புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
21 Posts - 53%
heezulia
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
15 Posts - 38%
வேல்முருகன் காசி
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
213 Posts - 41%
heezulia
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
212 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_lcapதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_voting_barதமிழ் மருத்துவத்தின் வரலாறு - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவத்தின் வரலாறு


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:27 pm

First topic message reminder :

தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.

பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், ‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது.

வரலாறு

வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், தொடர்ச்சி' வளர்ச்சி, பரிணாமம்' முதிர்ந்த நிலை, தற்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து உறுதிப்படுத்தி, அகப்புறச் சான்றுகளுடன் உரைத்திடுவது வரலாற்றின் வரைவிலக்கணமாகும்.

தமிழ் மருத்துவ வரலாறு

முற்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், அவற்றுக்குரிய மருத்துவத் தொடர்புகளைக் கொண்டு அகப்புறச் சான்றுகளுடன் மருத்துவ வரலாறு வரையப்படும்.

வரலாற்றின் தேவை

மருத்துவ வரலாறு வாழ்வியல் தொடர்புடையது என்பதாலும், அதன் வரலாற்றினால் மருத்துவத்தின் தொன்மை' நோய்களைக் கண்டறிந்து மருந்தளித்த முறைகள் தெரியவரும் என்பதாலும் எதிர்காலத்தில் வருகின்ற நோய்களிலிருந்து எந்தெந்த முறைகளை மேற்கொள்ளலாம் என்பதுடன் புதிய பரிமாணங்களில் மருத்துவத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல் முறைகளிலும் தெளிவு பெற வழியேற்படும்.

வரலாற்றின் இன்றியமையாமை

உலகில் பல்வேறு முறை மருத்துவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் ஏற்படுகின்ற பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சி, மரபு வழி மருத்துவமே சாலச் சிறந்தது என உலக மருத்துவ அறிவியல்துறை சார்ந்த அறிஞர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்,இந்திய மருத்துவத்தின் வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் நிலையேற்பட்டிருக்கிறது என்பதுடன்' இந்திய மரபினரின் பழமையான மருத்துவத்தின் வரலாறு எழுத வேண்டியது இன்றியமையாத ஒன்றெனக் கருதும் கருத்து வலுவடைகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:37 pm

சூட்டுக்கோல் மருத்துவம்

உடலில் ஏற்படுகின்ற புண்ணை ஆற்ற மருந்திடுமுன் புண்ணில் புதைந்துள்ள இரும்பு ஆயுதத் துணுக்குகளை வெளியே எடுக்கக் காந்தத்தைப் பயன்படுத்தி' அதனால் புண்ணுக்குள்ளிருக்கும் இரும்பை வெளியே எடுத்த செய்தியைக் கம்பன் கூறக் கேட்கலாம்.

உடலில் கட்டி முதலியன தோன்றினால், அவை அறுவை முறையில் மருத்துவம் பார்க்க வேண்டியதிருந்தால் மருத்துவன் வாளால் அறுக்கின்றான். ஆனால்' அவன் மீது கொண்ட அன்பு, வாளால் அறுக்கும் போதும் குறைவதில்லை என்பதைக் குலசேகராழ்வார் குறிப்பிடுகின்றார்.

"" வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல்''18

இதனைப் போலவே கம்பனும், உடலில் தோன்றுகின்ற ஒன்றை அறுவை முறையால் அறுத்து, கெட்ட உதிரம் நீக்கி' சுட வேண்டியதிருந் தால் சுட்டும் வேறு ஒரு மருந்தினை வைத்தும் கட்டுகின்றனர்.

"" உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றிச்

சுடலுறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வார்''19

என்பதிலிருந்து' சூட்டுக்கோல் முறையிலும் புண்ணை ஆற்றுகின்ற முறை இருந்தது என்பதால் மருத்துவத்தின் வளர்ச்சி தெளிவாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:39 pm

குழந்தை மருத்துவம்

பண்டைத் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றிருந்த மருத்துவம், எல்லாவிதமான மருத்துவமாகவும் விரிவடைந்து பரிணாம நிலையில் வளர்ந்து வந்திருப்பதாகத் தெரிகிறது. அவ்வாறு வளர்ந்து வந்த மருத்துவம் குழந்தை மருத்துவத் துறையையும் தன்னகத்தே கொண்டதாகக் திகழ்ந்திருக்கிறது.

இளங்குழந்தைகளுக்குச் செய்யப் படுகின்ற மருத்துவத்தை மிகவும் தேர்ந்தநிலை பெற்றதாகவே கருத வேண்டும். குழந்தைகள், நோயையோ, நோயின் குறியையோ கூறும் நிலையில் இருப்பதில்லை. குறிப்பறிந்தும்' சோதித்தறிந்துமே மருத்துவம் பார்க்க வேண்டி யிருக்கும். அம்மாதிரியான மருத்துவத்தை மனையுறையும் பெண்டிரே செய்தனர் என்பதற்குச் சீவக சிந்தாமணி சான்றாகிறது.

"" காடி யாட்டித் தராய்ச் சாறும் கன்னன் மணியும் நறு நெய்யும்

கூடச் செம்பொன் கொளத் தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப்

பாடற் கினிய பகுவாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தித்

தேடித் தீந்தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்குயர்ந்தார்''20

பிரமிச்சாறு, கண்ட சருக்கரை' தேன், நறுநெய் ஆகியவற்றுடன் காடியைக் கூட்டி, பொன்னினால் தேய்த்துக் குழந்தைகள் உண்ணுகின்ற அளவிற்குப் பக்குவப்படுத்திய மருந்தாக்கி' தினமும் வாய்வழி ஊட்டினர் என்றதனால்' குழந்தை மருத்துவத்தினை மகளிரும் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகின்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:40 pm

கூட்டு மருந்து

பல மருந்துகளைத் தொகையாகக் குறிப்பிடும் சொல் பழந்தமிழரிடையே காணப்படுகிறது. மருந்துகளைக் குறிக்கும் தொகைச் சொல் வழக்கில் இருந்திருந்ததைக் கொண்டு மருந்தியலின் வளர்ந்த நிலையினை உணரலாம்.

‘நிலவரைப்பு'என்பது மருந்தின் தொகைச் சொல். இச்சொல்லைப் பற்றிய கருத்துரை வழங்கிய அடியார்க்கு நல்லார், சல்லிய கரணி' சந்தான கரணி, சமனிய கரணி' மிருத சஞ்சீவினி என்னும் நான்கு மருந்துகளை உள்ளடக்கியதாகக் குறிப்பிடுகின்றார்.21

கரணி என்பது அரைப்பு முறையால் செய்யப்படுகின்ற மருந்துகளைக் குறிப்பிடும்.

சந்தான கரணி- அருகிய பெருமருந்தென்பர். இது முறிந்த உறுப்புச் சந்து

செய்யும் (இணைக்கும்) மருந்து.

சல்லிய கரணி - வேல்தைத்த புண்ணை ஆற்றும் மருந்து.

சமனிய கரணி - புண்ணின் தழும்பை ஆற்றும் (அ) மாற்றும் மருந்து.

மிருத சஞ்சீவினி - இறந்தவர்களை உயிர்த்தெழச் செய்யும் மருந்து.

மேற்கண்ட நான்குவித மருந்துகளின் வினைப்பயனை நோக்கும் போது, தமிழ் மருத்துவம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது தெரிய வருகின்றது. இம்மருந்துகளைப் போன்ற பயனுடைய மருந்துகள் மேலை மருத்துவமான அலோபதி மருத்துவத்திலும், இன்றைய நிலையிலுள்ள எந்த மருத்துவத்திலும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:40 pm

அழகுக்கு மருந்து

நாட்டிய நாயகி கலைச் செல்வி மாதவி, தன் காதல் தலைவன் கோவலனுடன் உலாவி வர–தன்னை ஒப்பனை செய்து கொள்ள நீராடுகிறாள். மாதவி நீராடிய நன்னீரில், ‘பத்துவகைப் பட்ட துவர்', ‘ஐந்து வகைப்பட்ட விரை', ‘முப்பத்திரண்டு வகை ஓமாலிகை' ஆகிய நாற்பத்தேழு22 மருந்துப் பொருள்களும் ஊறிக் காய்ந்தது என்கிறது சிலம்பு. இவை' அழகுப் பொருள்களின் கூட்டு போலும். அப்பொருள்கள் ஊறிய நீரில் நீராடிய மாதவி ‘நிறம் பெற்றாள்' என்று குறிப்பிடுகிறது. மருந்து, நோய்க்கு மட்டும் அல்லாமல் உடல் வனப்பிற்கும் பயன்பட்டிருக்கிறது.

தமிழ் மருத்துவத்திற்குப் பயன்படுகின்ற ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு குணப் பண்பினைக் கொண்டது. அதேபோல், அம் மருந்துகள் ஒன்றோடொன்று கூடி வினையாற்றும் போது, நேர்வினை, எதிர்வினை ஆகியவற்றைத் தோற்றுவிக்கக் கூடியன. இந்த இரு வகைகளையும் மருத்துவ நூலார்' நட்பு, பகை என்னும் இரண்டு பண்புகளாகக் குறிப்பிடுகின்றனர். மருந்துப் பொருள்கள் பற்றிய தேர்ந்த பயிற்சியும் புலமையும் இருந்தால் மட்டுமே இவற்றை அறிய முடியும். அவ்வாறு அறிய நேர்ந்தால் மட்டுமே மருந்துகளைக் கூட்ட முடியும்.

நாற்பத்தேழு மருந்துப் பொருள்களும் ஒரே வகையான பண்புகள் உடையவை என்பதை அறிந்தே மருத்துவப் புலமையாளர்களால் இக்கூட்டு மருந்து உருவாகியிருக்க முடியும் என்பதால்' அக்காலத்து மருத்துவர்களின் புலமை பெறப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:41 pm

கூந்தல் வளர்ச்சிக்கு மருந்து

மாதர்கள் மேனி யெழிலுக்கு மருந்து ஊறிய நீரில் நீராடுவதைப் போல' அவர்கள் தங்கள் கூந்தலை வளர்க்கவும் பராமரிக்கவும் அதிகக் கவனம் செலுத்துவர். அழகுக்கு அழகூட்டும் சாதனங்களில் கூந்தல் பராமரிப்பும் இடம் பெறுமாகையால், கூந்தல் ஒப்பனையை விரும்புவர்.

நன்னீரில் நீராடிய பெண்டிர் தமது கூந்தலை அகில் புகையால் உலரச் செய்வர். கூந்தலை வளர்க்கவும், நிறங் கொடுக்கவும்' பேணவும் மான்மதக் கொழுஞ் சேறூட்டி அலங்கரித்தனர். மான்மதக் குழம்பு என்பது கத்தூரிக் குழம்பு என்றும், சவ்வாது என்றும்23 குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:42 pm

மருத்துவப் பூக்கள்

சங்க இலக்கியமான பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டை இயற்றிய கபிலர்' 98 வகையான பூக்களைக் குறிப்பிடுகிறார். அவை அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரம், செடி' கொடிகளாகும். அந்நூலுள், 98 வகையான பூக்களைக் கூற வேண்டிய சூழல் நேராமலேயே அவை உரைக்கப்பட்டிருப்பதாக அந்நூலைக் கற்பார் உணர்வர். அவர்' அவ்வாறு உரைக்கக் காரணம்? தானறிந்த வற்றைப் பிறரும் அறிந்து இன்பமடைய வேண்டுமென்ற நோக்கமே எனலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:43 pm

குரல் வளம் தரும் மருந்து

சேறை. அறிவனார் என்னும் இசை மேதையால் இயற்றப் பெற்றது பஞ்சமரபு. இசை' முழவு, தாளம்' கூத்து, அபிநயம் என்னும் ஐந்துக்கும் இலக்கணமாக அமைவது. இந்நூல், இசைப் பாடகர்கள் குரல் வளம் பெற மருந்தும் உரைக்கிறது.

"" திப்பிலி தேன்மிளகு சுக்கினோ டிம்பூரல்

துப்பில்லா ஆன்பால் தலைக்காடைஒப்பில்லா

வெந்நீரும் வெண்ணெயு மெய்ச் சாந்தும் பூசவிவை

மன்னூழி வாழும் மகிழ்ந்து''24

என்னும் இச்செய்யுள் திப்பிலி, தேன்' மிளகு, சுக்கு' இம்பூரல், பசுவின்பால்' தலைக்காடை, மெய்ச்சாந்து இவற்றை வெண்ணெய் விட்டு அரைத்து வெந்நீரில் குழைத்துப் பூசிவரக் குரலின் வளம் அதிகப்படும் என்கிறது.

பஞ்சமரபு என்னும் இந்நூல், சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லாரால் அதிகமான மேற்கோள்களுக்காகப் பயன்பட்ட நூல். இது' சிலப்பதிகார காலத்திற்கும் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தை ஒட்டிய காலத்தில் தோன்றிய நூல் என்பது குறிப்பிடத் தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:44 pm

தலைக்குத்துக்கு மருந்து

மருத்துவம் அறிந்த சங்கப் புலவர் தாமோதரனார் என்றொருவர் இருந்திருக்கிறார் என்பது அறியப்படுகிறது. அவர் பாடிய பாடல் மருத்துவத்தைக் கூறும் பாடலாக இருக்கக் காணலாம்.25

சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங்கலந்து மோந்தால்' யாருக்குந் தலைவலி நீங்கிவிடும் என்று பாவாணர் உரை வகுக்கின்றார்.

“தலைக்குத்து எனும் தலைநோய் நரம்பு மண்டலத்துடன் இணைந்து செயல்படும் மூளையுடன் தொடர்புடையது. இக்கால மருத்துவத்தில் நரம்பு மண்டலக் குறைபாடு (Neurological Deficiency) காரணமாக வரக்கூடிய ‘இனம் காண இயலாத தலைவலிகளை' (Unidentified Migraine) மருத்துவர் தாமோதரனார் குறிப்பிடும் ‘தலைக்குத்து' நோய்க்கு இணையாகக் கருதலாம். இந்நோய்த் தீர்வுக்கு மருந்தாக சீந்தில் சருக்கரை, சுக்கு' தேன் இவை மூன்றும் ஆகும். இவை நரம்பு மண்டலங்களின் வலிமைக்குப் பெரிதும் ஊட்டம் அளிப்பவை யாகும்"26 என்று, க. வெங்கடேசன் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:45 pm

மரணத்தை வெல்லும்/சாவா மருந்து

நெல்லிக்கனி என்றதும், அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்தது நினைவிற்கு வருகிறது. நெல்லிக்கனியைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறக் காண்கிறோம். குறிப்பாக'

"" நெல்லி அம்புளி மாந்தி''27

"" புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர்''28

"" சுவைக்காய் நெல்லி''29

"" கவினிய நெல்லி அமிழ்துவிளை தீங்கனி''30

"" சிறியிலை நெல்லித் தீங்கனி''31

என்று சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன.

இவற்றுள்' கருநெல்லி என்னும் கனியே சிறப்பிற்குரியதாகக் கருதப்படுகிறது. இது மரணத்தை வெல்லும் ஆற்றல் மிக்கது. கற்ப வகையைச் சார்ந்தது32 என்று கருதப்படுகிறது.

சாவா மருந்து

இயற்கையாக மரணத்தை வெல்ல முடியாது. அது செயற்கை வழி மருத்துவத்தினால் அடையக்கூடும் என்பது மருத்துவக் கொள்கை. அதற்கான மருந்து கற்பம் என்பர். கற்பம் உடலை உறுதியாக்கி நிலைக்கச் செய்வது. இதையே சாவா மருந்துஏ எனத் திருக்குறள் உரைக்கிறது. இம்மருந்து மூன்றுவகைப்படும். அவை நோயைத் தவிர்க்கும் நோவா மருந்து' முதுமையைத் தவிர்க்கும் மூவா மருந்து' சாக்காட்டைத் தவிர்க்கும் சாவா மருந்தென பாவாணர் குறிப் பிடுகிறார்.33

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 17, 2008 4:46 pm

விலங்கு' தாவர மருத்துவம்

பண்டைக் காலத்துத் தமிழ் மருத்துவ முன்னோர்கள் மனிதனுக்கு உற்ற நோயைப் போக்கும் மருந்துகளையும் மருத்துவத்தையும் கண்டறிந்திருந்ததைப் போல' மனிதனுக்கு உற்ற துணையாக இருந்த விலங்குகளுக்கும்' உணவுப் பொருளாகப் பயன்பட்ட தாவரங்களுக்கும் மருத்துவம் பார்த்ததுடன், அவை நோய் வராமல் பராமரிக்கவும் கற்றிருக்கின்றனர் என்பது தெரிய வருகிறது.

மாட்டுக்குச் சூடு

மாடுகளுக்குச் சூடு வைப்பது நோய்த் தடுப்பு நடவடிக்கை எனவும், வயிற்றுக் கழிச்சலைத் தவிர்ப்பது எனவும் கூறுவர். அம்முறை இன்றளவும் கோவலர்களிடம் காணப்படுகிறது. அம்முறை போலவே' பண்டைக்கால முல்லை நிலக் கோவலர்கள், ‘இருப்புக் கோலால்' சூடு போட்டிருக்கின்றனர். அதை, ‘சுடுபடை'34 என்று முல்லைக் கலி குறிப்பிடுகிறது.

யானைக்கு வயா நோய்

பெண் யானை கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோய் ‘வயா' எனப்படும். இந்நோய்க்கான மருத்துவம் கூறப்பட்டுள்ளது.35

யானைக்குக் கருச்சிதைவு

கருவுற்ற யானையும் மூங்கிலின் முளையைத் தின்றால், அதன் கரு அழிந்துவிடும் என்று குறிப்பினால் உரைத்து' அம்மூங்கில் பெண்களுக்கும் கொடுத்தால் என்னவாகும் என்பதை அவரவர் முடிவிற்கே விட்டுவிடுவதைப் போல, ‘கருச்சிதைவிற்கு மூங்கில் முளை'36 என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக