Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)
4 posters
Page 1 of 1
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)
பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)
பதித்தவர் Ibrahim A , , நேரம் 1/18/2011 02:56:00 PM
சில படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சியின் மிகுதியால் கண்களில் நீர் மறைத்துக்கொள்ளும்,வெகுநாட்கள் அந்த வழியில் தவிக்கும் மனது.மிகக்குறைந்த படங்களே இப்படிப்பட்ட தன்மையுடையது. இந்தப்பதிவில் பார்க்கபோகும் தி கிரீன் மைல் அந்த வகையைச்சார்ந்தது.Frank Darabont(இயக்குனர்),இவரின் முந்தைய படமான shawshank redemption IMDB No.1 ஆக பலவருடம் இருந்துவருகிறது.இந்த இரு படங்களின் கதை கருக்களும் Stephen king என்ற எழுத்தாளரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.இப்படி நாவலில் இருந்து தமிழில் படங்கள் வந்தால் "குருவி,வில்லு" போன்றவை வராதென்பது வருத்தமே!
108 வயதான பால் எட்ஜ்கொம்ப் (Tom Hanks) தன் கிழத்தோழியிடம் கதையை சொல்வதில் தொடங்குகிறது படம்.1935ம் வருடம் பால் மரணதண்டனை நிறைவேற்றும் சிறைத்தலைமை அதிகாரியாக இருக்கிறார் அவருக்கு கீழே புரூடஸ்,டீன்,கவர்னரின் சொந்தமான பெர்சி என்பவனும் துணை அதிகாரிகளாய் இருக்கின்றனர்.மரணதண்டனை பெறப்போகும் கைதிகள் தத்தம் வாழ்நாளின் இறுதி மைலை அமைதியாகவும் நிம்மதியாகவும் செலவிடவேண்டுமென்பதே அவர்கள் எண்ணம்.ஆனால் பெர்சியோ அடக்கமின்றி,இரக்கமின்றி அந்த பதவிக்கு முற்றிலும் தகுதியற்றவனாய் இருக்கிறான்.பால் அவனுக்கு,முன்பே காத்திருக்கும்,நிறைய பணம் கிடைக்கும்,மனநிலை மருத்துவமனை-சூப்பர்வைசர் வேலைக்கு போகச்சொல்கிறார்.
இரு சிறுமிகளை கற்பழித்துக்கொன்ற குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜான் அங்கு வருகிறான்.ஜெருசுலம் இயேசுவை போல அவனுக்கு நோய்களை தீர்க்கும்,சாவிலிருந்து மீட்க்கும் சக்தியும் இருக்கின்றது.அவன் கறுப்பர் இனத்தை சேர்ந்தவனாக இருக்கிறான் (ஏசுவும் கருப்பராக இருக்கலாம் என்ற வாதமுண்டு).யாருமற்ற ஒரு பொழுதில்,தன் சிறுநீரக கோளாறால்பெரும்வலி வலிகண்டு துடித்துவிழும் பால்ஐ அழைத்து அவ்விடத்தை நீவி அந்த அவதியை நீக்குகிறான்,நிரந்தரமாகவே!மற்றவர்களின் வலியை தனக்குள் அனுபவிப்பவன் ஆகையால் ஜானின் முகம் எப்போதும் கறுத்து,கண்ணீர் செறிந்து இருக்கின்றது.
ஜான்,பெர்சி,ப்ருடசிடமிருந்து விளையாட்டுக்காட்டி தப்பிக்கும் வெள்லெலியொன்று அங்கிருந்த எட்வர்ட் என்னும் கைதியிடம் தஞ்சம்புகுந்து அவன் செல்லமாய் மாறுகிறது.அவனால் Mr.ஜிங்கிள்ஸ் என பெயர் சூட்டிக்கொள்கிறது.பாசமோ,காதலோ எங்கேயும் உதிக்கலாம் என்பதை போல் அவர்களுக்கிடையே நட்பு பெருகி சில நாட்களில் அவனிடம் பயிற்சி பெற்று சிறு வித்தைகள் கற்று சிறை காவலர்கள் அனுமதியுடன் கவர்னரிடம் செய்து காட்ட ஏற்பாடாகிறது.
அந்த நட்பிலும்,சந்தோஷத்திலும் எரிச்சலுரும் பெர்சி,தன் கூண்டை விட்டு வெளியே வந்த அந்த எலியை பூட்ஸ் காலால் மிதித்து கொல்கிறான்.எட்வர்ட் பெருங்குரலெடுத்து அழத்தொடங்குகின்றான்.அதே சிறையில் இருக்கும் இன்னொரு சைக்கோ கொலையாளியான வார்டனும் கத்தி மகிழ்கிறான்(இவனுடைய பாத்திரமும் படத்தில் தெளிவாக விவரிக்கப்படுகின்றது).பெருமிதத்தில் சிரித்துகொண்டே போகும் பெர்சியை அனைவரும் விஷப்புழுவென பார்கின்றனர்.இந்த காட்சியில் பெர்சியாக நடித்திருக்கும் Doug Hutchison ஐ பார்க்கும் போது அப்படியொரு ஆத்திரம் வரும் நமக்கு.(கதாபாத்திரத்தின் வெற்றி!).ஆனாலும் இறந்து போன எலியை எடுத்து ஜான் அதற்க்கு உயிர் ஊதுகின்றான்.அது முன்னிலும் வேகமாய் ஓடி தன் நண்பன் எட்வர்ட்ஐ சேருகிறது.
அங்கே மரணதண்டனை என்பது நாற்காலியில் அமரவைத்து அதிவேக மின்சாரத்தை பாய்ச்சி கொல்வதாகும்.கை,கால்கள் கட்டப்பட்டு,தலையில் இரும்புக்கவசம் அணிவித்து,கவசத்திற்கும் உச்சந்தலைக்குமிடயே ஈரப்பஞ்சை வைப்பதினால்.மின்சாரம் வேகமாய் கடத்தப்பட்டு,நேராக மூளையை தாக்கி,உடனே மரணம் ஏற்படும்.மரணத்தின் வலியை குறைக்கவே அது.
எட்வர்டிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளில் ,பெர்சி முன்வந்து தான் வேறு வேலைக்கு செல்ல விரும்புவதாகவும்,இதை தான் நினைவேற்ற நினைப்பதாக கூறுகின்றான்.எட்வர்ட் மீதுள்ள துவேஷத்தால்,நீரின்றி வெறும் பஞ்சினை வைக்கின்றான்,அதனால் எட்வர்ட் வெகுநேரம் துடிதுடித்து கருகிச்சாகிறான்.அவனது மரணம் காணச்சகியாததாக இருக்கின்றது.இதையடுத்து பெர்சியை பாலும்,ப்ருடசும் அடித்து துவைகின்றனர்.எதிர்பாராமல் அவன் ஜானின் கைகளில் சிக்கிக் கொள்கிறான்.தன்னுடன் வைத்திருக்கும் பிறரின் துன்பக்கழிவுகளை,வலிகளை அவனுள் இறக்குகின்றான்.பித்துப்பிடித்தவனை போல பெர்சி சிறையிலிருக்கும் வார்டனை சுட்டு கொல்கிறான்.பின்னர் தான் சூபர்வைசராக சேர விரும்பிய மனநிலை மருத்துவமனைக்கே ஒரு நோயாளியாய் சேர்க்கப்டுவதாக அவன் கதை முடிகிறது.
மூளைகட்டியால் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனைவி இறந்து கொண்டிருப்பதாக புலம்பிக்கொண்டிருக்கும் தன் உயர் அதிகாரி வாலின் வீட்டிற்க்கு ஜெயிலில் இருந்து ஜானை சிறை அதிகாரிகள் கொண்டு போகின்றனர்,அவர் மனைவியை நோயிலிருந்து மீட்கின்றனர்.பின்பொரு நாளில் பெர்சி சுட்டுகொன்ற சைகோ வார்டன் தான் அந்த இரு குழந்தைகளையும் கொன்றதாக தெரிகின்றது.அப்பிஞ்சுகளை காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து ஜான் அவ்வழக்கில் சிக்குகின்றான்.
சிறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த அற்புதபடைப்பை வெளியே விட்டுவிட விரும்புகின்றனர்.. ஆனால் அவன் இவ்வுலகம் துயரமிக்கது என்றும் இனி வாழவிருப்பமில்லை என்று கூறும்போது,அந்த பாத்திரத்தின் மீது மரியாதை கொண்டு கலங்குகிறோம்.(அதிசய சக்தி கொண்ட ரஜினி அதை வைத்து பட்டம்,கொசு போன்றவற்றை சிரத்தையாக பிடிப்பதை இங்கே நினைவு படுத்திக்கொள்ளுங்கள்).ஜானின் இறுதி நாளும் வருகின்றது,இறைவனின் மகத்தான நாசரேத்தின் அதிசயத்தை யூதர்கள் சிலுவையில் அறைந்ததை போல் நாற்காலியில் அறைந்து மின்சாரம் பாய்ச்சிக்கொல்கிறான் ஜான்.அன்றிலிருந்து மீளாத்துயரில் ஆழ்கிறான்.
அதன் பின் ஜானால் உயிர் பெற்ற Mr.ஜிங்கில்சும்,பாலும் இறவாமல் வாழ்கின்றனர்.தன் நெருங்கியவர்கள் ஒவ்வொருவர்களின் மரணமும் அவனை கடந்து செல்கிறது.வாழ்வு அவனுக்கு பெரும்தண்டனையாக இருப்பாதாக எண்ணுகிறான்,ஆம் ஜானை கொன்றதற்கு தண்டனையாக!
அன்புடன்
Ibrahim A
http://rojavinkadhalan.blogspot.com/2011/01/green-mile-1999.html
பதித்தவர் Ibrahim A , , நேரம் 1/18/2011 02:56:00 PM
சில படங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போதே உணர்ச்சியின் மிகுதியால் கண்களில் நீர் மறைத்துக்கொள்ளும்,வெகுநாட்கள் அந்த வழியில் தவிக்கும் மனது.மிகக்குறைந்த படங்களே இப்படிப்பட்ட தன்மையுடையது. இந்தப்பதிவில் பார்க்கபோகும் தி கிரீன் மைல் அந்த வகையைச்சார்ந்தது.Frank Darabont(இயக்குனர்),இவரின் முந்தைய படமான shawshank redemption IMDB No.1 ஆக பலவருடம் இருந்துவருகிறது.இந்த இரு படங்களின் கதை கருக்களும் Stephen king என்ற எழுத்தாளரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.இப்படி நாவலில் இருந்து தமிழில் படங்கள் வந்தால் "குருவி,வில்லு" போன்றவை வராதென்பது வருத்தமே!
108 வயதான பால் எட்ஜ்கொம்ப் (Tom Hanks) தன் கிழத்தோழியிடம் கதையை சொல்வதில் தொடங்குகிறது படம்.1935ம் வருடம் பால் மரணதண்டனை நிறைவேற்றும் சிறைத்தலைமை அதிகாரியாக இருக்கிறார் அவருக்கு கீழே புரூடஸ்,டீன்,கவர்னரின் சொந்தமான பெர்சி என்பவனும் துணை அதிகாரிகளாய் இருக்கின்றனர்.மரணதண்டனை பெறப்போகும் கைதிகள் தத்தம் வாழ்நாளின் இறுதி மைலை அமைதியாகவும் நிம்மதியாகவும் செலவிடவேண்டுமென்பதே அவர்கள் எண்ணம்.ஆனால் பெர்சியோ அடக்கமின்றி,இரக்கமின்றி அந்த பதவிக்கு முற்றிலும் தகுதியற்றவனாய் இருக்கிறான்.பால் அவனுக்கு,முன்பே காத்திருக்கும்,நிறைய பணம் கிடைக்கும்,மனநிலை மருத்துவமனை-சூப்பர்வைசர் வேலைக்கு போகச்சொல்கிறார்.
இரு சிறுமிகளை கற்பழித்துக்கொன்ற குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஜான் அங்கு வருகிறான்.ஜெருசுலம் இயேசுவை போல அவனுக்கு நோய்களை தீர்க்கும்,சாவிலிருந்து மீட்க்கும் சக்தியும் இருக்கின்றது.அவன் கறுப்பர் இனத்தை சேர்ந்தவனாக இருக்கிறான் (ஏசுவும் கருப்பராக இருக்கலாம் என்ற வாதமுண்டு).யாருமற்ற ஒரு பொழுதில்,தன் சிறுநீரக கோளாறால்பெரும்வலி வலிகண்டு துடித்துவிழும் பால்ஐ அழைத்து அவ்விடத்தை நீவி அந்த அவதியை நீக்குகிறான்,நிரந்தரமாகவே!மற்றவர்களின் வலியை தனக்குள் அனுபவிப்பவன் ஆகையால் ஜானின் முகம் எப்போதும் கறுத்து,கண்ணீர் செறிந்து இருக்கின்றது.
ஜான்,பெர்சி,ப்ருடசிடமிருந்து விளையாட்டுக்காட்டி தப்பிக்கும் வெள்லெலியொன்று அங்கிருந்த எட்வர்ட் என்னும் கைதியிடம் தஞ்சம்புகுந்து அவன் செல்லமாய் மாறுகிறது.அவனால் Mr.ஜிங்கிள்ஸ் என பெயர் சூட்டிக்கொள்கிறது.பாசமோ,காதலோ எங்கேயும் உதிக்கலாம் என்பதை போல் அவர்களுக்கிடையே நட்பு பெருகி சில நாட்களில் அவனிடம் பயிற்சி பெற்று சிறு வித்தைகள் கற்று சிறை காவலர்கள் அனுமதியுடன் கவர்னரிடம் செய்து காட்ட ஏற்பாடாகிறது.
அந்த நட்பிலும்,சந்தோஷத்திலும் எரிச்சலுரும் பெர்சி,தன் கூண்டை விட்டு வெளியே வந்த அந்த எலியை பூட்ஸ் காலால் மிதித்து கொல்கிறான்.எட்வர்ட் பெருங்குரலெடுத்து அழத்தொடங்குகின்றான்.அதே சிறையில் இருக்கும் இன்னொரு சைக்கோ கொலையாளியான வார்டனும் கத்தி மகிழ்கிறான்(இவனுடைய பாத்திரமும் படத்தில் தெளிவாக விவரிக்கப்படுகின்றது).பெருமிதத்தில் சிரித்துகொண்டே போகும் பெர்சியை அனைவரும் விஷப்புழுவென பார்கின்றனர்.இந்த காட்சியில் பெர்சியாக நடித்திருக்கும் Doug Hutchison ஐ பார்க்கும் போது அப்படியொரு ஆத்திரம் வரும் நமக்கு.(கதாபாத்திரத்தின் வெற்றி!).ஆனாலும் இறந்து போன எலியை எடுத்து ஜான் அதற்க்கு உயிர் ஊதுகின்றான்.அது முன்னிலும் வேகமாய் ஓடி தன் நண்பன் எட்வர்ட்ஐ சேருகிறது.
அங்கே மரணதண்டனை என்பது நாற்காலியில் அமரவைத்து அதிவேக மின்சாரத்தை பாய்ச்சி கொல்வதாகும்.கை,கால்கள் கட்டப்பட்டு,தலையில் இரும்புக்கவசம் அணிவித்து,கவசத்திற்கும் உச்சந்தலைக்குமிடயே ஈரப்பஞ்சை வைப்பதினால்.மின்சாரம் வேகமாய் கடத்தப்பட்டு,நேராக மூளையை தாக்கி,உடனே மரணம் ஏற்படும்.மரணத்தின் வலியை குறைக்கவே அது.
எட்வர்டிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளில் ,பெர்சி முன்வந்து தான் வேறு வேலைக்கு செல்ல விரும்புவதாகவும்,இதை தான் நினைவேற்ற நினைப்பதாக கூறுகின்றான்.எட்வர்ட் மீதுள்ள துவேஷத்தால்,நீரின்றி வெறும் பஞ்சினை வைக்கின்றான்,அதனால் எட்வர்ட் வெகுநேரம் துடிதுடித்து கருகிச்சாகிறான்.அவனது மரணம் காணச்சகியாததாக இருக்கின்றது.இதையடுத்து பெர்சியை பாலும்,ப்ருடசும் அடித்து துவைகின்றனர்.எதிர்பாராமல் அவன் ஜானின் கைகளில் சிக்கிக் கொள்கிறான்.தன்னுடன் வைத்திருக்கும் பிறரின் துன்பக்கழிவுகளை,வலிகளை அவனுள் இறக்குகின்றான்.பித்துப்பிடித்தவனை போல பெர்சி சிறையிலிருக்கும் வார்டனை சுட்டு கொல்கிறான்.பின்னர் தான் சூபர்வைசராக சேர விரும்பிய மனநிலை மருத்துவமனைக்கே ஒரு நோயாளியாய் சேர்க்கப்டுவதாக அவன் கதை முடிகிறது.
மூளைகட்டியால் கொஞ்சம் கொஞ்சமாய் தன் மனைவி இறந்து கொண்டிருப்பதாக புலம்பிக்கொண்டிருக்கும் தன் உயர் அதிகாரி வாலின் வீட்டிற்க்கு ஜெயிலில் இருந்து ஜானை சிறை அதிகாரிகள் கொண்டு போகின்றனர்,அவர் மனைவியை நோயிலிருந்து மீட்கின்றனர்.பின்பொரு நாளில் பெர்சி சுட்டுகொன்ற சைகோ வார்டன் தான் அந்த இரு குழந்தைகளையும் கொன்றதாக தெரிகின்றது.அப்பிஞ்சுகளை காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்து ஜான் அவ்வழக்கில் சிக்குகின்றான்.
சிறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த அற்புதபடைப்பை வெளியே விட்டுவிட விரும்புகின்றனர்.. ஆனால் அவன் இவ்வுலகம் துயரமிக்கது என்றும் இனி வாழவிருப்பமில்லை என்று கூறும்போது,அந்த பாத்திரத்தின் மீது மரியாதை கொண்டு கலங்குகிறோம்.(அதிசய சக்தி கொண்ட ரஜினி அதை வைத்து பட்டம்,கொசு போன்றவற்றை சிரத்தையாக பிடிப்பதை இங்கே நினைவு படுத்திக்கொள்ளுங்கள்).ஜானின் இறுதி நாளும் வருகின்றது,இறைவனின் மகத்தான நாசரேத்தின் அதிசயத்தை யூதர்கள் சிலுவையில் அறைந்ததை போல் நாற்காலியில் அறைந்து மின்சாரம் பாய்ச்சிக்கொல்கிறான் ஜான்.அன்றிலிருந்து மீளாத்துயரில் ஆழ்கிறான்.
அதன் பின் ஜானால் உயிர் பெற்ற Mr.ஜிங்கில்சும்,பாலும் இறவாமல் வாழ்கின்றனர்.தன் நெருங்கியவர்கள் ஒவ்வொருவர்களின் மரணமும் அவனை கடந்து செல்கிறது.வாழ்வு அவனுக்கு பெரும்தண்டனையாக இருப்பாதாக எண்ணுகிறான்,ஆம் ஜானை கொன்றதற்கு தண்டனையாக!
அன்புடன்
Ibrahim A
http://rojavinkadhalan.blogspot.com/2011/01/green-mile-1999.html
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)
உங்கள் பதிவிற்கு நன்றி, உங்கள் பின்னூட்டம் மூலம் இந்த படத்தைப் பற்றிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.
படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்
படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பார்த்தே தீரவேண்டிய படம்:The Green Mile (1999)
நன்றி பகிர்வுக்கு..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Similar topics
» சென்ற வழி பார்த்தே நின்றேனே !!!
» Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!
» "Mile Sur Mera Tumhara" பாடலுக்கு கை நிழல் அசைவு...!!
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
» Green Tea – பருகுங்கள், பயனடையுங்கள்!!
» "Mile Sur Mera Tumhara" பாடலுக்கு கை நிழல் அசைவு...!!
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|