Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
+3
உமா
ஸ்ரீஜா
krishnaamma
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
எனக்கு தெரிந்த சில கேரளா சமையல்களை இங்கு பகிறுகிறேன் செப்.9 -2011 ஓணம் வருகிறது அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துகள்
Last edited by krishnaamma on Thu May 12, 2016 12:14 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடை பிரதமன்
அடை பிரதமன் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும். நாம் செய்யும் 'பால் கொழுக்கட்டை' போன்றது. கொஞ்சம் செய்முறை வேறு ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.
தேவையானவை :
அரிசி 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் 4 டம்ளர்
வெல்லம் 2 டம்ளர்
ஏலக்காய் 6
பால் 1 டம்ளர்
செய்முறை:
அரிசியை ஊற வைத்து மையாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி , இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த பின், நன்கு ஆற விடவும்.
வெந்த மாவை இலை லிருந்து உரித்து எடுத்து ,மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒர் வாணலி இல் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.
வெல்லத்தை பொடி செய்து போடவும்.
நன்கு வெந்த தும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.
அடைபிரதமன் தயார்.
தேவையானவை :
அரிசி 1/2 டம்ளர்
தேங்காய்ப்பால் 4 டம்ளர்
வெல்லம் 2 டம்ளர்
ஏலக்காய் 6
பால் 1 டம்ளர்
செய்முறை:
அரிசியை ஊற வைத்து மையாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி , இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
வெந்த பின், நன்கு ஆற விடவும்.
வெந்த மாவை இலை லிருந்து உரித்து எடுத்து ,மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஒர் வாணலி இல் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.
வெல்லத்தை பொடி செய்து போடவும்.
நன்கு வெந்த தும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.
அடைபிரதமன் தயார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
ஆஹா செய்முறையை பார்க்கும் போதே எச்சில் ஊறுகிறது அம்மா .......... நான் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ...............
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
பால் பாயசம்
தேவையானவை :
அரிசி - 1 கப்
பால் - 4 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 12
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2 மேஜைக் கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் நெய் விட்டு, அதில் அரிசியைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலி இல் ஒரு கப் அரிசிக்கு, ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்த்து வேக விடவும்.
பால் ,தண்ணீர் கலவையில் அரிசி நன்கு வெந்து குழைய வேண்டும்.
அடிக்கடி கிளறிவிடவும்.
அரிசி நன்கு வெந்ததும், மீதமிருக்கும் பாலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.
பால் சுண்டி வரும்போது தீயை மிதமாக வைத்துவிட்டு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
பால் பாயசம் தயார்.
அரிசி - 1 கப்
பால் - 4 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 12
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2 மேஜைக் கரண்டி
செய்முறை:
ஒரு வாணலியில் நெய் விட்டு, அதில் அரிசியைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலி இல் ஒரு கப் அரிசிக்கு, ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்த்து வேக விடவும்.
பால் ,தண்ணீர் கலவையில் அரிசி நன்கு வெந்து குழைய வேண்டும்.
அடிக்கடி கிளறிவிடவும்.
அரிசி நன்கு வெந்ததும், மீதமிருக்கும் பாலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.
பால் சுண்டி வரும்போது தீயை மிதமாக வைத்துவிட்டு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
பால் பாயசம் தயார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
இதுவும் சூப்பர் அம்மா
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
அவியல்
அவியல் - இது எங்க வீட்டில் 'ஹிட்' புளியோதரை , அடை இவற்றுக்கு ரொம்ப நல்ல சைட் டிஷ். சடத்தில் போட்டும் சாப்பிடலாம்.
தேவையானவை:
உ.கிழங்கு – 1
சேனைக்கிழங்கு -1 துண்டு
பூசணிக்காய் – 1 துண்டு
சௌ சௌ - 1/2
பீன்ஸ் – 4
காரட் – 1
வாழைக்காய் – 1 சிறியது
தயிர் – 1/4 டம்ளர்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
'அவியல்' ரெடி
தேவையானவை:
உ.கிழங்கு – 1
சேனைக்கிழங்கு -1 துண்டு
பூசணிக்காய் – 1 துண்டு
சௌ சௌ - 1/2
பீன்ஸ் – 4
காரட் – 1
வாழைக்காய் – 1 சிறியது
தயிர் – 1/4 டம்ளர்
ப.மிளகாய் – 5 -6
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.
தண்ணீரை வடிய விடக்கூடாது.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.
'அவியல்' ரெடி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓணம் ஸ்பெஷல் - ஓலன்
நன்றி ஸ்ரீ ஜா கேரளா வின் சமையல் இல் நிறைய எண்ணை இருக்காது. ரொம்ப சத்தானது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிளகாய் அவியல்
கறிகாய் இல்லாமல் செய்யும் அவியல் இது
தேவையானவை:
துவரம் பருப்பு – 1/2 கப்
மிளகாய் வற்றல் – 10
தக்காளி – 1 நறுக்கியது
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
பருப்பு, மிளகாய், தக்காளி மூன்றையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலி இல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த பருப்பை ஊற்றி உப்பு போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
தேவையானவை:
துவரம் பருப்பு – 1/2 கப்
மிளகாய் வற்றல் – 10
தக்காளி – 1 நறுக்கியது
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
பருப்பு, மிளகாய், தக்காளி மூன்றையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலி இல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த பருப்பை ஊற்றி உப்பு போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எரிசேரி
இதுவும் எங்க வீட்டில் அனைவரும் விரும்பி உண்ணுவது
தேவையானவை:
வாழை காய் 1
சேனைக்கிழங்கு 1 துண்டு ( வாழை காய் இன் அளவு இருக்கணும் )
அரைக்க :
தேங்காய் 1 பெரிய முடி
மிளகாய் வற்றல் 10
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தேங்காய் என்னை 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
சேனைக்கிழங்கு , வாழை காய் இரண்டையும் நறுக்கி துளி மஞ்சள் பொடி உப்பு போட்டு வேகவைக்கக்வும்.
வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
வெந்த காய்களை போட்டு நன்கு கிளறவும்.
அறைக்க குடுத்துள்ள பொருட்களை மசிய அறைக்கவும்.
வெந்த காயுடன் கோட்டவும்.
வேண்டுமானால் உப்பு போடவும்.
நன்கு கலந்து, மீதமுள்ள தேங்காய் எண்ணையும் விட்டு, கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நல்ல மணமான 'எரிசேரி' தயார்.
சாதத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம், அப்பளாம் பொரித்தால் தொட்டுக்கொள நல்லா இருக்கும்
தேவையானவை:
வாழை காய் 1
சேனைக்கிழங்கு 1 துண்டு ( வாழை காய் இன் அளவு இருக்கணும் )
அரைக்க :
தேங்காய் 1 பெரிய முடி
மிளகாய் வற்றல் 10
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
உப்பு
தாளிக்க:
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
தேங்காய் என்னை 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
செய்முறை:
சேனைக்கிழங்கு , வாழை காய் இரண்டையும் நறுக்கி துளி மஞ்சள் பொடி உப்பு போட்டு வேகவைக்கக்வும்.
வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.
வெந்த காய்களை போட்டு நன்கு கிளறவும்.
அறைக்க குடுத்துள்ள பொருட்களை மசிய அறைக்கவும்.
வெந்த காயுடன் கோட்டவும்.
வேண்டுமானால் உப்பு போடவும்.
நன்கு கலந்து, மீதமுள்ள தேங்காய் எண்ணையும் விட்டு, கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நல்ல மணமான 'எரிசேரி' தயார்.
சாதத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம், அப்பளாம் பொரித்தால் தொட்டுக்கொள நல்லா இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓலன்
தேவையானவை:
பூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் 1 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு
செய்முறை:
தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால், இரண்டாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.
இரண்டாவது எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும்.
வெந்ததும், கீறிய பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம்.
கடைசியில், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும், ஓலன் தயார்.
பூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )
பச்சை மிளகாய் 3
தேங்காய்த் துருவல் 1 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு
செய்முறை:
தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால், இரண்டாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.
இரண்டாவது எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும்.
வெந்ததும், கீறிய பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம்.
கடைசியில், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும், ஓலன் தயார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» ஓணம் ஸ்பெஷல்!
» ஓணம் ஸ்பெஷல் சமையல்
» ஓணம் ஸ்பெஷல் -கூட்டுக்கறி!
» ஓணம் ஸ்பெஷல் – புளி சேரி!
» ஓணம் ஸ்பெஷல்!
» ஓணம் ஸ்பெஷல் சமையல்
» ஓணம் ஸ்பெஷல் -கூட்டுக்கறி!
» ஓணம் ஸ்பெஷல் – புளி சேரி!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|