புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
63 Posts - 40%
heezulia
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
314 Posts - 50%
heezulia
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
21 Posts - 3%
prajai
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
3 Posts - 0%
Barushree
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_m10சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறீலங்காவை காப்பதற்காக எதையும் இழக்கத் தயாராகும் இந்திய மத்திய அரசு


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 12, 2011 12:57 pm

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 18 ஆவது கூட்டத்தொடரை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தொடர் குறித்து சிறீலங்கா அரசும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தமது நகர்வுகளை ஆரம்பித்துவிட்டன.

கடந்த மே மாதம் இடம்பெற்ற 17 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நாவின் அசைவுகளை இந்திய மத்திய அரசின் உதவியுடன் சிறீலங்கா அரசு முறியடித்திருந்தது. தான் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பில் தானே விசாரணைகளை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அவகாசம் வழங்குவதாக தெரிவித்த மேற்குலகம் தமிழ் மக்களை ஏமாற்றவும் முனைந்திருந்தது.

ஆனால் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு என்பது ஒரு விசாரணைக்குழு அல்ல என்பதைக் கூட புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு தமிழர்கள் முட்டாள்கள் என மேற்குலகம் கணக்குப் போட்டது தான் தவறானது. எனினும் மேற்குலகத்தின் இந்த ஏமாற்றுத்தனத்திற்கு தமிழகத்தின் சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சாட்டை அடியாக வீழ்ந்திருந்ததுடன், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளரையும் சென்னைக்கு இழுத்திருந்தது.

ஆனால் அதனை ஈடுசெய்து சிறீலங்கா அரசை மகிழ்ச்சிப்படுத்த இந்திய அரச தலைவர் தனது அடுத்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தார். அதுதான், ராஜீவ் காந்தியின் வழக்கில் சோடிக்கப்பட்டு குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் மீதான து£க்குத் தண்டனையின் உறுதி. இதனை நாம் நீதிக்குப்புறம்பான படுகொலை எனக் கூறினாலும் தவறில்லை. எனினும் அதனையும் ஈழத்தமிழ் மக்களினதும், தமிழக மக்களினதும் ஒருங்கிணைந்த முயற்சியும், செங்கொடியின் தியாகமும் தகர்த்துவிட்டது.

எனினும் தமிழினத்திற்கு எதிராகவே தனது வளங்கள் அனைத்தையும் விரையம் செய்துவரும் இந்திய மத்திய அரசும், அதற்கு துணைபோகும் தமிழின விரோதிகளும் ஓயப்போவதில்லை. ஆனால் அவர்களின் அடுத்த நகர்வுக்கு முன்னர் தமிழினம் தனது அடுத்த நகர்வை துரிதப்படுத்த வேண்டும். அதற்கான பாதையாக இந்த மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

செப்டெம்பர் மாதம் வரையிலும் தவணை கேட்டே, மே மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து சிறீலங்காவை இந்தியா காப்பாற்றியிருந்தது. எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை செப்டெம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தில் முன்வைக்கப்போவதாக அமெரிக்காவும் தன்னைத் தானே ஆறுதல் படுத்தியிருந்தது. தற்போது, நவம்பர் மாதம் வரையிலும் தமது அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என சிறீலங்கா அரசு எழுதிக்கொடுத்த அறிக்கையை நல்லிணக்க ஆணைக்குழு வாசித்துள்ளது. சிறீலங்காவை மிரட்டப் போவதாக புறப்பட்ட அமெரிக்காவின் தென்ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கும், அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் விமானம் புறப்படவில்லை என பின்னடித்துள்ளார்.

ஆனால் அனைத்துலக தகவல்களின்படி அமெரிக்காவின் விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் பறந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பிளேக் புறப்பட்ட விமானம் மட்டும் ஏன் பறக்கவில்லை என்பது தான் புரியாதா புதிராக உள்ளது. சிறீலங்காவை மிரட்ட
வேண்டாம் என பிளேக்கை தடுத்தது யார்? மீண்டும் இந்திய மத்திய அரசா? அவ்வாறானால், செப்டெம்பர் மாதம் சிறீலங்கா மீது அழுத்தங்கள் ஏற்படுத்தப்படும், தீர்மானங்கள் கொண்டுவரப்படும் என அமெரிக்க அதிகாரிகள் போட்ட கூச்சல்கள் எல்லாம் வெற்று வேட்டுக்களாகப் போகின்றனவா? எம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் அதனைத் தான் கூறுகின்றன.

ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கைகள் மறுபடியும் சிதறடிக்கப்படலாம், நாம் மீண்டும் ஏமாற்றப்படலாம். ஆனால் இந்த ஏமாற்றங்களை தகர்த்து, சிறீலங்கா அரசின் மீதான அழுத்தங்களை ஏற்படுத்தி எமது உரிமைகளை பெறுவதற்கான சிறந்த தெரிவாக தமிழகத்துடன், ஈழத்தமிழ் மக்கள் ஏற்படுத்திக் கொள்ளும் வலுவான உறவுதான் உள்ளது. சிறீலங்கா அரசுக்கு எதிராக தனியாக போராடும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு தமிழகத்தின் உதவிகள் இன்றியமையாதது. தாயகத்து அரசியலை பொறுத்தவரையில் ஐ.நா மனித உரிகைள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பாகவோ, சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முனையவில்லை.

சிறீலங்கா அரச படையினரின் உதவியுடன், வடக்கு - கிழக்கில் தமிழ் மக்கள் மீது கிறீஸ் பூசப்பட்ட பூதங்களை ஏவிவிடும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை கூட முழுமையாக எதிர்க்கமுடியாத அடிபணிவு நிலையில் கூட்டமைப்பு உள்ளபோது, அவர்களால் எவ்வாறு அரசியல் உரிமைகள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் குறித்து பேசமுடியும்? கிறீஸ் பூதங்கள் குறித்து காகித அறிக்கைகளை வெளியிட்டுவரும், கூட்டமைப்பு இது தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசப்போவதாக ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் சிறீலங்கா அரச படையிரின் இந்த நடவடிக்கை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்களுடன் பேசியதாக இதுவரை தகவல்கள் இல்லை. ஏன்? இதற்கான விடையை தமிழ் மக்கள் தான் தேடவேண்டும். தமிழ் மக்கள் அனுபவிக்கும் வன்முறைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கே அறிக்கை வெளியிடுவதன் மூலம் நாம் எதனைச் சாதிக்க முடியும்? எனவே தான் புலம்பெயர் தமிழ் மக்கள் இந்திய மத்திய அரசை புறம்தள்ளுவதுடன், தமிழகத்தை தம்முடன் இணைத்துக்கொள்வது, தற்போதைய இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் நகர்வாக அமையும் என கணிக்கப்படுகின்றது.

மீன் பிடிக்கும் றோலர் படகை நவீன வேவுப் படகாக மாற்றியமமைத்து பாக்கு நீரிணையினுள் புகுந்து இந்தியாவின் ஏவகணை மற்றும் அணுவாயுத இருப்பிடங்களை துல்லியமாக அறிந்துகொண்ட சீனாவின் நடவடிக்கையும், அதற்கு தனது பூரண ஆதரவுகளை வழங்கிய சிறீலங்காவின் நடவடிக்கையும் மிக முக்கியமானவை.

தனது எஃப்-7 ரக போர் விமானங்களுக்கு தேவையான வெடிகுண்டுகளை கொண்டுவந்த சிறீலங்கா வான்படையின் அன்ரனோவ்-32 ரக விமானம் சென்னையில் தரையிறங்கியதிலும் சில இராணுவ இரகசியங்கள் அடங்கியுள்ளன. போர் நிறைவடைந்த பின்னர் எஃப்-7 விமானத்திற்கு தேவையான வெடிகுண்டுகள் எதற்கு? மன்னார் கடலில் நடைபெற்ற ‘கடற்காகம்’ என்ற சிறீலங்கா அரசின் படைத்துறை பயிற்சிகள் திருமலையில் தற்போது நடப்பது ஏன்? தற்போதுள்ள சிறீலங்கா இராணுவம் எந்த நாட்டின் இராணுவமான தொழிற்படுகின்றது? பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய இராணுவம் தனது பாதுகாப்பான எல்லை என கணிப்பிட்ட தென்பகுதியில் 300,000 அன்னிய இராணுவம் மறைமுகமாக குவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவின் இந்த இராணுவமயப்படுத்தல்களுக்கு எதிராக 1987 களை போல இந்திய இராணுவத்தால் ஒரு உள்நுழைவை வருங்காலத்தில் ஏற்படுத்த முடியுமா? என்றால் அதுவும் தற்போது கேள்விக்குறியானதே.

ஓர் உறைக்குள் இரு கத்திகள் ஆகாது என்ற சீனாவின் தத்துவம் மெல்ல மெல்ல நடைமுறைச்சாத்தியமாகிவருவது கண்கூடு. ஆனால் இதனை விட்டுப்பிடிப்பதில் தான் மேற்குலகம் அதிக கரிசனை காட்டும், தமிழ் மக்களும் இதனை அனுமதிப்பதன் ஊடாகத் தான் சிறீலங்கா அரசின் வன்முறைக் கட்டுக்களில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக