ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)

+2
சிவா
kirikasan
6 posters

Go down

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Empty என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)

Post by kirikasan Fri Sep 16, 2011 11:32 pm

தெள்ளத்தெளிந்தநீரோடை - பக்கம்
தென்றல்தொடும் பூவின்சோலை
உள்ளம் விரும்பி ஓர்பூவை - அணைந்
தோடும் காற்று கொய்யக் கண்டேன்
துள்ளித் தென்றல் விளையாட - பூவும்
தொட்டிலென ஆடியோடை
வெள்ளமெனும் நீரில்மேலே - ஆகா
வீழ்ந்திட என்னோர்அழகு!

வட்ட வட்டக் கோலம்போடும் - அலை
வந்து வந்து விரிந்தேகும்
தொட்ட பூவைச்சுற்றி ஆடும் - அவை
துள்ளி ஒன்றன்பின்னே ஓடும்
நெட்டை மரம் அதன் விம்பம் - அது
நேரைவிட்டு நெளிந்தாடும்
எட்ட வானிலோடும் மேகம் - நில
வத்தனையும் குதிபோடும்

அத்தனை துள்ளல் என்னுள்ளம் - உங்கள்
அன்பு வார்த்தை தனில் கொள்ளும்
புத்துணர்வு மெல்லப்பொங்கும் - பல
பூக்கள் எனக்கவி பூக்கும்
தத்தி நடைபயில் பிள்ளை - அது
தள்ளிடும் வண்டியைப்போல
இத்தரையில்பெரும் வாழ்வை இவன்
இங்கு தள்ளப் படும்பாடு

பத்து வயதுடைபிள்ளை - ஒரு
பல்கலைப் பட்டபடிப்பை
கத்திப் படிப்பதுபோல - இவன்
கண்டது கூறுவனாக
அத்தனையும் மகிழ்வாக -தாங்கள்
ஆசியினைத்தரும்போது
எத்தனை கோடி வருடம் - இங்கு
இன்னும் கவி செய்யத் தோன்றும்


Last edited by kirikasan on Sat Sep 17, 2011 12:27 am; edited 3 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Empty Re: என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)

Post by சிவா Fri Sep 16, 2011 11:40 pm

உங்களின் கவிதைகளைப் பாராட்டுபவர்களின் மனதை மகிழ்வித்துள்ளீர்கள் அண்ணா! என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) 154550


என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Empty Re: என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)

Post by பிஜிராமன் Fri Sep 16, 2011 11:43 pm

கவி பாடிடும் உங்களை
வியந்து போற்றுதல்
எங்கள் தொழிலே

கரும்பு தின்றிட
கூலி வேண்டுமா?
கொடுதீர்கள் கூலி
எங்கள் மனம் நிறைக்கும் கூலி

மிக்க நன்றிகள் கிரிகாசன்....உங்கள் கவிக்கு எங்களை பிரயோகப் படுதியமைக்கு......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Empty Re: என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)

Post by kirikasan Fri Sep 16, 2011 11:46 pm

சிவா wrote:உங்களின் கவிதைகளைப் பாராட்டுபவர்களின் மனதை மகிழ்வித்துள்ளீர்கள் அண்ணா! என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) 154550

ஆமாம்! பொதுவாக நன்றி கூறினேன். நான் தனித்தனியாக பாராட்டுபவர்களுக்கு நன்றி கூறுவதில்லை. அந்த ஆதங்கம் நெஞ்சில் எப்போதும் உண்டு. அதற்கு என் இயலாமை ஒருகாரணம். அந்த குறையை மனதில் வைத்து பொதுவாக இங்கே நன்றி கூறுகிறேன். இதை அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Empty Re: என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)

Post by இளமாறன் Fri Sep 16, 2011 11:47 pm

வட்ட வட்டக் கோலம்போடும் - அலை
வந்து வந்து விரிந்தேகும்
தொட்ட பூவைச்சுற்றி ஆடும் - அதில்
துள்ளி ஒன்றன்பின்னே ஓடும்ம்
நெட்டை மரம் அதன் விம்பம் - அது
நேரைவிட்டு நெளிந்தாடும்
எட்ட வானிலோடும் மேகம் - நில
வத்தனையும் குதிபோடும் சூப்பருங்க சூப்பருங்க

வார்த்தை விளையாடுகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Empty Re: என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Sep 17, 2011 7:56 am

அட
பாராட்டுக்கும்
பாராட்டு.

பாராட்டுகள்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Empty Re: என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 8:40 am

kirikasan wrote:
பத்து வயதுடைபிள்ளை - ஒரு
பல்கலைப் பட்டபடிப்பை
கத்திப் படிப்பதுபோல - இவன்
கண்டது கூறுவனாக
அத்தனையும் மகிழ்வாக -தாங்கள்
ஆசியினைத்தரும்போது
எத்தனை கோடி வருடம் - இங்கு
இன்னும் கவி செய்யத் தோன்றும்

கவிதைக்கு கவிதையே கவிதையாகி விடுகிறது

வேட்டிடும் கரும்பினை அப்பா அதைநான்
----------வேகமாய் தூக்கிடும் போதும்
தட்டிலிடும் முன்னர் அம்மா வடையைத்
----------தட்டிப் பறித்துண்ட போதும்
சட்டென மாமர மேறிப் பழங்களை
---------சடுதியில் களவிட்ட போதும்
எட்டிட முடியா தோரின்பம் கிரிகாசன்
--------எழில்க்கவி தருவதைக் கண்டேன்!!!


--- சுந்திரராஜ் தயாளன்
வாழ்க வளமுடன் ....வளர்க நலமுடன்
:வணக்கம்: புன்னகை மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை) Empty Re: என் கவிதைகளை பாராட்டும் அனைவருக்குமாக! (ஒரு கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum