புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_m10ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்


   
   
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Wed Sep 21, 2011 11:44 am

ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்

மேல்பட்டு - ஆசியாவின் பெரிய அடித்தண்டு கொண்ட நீர் மரம்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நீர் மரத்தின் அடிதண்டை கட்டிப்பிடிக்க 20 மாணவர்கள் கை கோர்க்க வேண்டும். இந்த மரம் உள்ள இடம் ஜவ்வாது மலையில் உள்ள மேல்பட்டு கிராமம். இதன் இயற்கை வளமிக்க அழகான கிராமம். திருவண்ணாமலை - போளூர் வழியாகவும், வேலூரிலிருந்து அமிர்தி வழியாகவும், திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் வழியாகவும், செங்கத்திலிருந்தும், பல கொண்டையூசி ( ஹேர் பின் ) வளைவுகள் உள்ள மலை பாதைகள் வழியாக ஜவ்வாது மலைக்கு செல்ல வேண்டும்.

இதில் ஜவ்வாது மலையிலிருந்து செங்கம் வழியாக இறங்கும் போது மேல்பட்டு கிராமத்தை கடக்க வேண்டும். மலை நீரோடைகள் நிறைந்த பசுமையான கிராமம். இங்கு சுமார் 140 வருடங்களுக்கு முன் பிரிடிஷ்காரர்கள் கட்டியுள்ள அருமையான தங்குமிடம் உள்ளது. எந்த பாதை வசதியும் இல்லாத காலத்தில் குதிரை, கழுதை ஆகியவற்றின் மீது பொருட்களை கொண்டு வந்து கட்டியுள்ளனர்.

மேல்பட்டு கிராமம் குறித்து இன்னொரு முக்கிய குறிப்பு, சங்க இலக்கியத்தில் இந்த பகுதி நன்னன் சேய் நன்னன் என்பவன் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், இவனுடைய தந்தை நன்னன் பர்வதமலை என்ற இடத்தில் ( செங்கம் அருகே உள்ள இன்னொரு பழமை சிறப்பு மிக்க மலை. சுமார் 4 ஆயிரம் அடிகள் உயரம் கொண்ட அந்த மலை இப்போது ஆன்மீக தளமாக புகழ்பெற்றுள்ளது ) இருந்து ஆட்சி செய்து, பிறகு அதியர்களால் விரட்டியடிக்கப்பட்டபோது, போரில் உயிர் தப்பி வந்து ஜவ்வாது மலையின் இந்த பகுதியில் ஆட்சி செய்தவன். இவனிடம் பரிசில் பெற வந்த புலவர் ஒருவர் குறிப்பிட்டுள்ள வழித்தடங்கள், அடையாளங்கள் இப்போதும் அப்படியே உள்ளன. அதில் ஒரு பாடல் வருடம் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டுள்ள மலை நிலத்தை கடந்து நன்னன் சேய் நன்னன் உள்ளதாக குறிப்பிடும்.

செங்கத்தில் இருந்து பரமானந்தல் என்ற கிராமத்தை கடந்து சுமார் 25 கிலோ மீட்டர்கள் வளைவுகள் நிறைந்த மலை பாதை வழியே பயணித்து மேல்பட்டு கிராமத்துக்கு செல்லும் முன் இந்த நீர் மரம் அருகே சற்று இளைப்பாற உட்கார்ந்தால் இன்றும் மணிக்கு ஒரு முறை உங்களை தழுவி தாலாட்டும் சாரல் மழை.


வாலியம் பாறை - குள்ளர் குகைகள்

அப்பகுதியை சேர்ந்த மலைவாசி மக்கள் செவி வழி செய்தியாக சொல்வது, வாலியம்பாறையில் வசித்த வாலியர்கள் என்ற கூட்டம் கட்டிய குள்ளர் குகைகள் அவை என்றும், 3 அடி உயரம் கொண்ட வாலியர்கள் பிறகு வடக்கே எங்கோ சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். ஏராளமான சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து மேலே அகலமான ஒரு பெரிய பாறையை கூரையாக வைத்து குகை போல அமைத்துள்ளனர்.

போளுரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் மலை பாதையில் பயணித்தால் அத்தியூரை அடையலாம். அங்கிருந்து கால்நடையாக காட்டுப்பாதையில் 3 கிலோமீட்டர் சென்றால் மேல்சிப்பிலி என்ற மலை கிராமம் வரும். உண்மையான காட்டுவாசி, மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி இது. யார் சென்றாலும் உடனே இளநீரை வழங்கி இளைப்பாற சொல்லிவிட்டு, சாமை அரிசி சோறு பொங்கி, பலாபழம், வள்ளி கிழங்கு, சிறு சிறு மலை வாழை பழங்களுடன் விருந்து சாப்பிட வைப்பார்கள். சராசரியாக 4 .5 அடி உயரம், கருத்த, உறுதியான தேகம், சுருண்ட, நீண்ட முடி, எச்சரிக்கை கலந்த அன்பு என உணர்ச்சி கலவையான மக்கள். காலை 6 மணி தொடங்கி மதியம் 12 மணி வரை கடுமையான மலை நிலத்தில் உழுதுவிட்டு, விலை பொருட்களில் அன்றைய தேவைக்கு ஏற்ப கொண்டு சென்று வார சந்தைகளில் விற்றுவிட்டு தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு, கரடு, முரடான மலை பாதைகளில் மேலும் கீழுமாக சாதரணமாக 50 கிலோ மீட்டர் நடந்து விட்டு வந்து, மூச்சு கூட வாங்காமல் கிராமத்துக்கு புதிதாக வந்துள்ள வெளியாட்களிடம், வாலியர் குகைய பாக்கனும்னா, அங்கன நெட்டு குத்தா நிக்குதே ரெண்டு மலை அத ஏறி எறங்கணும், நாங்க வேனா துணைக்கு வரவா என அசராமல் கேட்கும் ஒரு நபருக்கு வயது கேட்டால் 85 என சொல்லி சிரிப்பார்.

மலை கிராம குடிசைகள் நிறைந்த எல்லாத் தெருவிலும், எல்லாருக்கும் பொதுவான ஒரு தானிய கூடு 30 அடி உயர்த்தி நிற்கும். குடிசைகளுக்குள் வீட்டுக்கு தேவையான அளவு சிறிய தானிய கூடு தனியாக இருக்கும். ஆடு, மாடுகளை போது பட்டியில் கட்டியிருப்பார்கள். கோழி, பன்றிகளை வீட்டுக்குள் விட்டு வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் 3 முதல் 4 அடி உயர நாய்கள் துணையாக இருக்கும். இவர்கள் துணை இல்லாமல் குகை தேடி பயணித்தால் வீடு திரும்புவது அசாத்தியம். அவ்வளவு திருப்பங்களும், பள்ளத்தாக்குகளும், காட்டு விலங்குகளும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பாதை. கையில் நீண்ட கழிகளை ஊன்றுகோலாக எடுத்துக்கொண்டு, ( மனிதன் ரெண்டு கால்களில் நடக்கிறான் என யாரோ தவறாக பெருமைக்கு சொல்லிவிட்டு போய்விட்டார்கள் ) நடக்க தொடங்கினால் குறைந்தது இரு இடங்களிலாவது கால் இடறி கீழே விழுந்து, சிரைப்புகளை பெற்ற பிறகு கண்ணுக்கு எட்டியவரை தெரிவது ஒற்றை பாறை. சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் நீள, அகலத்துக்கு குறையாமல் நிற்கும் உயர்ந்த ஒற்றை பாறை. ( இன்னும் மலை முழுங்கி மகாதேவங்களிடம் இருந்து இந்த பாறை தப்பித்திருக்க காரணம் பாதை வசதி இல்லாததுதான் )
அதன் மீது ஏறி சென்றால் கண்களால் பார்த்து நம்ப முடியாத குள்ளர் குகைகள் கொத்து கொத்தாக காட்சியளிக்கும்.








என்னுடைய கணிப்பு என்னவெனில், குகை அமைப்புகள் நிறைந்துள்ள அந்த பகுதி உள்ள வாலியம்பாறை, குகைகள், சுற்றியுள்ள பெரும் பள்ளத்தாக்குகள், எளிதில் யாரும் சென்று விட முடியாத பாதையற்ற நிலை, பாதுகாப்பு மிக்க சூழல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, அந்த பகுதியின் பாதுகாப்புக்காக இருந்த வீரர்கள் தங்கிய குகைகளாக இருந்திருக்கக்கூடும். வாளியம்பாரையில் உள்ள உயர்ந்த முகட்டில் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட, பீமன் நீர்வீழ்ச்சி, பரமனந்தல் காடுகள், போளூர் சாலை என பல பகுதிகளை இங்கிருந்தே கண்காணிக்க முடியும். குரங்குகளை தவிர மற்ற விலங்குகள் வாலியம்பாறை மீது எளிதில் வந்துவிட முடியாது. அப்படி ஒரு அமைப்பு. அவசரத்துக்கு குகைக்குள் மூன்று பேர், மூன்று பேராக உட்கார்ர்ந்து கொள்ளமுடியும். மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே வந்து தங்க முடியாதது போல பாறை முகடுகளின் மீது இவை உள்ளன. கிட்டத்தட்ட இதுபோல 200 குகைகள் உள்ளன. எனில் சுமார் 600 பேர் கொண்ட படை வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கலாம். தங்கள் ஆயுதங்களை வைக்க குகைகளை பயன்படுத்தி இருக்கலாம். குகைகளின் அருகே இன்றும் கிடைக்கும் கல் ஆயுதங்களும் இதற்கு சாட்சியாக உள்ளன.

இதை தவிர வேறு வகையில் யோசித்தால், பொதுவாக நம் கிராமங்களில் இன்றும் காணக்கூடிய ஒரு காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் வீட்டுக்குள் பத்திரமாக இருக்க, குழந்தை குட்டியோடு வீட்டு உரிமையாளர்கள் வெளியே படுத்து உறங்குவார்கள். இன்னும் எளிதில் விளங்க வேண்டுமானால், குருவிகாரர்கள் எனப்படும் நாடோடி இனத்தவர்கள் ஆங்காங்கே ஊருக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து தங்கியிருக்கும் போது, துணிமணிகள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் எல்லாம் கூடாரத்துக்குள் இருக்கும். ஆனால் இவர்கள் மட்டும் வெட்டவெளியில் படுத்து உறங்குவார்கள். இளம் தம்பதியர் மட்டுமே கூடாரங்களில் உறங்குவார்கள். தவிர நோய்வாய் பட்ட குழந்தைகளும் கூடாரத்துக்குள் இருக்கும். கல் ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கும் வாலியர் கூட்டமும் தங்கள் பொருட்களை இந்த சிறு சிறு குகை அமைப்புகளில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு வெட்ட வெளியில் வாழ்ந்திருக்கலாம். மழை காலங்களில் மட்டும் உள்ளே புழங்கியும், இளம் தம்பதியர் தனித்திருக்கவும், உணவு, உடை, ஆயுதங்களை வைக்கவும் குகைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.

tamil heritagefoundation





படங்களும் தகவல்களும்: ப்ரகாஷ் சுகுமாரன்




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 11:51 am

எனக்கு இந்த மாதிரி உள்ள கட்டுரைகள் அதிகம் பிடிக்கும்.காரணம் இது போல் உள்ள கட்டுரைகளை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் எனக்கு.பகிர்ந்தமைக்கு நன்றி.ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  224747944 ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  2825183110 ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  677196



இதை நீங்கள் சினிமா பகுதியில் பதிவு செய்து உள்ளீர்கள்.நான் இதை கட்டுரைப் பகுதிக்கு மாற்றி விடுகிறேன்.

இனிமேல் பதியும் பதிவுகளை அந்தந்த பகுயில் பதிய வேண்டிக்கிறேன்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்  Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக