ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம், உயிர்தெழுதல், நரகம்

+4
பிரகாஸ்
மீனு
ரூபன்
சிவா
8 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Mon Sep 21, 2009 3:32 am

First topic message reminder :



ஹாருன் யஹ்யா


அறிமுகம்

மரணம்… அது எந்த நேரத்திலும் ஏற்படலாம். யாருக்கு தெரியும். நீங்கள் இந்த கட்டுரையை வாசித்து கொண்டு இருக்கும் இந்த வேளையிலும் ஏற்படலாம். அல்லது நீங்கள் எதிர் பார்க்கும் நேரத்திற்கு முன்பாகவும் ஏற்படலாம்.

இந்த வரிகள் - உங்களை மரணம் சுவைப்பதற்கு முன்பான கடைசி சந்தர்பமாகவோ அல்லது கடைசி நினைவூட்டலாகவோ அல்லது கடைசி எச்சரிக்கையாகவோ இருக்கலாம். நீங்கள் இந்த வரிகளை வாசிக்கும் போது அடுத்த மணித்தியாளத்தில் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. அவ்வாறு நீங்கள் உயிருடன் இருந்தாலும் உங்களுக்கு இன்னொரு மணித்தியாளத்தை உத்தரவாதம் அளிக்க யாராலும் முடியாது. உங்கள் வாழ்கையை ஒரு மணித்தியாளத்தை கொண்டோ அல்லது ஒரு மணித்துளியை கொண்டோ உத்தரவாதம் அளிக்க முடியாது. நீங்கள் இந்த புத்தகத்தை முழுமையாக படித்து முடிப்பீர்களா என்று உங்களுக்கு தெரியாது. மரணம் அது எந்த நேரத்திலும் உங்களை வந்தடையும். அது நீங்கள் மரணத்தை பற்றி சிந்திப்பதற்கு சில துளிகளுக்கு முன்பாக வந்தடையும்.

நீங்கள் மரணமடைவது உறுதி. நீங்கள் நேசிப்பவர்களும் மரணத்தை சுவைத்தே தீர்வார்கள். நீங்கள் அவர்களுக்கு முன்பு அல்லது அவர்கள் உங்களுக்கு முன்பாகவோ மரணிப்பார்கள். இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு பின்பு உங்களுக்கு தெரிந்த ஒரு ஆத்மாவும் இந்த உலகில் இருக்காது..

மனிதனின் எண்ணத்தை எல்லையில்லா கனவுகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பாடசாலை கல்வியை முடித்து – கல்லூரி – பட்டம் – நல்ல தொழில் - திருமணம் - பிள்ளைகள் - நிம்மதியான வாழ்கை. ……இவைதான் மனிதனின் விரிந்த சாதாரண ஆசைகளாக உள்ளது. இவை தவிர மனிதனின் சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப இன்னும் ஆயிரக்கணக்கான ஆசைகள் மனிதனில் விரிந்து காணப்படுகின்றன.

மனித வாழ்வில் நடைபெறும் சில உறுதியான நிகழ்வுகளில் மரணமும் ஒன்று. இது 100 வீதம் உறுதி. பல வருட விடா முயற்சியின் காரணமாக கல்லூரியில் இடம் பிடித்த மாணவன் வகுப்பறைக்கு போகும் வழியில் மரணமாகிறான். தொழிலை பெற்று கொண்ட ஒருவர் முதல் நாள் வேளைக்கு போகும் வழியில் மரணமாகிறார். புது மண தம்பதியரின் வாழ்கையை சாலை விபத்து பறித்து கொள்கிறது. தனது நேரத்தை சேமிக்கும் நோக்கில் விமானத்தில் பறக்கும் வியாபாரி ஒருவர்-அந்த விமானமே அவரது வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை அறியமாட்டார்.

அத்தகைய சந்தர்பங்களில் ஆசைகள் நிறைவேறாமல் தேங்கி நிற்கின்றன. அவர்கள் அவர்களது ஆசைகளை ஒருபோதும் நிறைவேறாது என்ற நிலையில் விட்டு விட்டு - இனிமேல் ஒருபோதும் திரும்ப முடியாத ஒரு இலக்கை நோக்கி செல்கிறார்கள். அந்த இடம் அவர்கள் ஒருபோதும் நினைத்து பார்த்திடாத இடமாக இருக்கிறது. பல வருடங்கள் பல மணிநேரங்கள் செலவழித்து அவர்கள் தீட்டிய கற்பனைகள் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர்கள் நிச்சயமாக நடக்க இருக்கும் ஒன்றை சிந்திக்க மறந்து விட்டார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் சிந்திக்கும் மனசாட்சியுள்ள மனிதன் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்? உறுதியாக நடக்க இருக்கும் ஒன்றுக்கா அல்லது சில வேளை நடக்ககூடும் என்ற ஒன்றுக்கா? ஆனாலும் பெரும்பான்மை மக்கள் உறுதியாக நடக்கும் என்று கூறமுடியாத ஒன்றுக்கே முன்னுரிமை வழங்குவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வின் எந்த நிலையில் இருந்த போதிலும் அதை விட சிறந்த வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடினமாக சிந்திக்கிறார்கள்.

மனிதன் சாகா வரம் பெற்றவனாக இருந்தால் அவனது ஆசைகளை நியாயப்படுத்தலாம். உண்மை என்னவென்றால் ஆசைகள் அனைத்திற்கும் மரணம் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. ஆகவே நடக்கவோ அல்லது நடக்காமல் போகக்கூடிய ஆசைகளுக்காக எமது முழு கவனத்தையும் செலுத்தி உறுதியாக நடக்ககூடிய மரணத்தை பற்றி சிந்திக்காமல் விடுவது மிகப்பெரும் மடமையாகும்.

இதற்கு காரணம் மனிதன் அவனது மனதை அடக்க முடியாத ஆசைகளை கொண்டு அடிமை படுத்தி இருப்பதால் இந்த தெளிவான உண்மையை கவனிக்காமல் விட்டுவிடுகிறான்.

இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் தங்களது உண்மையான வாழ்கை மரணத்தின் பிறகு தொடங்குகிறது என்ற உண்மையை விளங்கி கொள்வதில்லை. அதற்காக தங்களை தயார் படுத்திக்கொள்வதுமில்லை. அதனால் அவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததும் நரகத்தை தவிர வேறு எங்கும் செல்வதுமில்லை. அது அவர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட இடமாகும். இந்த புத்தகம் எழுதப்பட்ட நோக்கம் - மனிதன் சிந்திக்க மறுக்கும் ஒன்றை சிந்திக்க வைக்கவும் - நிச்சயமாக சத்தியமாக நடக்க இருக்கும் ஒன்றை பற்றி எச்சரிப்பதற்குமாகும். அதை சிந்திக்க மறுப்பது எந்த வகையிலும் தீர்வாக அமையாது.


Last edited by சிவா on Wed Mar 16, 2011 8:35 am; edited 1 time in total


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by ரூபன் Mon Sep 21, 2009 2:05 pm

குதூகலம் குதூகலம் குதூகலம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சபீர் Tue May 25, 2010 7:11 pm

மாஸா அல்லாஹ் நல்லதொரு பதிவு யாவரும் அறிந்திருக்கவேண்டிய விடயம் நன்றி சகோதரா நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by கலைவேந்தன் Tue May 25, 2010 7:38 pm

தேடி எடுத்த சபீருக்கு நன்றி...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சபீர் Tue May 25, 2010 7:41 pm

கலை wrote:தேடி எடுத்த சபீருக்கு நன்றி...!

நல்லது எங்கு உள்ளதோ அங்கு இந்த சபீர் இருப்பான் கலைசார்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Tue May 25, 2010 10:00 pm

இந்தக் கட்டுரையை தொடர நினைவூட்டியதற்கு நன்றி சபீர்!


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Tue May 25, 2010 10:17 pm

நபிகள் நாயகம் ஒருமுறை கூறினார்கள்:

இறைவன் உங்களது வாழ்வையும் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நாள்களின் எண்ணிக்கையையும் ஆகாரங்களையும் ஏற்களவே தீர்மானித்துவிட்டான். அந்த தவணையை முற்படுத்தவும் மாட்டான் பிற்படுத்தவும் மாட்டான். (முஸ்லிம் 64385)

இத்தகைய நிகழ்வுகள் முலம் இறைவன் மனிதனுக்கு தனது படைப்புகளின் மீதுள்ள எல்லையற்ற பாசத்தையும் அவனது ஆற்றலையும் நுண்ணறிவையும் காட்டுவதுடன் மனிதனை பரீட்சித்தும் பார்க்கிறான். அவனது விதவிதமான படைப்புகள் மனிதனை பிரமிக்க வைப்பதுடன் மனிதனது நம்பிக்கையை அதிகரிக்கிறது. இவை நிராகரிப்பாளர்களை அவர்களது இறுக்கமான மனநிலை காரணமாக குழப்பத்தையும் வியப்பையும்\ ஏற்படுத்துவதுடன் இறைவனை மேலும் கடுமையாக எதிர்க்கும் தன்மையை ஏற்படுத்துகிறது. இதே நேரம் நம்பிக்கையற்றவர்களின் அசட்டுதனமான செயலானது நிராகரிப்பாளர்களை விட நம்பிக்கையுள்ளவர்களை அறிவு மற்றும் நம்பிக்கை கொண்டு மேன்மைபடுத்திய இறைவனுக்கு மேலும் நன்றி செலுத்த வழி செய்கிறது.

80 வயதில் மரணிப்பவரை விதி என்று சொல்பவர்கள் ஒரு குழந்தை அல்லது இளவயது வாலிபர் மரணித்தால் அதை “சோகமான நிகழ்வு” என்கின்றனர். மரணத்தை இயற்கையான நிகழ்வாக எடுக்காமல் அவர்களால் உருவாக்கப்பட்ட காரணிகளுக்குள் அடக்க முயற்சிக்கின்றனர். நீண்ட கடுமையான நோய்க்கு பின் வரும் மரணத்தை ஏற்றுகொள்பவர்கள் விபத்து அல்லது திடீர் மரணத்தை பெரும் அழிவாக கருதுகிறார்கள்! அதனால் தான் அவர்கள் மரணத்தை எப்பொழுதும் கடுமையாக எதிர்பவர்களாக மரணத்தை சந்திக்கிறார்கள். இத்தகைய மனநிலை உருவாக்குபவர்கள் வாழ்நாள் முழுவதும் துக்கத்துடனும் சோகத்துடனும் கழிக்கிறார்கள். இது உண்மையில் அவநம்பிக்கையின் காரணமாக ஏற்பட்ட முடிவில்லாத வேதனையின் ஆரம்பமேயாகும்.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Tue May 25, 2010 10:18 pm

மறுபிறவியில் நம்பிக்கை வைத்தல்

மக்களின் பிழையான நம்பிக்கைகளில் மறுபிறவி கோட்பாடும் ஒன்று. அதாவது ஒருவர் மரணித்த பின் உயிர் அல்லது ஆன்மா அந்த உடலிலிருந்து வெளியேறி இன்னொறு உடலில் வேறு அடையாளத்துடன் வித்தியாசமான நேரத்தில் இடத்திலும் பிறப்பதை குறிக்கும். சமீப காலங்களில் மூடநம்பிக்கைகளை பின்பற்றுபவர்களும் ஏக இறைவனை நிராகரிப்பவர்களில் பலரையும் இது கவர்ந்து வருகிறது.

இந்த வாதத்திற்கு வலுவூட்ட எந்த சான்றுகளும் இல்லாத போதும் இந்த மூடநம்பிக்கை ஆதரவு பெற காரணம் - அவர்களிடமுள்ள இறை மறுப்பேயாகும். மரணத்திற்கு பின்னால் ஒரு வாழ்கையுள்ளது என்பதில் நம்பிக்கையற்றவர்கள் மரணத்திற்கு பின் தாங்கள் மறைந்து போவதை கண்டு அஞ்சுகின்றனர். மறுபுறத்தில் குறைவான நம்பிக்கையுடையவர்கள் இறைவனது நீதி அவர்களை நரகத்தில் தூக்கி எரிந்து விடும் என்ற பயத்தில் துக்கப்படுகிறார்கள். இவ்விரு சாரார் பொருத்தவரையில் இவர்களுடைய ஆன்மா இன்னொருவருடைய உடலில் வேறொரு நேரத்தில் பிறப்பது மிகவும் சந்தோஷமானதாக தோன்றுகிறது. இந்த தவறான கொள்கை பின்பற்றுபவர்கள் பிழையான விளம்பரத்தை கொண்டு மக்களை நம்பவைத்து விடுகிறார்கள். அதை பின்பற்றுபவர்கள் எவ்வித ஆதாரங்களை கேட்காமல் இருப்பது அவர்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது.

இத்தகைய மூட நம்பிக்கை மிக சில முஸ்லிம்களிடமும் காணப்படுகின்றது. இத்தகையவர்கள் தங்களை அறிவாளிகளாகவும் முற்போக்குவாதிகளாகவும் இணங்காட்ட முனைபவர்கள். இதில் மிக முக்கியமான ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். அத்தகையவர்கள் தங்களின் வாதத்திற்கு குர்ஆனின் வசனங்களை ஆதாரமாக வைப்பார்கள். அவர்கள் அதன் உண்மையான விளக்கங்களை மறைத்து அவர்களுக்கு சாதகமான முறையில் விளக்கத்தை மாற்றி கொள்கிறார்கள். இவற்றை சுட்டி காட்ட காரணம் இவர்களின் நம்பிக்கை குர்ஆனுக்கும் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும் முற்றிலும் மாற்றமாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்வதற்காகும்.

இவர்கள் குர்ஆனிலிருந்து கீழுள்ள சில வசனங்களை அவர்களுக்கு சாதகமாக எடுத்து காட்டுவார்கள். அதற்கவர்கள்: 'எங்கள் இறைவனே! நீ எங்களை இருமுறை மரணமடையச் செய்தாய் இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய் ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேற ஏதும் வழியுண்டா?" எனக் கூறுவர். (ஸ_றா முஃமின் : 11)


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Tue May 25, 2010 10:21 pm

மறுபிறவியில் நம்பிக்கையுள்ளவர்கள் இந்த வசனத்தை பின்வருமாறு விளக்குகிறார்கள் : ஒரு மனிதன் வாழ்கையை வாழ்ந்து மரணித்த பின்பு அவனுக்கு ஒரு புது வாழ்கை கொடுக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக அவனது ஆன்மா அதனது வளர்ச்சி அடைகிறது. அவனது இரண்டாவது வாழ்கை முடிவடைந்து மரணித்த பின்பு மறுமையில் எழுப்பப்படுவார்கள். எமது மனதில் ஒரு கேள்வி வருகிறது : மனிதனின் முதல் நிலை என்ன ? மரணமா அல்லது உயிருடனா ? இதற்கான விடை அடுத்த வசனத்தில் இருக்கிறது.

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே\ உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (ஸ_றா பகறா : 28)

இந்த வசனம் மனிதனின் முதல் நிலை மரணம் என்று தெளிவாக கூறுகிறது. வேறு வகையில் அவனது உண்மை நிலையை கூறுவதானால் நீர் அல்லது உலகை போன்று உயிரற்ற பொருளாகவே அவன் படைக்கப்பட்டான் என்று இவ்வசனம் கூறுகிறது. இந்த உயிரற்ற பொருள் குவியலை உயிர் கொடுத்தான் (படைத்து உருவம் கொடுப்பது). இதுதான் முதல் மரணம் - மரணத்திலிருந்து முதல் உயிர் பெருதல். சற்று காலம் உயிர் வாழ்ந்து இறுதியில் மரணிக்கிறான். அவன் மீண்டும் பூமிக்கு திரும்பி செல்கிறான். இதுதான் இரண்டாவது மரணம். இரண்டாவதும் கடைசியுமான மீண்டும் உயிர்பெரும் நிகழ்வு மறுமையில் தான் ஏற்படுகிறது. ஆகவே இவ்வுலகவாழ்வில் மறுபிறவி என்ற ஒன்று இல்லை. இல்லையென்றால் மூன்றாவது உயிர்பெருதலுக்கான அவசியத்தை ஏற்படுத்திவிடும். மூன்றாவது உயிர்பெருதலை சொல்லக்கூடிய எந்த ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை. ஆகவே சூறா அல் மூஃமின் 11 மற்றும் சூறா அல் பகறா 128 ஆகிய இரண்டிலும் இவ்வுலகில் இரண்டாவது உயிர் பெருவதை பற்றி கூறவேயில்லை. மாறாக இவ்வுலகில் ஒருமுறை உயிர் பெருவதையும் அடுத்து மறுமையில் ஒருமுறை உயிர் பெறுவதை பற்றியே குறிப்பிடுகிறது.

ஆனாலும் மறுபிறவியை பின்பற்றுகிறவர்கள் அவர்களது முழு நம்பிக்கைகளையும் அதில் முதலீடு செய்துள்ளனர். மறுபிறவியை நம்பிக்கை கொண்டவர்கள் ஆதாரம் காட்டும் இவ்விரு வசனங்களும் அவர்களின் மாசுபட்ட கருத்துகளை மறுக்கிறது. மேலும் குர்ஆனிலுள்ள பல வசனங்கள் மனிதனை சோதிப்பதற்காக ஒரு வாழ்கை இவ்வுலகில் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. மரணத்தின் பின் இவ்வுலகிற்கு திரும்புதல் இல்லை என்று பின்வரும் வசனம் கூறுகிறது:

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: 'என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!" என்று கூறுவான். 'நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. ( அல் மூஃமின் 99-100)

மரணத்திற்கு பின் இவ்வுலகத்திற்கு திரும்பி வர முடியாது வசனம் தெளிவாக கூறுகிறது.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Tue May 25, 2010 10:25 pm

அவநம்பிக்கையாளர்கள் மரணத்தின் பின் மீண்டும் உயிர் பெரும் பொருட்டு நிராசை கொள்வார்கள் என்ற உண்மையை இறைவன் எமக்கு சொல்கிறான். இவை ஏக இறைவனை மறுப்பவர்களால் முன்மொழியப்படும் சாதாரண வார்தைகளேயன்றி அவற்றுக்கு எவ்வித பெறுமதியுமில்லை.

சுவர்கத்திலுள்ளவர்கள் முதல் மரணத்திற்கு பிறகு இன்னொரு மரணத்தை சுவைக்க மாட்டார்கள்.

முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள் மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும் இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும் (ஸுதுகான் : 56-57)

சுவர்க்கவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட நற்பேறுகளை பின்வரும் வசனம் சொல்கிறது. அவர்களுக்கு நன்மைகள் வரக்காரணம் முதல் முறை தவிர மீண்டும் மரணிக்கமாட்டார்கள் (பின்னர் சுவனவாசிகள்) நாம் (மறுபடியும்) இறந்து விடுபவர்கள் இல்லையே? (என்பார்கள்). நம்முடைய முந்தய இறப்பை தவிர (வேறு இல்லை). நாம் வேதனை செய்பவர் இல்லை. நிச்சயமாக இதுவே மகத்தான வெற்றியாகும் (ஸுறா ஸாஃப்பாத் : 58-60)

மேலுள்ள வசனம் மனிதன் ஒருமுறைதான் இவ்வுலகில் மரணமடைவான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக கூறுகிறது. இச்சந்தர்பத்தில் ஒரு வினா எழும்ப கூடும் : மேலுள்ள வசனங்களில் இரண்டு மரணங்களை என்று கூறப்பட்ட போதிலும் ஸுறா ஸாஃப்பாத் 58ல் ஒரு மரணத்தை பற்றி மட்டும் பேசுவதேன்?இந்த கேள்விக்கான பதில் ஸுறா துகானின் 56; வசனத்தில் “முதல் இறப்பை தவிர (வேறு) இறப்பை அவர்கள் அதில் அனுபவித்திட மாட்டார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் சுயநினைவோடு ஒரே ஒரு மரணத்தை மட்டுமே சந்திக்கிறான். அவன் மரணத்தை அவனது எல்லா உணர்வுகளை கொண்டும் சந்திக்கிறான். இந்த மரணமே ஒருவன் அவனது கடைசி நேரத்தில் சந்திக்கிறான். மனிதனால் மரணத்தின் முதல் நிலையை உணரமுடியாது காரணம் அத்தருணம் அவனது உணர்வுகளையும் சுயநினைவையும் இழக்கிறான்.

இத்தகைய மரணித்து மீண்டும் உயிர் பெறுவது அல்லது ஆன்மாக்கள் வேறு உடலுக்குள் போவது போன்றவற்றை கருத்துகளை குர்ஆனின் வசனங்கள் முற்றிலும் மறுக்கிறது.

மறுபுறத்தில் மறுபிறவி கொண்ட வாழ்கையை இறைவன் ஏற்படுத்தியிருந்தால் மனிதர்களுக்கு உண்மை வழிகாட்டியாக வந்த குர்ஆனில் அதை பற்றி நிச்சயமாக இறைவன் குறிப்பிட்டு இருப்பான். இது உண்மையாக இருந்தால் இறைவன் மறுபிறவியின் அனைத்து நிலைகளையும் தெளிவாக குறிப்பிடடிருப்பான். வாழ்கை மரணத்தை பற்றி குறிப்பிடும் குர்ஆனில் மறுபிறவியை பற்றி சிறு தகவல் கூட இல்லை.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by சிவா Tue May 25, 2010 10:33 pm


மறதி எனும் திரை!


மனிதன் அடிப்படையில் சுயநலவாதி. அவனது நலன் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவன் மிகுந்த கவனத்துடன் இருக்கிறான். ஆனால் மலையாக முன்னிற்கக்கூடிய மரணத்தை மட்டும் கண்டுகொள்வதில்லை. குர்ஆனில் இத்தகைய வினோதமான மனநிலையுடையவர்களை அதாவது “; உறுதியான நம்பிக்கை கொள்ளாதவர்களை” இறைவன் ஒரு சொல்லை கொண்டு வகைப்படுத்துகிறான் : “மறதி”.

மறதி என்பதன் பொருள் உண்மையை புரிந்து கொள்ளாமை - உறுதியான முடிவை பெற்று கொள்ள முடியாமல் இருப்பது-தெளிவின்மை. இதற்கு உதாரணம் பின்வரும் வசனத்தில் உள்ளது.

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (ஸுறா அன்பியா : 1)

மனிதர்கள் குணமடையாத மிகப்பாரதூரமான நோயுடையவர்கள் மட்டுமே உறுதியாக மரணிப்பார்கள் என்று உறுதியாக நினைக்கிறார்கள். இருப்பினும் இவ்வாறு நோயுற்றவர்களுடன் இத்தகைய சிந்தனையுடையவர்களும் மரணிப்பார்கள். இந்த உண்மை சிலகாலம் சென்று அல்லது மிக வரைவில் நடைபெற்ற போதிலும் இந்த உண்மை மாறாது. பலநேரங்களில் மறதி இத்தகைய உண்மையை மறைத்து விடுகிறது. உதாரணமாக எயிட்ஸ் நோயுடைய ஒருவர் மிக விரைவில் மரணமடைய சாத்திய கூறுகள் அதிகம். அதை போன்று நல்ல திடகாத்திரமான ஒருவரும் ஒருநாள் மரணமடைவார் என்பது நிதர்சன உண்மை. சிலவேளை எயிட்ஸ் நோயுடையவருக்கு முன்பாகவே இவர் மரணிக்ககூடும். இது எதிர்பார்காத வேளையில் நடைபெறகூடும். மரணபடுக்கையிலுள்ள நோயாளிகளை பார்த்து குடும்பத்தினர் துக்கப்படுகின்றனர். ஆனால் ஒருநாள் அவர்களும் நிச்சயமாக மரணிக்கபோவதை எண்ணி துக்கப்படுவதில்லை. அவை சிலவேளை சமீபமாக அல்லது சிலகாலம் கழித்து ஏற்படுவது உறுதி.

மரணத்தின் போது துக்கப்படுவது சரியானது என்றால் ஒவ்வொருவரும் உடனடியாக தங்களுக்காக வருத்தப்படவேண்டும் அல்லது துக்கத்திலிருந்து வெளியேறி மரணத்தை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இந்த நேரத்தில் மறதி ஏற்பட காரணங்களை பற்றி ஆராய்வது சால சிறந்தது.

மறதி ஏற்பட காரணங்கள்

- விவேகமின்மை : சமுகத்தில் வாழும் அதிகமானவர்கள் முக்கியமான விடயங்களை சிந்திப்பதில் பழக்கமின்மை. மறதியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்து கொண்டுள்ளதால் மரணத்தை பற்றி சிந்திப்பதில்லை. தீர்க்க முடியாத சாதாரண பிரச்சினைகள் அவர்களது மனதை ஆக்கிரமித்து கொள்கிறது. தேவையில்லாத விடயங்கள் அவர்களது குறுகிய மனதை ஆக்கிரமித்து கொண்டு; முக்கியமான விடயங்களை சிந்திப்பதற்கு அனுமதிப்பதில்லை. இவ்வாறு அன்றாட நடைபெறுகின்ற நிகழ்வுகளின் காரணமாக வாழ்கை இலக்கற்றதாகி போகிறது.. அதேநேரம் ஒருவருடைய மரணத்தின் போது அல்லது மரணத்தை பற்றி கலந்துரையாடல் திரும்பும் போது சில கருத்துகளை கூறி அந்த கலந்துரையாடலை தவிர்பதன் மூலம் ஆறுதலடைகிறார்கள். அவர்கள் தேவையற்ற குறுகிய சிந்தனையுடைய குறுகிய மனம் படைத்தவர்கள்.

- சிக்கலான மற்றும் தெளிவான வாழ்கை : வாழ்கை மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதனினில் ஏற்பட்டுள்ள மறதி காரணமாக அவனை மிக விரைவில் அல்லது தாமதமாக அவனை விழுங்க காத்திருக்கும் மரணத்தை பற்றி கவலைப்படுவதில்லை. இறைவன் மீது நம்பிக்கை கொள்ளாமலும், இறைவனை நம்பி அவனுக்கு கட்டுப்படுதல் போன்றவற்றில் தூரமாக இருக்கிறான். உலக தேவைகளை பற்றி உணர்வு வந்த தருணம் முதல் அவனது சுக வாழ்வுக்காக மிகவும் சிரமப்படுகிறான். அத்தகைய மனிதன் மரணத்தை தவிர்க்க முயற்சிப்பதில்லை காரணம் ஏற்கனவே உலக விவகாரங்களில் மூழ்கிவிட்டான். அவன் புதுப்புது யோசனைகள் குறிக்கோள்கள் விருப்புகளின் பால் சென்றுக்கொண்டிருப்பதால் ஒருநாள் எதிர்பாராத விதமாக திடீரென மரணத்தின் உண்மையை எதிர்கொள்வான். அப்பொழுது கவலைப்பட்டு மீண்டும் உயிர் பெற ஆசைப்படுவான் ஆனால் அதில் எந்த பலனுமில்லை.

- மக்கள் தொகை பெருக்கம் பற்றிய தவறான கொள்கை : பிறப்பு மனிதனின் மறதிக்கு இன்னொரு காரணம். மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போகிறது தவிர குறைவதில்லை. மனிதன் பிறப்பு மரணத்தை மாற்றிவிடும் போன்ற மயக்ககூடிய தவறான சிந்தனை காரணமாக மக்கள் தொகை சமப்படுத்தப்படும் என்று நினைக்கிறான். இத்தகைய சிந்தனை மரணத்தை நினைப்பதிலிருந்து தடுத்து மறதியை உண்டாக்குகிறது. இருப்பினும் இன்று முதல் உலகம் முழுவதும் எந்த பிறப்பும் நிகழாத போதிலும் ஒன்றன்பின் ஒன்றாக மரணம் ஏற்பட்டு அதன்காரணமாக உலக மக்கள் தொகை குறைவடையும். அதன் பிறகு மரணத்தின் பயம் உணரப்படும். மனிதன் அவனை சூழவுள்ள மக்கள் ஒருவர் பின் ஒருவராக மறைவதை கண்டு தானும் மறுக்க முடியாத முடிவை அடைவான் என்பதை உணருவான். இதற்கு மரணதண்டனை வழங்கப்பட்ட கைதிகள் மனநிலையை உதாரணமாக கூறலாம்.

ஒவ்வொரு நாளும் மரணதண்டனை நிறைவேற்ற ஒருவர் அல்லது இரண்டு பேர் அழைத்து செல்லப்படுவதை அவர்கள் பார்கிறார்கள். அந்த அறையிலுள்ளவர்கள் குறைவதை பார்கலாம். வருடங்கள் சென்ற போதிலும் ஒவ்வொரு நாளும் உயிருடன் இருப்பவர்கள் அடுத்த நாள் தங்ளுடையதாக இருக்குமோ என்ற பயத்திலேயே நித்திரைக்கு செல்வார்கள். அவர்கள் ஒரு நொடி பொழுதையும் மரணத்தை பற்றி சிந்திக்காமல் இருப்பதில்லை.

தற்போதய உண்மை நிலவரத்திற்கும் மேலே கூறப்பட்ட உதாரணத்திற்கும் வேறுபாடு இல்லை. ஒருவர் மரணிப்பதற்கும் புதிதாக பிறந்த குழந்தைக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. இவை வெறும் தவறான வாதங்களாகும். 150 வருடங்களுக்கு முன்பு உலகில் வாழ்ந்த எவரும் இன்று உயிருடன் இல்லை. அடுத்து வந்த சந்ததியினரால் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை. அதை போன்று இன்று உயிருடனுள்ளவர்கள் இன்றிலிருந்து 100 ஆண்டுகளுக்கு பின் சிலரை தவிர யாரும் உயிருடன் இருக்க போவதில்லை. இதற்கு காரணம் இந்த உலகம் மனித வாழ்வதற்கான நிரந்தர இடமில்லை.


மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணம்,  உயிர்தெழுதல்,  நரகம் - Page 2 Empty Re: மரணம், உயிர்தெழுதல், நரகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum