத்தின் தடயங்கள் காட்டுகின்றன.
- GuestGuest
மிகவும் அ௫மையான தகவல்
சிவா அவர்களுக்குப் பாராட்டுகள் ! அருமையான தமிழ் மருத்துவ வரலாற்றை வெகு நேர்த்தியாகத் தந்துள்ளீர்கள் ! ஓலைச் சுவடிகளிலிருந்து ‘தமிழர் மருத்துவம்’ , ‘வைத்திய அகராதி’ , முதலிய சில நூற்களைப் பதிப்பித்தவன் என்ற முறையில் எனக்குத் தங்களின் கட்டுரை வெகுவாக இனிக்கிறது ! உலக அரங்கில் சொல்லவேண்டிய கருத்துகள் தங்களின் கட்டுரையில் உள்ளன!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|