புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடலூர் வள்ளலார் எனும் ஞானஜோதி
Page 1 of 1 •
- senthilmask80பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 18/10/2010
வடலூர் வள்ளலார் எனும் ஞானஜோதி பற்றிய சம்பவம் ஒன்று சொல்வார்கள். அவர் மண்ணில் ஸ்தூல உடலுடன் வந்தபோதே, அவர் மீது பக்தி கொண்ட அன்பர் ஒருவர், வள்ளலாரின் திருமேனியை அப்படியே களிமண்ணால் பொம்மையாகச் செய்து நெருப்பில் சுட்டு, வண்ணம் பூசி, அவரிடம் கொண்டு வந்து கொடுத்தாராம்! எவரையும் புண்படுத்தவோ அலட்சியப் படுத்தவோ எண்ணாத கருணை மனம் கொண்ட ராமலிங்க வள்ளலோ, அந்த பொம்மையை வாங்கி வெகு அலட்சியமாகத் தள்ளி வைத்தாராம்.
அதைக் கண்டு துடித்துப்போனவர், ”ஏன் சாமீ… அந்த மண் பொம்மையை அலட்சியம் செஞ்சுட்டீங்க?” என்று வேதனையுடன் கேட்க, ”அப்பா… இந்த உடம்பு மண்ணால் தான் பெரும்பாலும் உண்டாகிறது. இந்த மண்ணுடம்பைப் பொன்னுடம்பாக்கும் சாகாக் கலையை உலகுக்கு உரைக்கவே இறைவன் என்னை அனுப்பினான். இதை உணர்ந்து, ஆழ்ந்து ஈடுபட்டு இந்த மண்ணுடம்பை பொன் னுடம்பாக்கினேன். நீயோ பொன்னுடம்பை மண்ணுடம்பாக ஆக்கி வந்திருக்கிறாய். ‘பொன் உடம்பாக்கிக் கொள்ளும் ரகசியத் தைக் கற்க எவரும் இல்லையே’ என்று வருந்தி வரும் வேளையில், நீ பொன்னுடம்பையும் மண்ணுடம்பாக்கினால் நான் எப்படி மகிழ்வேன்?” என்றாராம்.
யோசிக்கவேண்டிய விஷயம் இது! வள்ளலார் பொன்னுடம்பு பெற்ற ரகசியம் முழுவதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும், நாடிசுத்தி செய்து, உடல் அழுக்கு (கார்பன்) நீங்கி, சுவாசத்தை ஏதோ ஓர் அளவில் ஒழுங்குபடுத்துவதன் மூலம் நரை, திரை, மூப்பு முதலான நோய்களின்றி உடம்பு பொன்னாகிறது என நூற்றுக்கணக்கான சித்தர் பாடல்கள் மூலம் யூகிக்க முடிகிறது. ‘வள்ளலார் உடம்பு பொன்னுடம்பு’ என்பதை வாரியார் சுவாமிகள் தனது சுய சரிதத்தில் எழுதுகிறார்.
”வடலூரில் சத்திய ஞானசபை திருப்பணித் துவக்கத்தில் ஒருநாள், சத்திய ஞானசபையின் அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சார்யர் நேர்மையானவர். வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சார்யரின் பேரன்.
அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி, அவருக்கு அருகில் அமர்ந்தேன். ‘பெரியம்மா, வணக்கம்! தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிறீர் களா?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்த முகத் துடன், ‘அப்போது எனக்கு ஐந்தரை வயது. எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சார்யரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார். என் தோள்களைப் பிடித்து, ‘குட்டிப் பெண்ணே… குட்டிப்பெண்ணே’ என்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும்போது, மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத் துணியை இழுத்து மறைத்துக்கொள்வார்’ என்றார். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் அதிசயமும் அடைந்தேன்” என்கிறார்.
பொன்னுடம்பு பெற்ற வள்ளலார், கடவுளை ஆறு வேளை… அதாவது சூரியோதயம், உச்சிப் பொழுது, சாயரட்சை, மாலை, யாமம் மற்றும் வைகறையில் தியானம் செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறார். அந்த தியானம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும்போது, ‘எக்காலத்திலும் புருவ மத்தியின் கண்ணே நமது கரணத்தைச் செலுத்தவேண்டும்’ என்று தெளிவுபடுத்துகிறார்.
புருவமத்தி என்பது சுழுமுனை நாடி. அந்தக் கரணம் அதாவது மனம், புத்தி என்கிற இடது வலது சுவாசங்களை ஒருமுகப்படுத்துவது என்பதன் மூலம் பொன்னுடம்பைப் பெறுவதையே சுட்டுகிறார் என்று கொள்ளலாம். சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்ற மூன்று ரகசியக் குறியீடு களைத் திருவருட்பாவில் பல இடங்களில் அவர் வெளிப் படுத்துகிறார். விந்து வீணாக வெளியேறாமை போகாப் புனல்; சாகாத்தலை என்பது இறப்பற்ற பெருநிலை- அதாவது மரணமிலாப் பெருவாழ்வு; வேகாக்கால் என்பது காற்று பற்றிய ரகசியம் (கால் என்பது காற்றைக் குறிக்கும் சொல்); வெந்து அழியாத பிராணவாயுவே வேகாக்கால். தீய்த்துக் கெடுக்கப்படாத பிராணனாகிய காற்று – உடம்பு முதிர்ந்து வாடிக் கெடாதபடி பிராணனை அடக்கும் வித்தைதனை அறிந்தால் மரணம் இல்லை என்கிறார்.
‘சாவாதிருக்கும் சாகாக்கல்வி’ என்பதை நமக்குக் கொட்டித் தந்தவர் கள் தமிழகத்துச் சித்தர்கள். அவர்கள் சொன்ன வழிமுறைகளையெல்லாம் சுருக்கிச் சொன்னால், மூன்று வழிகள் கிடைக்கின்றன. ஒன்று – ரசவாத முறை; அடுத்தது – குண்டலினி யோகம்; மூன்றாவது உல்டா சாதனை எனும் தலைகீழ்ப்பயிற்சி முறை எனும் மறித்தேற்றும் முறை எனப் பட்டியலிடுகிறார் பேராசிரியர் டி.என்.கணபதி.
பாதரசம், கந்தகம், காக்கைப் பொன் என்கிற மைக்கா ஆகிய வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி, ரசாயன யுக்திகளால் (கெமிக்கல்) சாவா நிலைக்கு முயற்சி செய்துள்ளனர். குண்டலினி யோகத்தில் முன் சொன்ன வேதிப்பொருட்களுக்கு பதிலாக நம்முடைய உடலில், தலையில் சகஸ்ராரத்தில் ஊறிவரும் உயிர்ச்சாறு பருகுவது விளக்கப் படுகிறது. இதனை மெய் யாகம் என்கிறார் திருமூலர்.
‘தமிழ்ச் சித்தர் மரபு என்கிற நூலில், பேராசிரியர் டி.என்.கணபதி அழகாக இதுகுறித்து விளக்குகிறார்… ”ஓர் இரும்புத் துண்டை நீரில் போட்டால், அது மூழ்கிவிடுகிறது. ஆனால், அதே இரும்புத் துண்டைக் கொண்டு, படகு செய்து நீரில் மிதக்க விட முடிகிறது; கடலைக் கடக்க உதவுகிறது. அதேபோல், பிண்டநிலையில் ஒரு கரையில் இருக்கும் ஆன்மாவை, மறுகரையில் அண்ட நிலையில் இருக்கும் பரமான்மாவுடன் இணைக்கிற படகாக இந்த உடம்பு பயன்படுகிறது. மூழ்கும் இரும்பை மூழ்காத படகாக்குவது போல், அழியும் உடம்பை அழியா உடம்பாக்கும் விந்தையே குண்டலினி யோகம்!”
அடுத்து… மறித்தேற்றும் முறை! சித்தர்களால் சித்தர்களுக்கு மட்டுமே புலப்படுத்தப்படும் ரகசியம் இது. விந்துவை மறித்து மேலேற்றும் முறை. இந்த உல்டா சாதனையை நாத சித்தர்கள் பயில் கிறார்கள். இந்த உயரத்துக்கெல்லாம் பாயாவிடினும் காற்றைக் கையா ளும் கலையை அறிந்தால் வலுவான, பொலிவான உடலும் உள்ளமும் ஆன்மாவும் நம் வசமாவது உறுதி. வள்ளலார், ‘சாகாத்தலை வேகாக் கால்’ என்கிறார். வேறு சில சித்தர்களோ சிறிது மாற்றி, ‘சாகாக்கால் வேகாத் தலை’ என்கின்றனர். ‘சாகாக்கால்’ என்று பிராணாயாமத்தையே பேசுகின்றனர். ‘வேகாத்தலை’ என்பது சகஸ்ராரமாகிய தலையில் ஊறும் அமிழ்தைக் குறிக்கிறது. ஆக கால், தலை ஆகிய இந்த இரண்டும் நமக்குப் புரிபடாததால், ‘தலைகால் தெரியாமல் ஆடுகிறான்’ என்று ஜாடை பேசினர்.
இதேபோல், ‘விட்ட குறை தொட்ட குறை’ என்கிற பரிபாஷை, மூச்சை நாசிவழி விட்ட குறை என்றும், நடுவில் மறித்து ஏற்றி சுழு முனையில் பாயவிடுவதே தொட்ட குறை என்றும் பொருளாகிறது என தமிழ்ச் சித்தர் மரபு நூல் விளக்குகிறது.
சிவவாக்கியர் எனும் சித்தர், கிராமத்து உதாரணம் ஒன்றின் மூலம் நம்மை ஒரு பிடி பிடிக்கிறார்: ‘அடேய்… நீ காதலித்துக் கல்யாணம் செய்த உன் மனைவியை, ஒரு ரவுடி கண் வைத்து, அவளை என்னிடம் அனுப்பு என்றால், நீயே கொண்டு போய் அவனிடம் சேர்ப்பாயா? ‘வெட்டிவிடுவேன்’ என்று புறப்படு வாய் அல்லவா! அதேபோல், நாம் ஆசை ஆசையாக வளர்த்த இந்த உடம்பை அந்த எமன் கண்வைத்து ஓலைவிட்டதும் மயானம்வரை கொண்டு போய்ப் போடலாமா? முட்டாள்… காலனைக் கபளீகரம் பண்ணவேண்டாமா?’ என்கிறார்.
‘வடிவு கண்டு கொண்ட பெண்ணை
வேறொருவன் நத்தினால் விடுவனோ
அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!’
என்ன அழகான உவமை?! ஆனால், அதைத் தடுப்பது எப்படி எனும் கேள்வி வரும். இப்படிக் கேட் பவருக்குத் திருமூலர் பதில் சொல் கிறார்… ‘காற்றைப் பிடித்தால் கூற்றை (எமனை) உதைக்கலாம்!’
காற்றை எப்படிப் பிடிப்பது?
Thanks to Vikatan.
nanri : manakkudiyan.com
அதைக் கண்டு துடித்துப்போனவர், ”ஏன் சாமீ… அந்த மண் பொம்மையை அலட்சியம் செஞ்சுட்டீங்க?” என்று வேதனையுடன் கேட்க, ”அப்பா… இந்த உடம்பு மண்ணால் தான் பெரும்பாலும் உண்டாகிறது. இந்த மண்ணுடம்பைப் பொன்னுடம்பாக்கும் சாகாக் கலையை உலகுக்கு உரைக்கவே இறைவன் என்னை அனுப்பினான். இதை உணர்ந்து, ஆழ்ந்து ஈடுபட்டு இந்த மண்ணுடம்பை பொன் னுடம்பாக்கினேன். நீயோ பொன்னுடம்பை மண்ணுடம்பாக ஆக்கி வந்திருக்கிறாய். ‘பொன் உடம்பாக்கிக் கொள்ளும் ரகசியத் தைக் கற்க எவரும் இல்லையே’ என்று வருந்தி வரும் வேளையில், நீ பொன்னுடம்பையும் மண்ணுடம்பாக்கினால் நான் எப்படி மகிழ்வேன்?” என்றாராம்.
யோசிக்கவேண்டிய விஷயம் இது! வள்ளலார் பொன்னுடம்பு பெற்ற ரகசியம் முழுவதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும், நாடிசுத்தி செய்து, உடல் அழுக்கு (கார்பன்) நீங்கி, சுவாசத்தை ஏதோ ஓர் அளவில் ஒழுங்குபடுத்துவதன் மூலம் நரை, திரை, மூப்பு முதலான நோய்களின்றி உடம்பு பொன்னாகிறது என நூற்றுக்கணக்கான சித்தர் பாடல்கள் மூலம் யூகிக்க முடிகிறது. ‘வள்ளலார் உடம்பு பொன்னுடம்பு’ என்பதை வாரியார் சுவாமிகள் தனது சுய சரிதத்தில் எழுதுகிறார்.
”வடலூரில் சத்திய ஞானசபை திருப்பணித் துவக்கத்தில் ஒருநாள், சத்திய ஞானசபையின் அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சார்யர் நேர்மையானவர். வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சார்யரின் பேரன்.
அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி, அவருக்கு அருகில் அமர்ந்தேன். ‘பெரியம்மா, வணக்கம்! தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிறீர் களா?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்த முகத் துடன், ‘அப்போது எனக்கு ஐந்தரை வயது. எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சார்யரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார். என் தோள்களைப் பிடித்து, ‘குட்டிப் பெண்ணே… குட்டிப்பெண்ணே’ என்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும்போது, மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத் துணியை இழுத்து மறைத்துக்கொள்வார்’ என்றார். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் அதிசயமும் அடைந்தேன்” என்கிறார்.
பொன்னுடம்பு பெற்ற வள்ளலார், கடவுளை ஆறு வேளை… அதாவது சூரியோதயம், உச்சிப் பொழுது, சாயரட்சை, மாலை, யாமம் மற்றும் வைகறையில் தியானம் செய்ய வேண்டும் என்று உபதேசிக்கிறார். அந்த தியானம் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்கும்போது, ‘எக்காலத்திலும் புருவ மத்தியின் கண்ணே நமது கரணத்தைச் செலுத்தவேண்டும்’ என்று தெளிவுபடுத்துகிறார்.
புருவமத்தி என்பது சுழுமுனை நாடி. அந்தக் கரணம் அதாவது மனம், புத்தி என்கிற இடது வலது சுவாசங்களை ஒருமுகப்படுத்துவது என்பதன் மூலம் பொன்னுடம்பைப் பெறுவதையே சுட்டுகிறார் என்று கொள்ளலாம். சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்ற மூன்று ரகசியக் குறியீடு களைத் திருவருட்பாவில் பல இடங்களில் அவர் வெளிப் படுத்துகிறார். விந்து வீணாக வெளியேறாமை போகாப் புனல்; சாகாத்தலை என்பது இறப்பற்ற பெருநிலை- அதாவது மரணமிலாப் பெருவாழ்வு; வேகாக்கால் என்பது காற்று பற்றிய ரகசியம் (கால் என்பது காற்றைக் குறிக்கும் சொல்); வெந்து அழியாத பிராணவாயுவே வேகாக்கால். தீய்த்துக் கெடுக்கப்படாத பிராணனாகிய காற்று – உடம்பு முதிர்ந்து வாடிக் கெடாதபடி பிராணனை அடக்கும் வித்தைதனை அறிந்தால் மரணம் இல்லை என்கிறார்.
‘சாவாதிருக்கும் சாகாக்கல்வி’ என்பதை நமக்குக் கொட்டித் தந்தவர் கள் தமிழகத்துச் சித்தர்கள். அவர்கள் சொன்ன வழிமுறைகளையெல்லாம் சுருக்கிச் சொன்னால், மூன்று வழிகள் கிடைக்கின்றன. ஒன்று – ரசவாத முறை; அடுத்தது – குண்டலினி யோகம்; மூன்றாவது உல்டா சாதனை எனும் தலைகீழ்ப்பயிற்சி முறை எனும் மறித்தேற்றும் முறை எனப் பட்டியலிடுகிறார் பேராசிரியர் டி.என்.கணபதி.
பாதரசம், கந்தகம், காக்கைப் பொன் என்கிற மைக்கா ஆகிய வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி, ரசாயன யுக்திகளால் (கெமிக்கல்) சாவா நிலைக்கு முயற்சி செய்துள்ளனர். குண்டலினி யோகத்தில் முன் சொன்ன வேதிப்பொருட்களுக்கு பதிலாக நம்முடைய உடலில், தலையில் சகஸ்ராரத்தில் ஊறிவரும் உயிர்ச்சாறு பருகுவது விளக்கப் படுகிறது. இதனை மெய் யாகம் என்கிறார் திருமூலர்.
‘தமிழ்ச் சித்தர் மரபு என்கிற நூலில், பேராசிரியர் டி.என்.கணபதி அழகாக இதுகுறித்து விளக்குகிறார்… ”ஓர் இரும்புத் துண்டை நீரில் போட்டால், அது மூழ்கிவிடுகிறது. ஆனால், அதே இரும்புத் துண்டைக் கொண்டு, படகு செய்து நீரில் மிதக்க விட முடிகிறது; கடலைக் கடக்க உதவுகிறது. அதேபோல், பிண்டநிலையில் ஒரு கரையில் இருக்கும் ஆன்மாவை, மறுகரையில் அண்ட நிலையில் இருக்கும் பரமான்மாவுடன் இணைக்கிற படகாக இந்த உடம்பு பயன்படுகிறது. மூழ்கும் இரும்பை மூழ்காத படகாக்குவது போல், அழியும் உடம்பை அழியா உடம்பாக்கும் விந்தையே குண்டலினி யோகம்!”
அடுத்து… மறித்தேற்றும் முறை! சித்தர்களால் சித்தர்களுக்கு மட்டுமே புலப்படுத்தப்படும் ரகசியம் இது. விந்துவை மறித்து மேலேற்றும் முறை. இந்த உல்டா சாதனையை நாத சித்தர்கள் பயில் கிறார்கள். இந்த உயரத்துக்கெல்லாம் பாயாவிடினும் காற்றைக் கையா ளும் கலையை அறிந்தால் வலுவான, பொலிவான உடலும் உள்ளமும் ஆன்மாவும் நம் வசமாவது உறுதி. வள்ளலார், ‘சாகாத்தலை வேகாக் கால்’ என்கிறார். வேறு சில சித்தர்களோ சிறிது மாற்றி, ‘சாகாக்கால் வேகாத் தலை’ என்கின்றனர். ‘சாகாக்கால்’ என்று பிராணாயாமத்தையே பேசுகின்றனர். ‘வேகாத்தலை’ என்பது சகஸ்ராரமாகிய தலையில் ஊறும் அமிழ்தைக் குறிக்கிறது. ஆக கால், தலை ஆகிய இந்த இரண்டும் நமக்குப் புரிபடாததால், ‘தலைகால் தெரியாமல் ஆடுகிறான்’ என்று ஜாடை பேசினர்.
இதேபோல், ‘விட்ட குறை தொட்ட குறை’ என்கிற பரிபாஷை, மூச்சை நாசிவழி விட்ட குறை என்றும், நடுவில் மறித்து ஏற்றி சுழு முனையில் பாயவிடுவதே தொட்ட குறை என்றும் பொருளாகிறது என தமிழ்ச் சித்தர் மரபு நூல் விளக்குகிறது.
சிவவாக்கியர் எனும் சித்தர், கிராமத்து உதாரணம் ஒன்றின் மூலம் நம்மை ஒரு பிடி பிடிக்கிறார்: ‘அடேய்… நீ காதலித்துக் கல்யாணம் செய்த உன் மனைவியை, ஒரு ரவுடி கண் வைத்து, அவளை என்னிடம் அனுப்பு என்றால், நீயே கொண்டு போய் அவனிடம் சேர்ப்பாயா? ‘வெட்டிவிடுவேன்’ என்று புறப்படு வாய் அல்லவா! அதேபோல், நாம் ஆசை ஆசையாக வளர்த்த இந்த உடம்பை அந்த எமன் கண்வைத்து ஓலைவிட்டதும் மயானம்வரை கொண்டு போய்ப் போடலாமா? முட்டாள்… காலனைக் கபளீகரம் பண்ணவேண்டாமா?’ என்கிறார்.
‘வடிவு கண்டு கொண்ட பெண்ணை
வேறொருவன் நத்தினால் விடுவனோ
அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!’
என்ன அழகான உவமை?! ஆனால், அதைத் தடுப்பது எப்படி எனும் கேள்வி வரும். இப்படிக் கேட் பவருக்குத் திருமூலர் பதில் சொல் கிறார்… ‘காற்றைப் பிடித்தால் கூற்றை (எமனை) உதைக்கலாம்!’
காற்றை எப்படிப் பிடிப்பது?
Thanks to Vikatan.
nanri : manakkudiyan.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|