Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு
2 posters
Page 1 of 1
பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனை கைது செய்ததாக செய்தி பரவியதையடுத்து பரமக்குடியில் மறியல், கலவரம் ஆகியவை ஏற்பட்டது. இதில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கலவரத்தை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து வன்முறை நீடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் முதலில் 3 பேர் உயிரிழந்தனர்.. பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளைச்சாமி, பீர்கனி, பீர்த்தக்காடு என உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் முதலில் 3 பேர் உயிரிழந்தனர்.. பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளைச்சாமி, பீர்கனி, பீர்த்தக்காடு என உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு
உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் கலவரம்! வாக்கு சிதறுமா என ஜெயலலிதா கவலை!
உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. ஒரு மாதமே இருக்கும் நிலையில் அந்தந்த அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து மும்மரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆளும் கட்சியும் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெரும் வேகத்தில் இருக்கும் இந்த நேரத்தில், தென் தமிழகத்தில் கலவரம் உருவாகி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தலித் வாக்கு வங்கி இருக்கும் பெரும்பாலான இடங்களில் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தால், தலித் வாக்குகள் பெருவதில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா பெரும் கவலையில் உள்ளார் என அதிமுக வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. ஒரு மாதமே இருக்கும் நிலையில் அந்தந்த அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து மும்மரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆளும் கட்சியும் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனு பெரும் வேகத்தில் இருக்கும் இந்த நேரத்தில், தென் தமிழகத்தில் கலவரம் உருவாகி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தலித் வாக்கு வங்கி இருக்கும் பெரும்பாலான இடங்களில் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தால், தலித் வாக்குகள் பெருவதில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா பெரும் கவலையில் உள்ளார் என அதிமுக வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு
தமிழக அரசு தலித் இளைஞர்களின் உயிரை மிகக் குறைத்து மதிப்பிடுகிறது: பரமக்குடி கலவரம் குறித்து திருமா அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளான இன்று பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய சூப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகி உள்ளனர். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. மதுரையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் மேலும் வன்முறை பரவும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய அரசு பயங்கரவாத அடக்குமுறைப் போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை இன்று காலை சுமார் 10 மணியளவில் வல்லநாடு அருகே காவல்துறையினர் வழிமறித்துக் கைது செய்துள்ளனர். காரணம் கேட்டால், ஜான்பாண்டியன் பரமக்குடி சென்றால் வன்முறை உருவாகும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், ஜான்பாண்டியன் பரமக்குடிக்கு செல்லாமலேயே மிகப் பெரிய வன்முறை காவல்துறையால் அரங்கேற்றப்பட்டுள்ளது. அப்பாவி இளைஞர்கள் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரையில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அஞ்சலி செலுத்துவற்கான அனுமதியை ஏற்கனவே வழங்கியிருந்த காவல்துறை, திடீரென அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு போட என்ன காரணம்? பல்லாயிரக்கணக்கில் மக்கள் அங்கே கூடியிருக்கும் வேளையில் ஒரு சமூகத் தலைவரை அங்கே செல்லவிடாமல் தடுப்பது அப்பகுதியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பது காவல்துறையினருக்கு தெரியாதா?
பரமக்குடி அருகே பழனிக்குமார் என்கிற பள்ளி மாணவன் ஒருவனை காரண காரியமில்லாமலேயே சாதிவெறிக் கும்பல் படுகொலை செய்துள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த அக்கரை காட்டாத காவல்துறை, அப்பகுதிக்கு ஜான்பாண்டியன் செல்லக்கூடாது என்று தொலைபேசி மூலமாக வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவரும் உடன்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் அவர் அப்பகுதிக்கு வந்தால் கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதுல் சொல்வதற்காகச் செல்லக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகப்பட்டு பரமக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்கே வரக்கூடாது எனத் தடை விதித்து, அவரைக் கைது செய்து, அதன் மூலம் ஒரு பதற்றத்தை உருவாக்கி, தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று சாக்குப்போக்குச் சொல்லி அப்பாவி இளைஞர்களைப் படுகொலை செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
எனவே இந்த வன்முறைகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணமான தவறான முடிவுகளை எடுத்த காவல்துறை அதிகாரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். படுகொலையானவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கமாக இவ்வாறான வன்முறைகளின்போது உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேலும் வழங்கி வந்துள்ளது. ஆனால், தற்போது தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்கியிருப்பது தலித் இளைஞர்களின் உயிரை மிகக் குறைத்து மதிப்பிடுவதாகவே கருத நேரிடுகிறது. ஆகவே தமிழக அரசு தம்முடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அக்குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும், அக்குடும்பங்களில் தகுதியுள்ள தலா ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட உறுதியளிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனையும் அவருடன் கைதானவர்களையும் உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
நக்கீரன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளான இன்று பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய சூப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகி உள்ளனர். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. மதுரையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் மேலும் வன்முறை பரவும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய அரசு பயங்கரவாத அடக்குமுறைப் போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களை இன்று காலை சுமார் 10 மணியளவில் வல்லநாடு அருகே காவல்துறையினர் வழிமறித்துக் கைது செய்துள்ளனர். காரணம் கேட்டால், ஜான்பாண்டியன் பரமக்குடி சென்றால் வன்முறை உருவாகும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால், ஜான்பாண்டியன் பரமக்குடிக்கு செல்லாமலேயே மிகப் பெரிய வன்முறை காவல்துறையால் அரங்கேற்றப்பட்டுள்ளது. அப்பாவி இளைஞர்கள் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரையில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அஞ்சலி செலுத்துவற்கான அனுமதியை ஏற்கனவே வழங்கியிருந்த காவல்துறை, திடீரென அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு போட என்ன காரணம்? பல்லாயிரக்கணக்கில் மக்கள் அங்கே கூடியிருக்கும் வேளையில் ஒரு சமூகத் தலைவரை அங்கே செல்லவிடாமல் தடுப்பது அப்பகுதியில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்பது காவல்துறையினருக்கு தெரியாதா?
பரமக்குடி அருகே பழனிக்குமார் என்கிற பள்ளி மாணவன் ஒருவனை காரண காரியமில்லாமலேயே சாதிவெறிக் கும்பல் படுகொலை செய்துள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த அக்கரை காட்டாத காவல்துறை, அப்பகுதிக்கு ஜான்பாண்டியன் செல்லக்கூடாது என்று தொலைபேசி மூலமாக வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவரும் உடன்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் அவர் அப்பகுதிக்கு வந்தால் கொலை செய்யப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதுல் சொல்வதற்காகச் செல்லக்கூடும் என்று காவல்துறையினர் சந்தேகப்பட்டு பரமக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்கே வரக்கூடாது எனத் தடை விதித்து, அவரைக் கைது செய்து, அதன் மூலம் ஒரு பதற்றத்தை உருவாக்கி, தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று சாக்குப்போக்குச் சொல்லி அப்பாவி இளைஞர்களைப் படுகொலை செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
எனவே இந்த வன்முறைகளுக்கும் படுகொலைகளுக்கும் காரணமான தவறான முடிவுகளை எடுத்த காவல்துறை அதிகாரிகளின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். படுகொலையானவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்கமாக இவ்வாறான வன்முறைகளின்போது உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேலும் வழங்கி வந்துள்ளது. ஆனால், தற்போது தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்கியிருப்பது தலித் இளைஞர்களின் உயிரை மிகக் குறைத்து மதிப்பிடுவதாகவே கருத நேரிடுகிறது. ஆகவே தமிழக அரசு தம்முடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அக்குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் எனவும், அக்குடும்பங்களில் தகுதியுள்ள தலா ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட உறுதியளிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த நீதி விசாரணைக்கு ஆணையிட வேண்டுமெனவும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனையும் அவருடன் கைதானவர்களையும் உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
நக்கீரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு
![பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு Arson_779215a](https://2img.net/h/www.thehindu.com/multimedia/archive/00779/arson_779215a.jpg)
மிகவும் வெறித்தனமாக இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை இந்த புகைப்படம் சுட்டிக் காட்டுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பரமக்குடி கலவரம்: சாவு எண்ணிக்கை 6ஆக உயர்வு
வெறித்தனத்துடன் தொண்டனாய் இருந்தால்
இதுவே கதி - என்று தணியும் இந்த வெறி தாகம்???
இதுவே கதி - என்று தணியும் இந்த வெறி தாகம்???
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிரியாவில் கலவரம்: சாவு 3,500 ஆக உயர்வு
» சமோவா தீவில் சுனாமி சாவு எண்ணிக்கை 144 ஆக உயர்வு
» பாகிஸ்தானில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 1,500ஆக உயர்வு
» பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
» எகிப்தில் கலவரம் நீடிப்பு சாவு 300 ஆக உயர்வு; தேர்தலுக்கு பின் பதவி விலக அதிபர் சம்மதம்
» சமோவா தீவில் சுனாமி சாவு எண்ணிக்கை 144 ஆக உயர்வு
» பாகிஸ்தானில் பலத்த மழை: சாவு எண்ணிக்கை 1,500ஆக உயர்வு
» பாலம் இடிந்து விழுந்ததில் சாவு எண்ணிக்கை 50 ஆக உயர்வு?
» எகிப்தில் கலவரம் நீடிப்பு சாவு 300 ஆக உயர்வு; தேர்தலுக்கு பின் பதவி விலக அதிபர் சம்மதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|