புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
21 Posts - 4%
prajai
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
7 Posts - 1%
mruthun
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_m10கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Sep 21, 2011 2:25 pm

கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது

தமிழக நீர்வழி சாலை
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Interlinking

கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டாம் என்று மக்கள் போராடுகிறார்கள். மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழி இருக்க மத்திய காங்கிரஸ் அரசு மற்ற மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பை பார்த்து விட்டு கூடங்குளத்தில் வந்து அணுமின் திட்டத்தை தொடங்கியது. ஆனால் தமிழகத்தால் இந்த கூடங்குளம் இல்லாமலே மின்சாரம் தயாரிக்க முடியும். அதற்கு ஒரே வழி தமிழக நதிகளை இணைப்பது தான்.
நாட்டில் ஒரு பக்கத்தில் ஏற்படும் வறட்சியால் விவசாயி வானத்தை பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான். மற்றொரு பக்கத்திலோ பெருமழையால் அளவுக்கதிகமான வெள்ளம் பொங்கி பிரவாகமெடுக்கிறது. இந்த நீர் வீணாக ஓடி கடலில் கலக்கிறது. தேசத்தின் ஆணிவேராக இருக்கும் விவசாயத்திற்கு செழுமையூட்ட வேண்டிய இந்த நீர் வீணாக உப்புக்கரிக்கும் கடலில் கலந்து விடுகிறது. இது ஒரு பக்கம்.

நிலத்தடி நீரோ ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் கிராமங்களில் இருக்கும் கிணறுகள் மழைகாலத்தில் நிரம்பி விடும். தழும்ப, தழும்ப தண்ணீர் நிறைந்து கிடக்கும் கிணற்றை பார்க்க பார்க்க மனது மகிழ்ச்சியில் கூத்தாடும். இந்த கிணறுகளில் விழுந்து புரளவே நகரத்தை விட்டு கல்லூரி விடுமுறையில் கிராமத்திற்கு ஓட கால்கள் துடிக்கும். சில கிணறுகளை கிராமங்களில் குடிநீருக்காக விட்டு வைத்திருப்பார்கள். எப்போதும் அங்கு சுரக்கும் குளிர்ச்சியான நீரை பெண்கள் குடிநீராக பயன்படுத்துவார்கள்.

கிராமங்களின் அடையாளச்சின்னமாக இருந்த இந்த கிணறுகள் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன. பல இடங்களில் இந்த கிணறுகள் குப்பை கிடங்குகளாக ஆக்கப்பட்டுவிட்டன. கைப்பம்புகள் துருபிடித்து ஆங்காங்கே நின்று கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் ராட்சத பம்புகள் தண்ணீரை தற்போது எடுத்துக் கொண்டிருக்கின்றன. பூமிப்பந்தின் மேற்பகுதி முழுவதும் போர்வெல்லுக்காக போட்ட துளைகளால் எங்கு நோக்கினும் துவாரங்கள். இப்படி இருந்தும் மக்கள் தண்ணீருக்காக துயரப்படுகிறார்கள். போர்வெல்லை இயக்க மின்சாரத்தை காணோம்( போன ஆட்சியில்). கூடவே தண்ணீரையும் காணவில்லை. முன்பு 10 மீட்டர் ஆழத்தில் கிடைத்த தண்ணீர் இப்போது 100 மீட்டர் தாண்டியும் கிடைக்கவில்லை.

தண்ணீர் பஞ்சத்திற்கு இதைவிட சாட்சியம் என்ன இருக்க முடியும்? நிலத்தடியில் அபரிமிதமாக தண்ணீரும் கிடைக்க, மின்சாரம் தட்டுப்பாடே இல்லாமல் எப்போதும் கிடைக்க ஒரு வழி இருக்கிறது. அது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலம் வெவ்வேறு திசைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளை ஒரே கோட்டில் இணைப்பது தான். இதற்கான ஒரு திட்டத்தை முதன்முதலாக மதுரையை சேர்ந்த பொறியாளர் ஏ.சி.காமராஜ் முதன் முதலாக வடிவமைத்தார். வழக்கம் போல் மத்திய அரசு அதில் சுணக்கமாக இருந்தது. இப்போது தமிழ்நாட்டு நதிகளை இணைக்க தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தை வடிவமைத்துள்ளார்.

இது பற்றி ஒரு அறிமுக பதிவு இது. அதாவது நதிகள் பெருக்கெடுத்து ஓடும் போது நிலத்தடி நீர் தானாகவே உயர்ந்து விடுவது இயல்பு. இது தவிர நதிகளை இணைப்பதால் ஏராளமான பயன்கள் இருக்கிறது. இது பற்றி பார்க்கலாம். நதிகளை இணைக்கும் போது அவையும், பல்வேறு நகரங்களை இணைக்கும் ஒரு தார்ச்சாலை போன்று "நீர்வழிச்சாலை" யாக ஆகி விடுகிறது. அதாவது இப்படி நீர்வழிச்சாலை அமையும் போது தமிழ்நாட்டின் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எளிதாக படகில் போய்விடலாம்.

தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டம்

தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டமானது, தமிழ்நாட்டில் உள்ள எல்லா நதிகளையும் ஒன்றாக பிணைக்கும் திட்டமாகும். தமிழ்நாடு நீர்வழிச்சாலை என்பது கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் வரக்கூடிய சமவெளிக்கால்வாய் ஆகும். அதோடு சுமார் 900 கி.மீ நீளமுள்ள சிறந்த நீர்வழிப்பாதையை உருவாக்க கூடிய திட்டமாகும்.

நீர்வழிப்பாதையின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் படகு போக்குவரத்தை தொடங்கும் போது இந்த பாதையின் வழியாக கொண்டு போகக்கூடிய பொருள்களுக்கான சுமை போக்குவரத்து செலவு மிகவும் குறைவு. மேலும் தரைவழியில் லாரி மற்றும் பெரிய டிரக்குகளில் கொண்டு செல்லப்படும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் கெடுதலும் இல்லை. அதாவது சாலையில் கொண்டு செல்லப்படும் போது ஆகும் எரிபொருள் செலவில் வெறும் 10 சதவீதமே நீர்வழிப்போக்குவரத்திற்கு செலவாகும்.

இது தவிர மேலே சொன்னது போல் தமிழகத்தின் எந்த ஒரு ஊரிலும் உள்ள விவசாயி "நம்ம ஊரில் மழை இல்லையே, எப்படி விவசாயம் பார்ப்பது?" என்று கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. காரணம், தமிழகத்தின் காவிரியில் தண்ணீரில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை வறண்டு போயிருக்கும் வைகை ஆற்றுக்குள் செலுத்தி விடலாம். அதனால் காவிரியில் வெள்ளமும் குறையும். வறண்ட வைகையில் தண்ணீரும் கிடைக்கும். இது போல் வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்தால் அதை தாமிரபரணிக்கோ, பாலாறுக்கோ திருப்பிவிடலாம்.

அதாவது, தமிழ்நாட்டின் எந்த ஒரு மாவட்டத்திலும் ஓடும் ஆற்றில் வெள்ளம் வந்தாலும் அதை வீணாக கடலுக்குள் சென்று கலக்க விடாமல் வறண்டு கிடக்கும் வேறு மாவட்டத்தில் உள்ள ஆறுகளுக்கு திருப்பிவிடுகிறோம். இதனால் சில இடங்களில் மழையை நம்பி காத்திருக்கும் விவசாயிகள் ஆற்றுப்பாசனத்தில் சாகுபடியை தொடங்கி விடலாம். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த திட்டம் செயல்படுததப்படும் போது ஆங்காங்ககே கிராமங்களில் வறண்டு கிடக்கும் கிணறுகள் எல்லாம் மீண்டும் நிரம்பி விடும். ஆற்றில் நீர் பெருகும் போது அதைச்சுற்றியுள்ள ஊர்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடுவது இயற்கை தானே! />

வீணாகும் நீர் ஒரு உதாரணம்

கடந்த 15 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு காவிரி ஆறு மூலம் 300 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. ஆனால் மேட்டூர் அணையின் கொள்ளளவோ வெறும் 93.5 டி.எம்.சி தான். ஆக மீதமுள்ள நீரை திறந்து கடலுக்கு விடவேண்டியது தான். அதாவது 200 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து யாருக்கும் பயன் இல்லாமல் போகிறது. நாமும் ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் கையேந்துகிறோம். இது தவிர பவானி, அமராவதி போன்ற நதிகளில் வந்த நீரும் வீணாக கடலில் கலந்து போனது. 2007 ஆம் ஆண்டில் மட்டும் மேட்டூருக்கு 399 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. ஆக, வீணானது 300 டி.எம்.சிக்கும் மேல். மூன்றாண்டுகளுக்கு மேல் இந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்திருக்க முடியும்.


இந்த நீரை தேக்க முடிந்திருந்தால் ஏராளமாக மின்சாரம் எடுத்திருக்க முடியும். தேக்கப்பட்டிருந்தால் குடிநீர் தாராளமாக கிடைத்திருக்கும். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு என்ன ஆனால் என்ன என்று மேலும் மேலும் தண்ணீரை திறந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதுண்டு. அவர்களால் அந்த தண்ணீரை தேக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் நாம் தான் புத்திசாலித்தனமாக அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்ற 2006 ல் மட்டும் நாடு முழுவதும் வெள்ளச் சேதம் சுமார் 77,000 கோடி என்று கணக்கிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் வெள்ளச்சேதம் 32,000 கோடி என்றார்கள். தமிழ்நாட்டில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒரு முறை இப்படி வெள்ளம் பெருக்கெடுத்து சேதத்தை ஏற்படுத்துவதுண்டு. தமிழ்நாட்டில் இனி பெரிய அளவுக்கு அணைக்கட்டுகளை கட்டுவதற்கு வாய்ப்பில்லை என்பது அனுபவமுள்ள பொறியாளர்களின் கருத்து. ஆனால் நீர்வழிச்சாலையை அமைப்பதன் மூலம் இந்த வெள்ளச்சேதத்தை கட்டுப்படுத்தவும் முடியும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஓடும் நதிகளில் எப்போதும் தண்ணீர் இருக்கும் படி செய்ய முடியும். தமிழ்நாடு தேசிய நீர்வழிச்சாலையின் மூலம் தேக்கப்படும் தண்ணீரிலிருந்து ( 200 டி.எம்.சி) நிறைய மின்சாரத்தை பெறமுடியும்.

தமிழ்நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைக்க வேண்டுமென்றால், அதற்கு சுமார் 36,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 4,500 கோடி வருமானம் கிடைக்கும். அதாவது முதலீட்டில் சுமார் 12.5 % வருமானம் கிடைக்கும் என்பதால் அரசாங்கத்திற்கு செலவில்லாமல் தனியார் மூலம் இந்த திட்டத்தை எளிதாக நிறைவேற்றி விடலாம். இது போல் ஆந்திர அரசும் தங்களது மாநில நதிகளை இணைக்க முயன்று வருகிறது. இப்படி ஆந்திராவிலும் நதிநீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு தமிழகத்திலும் நதிநீர் இணைப்பு ஏற்பட்டால் ஆந்திராவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தேவையான குடிநீர்,விவசாயம், மின்சார உற்பத்தி என்று அனைத்து தேவைகளும் நிறைவேறிவிடும். எந்த மாநிலமும் யாரையும் சார்ந்திருக்க அவசியமில்லை.

இந்த திட்டத்தின் மூலம் 150 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது. புதிதாக மின்சார உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் ஏராளமான தொழிற்சாலைகளும் உருவாகும். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் உயரும். கிணறுகள், குளங்கள் ஏரிகள் நிரம்பும். தண்ணீர் எங்கு தாரளமாக நிறைந்து கிடக்கிறதோ அங்குள்ள மக்கள் செழிப்பார்கள் என்பது தான் உண்மை. காரணம், மனித நாகரீகமே ஆற்றங்கரைகளை நம்பி உயிர் பெற்றது தானே!

தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தின் பயன்கள்

1. வெள்ளச்சேதம் கட்டுப்படுத்தப்படும்.< /p> 2. 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.

3. 60 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.

4. 2150 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.

5. ஆண்டு முழுவதும் பயன்படும் பெரிதாக பராமரிக்க தேவையில்லாத நீர்வழிச்சாலை கிடைக்கும்.
6. 1.50 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

7. 900 கி.மீ இருபுறமும் மரங்கள் வளரும்.

8. 5 ஆண்டுகளுக்குள் திட்டத்தை முடிக்க முடியும்.

9. வெள்ளம் மற்றும் வறட்சிக் கொடுமைகள் அறவே நீங்கி விடும்.

ஆக, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக செயல்படுத்த ஆவண செய்தால், தமிழக வரலாற்றில் நீங்காத இடம் பிடிப்பார் என்பது நிச்சயம்.

நன்றி
பசுமை இந்தியா
http://greenindiafoundation.blogspot.com/2011/09/blog-post_8878.html

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 2:33 pm

அருமையான திட்டம் தான்.இதனால் தமிழகம் பிற மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது 224747944 கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது 2825183110

பார்க்கலாம் இந்த அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள் என்று



பகிர்விற்கு நன்றி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Image010ycm

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக