புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
இலக்கியம்
இலக்கியம், வாழ்க்கையில் மனிதர்கள் கண்ட ஆழ்ந்த அனுபவங் களையும், உண்மைகளையும் கலைநயத்துடன் வெளியிடுகிறது. இலக்கியத்தால், பிறருடைய வாழ்க்கை, செயல், அறிவு, நினைவு, உணர்ச்சி, உள்ளக்கிடக்கை, குறிக்கோள் என்பவற்றை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் முடியும்.
வாழ்வும் இலக்கியமும்
இலக்கியம் எனப் படைக்கப்படுவன அனைத்தும் இலக்கியமாகி விடுவதில்லை. இலக்கியம் என்பது, மனித வாழ்வோடு இணைந்து, ஆழ்ந்து–அகன்று, என்றும் நிலைபெறுவதுமான மனிதப்பண்புடன் தொடர்புடையது; மனிதனால் விரும்பக் கூடியது; மனித வாழ்க்கையோடு தொடர்புடையது; என்றும் நிலைத்திருக்கக் கூடியது; கற்போர் மனத்தில் இன்பத்தை ஊட்டுகின்றனவாக அமைவது.
இலக்கிய வகை
தனிமனிதன் வாழ்வு, அனுபவம் என்பவற்றைக் கூறும் இலக்கியம் ஒருவகை. மற்றொன்று, புறவுலக வாழ்வின் ஈடுபாட்டினால் ஏற்பட்ட அனுபவத்தின் வாழ்வு, தாழ்வு, நன்மை, தீமை, குற்றம், நீதி ஆகியவற்றுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை அனுபவத்தால் கூறுவது. அனுபவம் என்பது தனிமனிதன் ஒருவனுக்கு மட்டும் உரிமையானதாகா தாகையால் மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுமையாகி விடுகிறது. அத்தகைய வகைக்குரியவை இலக்கிய வகைகளாகின்றன.
இலக்கியக் கலை
கலை என்பது ஒருவகை ஆற்றல்; குறிப்பிட்ட ஒருவழியை மேற்கொண்டு, முன்னரே கலைஞன் மனத்தில் தோன்றிய ஒரு பயனைப் பிறர் அறியச் செய்யும் ஆற்றலே ஆகும் அது என்கிறார், ஆபர் கிராம்பி என்ற திறனாய்வாளர். மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்கள் கருத்துகளில் தோன்றிய சிறந்த உண்மைப் பொருள்களைக் கலைகளின் மூலமே வெளியிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவத்தை அற ிவிக்கும் கருவியாகத் திகழ்வன அவர்கள் ஆக்கிய கலைகள் என்று, இலக்கியக் கலைக்குரிய அடிப்படைகள் கண்டறியப் படுகின்றன. அத்தகைய அடிப்படைகளைக் கொண்டு திகழும் கலைகளில் மருத்துவமும் ஒன்று. ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கூறப்படுபவற்றுள் மருத்துவமும் அடங்கும்.
இலக்கியம்
இலக்கியம், வாழ்க்கையில் மனிதர்கள் கண்ட ஆழ்ந்த அனுபவங் களையும், உண்மைகளையும் கலைநயத்துடன் வெளியிடுகிறது. இலக்கியத்தால், பிறருடைய வாழ்க்கை, செயல், அறிவு, நினைவு, உணர்ச்சி, உள்ளக்கிடக்கை, குறிக்கோள் என்பவற்றை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் முடியும்.
வாழ்வும் இலக்கியமும்
இலக்கியம் எனப் படைக்கப்படுவன அனைத்தும் இலக்கியமாகி விடுவதில்லை. இலக்கியம் என்பது, மனித வாழ்வோடு இணைந்து, ஆழ்ந்து–அகன்று, என்றும் நிலைபெறுவதுமான மனிதப்பண்புடன் தொடர்புடையது; மனிதனால் விரும்பக் கூடியது; மனித வாழ்க்கையோடு தொடர்புடையது; என்றும் நிலைத்திருக்கக் கூடியது; கற்போர் மனத்தில் இன்பத்தை ஊட்டுகின்றனவாக அமைவது.
இலக்கிய வகை
தனிமனிதன் வாழ்வு, அனுபவம் என்பவற்றைக் கூறும் இலக்கியம் ஒருவகை. மற்றொன்று, புறவுலக வாழ்வின் ஈடுபாட்டினால் ஏற்பட்ட அனுபவத்தின் வாழ்வு, தாழ்வு, நன்மை, தீமை, குற்றம், நீதி ஆகியவற்றுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை அனுபவத்தால் கூறுவது. அனுபவம் என்பது தனிமனிதன் ஒருவனுக்கு மட்டும் உரிமையானதாகா தாகையால் மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுமையாகி விடுகிறது. அத்தகைய வகைக்குரியவை இலக்கிய வகைகளாகின்றன.
இலக்கியக் கலை
கலை என்பது ஒருவகை ஆற்றல்; குறிப்பிட்ட ஒருவழியை மேற்கொண்டு, முன்னரே கலைஞன் மனத்தில் தோன்றிய ஒரு பயனைப் பிறர் அறியச் செய்யும் ஆற்றலே ஆகும் அது என்கிறார், ஆபர் கிராம்பி என்ற திறனாய்வாளர். மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்கள் கருத்துகளில் தோன்றிய சிறந்த உண்மைப் பொருள்களைக் கலைகளின் மூலமே வெளியிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவத்தை அற ிவிக்கும் கருவியாகத் திகழ்வன அவர்கள் ஆக்கிய கலைகள் என்று, இலக்கியக் கலைக்குரிய அடிப்படைகள் கண்டறியப் படுகின்றன. அத்தகைய அடிப்படைகளைக் கொண்டு திகழும் கலைகளில் மருத்துவமும் ஒன்று. ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கூறப்படுபவற்றுள் மருத்துவமும் அடங்கும்.
பெண்ணின் கற்பும், மருத்துவனின் சொல்லும்
கற்புடைய பெண்ணிடத்தில் கணவன் சொல்லும் சொல்லைப் போல, நோயாளியிடம் மருத்துவன் கூறும் சொல் மதிக்கத் தக்கது, என்று பயன் கூறப்பட்டது.
கற்புமுறை பெண்போற் கணவனெனும் பண்டிதன் சொல்''59
என்னும் செய்யுள் பயனுவமை அமைந்தது.
நீர்நிலையும் நெஞ்சும்
பெரிய நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி அதனுள் நீரை நிறைத்து வைப்பதால், உயிரினங்கள் பயனடைவதைப்போல, தூதுவளைக் கற்பத்தை உண்டு வந்தால், மாறுபட்ட குற்றமுடைய நெஞ்சினைத் தூய்மையுடையதாக மாற்றிவிடும் என்று தூதுவளையின் பயன் உவமித்துக் கூறப்பட்டதால் பயனுவமையாயிற்று.
திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவை யேனல்ல
திருக்குளத்தைப் போலே திருத்தும்.''60
பட்ட மரமும் நோயும்
மேக நோயில் மிகவும் கொடியது வெட்டை மேகம். அந்நோய், நோயாளியைச் சிறிது சிறிதாக அழித்துக் கொண்டே வந்து இறுதியில் உயிரையே போக்கிவிடும் என்பதற்கு, மரம் பட்டுக் கொண்டே வந்து இறுதியில் முழுவதும் பட்டுப் போவது உவமையாக்கிக் கூறப்படு வதனால், வெட்டை மேகத்தின் தொழில் உவமித்த, தொழில் உவமை (வினையுவனை) யாயிற்று.
பட்டமரம் போலாக்கும் வெட்டை மேகம்
பக்கவலி கக்கிருமற் பதறி யோடும்.''61
வெட்டை மேகம் என்று கூறப்படும் இந்நோய் இக்காலத்தில் சிறப்பாகப் பேசப்படுகின்ற குறிப்பது ஆகும் என்னும் நோயின் தமிழ்ப் பெயரே வெட்டை மேகம் என்பது.
நெல்லுக்கிறைத்த நீர் போலாச்சுஇது
நேரான வாதமும் தானாகும்
புல்லுக் கிறைத்த நீர் போலாகும்பாரு
புத்தியில்லாத தோர் வாதிகளே.''62
நீர் பாய்ச்சுதல் வினையையும், புல்லுக்கு ப் பாய்தல் பயனையும் குறித்து உவமிக்கப் பட்டுள்ளதால் வினை, பயன் ஆகிய இரண்டு உவமை களையும் கொள்ளலாம். மேற்கண்ட இப்பாடலின் கருத்துடன்,
நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்''63
என்னும் மூதுரைப் பாடல் பொருந்தக் காணலாம்.
கற்புடைய பெண்ணிடத்தில் கணவன் சொல்லும் சொல்லைப் போல, நோயாளியிடம் மருத்துவன் கூறும் சொல் மதிக்கத் தக்கது, என்று பயன் கூறப்பட்டது.
கற்புமுறை பெண்போற் கணவனெனும் பண்டிதன் சொல்''59
என்னும் செய்யுள் பயனுவமை அமைந்தது.
நீர்நிலையும் நெஞ்சும்
பெரிய நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி அதனுள் நீரை நிறைத்து வைப்பதால், உயிரினங்கள் பயனடைவதைப்போல, தூதுவளைக் கற்பத்தை உண்டு வந்தால், மாறுபட்ட குற்றமுடைய நெஞ்சினைத் தூய்மையுடையதாக மாற்றிவிடும் என்று தூதுவளையின் பயன் உவமித்துக் கூறப்பட்டதால் பயனுவமையாயிற்று.
திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவை யேனல்ல
திருக்குளத்தைப் போலே திருத்தும்.''60
பட்ட மரமும் நோயும்
மேக நோயில் மிகவும் கொடியது வெட்டை மேகம். அந்நோய், நோயாளியைச் சிறிது சிறிதாக அழித்துக் கொண்டே வந்து இறுதியில் உயிரையே போக்கிவிடும் என்பதற்கு, மரம் பட்டுக் கொண்டே வந்து இறுதியில் முழுவதும் பட்டுப் போவது உவமையாக்கிக் கூறப்படு வதனால், வெட்டை மேகத்தின் தொழில் உவமித்த, தொழில் உவமை (வினையுவனை) யாயிற்று.
பட்டமரம் போலாக்கும் வெட்டை மேகம்
பக்கவலி கக்கிருமற் பதறி யோடும்.''61
வெட்டை மேகம் என்று கூறப்படும் இந்நோய் இக்காலத்தில் சிறப்பாகப் பேசப்படுகின்ற குறிப்பது ஆகும் என்னும் நோயின் தமிழ்ப் பெயரே வெட்டை மேகம் என்பது.
நெல்லுக்கிறைத்த நீர் போலாச்சுஇது
நேரான வாதமும் தானாகும்
புல்லுக் கிறைத்த நீர் போலாகும்பாரு
புத்தியில்லாத தோர் வாதிகளே.''62
நீர் பாய்ச்சுதல் வினையையும், புல்லுக்கு ப் பாய்தல் பயனையும் குறித்து உவமிக்கப் பட்டுள்ளதால் வினை, பயன் ஆகிய இரண்டு உவமை களையும் கொள்ளலாம். மேற்கண்ட இப்பாடலின் கருத்துடன்,
நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்''63
என்னும் மூதுரைப் பாடல் பொருந்தக் காணலாம்.
வில்லும் அம்பும்
வில் எவ்வளவுக்கு எவ்வளவு வளைக்கப்படுகிறதோ அவ் வளவுக்கு அவ்வளவு தூரம் சென்று அம்பு தைக்கும் என்பது அறிந்ததே. ஆனால், வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தால், அம்பு, தானாகச் சென்று தைத்துவிடுமா? முயற்சி வேண்டும் என்றுணர்த்தும் கருத்துடன்,
வில்லப்பா வளைந்தாலோ அம்பு தைக்கும்
வெறும் மரம்போல் நின்றாக்கால் தைக்குமோடா?''64
என்றும்,
வில்லுதான் வளைந்தாலோ அம்பு தைக்கும்
வெறும் மரத்தில் புதைசெய்யா வாறு தானே?''65
என்று வினையும் பயனும் கூறப்பட்டதால் வினையுவமையும் பயனுவமையும் அமைந்திருக்கிறது எனலாம்.
இளைஞரும் இளம்பெண்ணும்
இளம் பெண்ணைக் கண்ட வாலிபர்கள், அவளின் கொங்கையைக் கண்டு, பொற்குடமோ, மலையோ, மல்லிகைச் செண்டோ, இளநீரோ, மன்மதன் மகுடமோ என்று ஐயப்பட்டுக் கொண்டு, அவளிடமிருந்து மீள மாட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பார்களாம்.
பாரு நீ பெண்ணைப் பார்த்துப்
பலபல இளைஞ ரெல்லாம்
வாருபொற் குடமோ கோடோ
மல்லிகைச் செண்டோ வென்பார்
தாருநீ இளநீர் என்பார்
தனி மதன் மகுடம் என்பார்
ஊரு நற் கொங்கை ரெண்டு
முறைப்பாகப் பார்ப்பார் காணே''66
என்னும் விருத்தம் ஐய உவமை கொண்டிருக்கக் காணலாம்.
இளைஞர்களின் பார்வை, பெண்ணின் கொங்கைக்குள் சிக்கிக் கொண்டு பிடுங்க முடியாமல் உழன்று கொண்டிருப்பார்களாம். அதைப் போல, முலைப்பாலில் அகப்பட்ட லிங்கம், சூதம் ஆகிய மருந்துகள் மீள முடியாமல் சிக்கி, கட்டிப்போகும் என்று, ‘இரசக்கட்டு, லிங்கக்கட்டு, ஆகிய இரண்டையும் பயன் உவமையாக்கிக் கூறக் காண்கிறோம்.
காணிந்தப் பார்வை ரெண்டும்
கடுங் கொங்கைக் குள்ளே சிக்கி
ஊணிந்த பார்வை புக்கி
உழலுவார் பிடுங்க மாட்டார்
தோணிந்த விதம்போ லிங்கம்
சூதமும் கட்டிப் போகும்''67
என்றுரைப்பது, மருத்துவப் புலவர்களின் இலக்கிய நயத்தைப் புலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
மேலும் பல்வேறு வகையான கருத்துகளை விளக்கிட, அவற்றுக்கு நேரான உவமைகளைக் கூறி விளங்க வைப்பது செய்யுளுக்கே உரிய அணியாக அமைவதால், உவமையின்றி ஒரு பொருளையும் விளக்கிட இயலாது என்பது அறிந்ததே. அந்த வகையில் மருத்துவப் பொருள் களைப் பலமுறைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிட வேண்டி யுள்ளதால், பண்பாட்டில் நிலவி வரும் அனைத்து முறை களையும் எடுத்துக் கூறி விளக்கிட வேண்டிய நிலை மருத்துவ இலக்கியத்துக்கு இருக்கின்றது என்பதால், உவமைகள் நிறைந்தே காணப்படுவதுடன் சுவையானதாகவும் இருந்திடக் காணலாம். அவற்றுள்,
காடுமே போயொழியும் யீனர்போல
கண்ணெதிரே நில்லாது திரிகாலங்கள்''68
வாடுமே திரிகால ஞான மார்க்கம்
வாயிருக்க நாவில்லா வாறு போல''69
நூலில்லா ஊமை மொழி பேசல் போல''
பூவில்லா நார்முடிந்த வாறு போல''
பாவில்லா நூல் விளங்கும் நெசவு போல''
பரியேறிச் சேணமில்லா உவமை போல''
காவில்லா ஊரிருந்த சுகமே போல''70
கதவடைக்க கட்டுண்ட கள்ளன் போல''
சிறுவர்தெரு விளையாடும் சேர்க்கை போல''71
அத்தானும் மச்சானும் கூடிக் கூடி
அடிக்கடியே பரியாச மாகுமாபோல்''
சுழலிலகப் பட்டதோர் துரும்பு போல''
ஏர்விட்டு உழுதுபரம் படித்தார்ப் போல''
நில்லுமே என்றுசொல்லித் தடுத்தாப் போல''
தமரோடு வாழுகின்ற தன்மை போல''
காயிருந்து பழம்பழுத்த வாறு போல''
அமர்ந்துபோம் நரம்பின்வழி பிராண வாயு
அணிஅணியாய் அலியென்னும் அலையைப் போல''72
என்று உவமைகளால் நிறைவு பெற்ற பாடல்கள் பல காணப் படுகின்றன.
வில் எவ்வளவுக்கு எவ்வளவு வளைக்கப்படுகிறதோ அவ் வளவுக்கு அவ்வளவு தூரம் சென்று அம்பு தைக்கும் என்பது அறிந்ததே. ஆனால், வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தால், அம்பு, தானாகச் சென்று தைத்துவிடுமா? முயற்சி வேண்டும் என்றுணர்த்தும் கருத்துடன்,
வில்லப்பா வளைந்தாலோ அம்பு தைக்கும்
வெறும் மரம்போல் நின்றாக்கால் தைக்குமோடா?''64
என்றும்,
வில்லுதான் வளைந்தாலோ அம்பு தைக்கும்
வெறும் மரத்தில் புதைசெய்யா வாறு தானே?''65
என்று வினையும் பயனும் கூறப்பட்டதால் வினையுவமையும் பயனுவமையும் அமைந்திருக்கிறது எனலாம்.
இளைஞரும் இளம்பெண்ணும்
இளம் பெண்ணைக் கண்ட வாலிபர்கள், அவளின் கொங்கையைக் கண்டு, பொற்குடமோ, மலையோ, மல்லிகைச் செண்டோ, இளநீரோ, மன்மதன் மகுடமோ என்று ஐயப்பட்டுக் கொண்டு, அவளிடமிருந்து மீள மாட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பார்களாம்.
பாரு நீ பெண்ணைப் பார்த்துப்
பலபல இளைஞ ரெல்லாம்
வாருபொற் குடமோ கோடோ
மல்லிகைச் செண்டோ வென்பார்
தாருநீ இளநீர் என்பார்
தனி மதன் மகுடம் என்பார்
ஊரு நற் கொங்கை ரெண்டு
முறைப்பாகப் பார்ப்பார் காணே''66
என்னும் விருத்தம் ஐய உவமை கொண்டிருக்கக் காணலாம்.
இளைஞர்களின் பார்வை, பெண்ணின் கொங்கைக்குள் சிக்கிக் கொண்டு பிடுங்க முடியாமல் உழன்று கொண்டிருப்பார்களாம். அதைப் போல, முலைப்பாலில் அகப்பட்ட லிங்கம், சூதம் ஆகிய மருந்துகள் மீள முடியாமல் சிக்கி, கட்டிப்போகும் என்று, ‘இரசக்கட்டு, லிங்கக்கட்டு, ஆகிய இரண்டையும் பயன் உவமையாக்கிக் கூறக் காண்கிறோம்.
காணிந்தப் பார்வை ரெண்டும்
கடுங் கொங்கைக் குள்ளே சிக்கி
ஊணிந்த பார்வை புக்கி
உழலுவார் பிடுங்க மாட்டார்
தோணிந்த விதம்போ லிங்கம்
சூதமும் கட்டிப் போகும்''67
என்றுரைப்பது, மருத்துவப் புலவர்களின் இலக்கிய நயத்தைப் புலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
மேலும் பல்வேறு வகையான கருத்துகளை விளக்கிட, அவற்றுக்கு நேரான உவமைகளைக் கூறி விளங்க வைப்பது செய்யுளுக்கே உரிய அணியாக அமைவதால், உவமையின்றி ஒரு பொருளையும் விளக்கிட இயலாது என்பது அறிந்ததே. அந்த வகையில் மருத்துவப் பொருள் களைப் பலமுறைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிட வேண்டி யுள்ளதால், பண்பாட்டில் நிலவி வரும் அனைத்து முறை களையும் எடுத்துக் கூறி விளக்கிட வேண்டிய நிலை மருத்துவ இலக்கியத்துக்கு இருக்கின்றது என்பதால், உவமைகள் நிறைந்தே காணப்படுவதுடன் சுவையானதாகவும் இருந்திடக் காணலாம். அவற்றுள்,
காடுமே போயொழியும் யீனர்போல
கண்ணெதிரே நில்லாது திரிகாலங்கள்''68
வாடுமே திரிகால ஞான மார்க்கம்
வாயிருக்க நாவில்லா வாறு போல''69
நூலில்லா ஊமை மொழி பேசல் போல''
பூவில்லா நார்முடிந்த வாறு போல''
பாவில்லா நூல் விளங்கும் நெசவு போல''
பரியேறிச் சேணமில்லா உவமை போல''
காவில்லா ஊரிருந்த சுகமே போல''70
கதவடைக்க கட்டுண்ட கள்ளன் போல''
சிறுவர்தெரு விளையாடும் சேர்க்கை போல''71
அத்தானும் மச்சானும் கூடிக் கூடி
அடிக்கடியே பரியாச மாகுமாபோல்''
சுழலிலகப் பட்டதோர் துரும்பு போல''
ஏர்விட்டு உழுதுபரம் படித்தார்ப் போல''
நில்லுமே என்றுசொல்லித் தடுத்தாப் போல''
தமரோடு வாழுகின்ற தன்மை போல''
காயிருந்து பழம்பழுத்த வாறு போல''
அமர்ந்துபோம் நரம்பின்வழி பிராண வாயு
அணிஅணியாய் அலியென்னும் அலையைப் போல''72
என்று உவமைகளால் நிறைவு பெற்ற பாடல்கள் பல காணப் படுகின்றன.
கிளிமூக்கு
ஒரே பாடலில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு உவமைகள் அமைந்த பாடலும் காணப்படுகின்றது.
கிளிமூக்கு மரத்தின் காய் கிளியைப் போல பசுமை நிறத்தில் இருக்கும். இலை அரச இலை போன்ற வடிவத்தில் இருக்கும். அதனுடைய பழத்தைத் தின்றால், சுறுசுறுப்பாய் ஓடலாம், நொடியிலே காயம் சித்தி அடையும் என்பர்.
போக்கான கிளிமூக்கு மரமொன் றுண்டு
புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்
வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்
மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு
நோக்கான வழிநடக்கச் சுறுக்காய் ஓடும்
நொடியிலே காயசித்திக் கிடைக்கு மப்பா''73
என்று, நிறம் மெய் உவமையாகவும், அரசிலை உருவ உவமை யாகவும், சுறுக்காய் ஓடச் செய்வது பயன் உவமையாகவும், காய சித்தி வினை உவமையாகவும் உரைக்கப்பட்டிருக்கிறது.
மரத்தின் காய் கிளிமூக்குப் போல இருப்பதனால் மரத்துக்கும் அப்பெயரே ஆகி வந்ததனால், சினையாகு பெயராகக் கிளிமூக்கு மரமென்று உரைக்கப்பட்டது.
நெல்லும் தண்ணீரும்
நெல்லுக்கு இறைக்கின்ற நீர் வாய்க்காலின் வழியே ஓடிப் புல்லுக்கும் பயனாகிறது. அதுபோல, வாதத்தை நல்லவர்க்கு உரைக்கும் போது, தீயவர்களுக்கும் சென்று சேர்ந்தடைந்து விடுகிறது என்பதைக் கூறும் பாடல்,
நெல்லுப் பயிர்கள் விளையவே தான் தண்ணீர்
நிச்சயமாகவே பாய்ச்சுகிறீர்
புல்லுமே சேர்ந்து விளைந்தது போலவே
புத்தியுமான ரசவாதம்''
என்னும் உழவர்க்குரிய நெல்லுக்கு நீர்ப்பாய்ச்சும் தொழில் உவமை யாகக் கூறப்பட்டது.
எனப் பலவகையான உவமைகளின் களமாக மருத்துவ இலக்கியம் காணப்படுகிறது. இதில் காணப்பெறும் உவமைகளைத் திரட்டினாலே, தமிழர் பண்பாட்டுப் புதையலாகப் பல புதிய தகவல்கள் கிடைக்கக் கூடும். அத்தகைய தகவலின் களமாகக் காட்சியளிக்கிறது.
ஒரே பாடலில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு உவமைகள் அமைந்த பாடலும் காணப்படுகின்றது.
கிளிமூக்கு மரத்தின் காய் கிளியைப் போல பசுமை நிறத்தில் இருக்கும். இலை அரச இலை போன்ற வடிவத்தில் இருக்கும். அதனுடைய பழத்தைத் தின்றால், சுறுசுறுப்பாய் ஓடலாம், நொடியிலே காயம் சித்தி அடையும் என்பர்.
போக்கான கிளிமூக்கு மரமொன் றுண்டு
புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்
வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்
மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு
நோக்கான வழிநடக்கச் சுறுக்காய் ஓடும்
நொடியிலே காயசித்திக் கிடைக்கு மப்பா''73
என்று, நிறம் மெய் உவமையாகவும், அரசிலை உருவ உவமை யாகவும், சுறுக்காய் ஓடச் செய்வது பயன் உவமையாகவும், காய சித்தி வினை உவமையாகவும் உரைக்கப்பட்டிருக்கிறது.
மரத்தின் காய் கிளிமூக்குப் போல இருப்பதனால் மரத்துக்கும் அப்பெயரே ஆகி வந்ததனால், சினையாகு பெயராகக் கிளிமூக்கு மரமென்று உரைக்கப்பட்டது.
நெல்லும் தண்ணீரும்
நெல்லுக்கு இறைக்கின்ற நீர் வாய்க்காலின் வழியே ஓடிப் புல்லுக்கும் பயனாகிறது. அதுபோல, வாதத்தை நல்லவர்க்கு உரைக்கும் போது, தீயவர்களுக்கும் சென்று சேர்ந்தடைந்து விடுகிறது என்பதைக் கூறும் பாடல்,
நெல்லுப் பயிர்கள் விளையவே தான் தண்ணீர்
நிச்சயமாகவே பாய்ச்சுகிறீர்
புல்லுமே சேர்ந்து விளைந்தது போலவே
புத்தியுமான ரசவாதம்''
என்னும் உழவர்க்குரிய நெல்லுக்கு நீர்ப்பாய்ச்சும் தொழில் உவமை யாகக் கூறப்பட்டது.
எனப் பலவகையான உவமைகளின் களமாக மருத்துவ இலக்கியம் காணப்படுகிறது. இதில் காணப்பெறும் உவமைகளைத் திரட்டினாலே, தமிழர் பண்பாட்டுப் புதையலாகப் பல புதிய தகவல்கள் கிடைக்கக் கூடும். அத்தகைய தகவலின் களமாகக் காட்சியளிக்கிறது.
உருவகம்
மனித உடம்பு எத்தகையது என்பதை உருவகமாகக் கூறும் கொங்கணர், புழுக்கள் மலிந்த கூடு; குருதியில் ஊறுங்கட்டை; நரம்பாலும், மச்சையாலும் வனையப்பட்ட நீர் நிரப்பும் பாண்டம்; மலக்கூடு; நல்வினை தீவினைகள் வகுத்துள்ள காடு; ஆசைகளாலும் அவலங்களாலும் விளையும் நினைவுகள் கோடி; வாக்கில் தோன்றும் சொற்கள் உறுதி அற்றவை; நாயின் தோலைப் போலப் பயனற்றது மனித உடம்பு என்று உரைக்கின்றார்.
கேளப்பா புழுக்குடம்பை உதிரக் கட்டை
கெடியான நரம்பு மச்சை கீழ்நீர்ப் பாண்டம்
பாழப்பா மலக்குரம்பை பாங்காம் கூடு
பார்க்கையிலே ஒன்பதிடம் பாழாம் பீற்றல்
நாளப்பா நிலையுமில்லை நமன்கை யாட்டு
நல்வினைக்கும் தீவினைக்கும் நலத்த காடு
சூளப்பா சஞ்சலமும் நினைவும் கோடி
சொல்லுறுதி இல்லாத சுணங்கன் தோலே.''74
மூலம் என்னும் உறுதியான சினைப்பை வீட்டுக்குள்ளே வாலையின் அருளினால் இரவியும் மதியும் கூடியதால் மூங்கில் முளை போலத் துளிர்த்து, பிள்ளை என்னும் பிறவியை உண்டாக்கிக் கொண்டு, பத்துத் திங்களில் பிறக்கும் பிறப்பை உருவகிக்கின்றார், திருவள்ளுவர்.
மூலமெனும் வச்சிரப்பை வீட்டுக் குள்ளே
மூங்கில்முளை போலதுவும் கார சாரம்
வாலையரு ளாலமைந்த வாறு தன்னால்
மதிரவியும் கூடியது மிரண்டு ஆண்டில்
பாலனது போல் ஜெனித்துப் பிறவி யாகி
பத்துத்திங்கட் குள்ளுஞ்சிறு பாலனாகி
தூலமிந்த மூலமதில் உதித்த வன்மை''75
என்று உரைக்கின்றார்.
“கழுதை’’ என்று இகழ்ச்சியாகக் குறிப்பிடப் படும் விலங்கு, சிறந்த மனிதர்களைப் போல, உருவகப்படுத்தப் பட்டுள்ளது.
வயினே தரையில் அழுந்திடச் சுமையெ டுப்போன்
குயிலி நிறம்போல் கோலமிகு மேனி யுள்ளான்
பயினும் குழையும் பண்புடனே அருந்து கின்றோன்
வயினின் மொழியான் வான் இடி போல் இரைவான்.''76
மிகுதியான சுமைகளைச் சுமக்கக் கூடியவன்; குயிலைப் போல அழகுமிகு வண்ண மேனி உடையவன்; புல், தழை ஆகியவற்றை விரும்பி உண்பவன்; மென்மை இன்றி இடி போன்ற மொழிக்கு உடையவன் என்று, கழுதையின் பண்பு உருவகிக்கப் பட்டிருப்பது காணப்படுகிறது. ஒரே சொல்லால் கழுதை என்று சொன்னால், விளங்காது என்றில்லை. இலக்கியம் நயமாக, சுவையாக, மீண்டும் மீண்டும் கற்றிட வேண்டும் என்ற அவா மிகுதியை ஏற்படுத்திட, மனத்திற்குள் இன்பத்தை விளைத்திடக் கற்பனையும், நயமும் உருவகமாகி உருவாகின்றன.
மனித உடம்பு எத்தகையது என்பதை உருவகமாகக் கூறும் கொங்கணர், புழுக்கள் மலிந்த கூடு; குருதியில் ஊறுங்கட்டை; நரம்பாலும், மச்சையாலும் வனையப்பட்ட நீர் நிரப்பும் பாண்டம்; மலக்கூடு; நல்வினை தீவினைகள் வகுத்துள்ள காடு; ஆசைகளாலும் அவலங்களாலும் விளையும் நினைவுகள் கோடி; வாக்கில் தோன்றும் சொற்கள் உறுதி அற்றவை; நாயின் தோலைப் போலப் பயனற்றது மனித உடம்பு என்று உரைக்கின்றார்.
கேளப்பா புழுக்குடம்பை உதிரக் கட்டை
கெடியான நரம்பு மச்சை கீழ்நீர்ப் பாண்டம்
பாழப்பா மலக்குரம்பை பாங்காம் கூடு
பார்க்கையிலே ஒன்பதிடம் பாழாம் பீற்றல்
நாளப்பா நிலையுமில்லை நமன்கை யாட்டு
நல்வினைக்கும் தீவினைக்கும் நலத்த காடு
சூளப்பா சஞ்சலமும் நினைவும் கோடி
சொல்லுறுதி இல்லாத சுணங்கன் தோலே.''74
மூலம் என்னும் உறுதியான சினைப்பை வீட்டுக்குள்ளே வாலையின் அருளினால் இரவியும் மதியும் கூடியதால் மூங்கில் முளை போலத் துளிர்த்து, பிள்ளை என்னும் பிறவியை உண்டாக்கிக் கொண்டு, பத்துத் திங்களில் பிறக்கும் பிறப்பை உருவகிக்கின்றார், திருவள்ளுவர்.
மூலமெனும் வச்சிரப்பை வீட்டுக் குள்ளே
மூங்கில்முளை போலதுவும் கார சாரம்
வாலையரு ளாலமைந்த வாறு தன்னால்
மதிரவியும் கூடியது மிரண்டு ஆண்டில்
பாலனது போல் ஜெனித்துப் பிறவி யாகி
பத்துத்திங்கட் குள்ளுஞ்சிறு பாலனாகி
தூலமிந்த மூலமதில் உதித்த வன்மை''75
என்று உரைக்கின்றார்.
“கழுதை’’ என்று இகழ்ச்சியாகக் குறிப்பிடப் படும் விலங்கு, சிறந்த மனிதர்களைப் போல, உருவகப்படுத்தப் பட்டுள்ளது.
வயினே தரையில் அழுந்திடச் சுமையெ டுப்போன்
குயிலி நிறம்போல் கோலமிகு மேனி யுள்ளான்
பயினும் குழையும் பண்புடனே அருந்து கின்றோன்
வயினின் மொழியான் வான் இடி போல் இரைவான்.''76
மிகுதியான சுமைகளைச் சுமக்கக் கூடியவன்; குயிலைப் போல அழகுமிகு வண்ண மேனி உடையவன்; புல், தழை ஆகியவற்றை விரும்பி உண்பவன்; மென்மை இன்றி இடி போன்ற மொழிக்கு உடையவன் என்று, கழுதையின் பண்பு உருவகிக்கப் பட்டிருப்பது காணப்படுகிறது. ஒரே சொல்லால் கழுதை என்று சொன்னால், விளங்காது என்றில்லை. இலக்கியம் நயமாக, சுவையாக, மீண்டும் மீண்டும் கற்றிட வேண்டும் என்ற அவா மிகுதியை ஏற்படுத்திட, மனத்திற்குள் இன்பத்தை விளைத்திடக் கற்பனையும், நயமும் உருவகமாகி உருவாகின்றன.
உம்மைத் தொகை
மக்களுக்கு வாழ்க்கையில் நேரக்கூடிய நல்வினை, தீவினை ஆகிய இரண்டின் பயனாக இன்பமும், துன்பமும் பிறவியில் ஏற்படுவது இயல்பு. அவ்வாறு அமையப் பெற்ற அமைப்பு, கருவிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்பது உம்மைத் தொகையாக உரைக்கப் படுகிறது.
“பேறு இளமை இன்பம் பிணி மூப்பு சாக்காடு
ஆறும் கருவில் அமைப்பு''77
என்பது, பேறும், இளமையும், இன்பமும், பிணியும், மூப்பும், சாக் காடும் என உம்மைத் தொகையாவதைக் காண்க.
மடக்கணி
மடக்கணி என்பது செய்யுளில் வந்த சொற்களே மடங்கி வந்து பொருள் தருவது. இது சீர்களிலும் அடிகளிலும் அமையும்.
கட்டிக் கொள் வாரிளங் காளையென்றே
கிழங்கண்டு கல்லில்
முட்டிக் கொள்ளார் பின்னு மோதிக் கொள்ளார்
கண்ணை மூடிக் கொள்ளார்
குட்டிக் கொள்ளார் பல்களைக் கிட்டிக் கொள்ளார்
பொன்னைக் கோரிக் கொள்ளார்
திட்டிக் கொள்ளார் தம்மைத் தேற்றிக் கொள்ளார்
நற்சிறு பெண்களே''
இப்பாடலில் கொள்ளார் எனும் சொல் எட்டு இடங்களில் அமைந்து பொருளைத் தருவதுடன் ஓசை நயத்தைக் கூட்டுவதாகவும் அமைந்துள்ளது.
தீயாகி மதியாகி ரவியு மாகி
சிறந்து நின்ற வாசியுமா யெட்டு மாகி
தாயாகித் தந்தையுமாய்த் தார மாகி
சகல விருஷ முறவினமும் சலமு மாகிப்
பூவாகிக் காயாகிப் பிஞ்சு மாகிக்
கனியு முன்னே நின்றழிந்த கால னாகி
வாயாகிக் கையாகி மனது மாகி
வாக்கடங்கா வெளியெனவே வழுத்தி டாயே.''78
ஆகி என்னுஞ் சொல் பதினான்கு இடங்களில் மடங்கி வந்து பொருளாகி இருப்பது காண்க.
முப்பிணி யொப்பிணி யெப்பிணி யப்பிணி
முறைமை கெடத்தா னனுபானித்தே
யறிமினிடத்தே யறியா மக்காள்
முன்காதையு மிஃதே பின்காரண முளதோ
மொழியிணே யிழதை காள்.''79
பிணி என்னுஞ்சொல் நான்கு சீர்களிலும் மடங்கி அமைந்திருக்கிறது.
செம்பின் பொடியுண்டு தேகமுர முண்டு
செம்பின் வடிவுண்டு செய்தவங் கையுண்டு
செம்பின் முடிவெலாஞ் தெய்வத மாகவோர்
செம்பின் குலந்திகர மாகுமே.''80
செம்பு என்னும் சொல் நான்கடியிலும், உண்டு எனும் சொல் நான்கு இடங்களிலும் மடங்கி அமைந்திருக்கிறது.
முறையாங் கெந்தி செம்பானால்
மூவே ழுலகந் தான் மயங்கும்
முறையாங் கெந்தி செம்பாலே
மூட்டும் வாதம் துறை கோடி
முறையாங் கெந்தி செம்பாலே
முடிக்குங் கவன மெய்யாகும்
முறையாங் கெந்தி செம்பாலே
மூளும் வாதம் மெய்யாமே.''81
இச்செய்யுளில், ‘முறையாங் கெந்தி செம்பாலே’ என்னுஞ் சொல் நான்கு அடிகளிலும் மடங்கி ஒலித்துப் பொருளாகிறது.
குணம்பெறு சுவையாம் வெந்நீர்
குறுகவெட் டொன்றாய்க் காயில்
குணம்பெறு மருந்து மாகும்
குறைவற வமுத ருந்திக்
குணம் பெறுக் காய்ந்த வெந்நீர்
கொண்டு நூறடி யுலாவிக்
குணம் பெற மாத ரோடே
கூடுவ தியல்பு தானே.''82
இந்த அறுசீர் விருத்தம் நான்கு அடிகளிலும் குணம் பெறு என்னும் சொல் மடங்கி வந்து பொருளை உணர்த்த அமைந்துள்ளது.
மக்களுக்கு வாழ்க்கையில் நேரக்கூடிய நல்வினை, தீவினை ஆகிய இரண்டின் பயனாக இன்பமும், துன்பமும் பிறவியில் ஏற்படுவது இயல்பு. அவ்வாறு அமையப் பெற்ற அமைப்பு, கருவிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்பது உம்மைத் தொகையாக உரைக்கப் படுகிறது.
“பேறு இளமை இன்பம் பிணி மூப்பு சாக்காடு
ஆறும் கருவில் அமைப்பு''77
என்பது, பேறும், இளமையும், இன்பமும், பிணியும், மூப்பும், சாக் காடும் என உம்மைத் தொகையாவதைக் காண்க.
மடக்கணி
மடக்கணி என்பது செய்யுளில் வந்த சொற்களே மடங்கி வந்து பொருள் தருவது. இது சீர்களிலும் அடிகளிலும் அமையும்.
கட்டிக் கொள் வாரிளங் காளையென்றே
கிழங்கண்டு கல்லில்
முட்டிக் கொள்ளார் பின்னு மோதிக் கொள்ளார்
கண்ணை மூடிக் கொள்ளார்
குட்டிக் கொள்ளார் பல்களைக் கிட்டிக் கொள்ளார்
பொன்னைக் கோரிக் கொள்ளார்
திட்டிக் கொள்ளார் தம்மைத் தேற்றிக் கொள்ளார்
நற்சிறு பெண்களே''
இப்பாடலில் கொள்ளார் எனும் சொல் எட்டு இடங்களில் அமைந்து பொருளைத் தருவதுடன் ஓசை நயத்தைக் கூட்டுவதாகவும் அமைந்துள்ளது.
தீயாகி மதியாகி ரவியு மாகி
சிறந்து நின்ற வாசியுமா யெட்டு மாகி
தாயாகித் தந்தையுமாய்த் தார மாகி
சகல விருஷ முறவினமும் சலமு மாகிப்
பூவாகிக் காயாகிப் பிஞ்சு மாகிக்
கனியு முன்னே நின்றழிந்த கால னாகி
வாயாகிக் கையாகி மனது மாகி
வாக்கடங்கா வெளியெனவே வழுத்தி டாயே.''78
ஆகி என்னுஞ் சொல் பதினான்கு இடங்களில் மடங்கி வந்து பொருளாகி இருப்பது காண்க.
முப்பிணி யொப்பிணி யெப்பிணி யப்பிணி
முறைமை கெடத்தா னனுபானித்தே
யறிமினிடத்தே யறியா மக்காள்
முன்காதையு மிஃதே பின்காரண முளதோ
மொழியிணே யிழதை காள்.''79
பிணி என்னுஞ்சொல் நான்கு சீர்களிலும் மடங்கி அமைந்திருக்கிறது.
செம்பின் பொடியுண்டு தேகமுர முண்டு
செம்பின் வடிவுண்டு செய்தவங் கையுண்டு
செம்பின் முடிவெலாஞ் தெய்வத மாகவோர்
செம்பின் குலந்திகர மாகுமே.''80
செம்பு என்னும் சொல் நான்கடியிலும், உண்டு எனும் சொல் நான்கு இடங்களிலும் மடங்கி அமைந்திருக்கிறது.
முறையாங் கெந்தி செம்பானால்
மூவே ழுலகந் தான் மயங்கும்
முறையாங் கெந்தி செம்பாலே
மூட்டும் வாதம் துறை கோடி
முறையாங் கெந்தி செம்பாலே
முடிக்குங் கவன மெய்யாகும்
முறையாங் கெந்தி செம்பாலே
மூளும் வாதம் மெய்யாமே.''81
இச்செய்யுளில், ‘முறையாங் கெந்தி செம்பாலே’ என்னுஞ் சொல் நான்கு அடிகளிலும் மடங்கி ஒலித்துப் பொருளாகிறது.
குணம்பெறு சுவையாம் வெந்நீர்
குறுகவெட் டொன்றாய்க் காயில்
குணம்பெறு மருந்து மாகும்
குறைவற வமுத ருந்திக்
குணம் பெறுக் காய்ந்த வெந்நீர்
கொண்டு நூறடி யுலாவிக்
குணம் பெற மாத ரோடே
கூடுவ தியல்பு தானே.''82
இந்த அறுசீர் விருத்தம் நான்கு அடிகளிலும் குணம் பெறு என்னும் சொல் மடங்கி வந்து பொருளை உணர்த்த அமைந்துள்ளது.
பழமொழி
பழமொழி என்பது முது மொழி (ணீணூணிதிஞுணூஞ) என்றும் முன்னோர் வகுத்த நெறி எனவும் பொருள்படும். பழமொழிகளைக் கூறிப் பொருளை விளக்குதலும், நீதியை உணர்த்துதலும் தமிழ் வழக்கு. அந்த வகையில், பழமொழி மருத்துவ இலக்கியங்களில் நிரம்பக் காணப்படா விட்டாலும், மருத்துவப் பழமொழியென அதிக அளவில் வழக்கில் இருந்து வரக் காணலாம்.
ஒரு தொழிலை நூல்வழிக் கற்பதைவிடவும் சிறந்தது, பயிற்சி முறையில் கற்பது என்பது மருத்துவத் துறைக்கு ஏற்றதாக இருக்கிறது. நுண்மையான செயல் பலவற்றைக் கொண்ட மருந்து செய்முறையில் குற்றம் நிகழாமலிருக்க, பயிற்று முறை தேவை என்பது பழமொழியின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
கை காட்டாத் தொழில் முறைக்கு கரைதா னேது?''83
என்று, பயிற்றுவிக்காத தொழில் முறை எல்லையை அடையாமல் அலைந்து கொண்டிருக்கும் என்பதை விளக்குகிறது.
காமம் என்பது அளவுடன் இருக்க வேண்டும். அது அளவைக் கடந்தால் அதனால் மற்றவருக்கும் தொல்லை. அதனை மேற்கொள்ப வனின் அறிவும் மழுங்கும் என்பதைக் கூறும் பழமொழியாக,
தீராத காமிக்கு அறிவங் கேது?''84
என்பது உரைக்கப்படுகிறது.
கருங்காலி என்றொரு மரம். மிகவும் உறுதியானது. அந்த மரத்திலிருந்து கோடாலி என்னும் மரம் வெட்டும் கருவிக்குக் காம்பு செய்வர். கோடாலிக்குக் காம்பாக அமைந்த கருங்காலி, கருங்காலி மரத்தை வெட்டும் கோடாலிக்குக் காம்பாக அமைந்து விடுகிறது. இதனைக் குறிப்பிட்டு வழங்கி வரும் பழமொழி, ‘குலத்தை அழிக்க வந்த கோடாலிக் காம்பே’ என்பதாகும். அதே கருத்துடையதாக வேறு இடங்களிலும் அந்தப் பழமொழி வழங்கி வரும்.
குலந்தனக்குக் கோடாலிக் காம்பு மாச்சே''85
என்று, மருந்தே மருந்தைக் கெடுக்கும் குணத்தைக் குறிக்க வழங்குகிறது.
மருத்துவக் கலையின் அங்கமான வாதம் ஒரு விந்தையாகக் கருதப்படும். அது, பல வேலைகளைச் செய்வதனால் அவ்வாறு உரைக்கப்படும். வாதத்துக்குத் தங்கம் மூலப் பொருளாகும். தங்கம் இல்லாத வாதம் பங்கம் என்பர். அதே போல, வேதாந்தம், சிந்தாந்தம் என இரண்டு தத்துவம். வேதாந்தம், ஞானம் பெறும் வழி முறைகளை விவரிக்கும். வேதாந்தம் அறியாமல் ஞானத்தை அடைய முடியாது என்பது பழமொழியாகக் கூறப்படுகிறது.
வங்கம் முடிந்தால் தங்கம் இல்லாவிடில் பங்கம்''
வாதம் ஊதியறி, வேதம் ஓதியறி''86
என அமைந்துள்ளதைக் காணலாம்.
கடம்பு மரத்திலான கட்டிலில் படுத்துறங்கினால், உடல்வலி, குளிர் சுரம், மூட்டுப் பிடிப்பு, கண்ணோய், தொண்டைப்புண், வயிற்றுவலி, மனச்சோர்வு ஆகியன குணமாகும் என்பது மருத்துவக் குறிப்பானபடியால்,
உடம்பை முறித்துக் கடம்பில் போடு''87
என்னும் பழமொழி உருவாயிற்று.
பழமொழி என்பது முது மொழி (ணீணூணிதிஞுணூஞ) என்றும் முன்னோர் வகுத்த நெறி எனவும் பொருள்படும். பழமொழிகளைக் கூறிப் பொருளை விளக்குதலும், நீதியை உணர்த்துதலும் தமிழ் வழக்கு. அந்த வகையில், பழமொழி மருத்துவ இலக்கியங்களில் நிரம்பக் காணப்படா விட்டாலும், மருத்துவப் பழமொழியென அதிக அளவில் வழக்கில் இருந்து வரக் காணலாம்.
ஒரு தொழிலை நூல்வழிக் கற்பதைவிடவும் சிறந்தது, பயிற்சி முறையில் கற்பது என்பது மருத்துவத் துறைக்கு ஏற்றதாக இருக்கிறது. நுண்மையான செயல் பலவற்றைக் கொண்ட மருந்து செய்முறையில் குற்றம் நிகழாமலிருக்க, பயிற்று முறை தேவை என்பது பழமொழியின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
கை காட்டாத் தொழில் முறைக்கு கரைதா னேது?''83
என்று, பயிற்றுவிக்காத தொழில் முறை எல்லையை அடையாமல் அலைந்து கொண்டிருக்கும் என்பதை விளக்குகிறது.
காமம் என்பது அளவுடன் இருக்க வேண்டும். அது அளவைக் கடந்தால் அதனால் மற்றவருக்கும் தொல்லை. அதனை மேற்கொள்ப வனின் அறிவும் மழுங்கும் என்பதைக் கூறும் பழமொழியாக,
தீராத காமிக்கு அறிவங் கேது?''84
என்பது உரைக்கப்படுகிறது.
கருங்காலி என்றொரு மரம். மிகவும் உறுதியானது. அந்த மரத்திலிருந்து கோடாலி என்னும் மரம் வெட்டும் கருவிக்குக் காம்பு செய்வர். கோடாலிக்குக் காம்பாக அமைந்த கருங்காலி, கருங்காலி மரத்தை வெட்டும் கோடாலிக்குக் காம்பாக அமைந்து விடுகிறது. இதனைக் குறிப்பிட்டு வழங்கி வரும் பழமொழி, ‘குலத்தை அழிக்க வந்த கோடாலிக் காம்பே’ என்பதாகும். அதே கருத்துடையதாக வேறு இடங்களிலும் அந்தப் பழமொழி வழங்கி வரும்.
குலந்தனக்குக் கோடாலிக் காம்பு மாச்சே''85
என்று, மருந்தே மருந்தைக் கெடுக்கும் குணத்தைக் குறிக்க வழங்குகிறது.
மருத்துவக் கலையின் அங்கமான வாதம் ஒரு விந்தையாகக் கருதப்படும். அது, பல வேலைகளைச் செய்வதனால் அவ்வாறு உரைக்கப்படும். வாதத்துக்குத் தங்கம் மூலப் பொருளாகும். தங்கம் இல்லாத வாதம் பங்கம் என்பர். அதே போல, வேதாந்தம், சிந்தாந்தம் என இரண்டு தத்துவம். வேதாந்தம், ஞானம் பெறும் வழி முறைகளை விவரிக்கும். வேதாந்தம் அறியாமல் ஞானத்தை அடைய முடியாது என்பது பழமொழியாகக் கூறப்படுகிறது.
வங்கம் முடிந்தால் தங்கம் இல்லாவிடில் பங்கம்''
வாதம் ஊதியறி, வேதம் ஓதியறி''86
என அமைந்துள்ளதைக் காணலாம்.
கடம்பு மரத்திலான கட்டிலில் படுத்துறங்கினால், உடல்வலி, குளிர் சுரம், மூட்டுப் பிடிப்பு, கண்ணோய், தொண்டைப்புண், வயிற்றுவலி, மனச்சோர்வு ஆகியன குணமாகும் என்பது மருத்துவக் குறிப்பானபடியால்,
உடம்பை முறித்துக் கடம்பில் போடு''87
என்னும் பழமொழி உருவாயிற்று.
இலுப்பை
சர்க்கரை செய்யும் ஆலை இல்லாத ஊரில், சர்க்கரைக்காக இலுப்பைப் பூவைப் பயன்படுத்திச் சர்க்கரை செய்வர். இச்சர்க்கரை, அழலை, தீச்சுரம், நீர்வேட்கை, இருமல், இளைப்பு, வீக்கம், வாயு, சேற்றுப்புண் போன்றவற்றை நீக்கக் கூடிய மருத்துவப் பண்பு நிறைந்தது. எனவே,
ஆலை இல்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை.''87
சர்க்கரையை விட இலுப்பைப் பூச் சர்க்கரை சிறந்தது என்பதால் இந்தப் பழமொழி கூறப்பட்டது.
வல்லாரை
வல்லாரையை உண்டால் நினைவாற்றல் பெருகும் என்பது பொதுச் செய்தி. அதைவிட, வல்லாரையில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது என்பதைத் தேரன், வல்லாரைக் கற்பமுண வல்லாரை யார் நிகர்வார் என்கிறார். இது வாய்ப்புண், கழிச்சல், குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, சுரம், இளைப்பு, தொண்டைக் கம்மல், வெறி, யானைக் கால், விரைவீக்கம், நெரிகட்டி, மேகப்புண், நரம்பு நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாகும். அதனால் தான்,“வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்”88 என்னும் பழமொழி குறிக்கிறது.
முருங்கை
முருங்கையின் அனைத்து உறுப்புகளும் மருந்தாகிறது. என்பதற்கு,
முருங்கைக் காய்கறி முகிலிலை வேர்கொள
ஒருங்குள நோயெலாம் ஓடவும் துரத்துமே''89
என்று தேரர் தரும் குறிப்பு சான்றாகிறது. அதனால் தான்,
முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்''
முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்''90
என்னும் பழமொழிகள் உருவாகி இருக்கின்றன.
ஆவாரை
ஆவாரை அனைத்துவகை மேக நோயையும் குணப்படுத்த வல்லது. குறிப்பாகச் சேர்க்கை நோய்க்குச் சிறந்த மருந்து. பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டை நீக்கும். உடல் சூட்டைத் தணித்து, மேனியைப் பொன்னிறமாக மாற்றும் என்பது மருத்துவக் குறிப்பு. இதனை அறிந்தே,
ஆவாரை பூத்தால் சாவாரைக் கண்டதுண்டோ?''91
என்று, பழமொழி வினா தொடுக்கிறது.
வெங்காயம்
வெங்காயத்தின் பூ, தாள், கிழங்கு, விதை ஆகிய எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இது உடலில் வெப்பத்தை உண்டாக்கும்; சிறுநீர்ப் பெருக்கும்; கோழையை அகற்றும் என்பதால்,
வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை''92
என்று பழமொழி குறிப்பிடுகிறது.
சர்க்கரை செய்யும் ஆலை இல்லாத ஊரில், சர்க்கரைக்காக இலுப்பைப் பூவைப் பயன்படுத்திச் சர்க்கரை செய்வர். இச்சர்க்கரை, அழலை, தீச்சுரம், நீர்வேட்கை, இருமல், இளைப்பு, வீக்கம், வாயு, சேற்றுப்புண் போன்றவற்றை நீக்கக் கூடிய மருத்துவப் பண்பு நிறைந்தது. எனவே,
ஆலை இல்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை.''87
சர்க்கரையை விட இலுப்பைப் பூச் சர்க்கரை சிறந்தது என்பதால் இந்தப் பழமொழி கூறப்பட்டது.
வல்லாரை
வல்லாரையை உண்டால் நினைவாற்றல் பெருகும் என்பது பொதுச் செய்தி. அதைவிட, வல்லாரையில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது என்பதைத் தேரன், வல்லாரைக் கற்பமுண வல்லாரை யார் நிகர்வார் என்கிறார். இது வாய்ப்புண், கழிச்சல், குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, சுரம், இளைப்பு, தொண்டைக் கம்மல், வெறி, யானைக் கால், விரைவீக்கம், நெரிகட்டி, மேகப்புண், நரம்பு நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாகும். அதனால் தான்,“வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்”88 என்னும் பழமொழி குறிக்கிறது.
முருங்கை
முருங்கையின் அனைத்து உறுப்புகளும் மருந்தாகிறது. என்பதற்கு,
முருங்கைக் காய்கறி முகிலிலை வேர்கொள
ஒருங்குள நோயெலாம் ஓடவும் துரத்துமே''89
என்று தேரர் தரும் குறிப்பு சான்றாகிறது. அதனால் தான்,
முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்''
முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்''90
என்னும் பழமொழிகள் உருவாகி இருக்கின்றன.
ஆவாரை
ஆவாரை அனைத்துவகை மேக நோயையும் குணப்படுத்த வல்லது. குறிப்பாகச் சேர்க்கை நோய்க்குச் சிறந்த மருந்து. பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டை நீக்கும். உடல் சூட்டைத் தணித்து, மேனியைப் பொன்னிறமாக மாற்றும் என்பது மருத்துவக் குறிப்பு. இதனை அறிந்தே,
ஆவாரை பூத்தால் சாவாரைக் கண்டதுண்டோ?''91
என்று, பழமொழி வினா தொடுக்கிறது.
வெங்காயம்
வெங்காயத்தின் பூ, தாள், கிழங்கு, விதை ஆகிய எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இது உடலில் வெப்பத்தை உண்டாக்கும்; சிறுநீர்ப் பெருக்கும்; கோழையை அகற்றும் என்பதால்,
வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை''92
என்று பழமொழி குறிப்பிடுகிறது.
கழுதைப் பால்
குழந்தை பிறக்கும் போதே தோன்றக் கூடிய நோய்களில் செவ்வாப்பு என்னும் நோயும் ஒன்று. இதனை உள்ளங்கால், உள்ளங்கை பகுதிகளில் காணப்படும் நீல நிறத்தால் கண்டறியலாம். இது குழந்தையைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. இதற்குக் கழுதைப்பால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டே, குழந்தை பிறந்த உடனே கழுதைப்பால் ஊட்டிவிடும் பழக்கம் தோன்றி யிருக்கிறது. நோய்க்கான மருந்து நோயின்றியே பயன்படுத்தப் படுகிறது. இதனால் கழுதைப் பாலின் சிறப்பினை அறிந்து,
கழுதைப் பாலைக் குடித்ததாம்
அழுத பிள்ளை சிரித்ததாம்''93
என்னும் பழமொழி, வழக்கில் வந்தது.
இவ்வாறு, மருத்துவம் தருகின்ற குறிப்புகளைக் கொண்டும், அனுபவத்தின் மூலமாகவும் கண்டறிந்தவற்றைப் பிறரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக, பழமொழி அமைப்பில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. பழமொழிகள் தேரையர் நூல்களில் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. கீழ்க்கணக்கில் இடம் பெற்றுள்ள பழமொழி போல, மருந்தாகும் பொருளின் குணத்தைக் குறிப்பிடும் போது, அதற்கென ஒரு பழமொழியைக் கூறுகின்ற வழக்கம் அந்நூல்களில் காணப்படுகின்றன.
குழந்தை பிறக்கும் போதே தோன்றக் கூடிய நோய்களில் செவ்வாப்பு என்னும் நோயும் ஒன்று. இதனை உள்ளங்கால், உள்ளங்கை பகுதிகளில் காணப்படும் நீல நிறத்தால் கண்டறியலாம். இது குழந்தையைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. இதற்குக் கழுதைப்பால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டே, குழந்தை பிறந்த உடனே கழுதைப்பால் ஊட்டிவிடும் பழக்கம் தோன்றி யிருக்கிறது. நோய்க்கான மருந்து நோயின்றியே பயன்படுத்தப் படுகிறது. இதனால் கழுதைப் பாலின் சிறப்பினை அறிந்து,
கழுதைப் பாலைக் குடித்ததாம்
அழுத பிள்ளை சிரித்ததாம்''93
என்னும் பழமொழி, வழக்கில் வந்தது.
இவ்வாறு, மருத்துவம் தருகின்ற குறிப்புகளைக் கொண்டும், அனுபவத்தின் மூலமாகவும் கண்டறிந்தவற்றைப் பிறரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக, பழமொழி அமைப்பில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. பழமொழிகள் தேரையர் நூல்களில் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. கீழ்க்கணக்கில் இடம் பெற்றுள்ள பழமொழி போல, மருந்தாகும் பொருளின் குணத்தைக் குறிப்பிடும் போது, அதற்கென ஒரு பழமொழியைக் கூறுகின்ற வழக்கம் அந்நூல்களில் காணப்படுகின்றன.
குறிப்பு மொழி
படைப்புக் கவிஞன், தான் சொல்லக் கருதிய பொருளை வெளிப்படுத்தக் கவிதை பயன்படுகிறது. கருத்துகளின் அளவுக்கும் உணர்வுக்கும் ஏற்றவாறு கவிதை வடிவம் அமையும். அவற்றை, அகவடிவங்களாகவும் புறவடிவங்களாகவும் பிரிக்கலாம். கவிதை வடிவங்கள் புறவடிவமாகும், கவிதைக்குள் புதைந்திருக்கும் குறிப்பு மொழிகள், உவமங்கள், இறைச்சி, ஒலிநயம், நடை போல்வன அகவடிவங்கள் எனலாம். அகவடிவங்களை இலக்கியத்தின் உத்தி எனக் கூறலாம்.
கவிதைகளில் அமையும் சொற்கள், அவற்றுக்குரிய பொருளை வெளிப்படையாக உணர்த்துவது ஒருவகை. அவ்வாறு அமையாமல், பொருளைக் குறிக்கும் சொற்கள், பொருளைக் குறிப்பாகவும் நயமாகவும் உரைப்பது ஒருவகை. இத்தகைய குறிப்பு மொழி உத்தியை, இலக்கியத்தின் கூறுகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் கருதுகிறது.
கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உள்ளுறை, உவமப் போலி, இறைச்சி போன்று அமையாமல், பாட்டில் அமையும் சொற்களையும் உவமைகளையும் குறிப்பால் ஒரு சிலரே அறியத்தக்க குழுஉக்குறியால் செய்யுளை அமைத்து, இலக்கியத்துக்குப் புதிய உத்தியை வகுத்துக் காண்பது மருத்துவ இலக்கியமாகும்.
இலக்கியம் கண்டதற் கிலக்கணம் இயம்பலில்''94
என்றும்,
பழையன கழிதலும் புதியன புகுதலும்''95
என்றும், இலக்கணங்கூறும் பவணந்தியார், இலக்கியம் தோன்றிய பின்னரே, இலக்கணம் தோன்றிய தெனவும், பழமைகள் நிற்க, புதிய மரபுகள் உருவாவது குற்றமுடையதாகக் கொள்வதற்கில்லை, அவை காலத்தின் வகை என்றுரைப்பதனைக் கொண்டு, தமிழ் மருத்துவ இலக்கியங்கள், இலக்கண நூலோரின் கவனத்துக்கு வராமலேயே இருந்திருக்கக் காணலாம். அவ்வாறல்லாமல், கவனத்திற் கொள்ளப் பட்டிருந்தால், மருத்துவ இலக்கிய நூல்களில் பயிலப்பட்டு வந்திருக்கும் புதிய வகை உத்தி முறைகளுக்கும், வேறு பல செய்யுள் அமைப்பிற்கும், இலக்கணம் வரையப் பட்டிருக்கும்.
படைப்புக் கவிஞன், தான் சொல்லக் கருதிய பொருளை வெளிப்படுத்தக் கவிதை பயன்படுகிறது. கருத்துகளின் அளவுக்கும் உணர்வுக்கும் ஏற்றவாறு கவிதை வடிவம் அமையும். அவற்றை, அகவடிவங்களாகவும் புறவடிவங்களாகவும் பிரிக்கலாம். கவிதை வடிவங்கள் புறவடிவமாகும், கவிதைக்குள் புதைந்திருக்கும் குறிப்பு மொழிகள், உவமங்கள், இறைச்சி, ஒலிநயம், நடை போல்வன அகவடிவங்கள் எனலாம். அகவடிவங்களை இலக்கியத்தின் உத்தி எனக் கூறலாம்.
கவிதைகளில் அமையும் சொற்கள், அவற்றுக்குரிய பொருளை வெளிப்படையாக உணர்த்துவது ஒருவகை. அவ்வாறு அமையாமல், பொருளைக் குறிக்கும் சொற்கள், பொருளைக் குறிப்பாகவும் நயமாகவும் உரைப்பது ஒருவகை. இத்தகைய குறிப்பு மொழி உத்தியை, இலக்கியத்தின் கூறுகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் கருதுகிறது.
கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உள்ளுறை, உவமப் போலி, இறைச்சி போன்று அமையாமல், பாட்டில் அமையும் சொற்களையும் உவமைகளையும் குறிப்பால் ஒரு சிலரே அறியத்தக்க குழுஉக்குறியால் செய்யுளை அமைத்து, இலக்கியத்துக்குப் புதிய உத்தியை வகுத்துக் காண்பது மருத்துவ இலக்கியமாகும்.
இலக்கியம் கண்டதற் கிலக்கணம் இயம்பலில்''94
என்றும்,
பழையன கழிதலும் புதியன புகுதலும்''95
என்றும், இலக்கணங்கூறும் பவணந்தியார், இலக்கியம் தோன்றிய பின்னரே, இலக்கணம் தோன்றிய தெனவும், பழமைகள் நிற்க, புதிய மரபுகள் உருவாவது குற்றமுடையதாகக் கொள்வதற்கில்லை, அவை காலத்தின் வகை என்றுரைப்பதனைக் கொண்டு, தமிழ் மருத்துவ இலக்கியங்கள், இலக்கண நூலோரின் கவனத்துக்கு வராமலேயே இருந்திருக்கக் காணலாம். அவ்வாறல்லாமல், கவனத்திற் கொள்ளப் பட்டிருந்தால், மருத்துவ இலக்கிய நூல்களில் பயிலப்பட்டு வந்திருக்கும் புதிய வகை உத்தி முறைகளுக்கும், வேறு பல செய்யுள் அமைப்பிற்கும், இலக்கணம் வரையப் பட்டிருக்கும்.
மறைபொருள்
தமிழ் மருத்துவ நூல்களில் பயிலப்பட்டு வந்திருக்கும் சொற்கள், இடத்துக்கு இடம் மாறுபட்ட பொருளைத் தருகின்ற வட்டார வழக்கினைப் போல, சித்தர்கள் ஒருவர்க்கு ஒருவர், கல்வியால் நெருங்கிய தொடர்பினை உடையராய்ன்மையினால், ஒவ்வொரு வரும் பயன்படுத்தி வந்த சொற்களின் பொருள் மாறுபாடு உடையதாக இருக்கிறது. அச்செய்யுள்களில் அமைந்துள்ள உண்மைப் பொருள் அவரவர்களோடு நெருங்கிய சிலரால் மட்டுமே அறியப்பட்டு வந்துள்ளது. பொருளை அறியாத பிறர், அதற்கு மறைபொருள் என்றும், மறைமொழி என்றும் காரணப் பெயரைச் சூட்டினர்.
மலைவாழ் மக்கள், ஒரு மலையில் வாழ்வோர் ஒரு மொழியையும் வேறொரு மலையில் வாழ்வோர் வேறொரு மொழியையும் பேசுகின்றனர் என்பதனால், ஒருவருக்கு ஒருவர் சொல்லில், பொருளில் மாறுபாடுகள் இருப்பது இயல்பு. அதைப் போலவே, சித்தர் நூல்களில் அமைந்திருக்கும் மறைபொருள் என்பது குறிப்பு மொழி என்னும் உத்திகளாகும். அவ்வாறான உத்திகளில் சிலவற்றைக் காணலாம். வயிற்றுக் கடுப்புக்கு மருந்து கூறும் முறையில் கீழ்க்கண்டவாறு பாடல் அமைந்துள்ளது.
ஆனைக் கன்றில் ஒரு பிடியும் அசுரர் விரோதி இளம் பிஞ்சும்
கானக் குதிரை மேற்றோலும் காலில் செருப்பாய் மாட்டியதும்
தாயைக் கொன்றான் தனிச் சாற்றில் தயங்கிக் காய்ச்சிக் குடிப்பீரேல்
மானே பொருதும் விழியாளே வடுகும் தமிழும் குணமாமே.''96
இச்செய்யுளில், ஆனைக்கன்று, அசுரர் விரோதி, கானக் குதிரை, காலில் செருப்பு, தாயைக் கொன்றான், வடுகும் தமிழும் என்னும் சொற்கள் குறிப்பு மொழியாய்க் கூறப்பட்டுள்ளன.
ஆனை என்பதற்கு, அத்தி என்றொரு பொருளும், அசுரர் விரோதி என்றால் முருகன் என்றும் பொருள் படுமாதலால் முருகன்முருக்கன் முருங்கை என்றும், குதிரை என்பதற்கு மா என்ற பொருளும், காலில் செருப்பு என்பதற்கு, செருப்பு காலின் அடியில் தட்டுப் படுவதால் செருப்படி என்றும், தாயைக் கொன்றான் என்பது வாழை என்றும், வடுகும் தமிழும் என்பது தமிழ்மொழி பேசும் தெலுங்கர்கள் மொழிக் குறிப்பு–வயிற்றுக் கடுப்பு நோயால் வாடும் போது எழுப்புகின்ற ஒலியைப் போல இருக்கும் என்று நகைச்சுவை உணர்வுடனும் பொருள் கொண்டு நோக்கினால், இப்பாடலின் பொருள் விளங்கக் காணலாம்.
ஆனைக் கன்றுஅத்திப் பிஞ்சு; அசுரர் விரோதி முருங்கைப் பிஞ்சு; கானக் குதிரைமாம்பட்டை; காலில் செருப்புசெருப்படி; தாயைக் கொன்றான் வாழைச்சாறு; வடுகும் தமிழும்வயிற்றுக் கடுப்பு எனப் பொருள்படுகிறது.
பாம்புக் கடி, வாதம், சன்னி, பேதி ஆகியவற்றுக்கும் மருந்து, குறிப்பு மொழியால் கூறப்பட்டுள்ளது.
சிரக்குமாண்குறி சிவன்விந்து வெற்றிசெறி பவனும்
அரன்பூசைக் கேற்றவனல் தீபமாகு மிவ்வைவரையும்
சரிபாகமே யளிக்கோளுங் கல்லிலாட்டித் தந்திடநல்
அரவார்கடி விஷம் பேதி யும்வாத மறுஞ்சன்னியே''97
ஆண்குறிலிங்கம்; சிவன் விந்துஇரசம்; வெற்றிவீரம்; செறிபவன் கந்தகம்; தீபம்கற்பூரம் ஆகிய இவற்றைச் சமபாகமாக எடுத்து அரைத்துக் கொடுத்தால் பாம்புக் கடி நஞ்சு, பேதி, வாதம், சன்னி, ஆகியவை நீங்கு மென்பர்.
தமிழ் மருத்துவ நூல்களில் பயிலப்பட்டு வந்திருக்கும் சொற்கள், இடத்துக்கு இடம் மாறுபட்ட பொருளைத் தருகின்ற வட்டார வழக்கினைப் போல, சித்தர்கள் ஒருவர்க்கு ஒருவர், கல்வியால் நெருங்கிய தொடர்பினை உடையராய்ன்மையினால், ஒவ்வொரு வரும் பயன்படுத்தி வந்த சொற்களின் பொருள் மாறுபாடு உடையதாக இருக்கிறது. அச்செய்யுள்களில் அமைந்துள்ள உண்மைப் பொருள் அவரவர்களோடு நெருங்கிய சிலரால் மட்டுமே அறியப்பட்டு வந்துள்ளது. பொருளை அறியாத பிறர், அதற்கு மறைபொருள் என்றும், மறைமொழி என்றும் காரணப் பெயரைச் சூட்டினர்.
மலைவாழ் மக்கள், ஒரு மலையில் வாழ்வோர் ஒரு மொழியையும் வேறொரு மலையில் வாழ்வோர் வேறொரு மொழியையும் பேசுகின்றனர் என்பதனால், ஒருவருக்கு ஒருவர் சொல்லில், பொருளில் மாறுபாடுகள் இருப்பது இயல்பு. அதைப் போலவே, சித்தர் நூல்களில் அமைந்திருக்கும் மறைபொருள் என்பது குறிப்பு மொழி என்னும் உத்திகளாகும். அவ்வாறான உத்திகளில் சிலவற்றைக் காணலாம். வயிற்றுக் கடுப்புக்கு மருந்து கூறும் முறையில் கீழ்க்கண்டவாறு பாடல் அமைந்துள்ளது.
ஆனைக் கன்றில் ஒரு பிடியும் அசுரர் விரோதி இளம் பிஞ்சும்
கானக் குதிரை மேற்றோலும் காலில் செருப்பாய் மாட்டியதும்
தாயைக் கொன்றான் தனிச் சாற்றில் தயங்கிக் காய்ச்சிக் குடிப்பீரேல்
மானே பொருதும் விழியாளே வடுகும் தமிழும் குணமாமே.''96
இச்செய்யுளில், ஆனைக்கன்று, அசுரர் விரோதி, கானக் குதிரை, காலில் செருப்பு, தாயைக் கொன்றான், வடுகும் தமிழும் என்னும் சொற்கள் குறிப்பு மொழியாய்க் கூறப்பட்டுள்ளன.
ஆனை என்பதற்கு, அத்தி என்றொரு பொருளும், அசுரர் விரோதி என்றால் முருகன் என்றும் பொருள் படுமாதலால் முருகன்முருக்கன் முருங்கை என்றும், குதிரை என்பதற்கு மா என்ற பொருளும், காலில் செருப்பு என்பதற்கு, செருப்பு காலின் அடியில் தட்டுப் படுவதால் செருப்படி என்றும், தாயைக் கொன்றான் என்பது வாழை என்றும், வடுகும் தமிழும் என்பது தமிழ்மொழி பேசும் தெலுங்கர்கள் மொழிக் குறிப்பு–வயிற்றுக் கடுப்பு நோயால் வாடும் போது எழுப்புகின்ற ஒலியைப் போல இருக்கும் என்று நகைச்சுவை உணர்வுடனும் பொருள் கொண்டு நோக்கினால், இப்பாடலின் பொருள் விளங்கக் காணலாம்.
ஆனைக் கன்றுஅத்திப் பிஞ்சு; அசுரர் விரோதி முருங்கைப் பிஞ்சு; கானக் குதிரைமாம்பட்டை; காலில் செருப்புசெருப்படி; தாயைக் கொன்றான் வாழைச்சாறு; வடுகும் தமிழும்வயிற்றுக் கடுப்பு எனப் பொருள்படுகிறது.
பாம்புக் கடி, வாதம், சன்னி, பேதி ஆகியவற்றுக்கும் மருந்து, குறிப்பு மொழியால் கூறப்பட்டுள்ளது.
சிரக்குமாண்குறி சிவன்விந்து வெற்றிசெறி பவனும்
அரன்பூசைக் கேற்றவனல் தீபமாகு மிவ்வைவரையும்
சரிபாகமே யளிக்கோளுங் கல்லிலாட்டித் தந்திடநல்
அரவார்கடி விஷம் பேதி யும்வாத மறுஞ்சன்னியே''97
ஆண்குறிலிங்கம்; சிவன் விந்துஇரசம்; வெற்றிவீரம்; செறிபவன் கந்தகம்; தீபம்கற்பூரம் ஆகிய இவற்றைச் சமபாகமாக எடுத்து அரைத்துக் கொடுத்தால் பாம்புக் கடி நஞ்சு, பேதி, வாதம், சன்னி, ஆகியவை நீங்கு மென்பர்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|