புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
9 Posts - 4%
prajai
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
18 Posts - 4%
prajai
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ராமேஸ்வரம் Poll_c10ராமேஸ்வரம் Poll_m10ராமேஸ்வரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமேஸ்வரம்


   
   
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Sun Sep 20, 2009 7:25 pm

தேவர்கள் அக்னி வடிவமானவர்கள். அவர்களுக்கு உபசாரம் செய்வது அக்னி மூலமாகத்தான்.

அவர்களுக்கு
உணவான நைவேத்யம் வழங்குவது அக்னியின் மூலமாகத்தான். பித்ருக்கள் அதாவது
இறந்துபோன நம் முன்னோர்கள் இருப்பது ஜல ரூபமாக. அந்த ஜலக்கரையில் ஆவிகளாக
அலையும் பித்ருக்களுக்கு ஜலம் வழியேதான் அர்க்யம் விட வேண்டும். அந்த
ஜலம்தான் அவர்களுக்கு உணவு.

மனிதர்கள் மண் வடிவானவர்கள். மண்ணில்
விளைந்தவைகள்தான் மனிதர்களுக்கு உணவு, உபசாரம். ஜல வடிவிலான பித்ருக்களை
திருப்திபடுத்த நல்லதொரு ஜலக்கரைக்குச் சென்று அங்கு அவர்களை வணங்குதல்
உயர்வு தரும். தேவர்களின் ஆசிர்வாதத்தைவிட, கடவுளின் அனுக்கிரகத்தை விட,
பித்ருக்களின் அனுக்கிரகம் உடனடியான பலன் தரும். நம்முடைய முன்னோர்கள்,
நம்மீது மாறாத காதலுடையவர்கள். அந்த சூட்சுமரூபம் பெற்றபிறகு நம்மீது
அதிகமான அக்கறையும், அன்பும், நம் வளர்ச்சியின் மீது கவனமும் கொண்டவர்கள்.
பதிலுக்கு நம்மிடமிருந்தும் ஒரு கை ஜலத்தைதான் அவர்கள்
எதிர்பார்க்கிறார்கள். இது இந்துமத சம்பிரதாயம் சொல்கின்ற வழி.

எந்த தீர்த்தக்கரையில் பித்ருக்களுக்கு நீர் வார்க்கலாம் என்றால், தமிழ்நாட்டிலுள்ள மிக அற்புதமான இடம் ராமேஸ்வரம்.

கடலால்
சூழப்பட்ட தீவு போன்ற இடம். அந்த இடத்தில்தான் ராமபிரான் தன்னுடைய கைகளால்
சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். அந்த இடத்தில்தான்
ராவணனைக் கொன்ற பாபம் போவதற்காக தீர்த்தத்தில் மூழ்கி தன்னுடைய சடையை
கழுவிக் கொண்டார். ராவணனைக் கொல்வதற்கு முன்பு ஆலோசித்த இடமான கந்தமான
பர்வதம், இன்று ராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. ராமரின் பாதம்
பட்டதால் புனிதமான அந்த இடம், ராமர், சிவனை வழிபட்டதால் வைஷ்ணவ_சிவ
ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.



பன்னிரண்டாம்
நூற்றாண்டுவரை ஒரு கூரைக் கொட்டகையாக இருந்த அந்த இடம், மெல்ல மெல்ல
பல்வேறு மன்னர்களால் கோவிலாக உருவெடுத்தது. உலகப் புகழ் பெற்ற இரண்டாம்
பிராகாரத்தையும், மூன்றாம் பிராகாரத்தையும் சேதுபதி பரம்பரையில் வந்த
மன்னர்கள் சிறப்பாகக் கட்டிக்கொடுத்திருக்கிறார்க�
். ராமனின்
பாதம்பட்ட இடமல்லவா... என்று அந்த பூமியை மிக நேசத்தோடு வலம் வந்திருக்
கிறார்கள். கோவிலின் பிரமாண்டம் நம்மை அயரவைக்கிறது.

ராமனால் மட்டும் சிறப்படைகிறதா ராமேஸ்வரம்?

இல்லை.
சீதையாலும் சிறப்புற்றது. ராவணனை ஜெயித்தபிறகு மீட்டுவந்த சீதையை ‘நீ
அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டும்’ என்று ராமன் கட்டளையிட்டபோது, சீதை
மயங்கி நிற்க, வானுலகில் நின்ற தசரதர், சீதையை ‘நீ தாராளமாக தீக்குள்
இறங்கு’ என்று ஆசிர்வதிக்க, சீதை யானையை நோக்கிப் பாய்ந்த சிங்கத்தைப்போல,
மானை நோக்கிப் பாய்ந்த புலியைப்போல, தீ நோக்கிப் பாய்ந்தாள் என்று
காவியங்கள் வர்ணிக்கின்றன. தீக்குள் சீதை இறங்கியதும், அக்னிபகவான்
அலறினான். சீதையின் கற்பு தன்னை சுட்டெரிப்பதாகவும், தன்னால் தாங்க
முடியவில்லை என்றும் வேதனையில் துடித்தான்.

அவள் தூய்மையிலும் தூய்மையானவள் என்று தன் கரங்களால் ஏந்தி, சீதையை அக்னி குண்டத்திற்கு வெளியே இறக்கி வைத்தான்.

ராமர்
அந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டார். அக்னிதேவன் நிம்மதிப் பெருமூச்சு
விட்டான். அக்னியைப் பார்த்த ராமர், ‘நீ இந்த சமுத்திரத்தில் மூழ்கி
உன்னுடைய வேதனையைக் குறைத்துக்கொள்’ என்று கட்டளையிட, அக்னிபகவான் அந்தப்
பகுதி சமுத்திரத்தில் மூழ்கினார். அவர் மூழ்கிய இடத்தை அக்னி தீர்த்தம்
என்று அழைப்பார்கள். இதில் மூழ்குகிறவர்களுக்கு சகல பாபங்களும் தீரும்.
இங்கு அமர்ந்து பித்ருக்களுக்கு நீர் வார்ப்பவர்களுக்கு, பித்ருக்களின்
ஆசிர்வாதம் கிடைக்கும்; அந்த பித்ருக்களின் தாகம் தணியும் என்று ராமர்
ஆசிர்வதித்ததாக புராணக் கதைகள் சொல்கின்றன.

ஊருக்கு சற்று விலகி
நிற்கும் லக்ஷ்மண தீர்த்தத்தில், அமைதியான குளக்கரையில் போய் சங்கல்பம்
செய்துகொண்டு பிறகு அங்கிருந்து நடந்து, அக்னி தீர்த்தத்திற்கு வந்து
அலைகளற்ற, ஆழமற்ற அந்த இடத்தில் மூழ்கிக் குளிக்க வேண்டும். நாற்பத்தைந்து
முறை மூழ்கி எழுந்திருக்க வேண்டுமென்று புரோகிதர்கள் சொல்கிறார்கள். அக்னி
தீர்த்தம் என்ற அந்த சேது சமுத்திரத்தில் மூழ்கிக் குளித்தபிறகு
கோவிலுக்குப் போய், கோவிலைச் சுற்றியுள்ள இருபத்தியிரண்டு
தீர்த்தங்களிலும் நீர் மொண்டு தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

இதற்கென்று
ஆட்கள் இருக்கிறார்கள்.ஊருணியின் பெயரைச் சொல்லியும் அங்கு குளிப்பதால்
ஏற்படும் பலனைச் சொல்லியும் நிதானமாகத் தண்ணீர் ஊற்றுகிறார்கள். பிறகு
உடைகள் மாற்றிக்கொண்டு ஓர் அந்தணர் உதவியுடன் அங்கு தர்ப்பணங்கள் செய்ய
வேண்டும். வேறு எங்குமில்லாதபடி ராமேஸ்வரத்தில் விதம் விதமாக தர்ப்பணங்கள்
செய்யலாம். தாய்க்கும், தகப்பனுக்கும் மட்டுமல்லாது சிற்றப்பனுக்கும்,
மாமனுக்கு மாமனாருக்கு, மாமியாருக்குமற்றும் எல்லாவிதமான உறவுகளுக்கும்,
நண்பர்களுக்கும், பகைவர்களுக்கும், வீட்டுச் செல்லப் பிராணிகளான
பசுவுக்கும், குதிரைக்கும், நாய்க்கும் கூட நாம் தர்ப்பணம் செய்து
கொள்ளலாம். நமக்கு யாரேனும் உதவி செய்திருந்து அவர் மரணமடைந்திருந்தால்,
அவருடைய ஆன்மா குளிரும் பொருட்டும் தர்ப்பணம் செய்யலாம். இந்த சேது
நதிக்கரையில், யாரும் தர்ப்பணம் செய்வதற்கு இல்லாமல் அனாதையாய் அலைந்து
கொண்டிருக்கின்ற ஆன்மாக்களுக்கும் தர்ப்பணம் செய்யலாம்.

இவ்விஷயங்களை காசு கொடுத்து அர்த்தத்தோடு கேட்டால் இந்துமதம் எவ்வளவு பெரிய கருணாஸாகரம் என்பது புரிந்துவிடும்.

இந்தக்
கோவிலின் பரம்பரை அர்ச்சகர்களாக சரபோஜி காலத்தில் நியமிக்கப்பட்ட
மகாராஷ்டிரத்து அந்தணர்கள் இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு
சிருங்கேரி மடத்தாரால் கொடுக்கப்பட்ட ஸ்படிக லிங்கத்திற்கு, விடிகாலை பூஜை
நடக்கிறது. கருவறை வெகுதூரம் உள்ளடங்கி இருக்கிறது. தீபங்களின் மங்கலான
ஒளியில் வெகு தொலைவில் சிவலிங்கத்தை தரிசிக்க வேண்டியிருக்கிறது.

ஆடி
மாதம், ஆஷாட மாதம் என்று சொல்லிக்கொண்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய
வட இந்தியர்கள் வருகிறார்கள். சித்திரை மாதம், நேபாளத்திலிருந்து ஜனங்கள்
வருகிறார்கள்.

ஐயப்பன் சீஸனின் போதும், பொங்கல் பண்டிகையின்
போதும், அமாவசைகளின் போதும், தமிழர் கூட்டம் இருக்கிறது. எனவே, ராமேஸ்வரம்
எல்லா நாளும் கூட்டம் மிகுந்த நாளாகத்தான் காணப்படுகிறது.

அத்தி
மரத்தால் செய்யப்பட்ட ஆஞ்சநேயரின் சன்னதி ஒன்று அழகுற அமைந்திருக்கிறது.
அதர்வண வேதப் பிரயோகங்களைச் செய்கிறவர்கள், அத்திக் குச்சியை கையில்
வைத்துக்கொண்டுதான் செய்வார்கள். நரசிம்மர், இரண்ய கசிபுவை வயிறு
கிழித்துக் கொன்றபோது அவன் வயிற்றிலிருந்த அமிலம் நரசிம்மரின் விரல்களை
எரிக்கவே, அதைக் குளுமை செய்வதற்காக லக்ஷ்மிதேவி, அத்திப் பழங்களை
செருகினாள் என்று தகவல் தரும் புராணக் கதைகள் உண்டு. எனவே, மரத்தில்
சிறந்த அத்தி மரத்தில் ஆஞ்சநேயர் உருவச்சிலையை செய்திருக்கிறார்கள். உயரே
நன்கு கைதூக்கி ஆசிர்வதிக்கின்ற அந்த ஆஞ்சநேயர் சிலை அபூர்வமானதாய், நல்ல
அதிர்வுகள் கொண்டதாய் இருக்கிறது.

ஸ்ரீராமர் பாதம் என்ற இடமும்,
திருப்புல்லாணி என்று தர்ப்பாசனத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீராமருடைய
கோவிலும் தனித்தனியே அமைந்திருக்கின்றன.

ராமர் நின்று இலங்கையைப்
பார்த்ததாகச் சொல்லப்படுகின்ற ராமர் பாதம் என்ற கோவிலும் இருக்கிறது.
மிகப்பெரிய நடராஜர் சிலை உற்சவமூர்த்தியாக இருக்கின்ற சன்னதியை விசேஷமாகச்
சொல்கிறார்கள். ஒரு பாதியில் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. மறுபாதி
அடைக்கப்பட்டிருக்கிறது. அது பதஞ்சலியின் சமாதி என்றும் சொல்கிறார்கள்.

விதம் விதமான கதைகளைக் கொண்ட இந்தக் கோயில், பார்க்கப் பார்க்க பரவசம் கொடுக்கிறது.

பர்வதவர்த்தினி
முன்னால் ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பித்ருக்களின் தாகம்
தீர்க்க வந்திருக்கிறோம் என்ற நினைப்பில் சங்கல்பம் செய்து கொண்டு
சமுத்திர ஸ்நானம் செய்து, எல்லா தீர்த்தங்களிலும் நீராடி, இறைவனை
தரிசித்து, பிறகு அமைதியாக உட்கார்ந்து, கடலை வெறித்து, முன்னோரை
நினைத்துக்கொள்ள, மனதில் புதுவிதமான அமைதியும் சந்துஷ்டியும் கிடைப்பது
திண்ணம்.

கடலும், கோவிலும் தவிர வேறு இல்லை. குவிகின்ற
யாத்ரிகர்கள் தவிர வேறு எவரும் இல்லை. ஆனாலும், அத்தனை பேரையும் மீறி ஓர்
அமைதி அந்த ஸ்தலத்தில் நிச்சயம் இருக்கிறது.

பித்ருக்களை வணங்கி அந்த அமைதியை அனுபவித்துவிட்டுதான் வாருங்களேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக