ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி

2 posters

Go down

தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி Empty தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி

Post by சிவா Fri Sep 16, 2011 2:42 pm

"உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கூட்டணியும் அமைக்காமல், தி.மு.க., தனித்துப் போட்டியிடும்' என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் புருவ உயர்த்துதலையும், புதிய சமன்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் இரவு, திடீரென ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், "உள்ளாட்சித் தேர்தல்களில், அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை, ஆழ்ந்த சிந்தனைக்குப் பின், தி.மு.க., முடிவாக எடுத்துள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு ஆண்டுகளாக இந்த ஆழ்ந்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது எனத் தெரியவில்லையே என, அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில், கூட்டணி அமைத்து தான் தி.மு.க., போட்டியிட்டு வந்தது. அவர்களது ஆட்சியில் நடந்த, கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அப்படியே! அப்புறம் எப்படி, இந்தத் தேர்தலுக்கு மட்டும் இத்தகைய ஞானோதயம் வந்தது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

"ஏன் அரசியல் கூட்டணியை உருவாக்கக் கூடாது' என்ற கேள்விக்கும், அவரே பதில் சொல்கிறார். "உள்ளாட்சித் தேர்தல்களில், அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன்வைக்கப்படாமல், பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் போன்ற பொதுப் பணிகளே குறிக்கோளாக இருக்க வேண்டும்' என்கிறார் அவர். அப்படியானால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கொள்கையோ, கோட்பாடோ கிடையாதா அல்லது இருக்கக் கூடாதா? இவர்கள் கூட்டணி அமைத்து, போட்டியிட்டு உருவாகும் லோக்சபாவிலும், சட்டசபையிலும் கூட, சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பணிகளைத் தானே மேற்கொள்கின்றனர்!

லோக்சபா என்பது பெரிய அமைப்பு; அதை விடச் சிறியது சட்டசபை; அவற்றை விடச் சிறியவை உள்ளாட்சி மன்றங்கள். டில்லியில் உருவாக்கப்படும் சட்டங்களும், திட்டங்களும், கடைக்கோடி மனிதனையும் சென்றடைய வேண்டும் என்பதற்குத் தானே இத்தனை வரையறைகளும், வகைப்பாடுகளும். அப்புறம், அதிலென்ன கொள்கை, இதில் ஏன் தேவையில்லை? அதுவும் தவிர, எதற்கெடுத்தாலும், "பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்ட செயல்திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டித் தான் முடிவெடுக்க வேண்டும்' எனச் சொல்லும் வழக்கமுடையவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி. "தி.மு.க., என்பது ஜனநாயக அமைப்பு; சங்கர மடம் அல்ல' என்பது அவரது கூற்று.

ஆனால், இப்படிப்பட்ட ஒரு கொள்கை முடிவை, எப்படி ஓர் இரவு நேர அறிக்கையில் முடிக்க முடிந்தது? இப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைப் போல, ஏதேனும், "வீடியோ கான்பரன்சிங்'கில் ஆலோசனை நடத்தினாரா? இத்தனைக்கும், தி.மு.க.,வின் முப்பெரும் விழா, நேற்று தான் நடந்தது. அதில், சிறையில் இருப்பவர்கள் போக, அத்தனை முன்னணித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதுவரை கூட இந்த முடிவெடுக்கக் காத்திருக்கவில்லை.

தி.மு.க.,வின் இந்த விரக்தி முடிவுக்கு, கூட்டணிக் கட்சிகளின் குடைச்சல் நிலைப்பாடே காரணம் என்பது, அரசியல் நோக்கர்களின் கணிப்பு. கடந்த சட்டசபைத் தேர்தலில், அக்கூட்டணியில், காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில குட்டிக் கட்சிகள் இருந்தன.

"உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்' என, ஏற்கனவே இளங்கோவனும், இளைஞரணித் தலைவர் யுவராஜாவும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றனர். இளங்கோவன், ஒரு படி மேலேயே சென்று விமர்சித்து வருகிறார். வாசனும், சிதம்பரமும் வாய் திறக்காவிட்டாலும், கட்சியில் பெரும்பான்மையோருக்கு அப்படித்தான் எண்ணமிருக்கிருக்கிறது.

மறுபக்கம், "தி.மு.க., - அ.தி.மு.க.,வோடு இனி எக்காலத்திலும் கூட்டணி இல்லை' என, கடந்த தேர்தல் வரை மாறி மாறி கூட்டணி அமைத்து வந்த பா.ம.க., அறிவித்துவிட்டது. "தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பா.ம.க.,வின் மரியாதைக்குரிய அழைப்பை பரிசீலிப்போம்' என, திருமாவளவனும் கொளுத்திப் போட்டிருக்கிறார். இப்படி கூட்டணிக் கட்சிகள் எல்லாம், ஏற்கனவே தனி ஆவர்த்தனம் வாசிக்கத் துவங்கிவிட்ட நிலையில் தான், "இனிமேல் சொந்தக் கச்சேரி' என, அறிவித்திருக்கிறது தி.மு.க.,

எது எப்படியோ, அ.தி.மு.க.,வுக்கு லட்டு மாதிரியான அறிவிப்பு இது. அங்கிருக்கும் கூட்டணியும், அத்தனை சிலாக்கியமானதோ, சித்தாந்த ரீதியானதோ அல்ல தான். ஆனால், அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாடும், புரிதலும் இருக்கிறது. சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கூட்டணிக் கட்சிகள் புதிய வலுவோடு இருக்கின்றன. அந்த வகையில், தி.மு.க.,வின் இந்தத் தனித்துப் போட்டி அறிவிப்பு, அ.தி.மு.க., கூட்டணிக்கு மிகப் பெரிய சாதகம் என்பதில், எந்தச் சந்தேகமும் இல்லை.

தினமலர்


தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி Empty Re: தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி

Post by ARR Fri Sep 16, 2011 3:42 pm

தினமலர் ஒரு ஜால்ரா என்பது தெரிந்த செய்தியே..

ஆளுங்கட்சியின் வியூகங்களை உடைத்து வெற்றி காண்பது அரிது என்றறிந்த கலைஞர், காங்கிரஸுக்கு குட்டு வைக்கவும், எதிர்க்கூட்டணியில் உள்ள குட்டிக்கட்சிகளின் மதிப்பை அறிந்துகொள்ளவும் இந்த உள்ளாட்சித் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது..


தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி 0018-2தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி 0001-3தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி 0010-3தனித்து விடப்பட்டுள்ளதா தி.மு.க.,? கூட்டணி முறிவு அறிவிப்பின் பின்னணி 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல்
» தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உருவானது எப்படி? பின்னணி அம்பலம்
» ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகள் உடன் அனுமதி: மத்திய அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
»  மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
» முறிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum