ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 
Dr.S.Soundarapandian
திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_m10திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

+2
balakarthik
ayyamperumal
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by ayyamperumal Sat Sep 10, 2011 10:57 am


மன்னிக்கவும் பாலா கார்த்திக் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.




இந்த உலகத்தில் நாம் மட்டுமல்ல, பில்கேட்ஸ், வாரன் பெப்பெட்போன்ற வர்கள் கூட பிச்சை
காரர்கள் தான். ஏனென்றால், பிரபஞ்ச சக்திகளிடம் நாம் பிச்சை எடுத்து தான் வாழ்க்கை நடத்துகிறோம். பிறந்த பின்புதான் பிச்சையா ? பிறக்கும் முன்பு அப்பொழுதும் பிச்சை தான். எப்படி ?

ஒரு உயிர் தாயின் கருவறையில். 10 மாதங்கள் சிறிது சிறிதாக பிச்சை எடுத்து ஒரு உடல்
வாங்கி வருகிறது. பின்பு அந்த உடலை வைத்து பல ஆட்டங்கள் அடி இறுதியில் வீழ்கிறது. இதை தான்

நந்தவனத்தில் ஒரு ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதை
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி என்று ஒரு சித்தர் பாடுகிறார்.

இது தான் மனித வாழ்க்கையும் கூட . ஆனால் இங்கு
கண்ணதாசன் என்ன கூறுகிறார் என்பதை சித்தார்களோடு ஒப்பிட்டு பார்ப்போம்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

ஊரும் உறவும் தவமிருந்து பெற்ற தாய் தந்தையும், மனைவியும், பிள்ளைகளும் புகழும்
, செல்வமும் நமக்கு நிறைந்திருக்கிறது. என்று மனிதன் சந்தோஷ பாடுகிறான். அல்லது இவைகளை தேடி அலைகிறான் . ஆனால் இது நிலையில்லை என்பதை

ஊருஞ்சதமல்ல; உற்றார் சதமல்ல ஊற்றுபெற்ற
பேருஞ்சதமல்ல ; பெண்டிர் சதமல்ல : பிள்ளைகள்
சீருஞ்சதமல்ல ' செல்வம் சதமல்ல என்கிறார் -- பட்டினத்தார்.

(சதம் அல்ல -- நிலை இல்லை
உற்று பெற்ற -- தவமிருந்து பெற்ற பெற்றோர் )

இதை கண்ணதாசன் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார். நிலையில்லாததை நிலை என நினைத்து நாம் வாழ்வதால் கடவுள் கூட நம்மை பாவமாக பார்க்கிறான் பொல.

காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்


கால் விலங்கு என்றால் என்ன ? திருமணமா ?
திருமனத்தைதான் அப்படி கூறுவார்கள். ஆனால் மாணிக்க வாசகர் என்ன கூறுகிறார் ?
வைத்த நிதி, பெண்டிர், குலம் , கல்வி என்னும்
பித்தோர் உள்ள உலகத்தே என்று கூறுகிறார்.

இந்த நான்கும்தான் நாம் தேடல். அதை தான் கவிஞர் இங்கு கூறுகிரார்.

கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா


அப்பாடா நான் செத்துவிட்டேன். இனி கவலையை இல்லை என்று நாம் சொல்ல முடியாது ஏன் தெரியுமா ?

உறுபசி என்கிற நாவலை எஸ். ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலுக்கு அவர் அளித்த முன்னுரையில்
எவற்றின் நிழல்கள் நாம் ? என்று ஒரு கேள்வியை கேட்கிறார். இதை படித்து சில வருடங்களுக்கு பிறகு இன்று தான் பதிலை கண்டறிந்தேன். மனிதன் என்பவன் நிழல் . நிஜம் என்பது ..பிறக்கும் முன்பே அவனுக்கு விதிக்கப்பட்ட செயல். அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் எதாவது ஒன்றை கொடுத்து , அதை உலகிற்கு தர சொல்கிறான் இறைவன். ஆனால் நாம் அதை செய்வதில்லை. அரிதாக சிலர்தான் தான் திறமைகளை கண்டறிந்து உலகிற்கு கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்யாத மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பார்கள். இறைவன் எனக்கு கொடுத்த திறமையை நான் கண்டறிந்து உலகிற்கு கொடுத்துவிட்டேன். இனி என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அதனால் குழப்பமும் இல்லை என்கிறார்அதை போல அவனிடம் வாங்கிய திறமையையும் திருப்பி கொடுத்துவிட்டேன். இனி என்னை வேறு ஒரு பணிக்காக இறைவன் படைக்க மாட்டான் அதனால் கவலையும் முடிந்தது என்கிறார் கவிஞர்.


கூடுதல் செய்தி :

ஐயிரண்டு திங்களாய் ................................
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டுவாய் ஆனதுவே என்று குழந்தையின் வளர்ச்சியை கழிவிற்கு சமமாய் விமர்சனம் செய்யும் சித்தர்கள் கூட ,, தாயின் கருவறையை நந்தவனம் என்கிறார்கள்.


எல்லா சுகங்களையும் பிரிந்த பட்டினத்தார் கூட அன்னையின் இறப்பிற்கு அழுகிறார்.
அன்னையிட்ட தீ அடிவயிற்றில் எரிய என்கிற வார்த்தையில் கண்ணீர் சிந்தாத மனிதர்கள் இருக்க முடியாது. சித்தர்கள் கூட தி பாசத்திற்கு அடிமை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

வாழ்க தாய்மை ! தாய்மையை போற்றுவதே வாழ்க்கை !


திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by balakarthik Sat Sep 10, 2011 11:11 am

மிக்க மிக்க நன்றி பெருமாள் மிக மிக அழகான படைப்பு இந்த பதிவு அருமயான விளக்கங்கள் உங்கள் அழகியல் பார்வை வியக்கவைக்கிறது .

இது எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் முதலாவத்துத்தான் இன்னும் இதுபோன்ற பாடல்கள் நிரயா உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by ayyamperumal Sat Sep 10, 2011 5:25 pm

balakarthik wrote:மிக்க மிக்க நன்றி பெருமாள் மிக மிக அழகான படைப்பு இந்த பதிவு அருமயான விளக்கங்கள் உங்கள் அழகியல் பார்வை வியக்கவைக்கிறது .
இது எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் முதலாவத்துத்தான் இன்னும் இதுபோன்ற பாடல்கள் நிரயா உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி பாலா கார்த்திக். பாடல்கள் நிறைய இருந்தால் கொடுங்களேன், நானும் தெரிந்து கொள்கிறேன். நன்றி நன்றி அன்பு மலர் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

( ஆமா இதுல அழகியல் உணர்ச்சினு ஒண்ணு இருக்கிறதா சொல்றங்க.. அப்படின என்னா ? )


திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by balakarthik Sat Sep 10, 2011 5:34 pm

அழகியல் பார்வை அப்படினா அழகான ஒன்றை மத்தவங்க யோசிப்பது போல் இல்லாமல் அதை வேறொருகோணத்தில் யோசிக்கும் திறமை இதை ஆங்கிலத்தில் "Aesthetic Sense" அப்படினு கூறுவார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by ayyamperumal Sat Sep 10, 2011 5:44 pm

balakarthik wrote:அழகியல் பார்வை அப்படினா அழகான ஒன்றை மத்தவங்க யோசிப்பது போல் இல்லாமல் அதை வேறொருகோணத்தில் யோசிக்கும் திறமை இதை ஆங்கிலத்தில் "Aesthetic Sense" அப்படினு கூறுவார்கள்


நீங்க நிறை கூடமா இருப்பங்களோ ? பெரிய பெரிய english எல்லாம் பேசுரங்க.

விளக்கத்திர்க்கு நன்றி ! பாடல் எங்கே ?


திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by balakarthik Sat Sep 10, 2011 5:50 pm

சரி அடுத்தபாடல்

பாடல் :- நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
படம் :- ஊமை விழிகள்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி


தினம்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
தினம்தோறும் உணவு
அது பகலில் தோன்றும் கனவு
கனவான நிலையில்
புது வாழ்வுக்கு எங்கே நினைவு


பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
பிறக்கின்ற போதே
இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம்
அவன் முன்னோர் செய்த பாவம்

நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி



ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by ரேவதி Sat Sep 10, 2011 5:57 pm

இதுவரை இதுபோன்ற பாடல்களை புரியாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.....அதற்கான உங்களின் விளக்கம் அருமை......
இது போல் பல நல்ல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by ayyamperumal Sat Sep 10, 2011 6:08 pm

ரேவதி wrote:இதுவரை இதுபோன்ற பாடல்களை புரியாமல் கேட்டு கொண்டு இருந்தேன்.....அதற்கான உங்களின் விளக்கம் அருமை......
இது போல் பல நல்ல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் நன்றி



நன்றி ! நன்றி நன்றி நன்றி


திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by kitcha Sat Sep 10, 2011 6:11 pm

நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.



அதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by ayyamperumal Sat Sep 10, 2011 6:15 pm

kitcha wrote:நல்ல பதிவு. பிடித்த பாடல்கள் அனைத்துமே.



அதே போல் - ரம்பையின் காதல் படத்தில் வரும் சமரசம் உலாவும் இடமே என்ற பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்

நன்றி !கிச்சா

முழுமையான பாடலை அனுப்ப முடியுமா ? அது எனக்கும் பிடித்த பாடல். விரைவில் வெளியிடுகிறேன்.


திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - மனிதன் நினைப்பதுண்டு பாடல் -2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum