Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது
2 posters
Page 1 of 1
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது
கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது
தமிழக நீர்வழி சாலை
![கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Interlinking](https://2img.net/r/ihimizer/img8/3417/interlinking.jpg)
கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டாம் என்று மக்கள் போராடுகிறார்கள். மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழி இருக்க மத்திய காங்கிரஸ் அரசு மற்ற மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பை பார்த்து விட்டு கூடங்குளத்தில் வந்து அணுமின் திட்டத்தை தொடங்கியது. ஆனால் தமிழகத்தால் இந்த கூடங்குளம் இல்லாமலே மின்சாரம் தயாரிக்க முடியும். அதற்கு ஒரே வழி தமிழக நதிகளை இணைப்பது தான்.
நாட்டில் ஒரு பக்கத்தில் ஏற்படும் வறட்சியால் விவசாயி வானத்தை பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான். மற்றொரு பக்கத்திலோ பெருமழையால் அளவுக்கதிகமான வெள்ளம் பொங்கி பிரவாகமெடுக்கிறது. இந்த நீர் வீணாக ஓடி கடலில் கலக்கிறது. தேசத்தின் ஆணிவேராக இருக்கும் விவசாயத்திற்கு செழுமையூட்ட வேண்டிய இந்த நீர் வீணாக உப்புக்கரிக்கும் கடலில் கலந்து விடுகிறது. இது ஒரு பக்கம்.
நிலத்தடி நீரோ ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் கிராமங்களில் இருக்கும் கிணறுகள் மழைகாலத்தில் நிரம்பி விடும். தழும்ப, தழும்ப தண்ணீர் நிறைந்து கிடக்கும் கிணற்றை பார்க்க பார்க்க மனது மகிழ்ச்சியில் கூத்தாடும். இந்த கிணறுகளில் விழுந்து புரளவே நகரத்தை விட்டு கல்லூரி விடுமுறையில் கிராமத்திற்கு ஓட கால்கள் துடிக்கும். சில கிணறுகளை கிராமங்களில் குடிநீருக்காக விட்டு வைத்திருப்பார்கள். எப்போதும் அங்கு சுரக்கும் குளிர்ச்சியான நீரை பெண்கள் குடிநீராக பயன்படுத்துவார்கள்.
கிராமங்களின் அடையாளச்சின்னமாக இருந்த இந்த கிணறுகள் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன. பல இடங்களில் இந்த கிணறுகள் குப்பை கிடங்குகளாக ஆக்கப்பட்டுவிட்டன. கைப்பம்புகள் துருபிடித்து ஆங்காங்கே நின்று கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் ராட்சத பம்புகள் தண்ணீரை தற்போது எடுத்துக் கொண்டிருக்கின்றன. பூமிப்பந்தின் மேற்பகுதி முழுவதும் போர்வெல்லுக்காக போட்ட துளைகளால் எங்கு நோக்கினும் துவாரங்கள். இப்படி இருந்தும் மக்கள் தண்ணீருக்காக துயரப்படுகிறார்கள். போர்வெல்லை இயக்க மின்சாரத்தை காணோம்( போன ஆட்சியில்). கூடவே தண்ணீரையும் காணவில்லை. முன்பு 10 மீட்டர் ஆழத்தில் கிடைத்த தண்ணீர் இப்போது 100 மீட்டர் தாண்டியும் கிடைக்கவில்லை.
தண்ணீர் பஞ்சத்திற்கு இதைவிட சாட்சியம் என்ன இருக்க முடியும்? நிலத்தடியில் அபரிமிதமாக தண்ணீரும் கிடைக்க, மின்சாரம் தட்டுப்பாடே இல்லாமல் எப்போதும் கிடைக்க ஒரு வழி இருக்கிறது. அது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலம் வெவ்வேறு திசைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளை ஒரே கோட்டில் இணைப்பது தான். இதற்கான ஒரு திட்டத்தை முதன்முதலாக மதுரையை சேர்ந்த பொறியாளர் ஏ.சி.காமராஜ் முதன் முதலாக வடிவமைத்தார். வழக்கம் போல் மத்திய அரசு அதில் சுணக்கமாக இருந்தது. இப்போது தமிழ்நாட்டு நதிகளை இணைக்க தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தை வடிவமைத்துள்ளார்.
இது பற்றி ஒரு அறிமுக பதிவு இது. அதாவது நதிகள் பெருக்கெடுத்து ஓடும் போது நிலத்தடி நீர் தானாகவே உயர்ந்து விடுவது இயல்பு. இது தவிர நதிகளை இணைப்பதால் ஏராளமான பயன்கள் இருக்கிறது. இது பற்றி பார்க்கலாம். நதிகளை இணைக்கும் போது அவையும், பல்வேறு நகரங்களை இணைக்கும் ஒரு தார்ச்சாலை போன்று "நீர்வழிச்சாலை" யாக ஆகி விடுகிறது. அதாவது இப்படி நீர்வழிச்சாலை அமையும் போது தமிழ்நாட்டின் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எளிதாக படகில் போய்விடலாம்.
தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டம்
தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டமானது, தமிழ்நாட்டில் உள்ள எல்லா நதிகளையும் ஒன்றாக பிணைக்கும் திட்டமாகும். தமிழ்நாடு நீர்வழிச்சாலை என்பது கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் வரக்கூடிய சமவெளிக்கால்வாய் ஆகும். அதோடு சுமார் 900 கி.மீ நீளமுள்ள சிறந்த நீர்வழிப்பாதையை உருவாக்க கூடிய திட்டமாகும்.
நீர்வழிப்பாதையின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் படகு போக்குவரத்தை தொடங்கும் போது இந்த பாதையின் வழியாக கொண்டு போகக்கூடிய பொருள்களுக்கான சுமை போக்குவரத்து செலவு மிகவும் குறைவு. மேலும் தரைவழியில் லாரி மற்றும் பெரிய டிரக்குகளில் கொண்டு செல்லப்படும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் கெடுதலும் இல்லை. அதாவது சாலையில் கொண்டு செல்லப்படும் போது ஆகும் எரிபொருள் செலவில் வெறும் 10 சதவீதமே நீர்வழிப்போக்குவரத்திற்கு செலவாகும்.
இது தவிர மேலே சொன்னது போல் தமிழகத்தின் எந்த ஒரு ஊரிலும் உள்ள விவசாயி "நம்ம ஊரில் மழை இல்லையே, எப்படி விவசாயம் பார்ப்பது?" என்று கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. காரணம், தமிழகத்தின் காவிரியில் தண்ணீரில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை வறண்டு போயிருக்கும் வைகை ஆற்றுக்குள் செலுத்தி விடலாம். அதனால் காவிரியில் வெள்ளமும் குறையும். வறண்ட வைகையில் தண்ணீரும் கிடைக்கும். இது போல் வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்தால் அதை தாமிரபரணிக்கோ, பாலாறுக்கோ திருப்பிவிடலாம்.
அதாவது, தமிழ்நாட்டின் எந்த ஒரு மாவட்டத்திலும் ஓடும் ஆற்றில் வெள்ளம் வந்தாலும் அதை வீணாக கடலுக்குள் சென்று கலக்க விடாமல் வறண்டு கிடக்கும் வேறு மாவட்டத்தில் உள்ள ஆறுகளுக்கு திருப்பிவிடுகிறோம். இதனால் சில இடங்களில் மழையை நம்பி காத்திருக்கும் விவசாயிகள் ஆற்றுப்பாசனத்தில் சாகுபடியை தொடங்கி விடலாம். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த திட்டம் செயல்படுததப்படும் போது ஆங்காங்ககே கிராமங்களில் வறண்டு கிடக்கும் கிணறுகள் எல்லாம் மீண்டும் நிரம்பி விடும். ஆற்றில் நீர் பெருகும் போது அதைச்சுற்றியுள்ள ஊர்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடுவது இயற்கை தானே! />
வீணாகும் நீர் ஒரு உதாரணம்
கடந்த 15 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு காவிரி ஆறு மூலம் 300 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. ஆனால் மேட்டூர் அணையின் கொள்ளளவோ வெறும் 93.5 டி.எம்.சி தான். ஆக மீதமுள்ள நீரை திறந்து கடலுக்கு விடவேண்டியது தான். அதாவது 200 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து யாருக்கும் பயன் இல்லாமல் போகிறது. நாமும் ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் கையேந்துகிறோம். இது தவிர பவானி, அமராவதி போன்ற நதிகளில் வந்த நீரும் வீணாக கடலில் கலந்து போனது. 2007 ஆம் ஆண்டில் மட்டும் மேட்டூருக்கு 399 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. ஆக, வீணானது 300 டி.எம்.சிக்கும் மேல். மூன்றாண்டுகளுக்கு மேல் இந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்திருக்க முடியும்.
இந்த நீரை தேக்க முடிந்திருந்தால் ஏராளமாக மின்சாரம் எடுத்திருக்க முடியும். தேக்கப்பட்டிருந்தால் குடிநீர் தாராளமாக கிடைத்திருக்கும். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு என்ன ஆனால் என்ன என்று மேலும் மேலும் தண்ணீரை திறந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதுண்டு. அவர்களால் அந்த தண்ணீரை தேக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் நாம் தான் புத்திசாலித்தனமாக அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சென்ற 2006 ல் மட்டும் நாடு முழுவதும் வெள்ளச் சேதம் சுமார் 77,000 கோடி என்று கணக்கிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் வெள்ளச்சேதம் 32,000 கோடி என்றார்கள். தமிழ்நாட்டில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒரு முறை இப்படி வெள்ளம் பெருக்கெடுத்து சேதத்தை ஏற்படுத்துவதுண்டு. தமிழ்நாட்டில் இனி பெரிய அளவுக்கு அணைக்கட்டுகளை கட்டுவதற்கு வாய்ப்பில்லை என்பது அனுபவமுள்ள பொறியாளர்களின் கருத்து. ஆனால் நீர்வழிச்சாலையை அமைப்பதன் மூலம் இந்த வெள்ளச்சேதத்தை கட்டுப்படுத்தவும் முடியும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஓடும் நதிகளில் எப்போதும் தண்ணீர் இருக்கும் படி செய்ய முடியும். தமிழ்நாடு தேசிய நீர்வழிச்சாலையின் மூலம் தேக்கப்படும் தண்ணீரிலிருந்து ( 200 டி.எம்.சி) நிறைய மின்சாரத்தை பெறமுடியும்.
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைக்க வேண்டுமென்றால், அதற்கு சுமார் 36,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 4,500 கோடி வருமானம் கிடைக்கும். அதாவது முதலீட்டில் சுமார் 12.5 % வருமானம் கிடைக்கும் என்பதால் அரசாங்கத்திற்கு செலவில்லாமல் தனியார் மூலம் இந்த திட்டத்தை எளிதாக நிறைவேற்றி விடலாம். இது போல் ஆந்திர அரசும் தங்களது மாநில நதிகளை இணைக்க முயன்று வருகிறது. இப்படி ஆந்திராவிலும் நதிநீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு தமிழகத்திலும் நதிநீர் இணைப்பு ஏற்பட்டால் ஆந்திராவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தேவையான குடிநீர்,விவசாயம், மின்சார உற்பத்தி என்று அனைத்து தேவைகளும் நிறைவேறிவிடும். எந்த மாநிலமும் யாரையும் சார்ந்திருக்க அவசியமில்லை.
இந்த திட்டத்தின் மூலம் 150 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது. புதிதாக மின்சார உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் ஏராளமான தொழிற்சாலைகளும் உருவாகும். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் உயரும். கிணறுகள், குளங்கள் ஏரிகள் நிரம்பும். தண்ணீர் எங்கு தாரளமாக நிறைந்து கிடக்கிறதோ அங்குள்ள மக்கள் செழிப்பார்கள் என்பது தான் உண்மை. காரணம், மனித நாகரீகமே ஆற்றங்கரைகளை நம்பி உயிர் பெற்றது தானே!
தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தின் பயன்கள்
1. வெள்ளச்சேதம் கட்டுப்படுத்தப்படும்.< /p> 2. 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.
3. 60 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
4. 2150 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
5. ஆண்டு முழுவதும் பயன்படும் பெரிதாக பராமரிக்க தேவையில்லாத நீர்வழிச்சாலை கிடைக்கும்.
6. 1.50 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
7. 900 கி.மீ இருபுறமும் மரங்கள் வளரும்.
8. 5 ஆண்டுகளுக்குள் திட்டத்தை முடிக்க முடியும்.
9. வெள்ளம் மற்றும் வறட்சிக் கொடுமைகள் அறவே நீங்கி விடும்.
ஆக, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக செயல்படுத்த ஆவண செய்தால், தமிழக வரலாற்றில் நீங்காத இடம் பிடிப்பார் என்பது நிச்சயம்.
நன்றி
பசுமை இந்தியா
http://greenindiafoundation.blogspot.com/2011/09/blog-post_8878.html
தமிழக நீர்வழி சாலை
![கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Interlinking](https://2img.net/r/ihimizer/img8/3417/interlinking.jpg)
கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டாம் என்று மக்கள் போராடுகிறார்கள். மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழி இருக்க மத்திய காங்கிரஸ் அரசு மற்ற மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பை பார்த்து விட்டு கூடங்குளத்தில் வந்து அணுமின் திட்டத்தை தொடங்கியது. ஆனால் தமிழகத்தால் இந்த கூடங்குளம் இல்லாமலே மின்சாரம் தயாரிக்க முடியும். அதற்கு ஒரே வழி தமிழக நதிகளை இணைப்பது தான்.
நாட்டில் ஒரு பக்கத்தில் ஏற்படும் வறட்சியால் விவசாயி வானத்தை பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறான். மற்றொரு பக்கத்திலோ பெருமழையால் அளவுக்கதிகமான வெள்ளம் பொங்கி பிரவாகமெடுக்கிறது. இந்த நீர் வீணாக ஓடி கடலில் கலக்கிறது. தேசத்தின் ஆணிவேராக இருக்கும் விவசாயத்திற்கு செழுமையூட்ட வேண்டிய இந்த நீர் வீணாக உப்புக்கரிக்கும் கடலில் கலந்து விடுகிறது. இது ஒரு பக்கம்.
நிலத்தடி நீரோ ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் கிராமங்களில் இருக்கும் கிணறுகள் மழைகாலத்தில் நிரம்பி விடும். தழும்ப, தழும்ப தண்ணீர் நிறைந்து கிடக்கும் கிணற்றை பார்க்க பார்க்க மனது மகிழ்ச்சியில் கூத்தாடும். இந்த கிணறுகளில் விழுந்து புரளவே நகரத்தை விட்டு கல்லூரி விடுமுறையில் கிராமத்திற்கு ஓட கால்கள் துடிக்கும். சில கிணறுகளை கிராமங்களில் குடிநீருக்காக விட்டு வைத்திருப்பார்கள். எப்போதும் அங்கு சுரக்கும் குளிர்ச்சியான நீரை பெண்கள் குடிநீராக பயன்படுத்துவார்கள்.
கிராமங்களின் அடையாளச்சின்னமாக இருந்த இந்த கிணறுகள் எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன. பல இடங்களில் இந்த கிணறுகள் குப்பை கிடங்குகளாக ஆக்கப்பட்டுவிட்டன. கைப்பம்புகள் துருபிடித்து ஆங்காங்கே நின்று கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் ராட்சத பம்புகள் தண்ணீரை தற்போது எடுத்துக் கொண்டிருக்கின்றன. பூமிப்பந்தின் மேற்பகுதி முழுவதும் போர்வெல்லுக்காக போட்ட துளைகளால் எங்கு நோக்கினும் துவாரங்கள். இப்படி இருந்தும் மக்கள் தண்ணீருக்காக துயரப்படுகிறார்கள். போர்வெல்லை இயக்க மின்சாரத்தை காணோம்( போன ஆட்சியில்). கூடவே தண்ணீரையும் காணவில்லை. முன்பு 10 மீட்டர் ஆழத்தில் கிடைத்த தண்ணீர் இப்போது 100 மீட்டர் தாண்டியும் கிடைக்கவில்லை.
தண்ணீர் பஞ்சத்திற்கு இதைவிட சாட்சியம் என்ன இருக்க முடியும்? நிலத்தடியில் அபரிமிதமாக தண்ணீரும் கிடைக்க, மின்சாரம் தட்டுப்பாடே இல்லாமல் எப்போதும் கிடைக்க ஒரு வழி இருக்கிறது. அது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலம் வெவ்வேறு திசைகளில் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளை ஒரே கோட்டில் இணைப்பது தான். இதற்கான ஒரு திட்டத்தை முதன்முதலாக மதுரையை சேர்ந்த பொறியாளர் ஏ.சி.காமராஜ் முதன் முதலாக வடிவமைத்தார். வழக்கம் போல் மத்திய அரசு அதில் சுணக்கமாக இருந்தது. இப்போது தமிழ்நாட்டு நதிகளை இணைக்க தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தை வடிவமைத்துள்ளார்.
இது பற்றி ஒரு அறிமுக பதிவு இது. அதாவது நதிகள் பெருக்கெடுத்து ஓடும் போது நிலத்தடி நீர் தானாகவே உயர்ந்து விடுவது இயல்பு. இது தவிர நதிகளை இணைப்பதால் ஏராளமான பயன்கள் இருக்கிறது. இது பற்றி பார்க்கலாம். நதிகளை இணைக்கும் போது அவையும், பல்வேறு நகரங்களை இணைக்கும் ஒரு தார்ச்சாலை போன்று "நீர்வழிச்சாலை" யாக ஆகி விடுகிறது. அதாவது இப்படி நீர்வழிச்சாலை அமையும் போது தமிழ்நாட்டின் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எளிதாக படகில் போய்விடலாம்.
தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டம்
தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டமானது, தமிழ்நாட்டில் உள்ள எல்லா நதிகளையும் ஒன்றாக பிணைக்கும் திட்டமாகும். தமிழ்நாடு நீர்வழிச்சாலை என்பது கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் வரக்கூடிய சமவெளிக்கால்வாய் ஆகும். அதோடு சுமார் 900 கி.மீ நீளமுள்ள சிறந்த நீர்வழிப்பாதையை உருவாக்க கூடிய திட்டமாகும்.
நீர்வழிப்பாதையின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் படகு போக்குவரத்தை தொடங்கும் போது இந்த பாதையின் வழியாக கொண்டு போகக்கூடிய பொருள்களுக்கான சுமை போக்குவரத்து செலவு மிகவும் குறைவு. மேலும் தரைவழியில் லாரி மற்றும் பெரிய டிரக்குகளில் கொண்டு செல்லப்படும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் கெடுதலும் இல்லை. அதாவது சாலையில் கொண்டு செல்லப்படும் போது ஆகும் எரிபொருள் செலவில் வெறும் 10 சதவீதமே நீர்வழிப்போக்குவரத்திற்கு செலவாகும்.
இது தவிர மேலே சொன்னது போல் தமிழகத்தின் எந்த ஒரு ஊரிலும் உள்ள விவசாயி "நம்ம ஊரில் மழை இல்லையே, எப்படி விவசாயம் பார்ப்பது?" என்று கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. காரணம், தமிழகத்தின் காவிரியில் தண்ணீரில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை வறண்டு போயிருக்கும் வைகை ஆற்றுக்குள் செலுத்தி விடலாம். அதனால் காவிரியில் வெள்ளமும் குறையும். வறண்ட வைகையில் தண்ணீரும் கிடைக்கும். இது போல் வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்தால் அதை தாமிரபரணிக்கோ, பாலாறுக்கோ திருப்பிவிடலாம்.
அதாவது, தமிழ்நாட்டின் எந்த ஒரு மாவட்டத்திலும் ஓடும் ஆற்றில் வெள்ளம் வந்தாலும் அதை வீணாக கடலுக்குள் சென்று கலக்க விடாமல் வறண்டு கிடக்கும் வேறு மாவட்டத்தில் உள்ள ஆறுகளுக்கு திருப்பிவிடுகிறோம். இதனால் சில இடங்களில் மழையை நம்பி காத்திருக்கும் விவசாயிகள் ஆற்றுப்பாசனத்தில் சாகுபடியை தொடங்கி விடலாம். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த திட்டம் செயல்படுததப்படும் போது ஆங்காங்ககே கிராமங்களில் வறண்டு கிடக்கும் கிணறுகள் எல்லாம் மீண்டும் நிரம்பி விடும். ஆற்றில் நீர் பெருகும் போது அதைச்சுற்றியுள்ள ஊர்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடுவது இயற்கை தானே! />
வீணாகும் நீர் ஒரு உதாரணம்
கடந்த 15 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு காவிரி ஆறு மூலம் 300 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. ஆனால் மேட்டூர் அணையின் கொள்ளளவோ வெறும் 93.5 டி.எம்.சி தான். ஆக மீதமுள்ள நீரை திறந்து கடலுக்கு விடவேண்டியது தான். அதாவது 200 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து யாருக்கும் பயன் இல்லாமல் போகிறது. நாமும் ஆண்டுதோறும் கர்நாடகாவிடம் கையேந்துகிறோம். இது தவிர பவானி, அமராவதி போன்ற நதிகளில் வந்த நீரும் வீணாக கடலில் கலந்து போனது. 2007 ஆம் ஆண்டில் மட்டும் மேட்டூருக்கு 399 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. ஆக, வீணானது 300 டி.எம்.சிக்கும் மேல். மூன்றாண்டுகளுக்கு மேல் இந்த நீரை பயன்படுத்தி விவசாயம் செய்திருக்க முடியும்.
இந்த நீரை தேக்க முடிந்திருந்தால் ஏராளமாக மின்சாரம் எடுத்திருக்க முடியும். தேக்கப்பட்டிருந்தால் குடிநீர் தாராளமாக கிடைத்திருக்கும். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு என்ன ஆனால் என்ன என்று மேலும் மேலும் தண்ணீரை திறந்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதுண்டு. அவர்களால் அந்த தண்ணீரை தேக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் நாம் தான் புத்திசாலித்தனமாக அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சென்ற 2006 ல் மட்டும் நாடு முழுவதும் வெள்ளச் சேதம் சுமார் 77,000 கோடி என்று கணக்கிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் வெள்ளச்சேதம் 32,000 கோடி என்றார்கள். தமிழ்நாட்டில் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒரு முறை இப்படி வெள்ளம் பெருக்கெடுத்து சேதத்தை ஏற்படுத்துவதுண்டு. தமிழ்நாட்டில் இனி பெரிய அளவுக்கு அணைக்கட்டுகளை கட்டுவதற்கு வாய்ப்பில்லை என்பது அனுபவமுள்ள பொறியாளர்களின் கருத்து. ஆனால் நீர்வழிச்சாலையை அமைப்பதன் மூலம் இந்த வெள்ளச்சேதத்தை கட்டுப்படுத்தவும் முடியும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஓடும் நதிகளில் எப்போதும் தண்ணீர் இருக்கும் படி செய்ய முடியும். தமிழ்நாடு தேசிய நீர்வழிச்சாலையின் மூலம் தேக்கப்படும் தண்ணீரிலிருந்து ( 200 டி.எம்.சி) நிறைய மின்சாரத்தை பெறமுடியும்.
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை எல்லாம் இணைக்க வேண்டுமென்றால், அதற்கு சுமார் 36,000 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 4,500 கோடி வருமானம் கிடைக்கும். அதாவது முதலீட்டில் சுமார் 12.5 % வருமானம் கிடைக்கும் என்பதால் அரசாங்கத்திற்கு செலவில்லாமல் தனியார் மூலம் இந்த திட்டத்தை எளிதாக நிறைவேற்றி விடலாம். இது போல் ஆந்திர அரசும் தங்களது மாநில நதிகளை இணைக்க முயன்று வருகிறது. இப்படி ஆந்திராவிலும் நதிநீர் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு தமிழகத்திலும் நதிநீர் இணைப்பு ஏற்பட்டால் ஆந்திராவிற்கும் தமிழ்நாட்டிற்கும் தேவையான குடிநீர்,விவசாயம், மின்சார உற்பத்தி என்று அனைத்து தேவைகளும் நிறைவேறிவிடும். எந்த மாநிலமும் யாரையும் சார்ந்திருக்க அவசியமில்லை.
இந்த திட்டத்தின் மூலம் 150 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது. புதிதாக மின்சார உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் ஏராளமான தொழிற்சாலைகளும் உருவாகும். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர் உயரும். கிணறுகள், குளங்கள் ஏரிகள் நிரம்பும். தண்ணீர் எங்கு தாரளமாக நிறைந்து கிடக்கிறதோ அங்குள்ள மக்கள் செழிப்பார்கள் என்பது தான் உண்மை. காரணம், மனித நாகரீகமே ஆற்றங்கரைகளை நம்பி உயிர் பெற்றது தானே!
தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தின் பயன்கள்
1. வெள்ளச்சேதம் கட்டுப்படுத்தப்படும்.< /p> 2. 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.
3. 60 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
4. 2150 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
5. ஆண்டு முழுவதும் பயன்படும் பெரிதாக பராமரிக்க தேவையில்லாத நீர்வழிச்சாலை கிடைக்கும்.
6. 1.50 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
7. 900 கி.மீ இருபுறமும் மரங்கள் வளரும்.
8. 5 ஆண்டுகளுக்குள் திட்டத்தை முடிக்க முடியும்.
9. வெள்ளம் மற்றும் வறட்சிக் கொடுமைகள் அறவே நீங்கி விடும்.
ஆக, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக செயல்படுத்த ஆவண செய்தால், தமிழக வரலாற்றில் நீங்காத இடம் பிடிப்பார் என்பது நிச்சயம்.
நன்றி
பசுமை இந்தியா
http://greenindiafoundation.blogspot.com/2011/09/blog-post_8878.html
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது
அருமையான திட்டம் தான்.இதனால் தமிழகம் பிற மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
பார்க்கலாம் இந்த அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள் என்று
பகிர்விற்கு நன்றி
![கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
பார்க்கலாம் இந்த அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள் என்று
பகிர்விற்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![கூடங்குளம் வேண்டாம். நீர்வழிச்சாலை போதும்-அற்புதமான திட்டம் இது Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிறகுகள் வேண்டாம் சிந்தனைகள் போதும்
» மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!
» டாக்டர் வேண்டாம், என்ஜீனியர் போதும் ?
» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
» கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
» மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!
» டாக்டர் வேண்டாம், என்ஜீனியர் போதும் ?
» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
» கூடங்குளம் அணுஉலை திறப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். பயம் மனிதர்களுக்கு புதிதல்ல...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|