Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
2 posters
Page 1 of 1
செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
புதுடில்லி: டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நாங்கள் தான் பொறுப்பு என்று கூறி, மற்றொரு பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன், இ-மெயில் அனுப்பியுள்ளது. இதில், "டில்லி ஐகோர்ட்டில் புதன்கிழமை கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், குண்டு வெடிப்பு நிகழ்த்த, அன்றையதினத்தை தேர்வு செய்தோம். இது நிற்கப்போவதில்லை. வரும் செவ்வாய்க்கிழமை, வணிக வளாகம் ஒன்றில் மீண்டும் குண்டு வெடிக்கும்' என்று, மிரட்டல் விடுத்துள்ளது.
டில்லி ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்; 75 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், நால்வர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்தில், "குண்டு வெடிப்புக்கு தாங்களே காரணம்' என, வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் - உல் - ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என்ற பயங்கரவாத அமைப்பு, harkatuljihadi2011@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலம், காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலிருந்து, போலீசாருக்கு இ-மெயில் அனுப்பி இருந்தது. அந்த இ-மெயில், இன்டர்நெட் மையம் ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டிருந்ததால், அதை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை' என, போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இ-மெயில் அனுப்பப்பட்ட இன்டர்நெட் மையத்தின் உரிமையாளர் உட்பட நால்வரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார், பாட்னா நகரில், திருடப்பட்ட ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடமும், குண்டு வெடிப்பு தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைக்குமா என, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., குல்தீப் கோடா கூறுகையில்," டில்லி குண்டுவெடிப்புக்கும், கிஷ்த்வார் மாவட்டத்திலிருந்து சென்ற இ-மெயிலுக்கும் உள்ள தொடர்பு, அதற்கு காரணமானவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்' என்றார்.
மற்றொரு இ-மெயில்: இந்நிலையில், நேற்று பிற்பகல் 12.37 மணிக்கு, மற்றொரு இ-மெயில், டில்லி மற்றும் மும்பையில் சில மீடியாக்களுக்கு வந்தது. அதில், " டில்லி குண்டு வெடிப்புக்கு நாங்களே பொறுப்பு. ஹூஜிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்தியன் முஜாகிதீன் அமைப்பான எங்களுக்குத்தான் முக்கிய பங்குள்ளது' என்று, குறிப்பிடப்பட்டுள்ளது. chotoominani5@gmail.com என்ற முகவரியில் இருந்து இந்த இ-மெயில் வந்துள்ளது. மேலும், வரும் செவ்வாய்க்கிழமை, வணிக வளாகம் ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தவிருப்பதாக அந்த இ-மெயிலில் மிரட்டல் விடுத்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த தாக்குதல் பற்றி குறிப்பிடுகையில், "டில்லி ஐகோர்ட்டில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அதிக கூட்டம் இருக்குமென்பதால், அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தோம்' என குறிப்பிட்டுள்ளனர். இந்த மெயில், இந்தியில் எழுதப்பட்டுள்ளது.
மெயில் குறித்து மத்திய உள்துறை செயலர் பன்சால் கூறுகையில், ""இந்தியன் முஜாகிதீன்கள் அனுப்பியுள்ள மெயில் உண்மையானதுதானா என்பது பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, இரண்டாவது மெயில் உண்மையானதா, இல்லை வேண்டுமென்றே திசைதிருப்புவதற்காக அனுப்பப்பட்டுள்ளதா என்ற கண்ணோட்டத்திலும் ஆராயப்பட்டு வருகிறது,'' என்றார்.
ரூ.5 லட்சம் பரிசு: குண்டுவெடிப்பு தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, தேசிய புலனாய்வு அமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சந்தேகம்: நேற்று வந்த மெயில் குறித்து நிபுணர்கள் கூறுகையில், "இந்தியன் முஜாகிதீன்கள், குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து சில நிமிடங்களில் அல்லது குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாகத்தான், இ-மெயில் மூலம் எச்சரிக்கை விடுப்பர். மேலும், ஆங்கிலம் மற்றும் உருதில் தான் மெயில் இருக்கும். அதில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்கள் கையெழுத்து இருக்கும். இந்த அடிப்படையில் இது உண்மையானதுதானா என்று பார்க்கவேண்டும்' என்றனர்.
சான்ட்ரோ காரை தேடும் போலீஸ்: டில்லி ஐகோர்ட் வாசலில் நேற்று முன்தினம் குண்டு வெடிப்பதற்கு முன், சான்ட்ரோ கார் ஒன்று அங்கு வந்ததாகவும், அந்தக் காரில் சதிகாரர்கள் வந்திருக்கலாம் என்றும், அந்தக் காரை ஓட்டி வந்த டிரைவரின் முகமும், சதிகாரர்களாக இருக்கலாம் என, போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட வரைபடத்தில் இடம் பெற்றுள்ள ஒருவரின் படமும் ஒத்துப் போவதால், காரைத் தேடும் பணியையும் போலீஸ் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். அந்த கார், டில்லி அருகேயுள்ள பரிதாபாத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதால், அங்கு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கோர்ட்டுகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: டில்லி ஐகோர்ட்டின் 5ம் எண் கொண்ட நுழைவாயிலில் வரவேற்பு அறை அருகே நேற்று முன்தினம் குண்டு வெடித்ததால், நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கறிஞர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகே கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மனுதாரர்களும் உரிய நுழைவுச் சீட்டு பெற்ற பிறகு தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதே போல, சுப்ரீம் கோர்ட்டிலும், அனைத்து நுழைவாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனையிடப்பட்ட பிறகே வழக்கறிஞர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். சிதம்பரம் ஆலோசனை: டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தடய அறிவியல் துறையினரின் ஆரம்ப கட்ட சோதனை அறிக்கைகள் கிடைத்துள்ள நிலையில், இந்த உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது.
தினமலர்
டில்லி ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்; 75 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், நால்வர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரத்தில், "குண்டு வெடிப்புக்கு தாங்களே காரணம்' என, வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் - உல் - ஜிகாதி இஸ்லாமி (ஹூஜி) என்ற பயங்கரவாத அமைப்பு, harkatuljihadi2011@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலம், காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்திலிருந்து, போலீசாருக்கு இ-மெயில் அனுப்பி இருந்தது. அந்த இ-மெயில், இன்டர்நெட் மையம் ஒன்றிலிருந்து அனுப்பப்பட்டிருந்ததால், அதை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை' என, போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இ-மெயில் அனுப்பப்பட்ட இன்டர்நெட் மையத்தின் உரிமையாளர் உட்பட நால்வரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார், பாட்னா நகரில், திருடப்பட்ட ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடமும், குண்டு வெடிப்பு தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைக்குமா என, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து, ஜம்மு - காஷ்மீர் டி.ஜி.பி., குல்தீப் கோடா கூறுகையில்," டில்லி குண்டுவெடிப்புக்கும், கிஷ்த்வார் மாவட்டத்திலிருந்து சென்ற இ-மெயிலுக்கும் உள்ள தொடர்பு, அதற்கு காரணமானவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம்' என்றார்.
மற்றொரு இ-மெயில்: இந்நிலையில், நேற்று பிற்பகல் 12.37 மணிக்கு, மற்றொரு இ-மெயில், டில்லி மற்றும் மும்பையில் சில மீடியாக்களுக்கு வந்தது. அதில், " டில்லி குண்டு வெடிப்புக்கு நாங்களே பொறுப்பு. ஹூஜிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்தியன் முஜாகிதீன் அமைப்பான எங்களுக்குத்தான் முக்கிய பங்குள்ளது' என்று, குறிப்பிடப்பட்டுள்ளது. chotoominani5@gmail.com என்ற முகவரியில் இருந்து இந்த இ-மெயில் வந்துள்ளது. மேலும், வரும் செவ்வாய்க்கிழமை, வணிக வளாகம் ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தவிருப்பதாக அந்த இ-மெயிலில் மிரட்டல் விடுத்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த தாக்குதல் பற்றி குறிப்பிடுகையில், "டில்லி ஐகோர்ட்டில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அதிக கூட்டம் இருக்குமென்பதால், அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தோம்' என குறிப்பிட்டுள்ளனர். இந்த மெயில், இந்தியில் எழுதப்பட்டுள்ளது.
மெயில் குறித்து மத்திய உள்துறை செயலர் பன்சால் கூறுகையில், ""இந்தியன் முஜாகிதீன்கள் அனுப்பியுள்ள மெயில் உண்மையானதுதானா என்பது பற்றி, தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, இரண்டாவது மெயில் உண்மையானதா, இல்லை வேண்டுமென்றே திசைதிருப்புவதற்காக அனுப்பப்பட்டுள்ளதா என்ற கண்ணோட்டத்திலும் ஆராயப்பட்டு வருகிறது,'' என்றார்.
ரூ.5 லட்சம் பரிசு: குண்டுவெடிப்பு தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என, தேசிய புலனாய்வு அமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
சந்தேகம்: நேற்று வந்த மெயில் குறித்து நிபுணர்கள் கூறுகையில், "இந்தியன் முஜாகிதீன்கள், குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து சில நிமிடங்களில் அல்லது குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாகத்தான், இ-மெயில் மூலம் எச்சரிக்கை விடுப்பர். மேலும், ஆங்கிலம் மற்றும் உருதில் தான் மெயில் இருக்கும். அதில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்கள் கையெழுத்து இருக்கும். இந்த அடிப்படையில் இது உண்மையானதுதானா என்று பார்க்கவேண்டும்' என்றனர்.
சான்ட்ரோ காரை தேடும் போலீஸ்: டில்லி ஐகோர்ட் வாசலில் நேற்று முன்தினம் குண்டு வெடிப்பதற்கு முன், சான்ட்ரோ கார் ஒன்று அங்கு வந்ததாகவும், அந்தக் காரில் சதிகாரர்கள் வந்திருக்கலாம் என்றும், அந்தக் காரை ஓட்டி வந்த டிரைவரின் முகமும், சதிகாரர்களாக இருக்கலாம் என, போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட வரைபடத்தில் இடம் பெற்றுள்ள ஒருவரின் படமும் ஒத்துப் போவதால், காரைத் தேடும் பணியையும் போலீஸ் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். அந்த கார், டில்லி அருகேயுள்ள பரிதாபாத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதால், அங்கு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கோர்ட்டுகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: டில்லி ஐகோர்ட்டின் 5ம் எண் கொண்ட நுழைவாயிலில் வரவேற்பு அறை அருகே நேற்று முன்தினம் குண்டு வெடித்ததால், நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கறிஞர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்த பிறகே கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். மனுதாரர்களும் உரிய நுழைவுச் சீட்டு பெற்ற பிறகு தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதே போல, சுப்ரீம் கோர்ட்டிலும், அனைத்து நுழைவாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனையிடப்பட்ட பிறகே வழக்கறிஞர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். சிதம்பரம் ஆலோசனை: டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தடய அறிவியல் துறையினரின் ஆரம்ப கட்ட சோதனை அறிக்கைகள் கிடைத்துள்ள நிலையில், இந்த உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
ஐயோ ஏற்கனவே நடந்த தாக்குதல் போதாது என்று மறுபடியுமா
கடவுள்தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்
கடவுள்தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
» புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
» காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது
» இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது
» தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது
» புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
» காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது
» இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது
» தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|