ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய்

4 posters

Go down

இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் Empty இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய்

Post by இளமாறன் Wed Sep 14, 2011 12:12 am


ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தலைமையில் டில்லியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது, "மக்களால் தேர்வு செய்யப்படாத அமைப்பு ஜனநாயகத்தை அச்சுறுத்துவதா? ஹசாரேவின் லோக்பால் மசோதா நிறைவேற வாய்ப்பே கிடையாது' எனக் கூறியவர் அருணா ராய். இவர் அரசியல்வாதியல்ல; இவரும் ஒரு சமூக நல ஆர்வலர் தான். இவர் இப்படி கூறியதற்காக அரசுக்கு ஆதரவானவர் என்பதல்ல. மசோதா எம்.பி.,க்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால், லோக்பால் ஆராயப்பட வேண்டும் என்பது தான் இவரது விருப்பம்.
அருணாவின் தாய் ஹேமா. பல மொழிகளில் புலமை பெற்றவர். சமஸ்கிருதம் மட்டுமல்லாது கிரேக்க லத்தீன் மொழிகளிலும் கதைகள் எழுதியவர். அய்யரான இவர், பிரபல அய்யங்கார் வழக்கறிஞர் குடும்பத்தைச் சேர்ந்த துரைசாமி ஜெயராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் பிறந்தனர். இவர்களில் மூத்தவர் தான் அருணா. சென்னையில் 1946ம் ஆண்டு மே 26ம் தேதி பிறந்த அருணா, சென்னையில் உள்ள பிரபல கிறிஸ்துவ பள்ளியில் படித்தார். பின்னர் இவர் குடும்பம் டில்லிக்கு குடிபெயர்ந்தது. ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகத் தேர்வான அருணா, ஏழாண்டுகள் மட்டுமே அரசுப் பணியில் இருந்தார்.
அதன் பின், அந்த வேலையை உதறிவிட்டு சமூகத் தொண்டில் ஈடுபட்டார். தொழு நோயாளிகள் மருத்துவமனைக்குச் சென்று அவர்களுக்காக தொண்டு செய்தவர் அருணா. ராஜஸ்தானில் அவரது கணவர் சஞ்ஜித் பங்கர் ராய் நடத்திய ஆராய்ச்சிக் கூடத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அருணா ராய், 1987ம் ஆண்டு, தொழிலாளர் விவசாய சக்தி சங்கத்தை நிறுவினார். தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பிரசாரத்தை, நாடு முழுவதும் நடத்தியவர் அருணா. இவரது பெருமுயற்சியால், 2005ல் தகவல் அறியும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000ம் ஆண்டில் இவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின், "ரமோன் மகசேசே' விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்காக கிடைத்த ரொக்கப் பரிசை தனது அறக்கட்டளைக்காகச் செலவிட்டார். ஏராளமான சமூக நல அமைப்புகளில் இவர் உறுப்பினராக உள்ளார். 2002ல் குஜராத்தில் ஏற்பட்ட வன்முறையில் அப்பாவிகள் கொல்லப்பட்டது குறித்து விசாரித்த, மக்கள் தீர்ப்பாயத்தின் உறுப்பினராகவும் இவர் பங்காற்றியுள்ளார். 2004 முதல் 2006 வரை, மத்திய அரசின் தேசிய ஆலோசனை கவுன்சிலிலும் இவர் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் அளித்த ஆலோசனையின் பேரில் தான் ஆர்.டி.ஐ.,யும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தலைமையில் தற்போது உள்ள தேசிய ஆலோசனை கவுன்சிலிலும் அருணா ராய் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் Empty Re: இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய்

Post by பிஜிராமன் Wed Sep 14, 2011 12:19 am

ஒரு சிறந்த சமூக ஆர்வலரை பற்றிய சிறந்த பதிவு மிக்க நன்றிகள் இளா...... இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் Empty Re: இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய்

Post by இளமாறன் Wed Sep 14, 2011 12:20 am

பிஜிராமன் wrote:ஒரு சிறந்த சமூக ஆர்வலரை பற்றிய சிறந்த பதிவு மிக்க நன்றிகள் இளா...... இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் 224747944

நன்றி அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் Empty Re: இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய்

Post by அதி Wed Sep 14, 2011 12:28 am

உண்மைய வெளிப்பூச்சு இல்லாம பேசிருக்காங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் Empty Re: இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய்

Post by சிவா Wed Sep 14, 2011 1:30 am

///"மக்களால் தேர்வு செய்யப்படாத அமைப்பு ஜனநாயகத்தை அச்சுறுத்துவதா? ///

இவர்கள் மக்களை அச்சுறுத்தவில்லை. மக்கள் மாக்களாக இருப்பதை உணர்ந்து ஒரு தனி மனிதர் துவங்கிய அமைப்பு. மக்களை எதிர்த்து அல்ல, ஊழலை எதிர்த்து.


இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய் Empty Re: இவர், இப்படி...: தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு வித்திட்ட அருணா ராய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum