புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_m10ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 1:31 am

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம்

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Loveheart

ஆம்!
அரைமணிநேர -
மின்சார அணைப்பில் தான்-
சுடர் விட்டு எரிந்தது
நம் காதல்;

"இருட்டில் என்ன
செய்கிறாய் - போ.. போயி
ஒரு மெழுகுவர்த்தி
வாங்கி வா" என்றாள் அம்மா.

மெழுகுவர்த்தி
வாங்க வந்த கடையில்
நீ -
மெழுகுவர்த்தி கொடுக்க

மனசெல்லாம் மின்சாரமும்
பாய்ந்தது;

சிரித்த உன் முகத்தையும்
நானுன்னை -
ஏனோ அப்படி பார்த்ததையும்
நீயும் ரசித்து விட -

தெருவெல்லாம் அசைபோட்ட
உன் நினைவில் -
மெல்ல வந்தது
காதல் ஆசை!

மறுநாள் விளக்கணைந்த போது
அம்மா சொல்லவில்லை -
நானாகவே கடைக்கு வந்தேன்,

நீ சிரித்தாய்..

"ஒரு மெழுகுவர்த்தி கொடு
என்றேன்;

கொடுத்தாய்..,

எனக்கு போக
மனம் வரவில்லைதான்-

"ஏன் வேறேதாவது வேண்டுமா
என்றாய்.,

"ஆம்., உன் மனது
வேண்டும்;
(மனதில் நினைத்துக் கொண்டேன்)

"என்ன?

உன் மனது
வேண்டும்;ஒருமுறை என்னை காதலிப்பாயா?

"என்ன வேணும்
ஏனப்படி பார்க்கிறாய்
என்றாய்.,

"இவ்வளவு அழகாய்
இருக்கிறாயே,
பார்க்காமல் என்ன செய்ய..

"அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்.,

உன் இதயம் வேணும்
ஒரேஒரு முறை
கொடேன்;

"என்ன தம்பிக்கு
என்ன வேணுமாம்;(அப்பா கேட்டார்)

"மெழுகுவர்த்திப்பா;
மெழுகுவர்த்தி வேணுமாம்..!!

"ஆமா.. அண்னாச்சி
மெழுகுவர்த்தி தான்
வேணும்.,

உன் மகளின் மனசென்று சொல்ல
தைரியம் -
வரவில்லை; எனக்கு.

வெறும் காதல் வந்தவனாய்
அவளை திரும்பி திரும்பி
பார்த்துக் கொண்டே வந்தேன்.,

'அப்பா வரார் சொல்லு
என்ன வேணும்' என்றாளே
அப்பா வரார் சொல்லு என்றாளே..

மனசு இரவெல்லாம் -
விளக்கனையுமா..
மீண்டும் மின்சாரம் போகுமா.. என
யாருக்கும் தெரியாமல்
பற்றிக்கொண்டு எரிந்தது;

மறுநாள் காலை எழுந்ததும்
"அம்மா கடைக்கு போகனுமா?

"ஏண்டா கேட்குற
அதலாம் வேணாம் -
நீ போ;போயி..படி

"போடி மோசக்காரி -
உனக்கென்ன தெரியும் என் காதல் பற்றி..

அம்மாவை திட்டுவிட்டு
உன் வீட்டு தெருவெல்லாம்
வந்து என் காதல் பூ
தூவினேன்;

உன் அப்பா என்னை
முறைத்த பார்வையை கூட
என் காதல் பக்கத்தில் -
வெற்றிக்கான குறிப்புகளென
எழுதிக் கொண்டேன்;

போகும் போதும்
வரும்போதும் -
நீ என்னை பார்க்கிறாய் என்று தெரிந்த
உன் ஒரு -பார்வைக்காய்
என் நாட்களை எல்லாம் உன்
கடை வாசலில் குவித்து
காதலி காதலி என்று கெஞ்சினேன்;

உனக்குத்தான் அதெல்லாம் புரியாமல்
சில்லரைகளோடு என் இதயத்தையும்
வாங்கி - உன்
கல்லாபெட்டியில் -
போட்டுக்கொண்டாய்;

'மோசக்காரி..
மோசக்காரி..,
திட்டிக் கொண்டே வீட்டிற்கு
வந்தேன்;

மின்சாரம் நிற்க,
விளக்கு அணைய..,
உள்ளே -
காதல் பூக்கள் பூக்கத் துவங்கின;

அம்மா நான் மெழுகுவர்த்தி வாங்கியாறேன்..

ஓடி வந்த ஓட்டத்தில்
மூச்சிரைக்க -
உன் கடை முன் வந்து நின்று
இருட்டிற்குள் எரியும் உன்
முக வெளிச்சத்தில்
அசந்து நிற்க-

"என்ன வேண்டும்?

"ஒரு மெழுகுவர்த்தி!

கொடுத்து விட்டு நீ-
அப்-புரம் திரும்பிக் கொண்டாய்;

என்னால் அங்கிருந்து நகர
முடியவில்லை,

அதற்குள் நீ-

"என்னவேண்டும்?

"மெழுகு வர்த்தி!

நீ-
மீண்டும் கொடுத்துவிட்டு என்னை பார்த்தாய்..
நான் அங்கிருந்து நகரவே இல்லை..

மீண்டும் நீ-
"என்ன வேண்டும் என்றாய் -
ஒன்றுமே தெரியாததை போல;

"இன்னொரு மெழுகுவர்த்திக் கொடு!

"அதான் இத்தனை வாங்கி
விட்டாயே இன்னுமெதற்கு
மெழுகுவர்த்தி???

"அப்போ உன் -
காதல் கொடு!!

"என்ன????

"உன் காதல் வேணும்-
என்னை காதலியேன்' என்றேன்.

"அப்பா..
அப்பா..
நீ கத்த, அப்பா ஓடிவர..

என்னவென்று விவரமறிந்து
என்னை-
தரதரவென்று என் வீடுவரை
இழுத்துவந்து அடித்து -
வீட்டின் வாசலில்
வீசிவிட்டு -

தெருவெல்லாம் என்னை
திட்டித் தீர்க்க குத்தகை
எடுத்தவரை போல
கத்திக் கொண்டே போக;

அவுமானத்தால் அம்மா கதறியழுது
என்னை வெளியே போடாவென
விரட்டியதில் -

நான் -
வெளியே வந்து நின்று
உன் கடை இருக்கும் தெருவை
பார்க்கிறேன்....,

நீ அங்கே எங்கோ
தொலைதூரம் நின்று

வருத்தத்துடன் என்னை பார்க்கிறாய்;

என் கண்கள் சற்று
கலங்கியது தான்,

கலகங்கட்டும்;

அதோ..
என் கண்ணீர் வழியே -
தரை தொட்ட என் காதல்
வருத்தங்களாய் -
உனக்குள்ளும் பூக்கிறது பார்!!
-----------------------------------
_வித்யாசாகர்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 21, 2009 1:38 am

மெழுகுவர்த்தி..!
உன் வாழ்க்கை உள்ள வரை மற்றவர்களுகாக பிரகாசமாக இரு..! ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் 678642



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 1:44 am

ஆஹா, கவிதை போட்டால்; தத்துவம் முளைக்கிறதே!

ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் 678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 21, 2009 1:51 am

தான் அழிந்து மற்றவர்களுக்கு வெளிச்சம் தருவது -மெழுகுவர்த்தி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 1:59 am

அருமை ஒரு நல்ல காதல் கவிதை படித்த திருப்த்தி வாழ்த்துக்கள் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 2:08 am

தங்களின் முதல் காதலை இப்படி பகிரங்கமாக கவிதையாக எழுதி அனைவரையும் கொள்ளையடித்து விட்டீர் வித்யா!!!

சூப்பர்!!! அன்பு மலர்



ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 2:55 am

சிவா wrote:தங்களின் முதல் காதலை இப்படி பகிரங்கமாக கவிதையாக எழுதி அனைவரையும் கொள்ளையடித்து விட்டீர் வித்யா!!!

சூப்பர்!!! ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் 154550
இல்லை சகோதரரே, இது வெறும் கற்பனை, எங்கள் பழைய வீட்டு தெருவும், அதன் மத்தியில் ஒரு அண்ணாச்சி கடை இருந்ததும் அவருக்கு ஒரு மகள் (அவுங்களை அக்கானு தான் கூப்பிடுவேன், அவுங்களும் என்னிடம் தம்பி தம்பினு பாசமா இருப்பாங்க) இருந்ததும் மட்டும் உண்மை.

மரணத்தை தூர நின்று பார்த்து உள்வாங்கி எழுதுபவனே கவிஞன் சகோதரரே, மரணிப்பவன் அல்ல!

ஓவியம் அழகு. நீங்கள் வந்த உடன் இரண்டு முறை வணக்கம் சொன்னேன், ரூபன் கூட அண்ணனுக்கா வணக்கம் என்றார், சரி கட்டுரை பணியில் உள்ளீர்களோ என்று நினைத்தேன், இப்பொழுது மகிழ்ச்சி, நன்றி சகோதரரே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 3:01 am

மன்னிக்கவும், கவனிக்கவில்லை!

”கண்ணுக்கு மையழகு
கவிதைக்கு பொய்யழகு”

என்பதை அறிவேன் வித்யா!

தங்களை சற்று சீண்டிப் பார்க்கவே அவ்வாறு கருத்துரைத்தேன்! அன்பு மலர்



ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 3:03 am

தங்களின் கவிதைகளுக்கு படம் நான் அமைக்கவில்லை! கவிதையழகைப் பார்த்து படங்கள் இயற்கையாகவே இவ்வளவு அற்புதமாக கவிதையுடன் ஒன்றிவிடுவது எனக்கும் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது!



ஒரு மெழுகுவர்த்திக்கு; என் காதல் இலவசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 3:09 am

சிவா wrote:தங்களின் கவிதைகளுக்கு படம் நான் அமைக்கவில்லை! கவிதையழகைப் பார்த்து படங்கள் இயற்கையாகவே இவ்வளவு அற்புதமாக கவிதையுடன் ஒன்றிவிடுவது எனக்கும் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது!

என்ன இங்கே ஒரே பனியடிக்கிறது ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக