புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_lcapகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_voting_barகலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 7:36 pm

உங்களை மாதிரி ஒருத்தரைப் பார்க்கவே முடியாது! இப்படி நாம் சிலரிடம் சொல்வதுண்டு!

இந்த விஷயத்தைச் செய்யணும்னா, அதுக்குன்னே ஒருத்தன் பிறந்துதான் வரணும்! கஷ்டமான ஒரு செயலை பற்றி இப்படிக் கூறுவதுண்டு. இவை இரண்டையும் சேர்த்து இந்தக் காரியத்தைச் செய்ய உங்களை மாதிரி ஒருத்தரால்தான் முடியும். அப்படி ஒருதர் அவதரிக்க நீங்கதான் மனம் வைக்கணும்! என்று பலர் கூடி ஒருவரிடம் வேண்டிக் கொண்டார்கள் என்றால் அவர் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்?

அந்தப் பராக்ரமசாலி, பரமசிவன். அவரிடம் வேண்டிக் கொண்டவர்கள் தேவர்களும், முனிவர்களும். அவர்களின் வேண்டுதலின் பலனாகப் பிறந்தவன் முருகன். இதெல்லாம் பக்தியின் வாசக பக்தர்களான உங்களுக்குத் தெரியும். அந்த சிவபாலன் தந்தை சிவபிரானின் அம்சத்தைத் தன்னுள் கொண்டவனாக, சிவ முருகனாக காட்சி தரும் ஒரு கோயிலுக்குத்தான் இப்போது நாம் செல்லப் போகிறோம். இந்த முருகன் இருப்பது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கோயில் இருப்பது வெளிநாடாக இருந்தாலும், பாஸ்போர்ட், விசா என்று எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்தே பக்தி பூர்வமாகப் பயணித்து தரிசிப்போம் வாருங்கள். அயல்நாட்டுக் கோயில்களை மனம் குளிர தரிசனம் செய்து வரும் நாம் இப்போது செல்லப்போவது ஒரு வளைகுடாப் பகுதிக்கு. வளைகுடாப் பகுதி என்றால் குன்றுகள் இருக்கும்தானே! குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனின் இருப்பிடம் அல்லவா!

இக்கோயிலும் ஆறுமுக வேலனின் அமைவிடம்தான். இங்கே அவன் சிவமுருகனாகக் காட்சியளிக்கிறான். கோயிலும் சிவமுருகன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கோயில் அமைந்திருப்பது, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள காங்கார்ட் எனும் ஊரில். மிகவும் பிரபலமான சான்ஃப்ரான்சிஸ்கோ நகரின் அருகில் தான் இவ்வூர் உள்ளது. உலகப் புகழ் பெற்ற கோல்டன் கேட் பிரிட்ஜ் இருப்பதும் இங்குதான். கலிஃபோர்னியாவை பே ஏரியா என்றும் அழைப்பர்.

சைனா டவுன் மற்றும் கோல்டன் பாலத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் அலை மோதுவர். அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் கோடை வெயில் சுட்டுப் பொசுக்கும்போது இங்கு சிலுசிலுவென்று இருக்கும். அக்னியில் பிறந்தாலும் முருகன் தன் பக்தர்களைக் கருணை மழையால் குளிர்விப்பவன் அல்லவா! அவன் இருக்கும் இடம் மழையால் குளுமையாக இருப்பதில் என்ன ஆச்சர்யம்? சிலிக்கான் வேலி, நாபா வேலி, சாக்ரமன்டோ ஆகிய ஊர்களுக்கு மத்தியில் உள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து இந்தியர்களும் சிவமுருகன் ஆலயத்திற்கு வந்து வழிபடுகின்றனர். அமெரிக்கா வாழ் இந்தியர்களை இணைத்து இந்து மதத்தை வளர்க்கும் மிக முக்கியமான தலமாக விளங்குகிறது காங்கார்ட் சிவமுருகன் கோயில்.

அமைதியும் இயற்கை அழகும் ஒரு சேர இருக்கும் தலம். மிதமான தட்பவெப்பமும் நிலவுவதால் இந்தியர்கள் அநேகர் இங்கு வசிக்கின்றனர்! கோபுரம், கொடிமரம் என்றெல்லாம் தரிசிக்கும் ஆவலோடு வந்திருந்தால் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படியெல்லாம் இல்லாத, பெரிய தொழிற்சாலை போன்ற அமைப்பில் உள்ள கோயில் இது. தொழிற்சாலை பெயர்ப்பலகை போல் எழுதப்பட்டு இருந்தாலும், சிவமுருகன் ஆலயம் என்னும் பெயரை பார்த்ததும் ஈசனே குழந்தை வடிவத்தில் உதித்த அற்புத நிகழ்வினை குறிக்கும் கந்தபுராணப் பாடல் நினைவில் வருகிறது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பமும் இன்றி
வேதம் கடந்து நின்ற விமலா ஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க


ஈசனும் முருகனும் வேறு வேறல்ல, இருவரும் ஒருவரே என்கிறார் கச்சியப்ப சிவசாராரியர். தேவர்கள் எல்லோரும் வந்து சிவனிடம் வேதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட விமலனே, உனக்கு நிகரான ஒப்பில்லாத குமரனை உன்னிடமிருந்தே தந்திடல் வேண்டும். தந்தையில்லாத பரம்பொருளான பரமசிவனை தந்தையாக கொண்டவன் முருகன். காங்கார்ட் வந்தமர்ந்திருக்கும் கந்தவேளின் தல வரலாறு என்ன தெரியுமா?

இக்கோயிலை கட்ட வேண்டும் என முதல் முயற்சி எடுத்தவர் ஓர் அமெரிக்கர். அமெரிக்காவில் பிறந்து பின்னர் ஹவாயில் இருக்கும் கௌவை ஆதினத்தின் மிக முக்கியமான குருவாகிய சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் தான் அவர். இந்து மதத்தின் மகத்துவம் அயல்நாட்டில் அறியப்பட மாபெரும் பங்காற்றியிருக்கிறார். இவர் அயல்நாட்டிலுள்ள பல இந்து கோயில்களின் கும்பாபிஷேகம் இவரது தலைமையில் நடைபெற்றிருக்கின்றன. அமெரிக்க வாழ் இந்துக்கள் சென்று வழிபட கோயில் ஏதும் இல்லாமல் வெறும் வேதாந்த சென்டர்களே இருந்தன. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை. அப்படிப்பட்ட காலகட்டமான 1957ஆம் வருடம் முதன்முதலாக ஒரு சிறிய மர வீட்டில் இக்கோயில் அமைந்தது.

கணபதி, சிவன், முருகன் ஆகிய மூர்த்திகளுக்கு அங்கே வழிபாடு நடத்தி வந்திருக்கிறார்கள். அப்போது பழனி சுவாமி சிவன்கோயில் என்றே இக்கோயில் இடம் பெற்றிருந்தது. இந்தியர்கள் வேலை நிமித்தம் கலிபோர்னியாவுக்கு வரவர இக்கோயில் மிகபிரபலமடைந்திருக்கிறது. விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுமாம். சிறிய இடத்தில் அமைந்திருந்த கோயில் என்பதால் பக்தர்கள்கூட்டத்தினை சமாளிக்க முடியாமல் 1988ல் தற்போது கோயில் இருக்கும் காங்கார்டில் இடம் பெயர்ந்து வந்திருக்கிறார் ஆறுமுக கடவுள்.

விஸ்தாரமான இடம். காற்றோட்டத்துடன் மிகப்பெரிய தொழிற்கூடம் போல் அமைந்திருக்கிறது கோயில் சிவமுருகன் ஆலயம் என்ற பெயர் இருப்பதால் சிவன் சன்னதியை தேடினால் இங்கு மூலமூர்த்தியான முருகனின் பெயரே சிவமுருகன் தான். சிவமே முருகன் முருகே சிவம். மூர்த்திகளுக்கெல்லாம் அழகிய பூவலங்காரம் மனதை கொள்ளை கொண்டுவிடுகிறது. எல்லா சன்னதிகளிலுமே அர்ச்சனை செய்யலாம். கணேசருக்கு துர்க்கைக்கு நவக்கிரங்களுக்கு சிவமுருகனுக்கு என அபிஷேக ஆராதனைகள் தினமுமே நடைபெறுகின்றன.

கோயில் பணிகளை ஆசையுடனும் பக்தியுடனும் தன்னார்வமாக “லந்து கொண்டு செய்யும் பக்தர்களை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. வேக்கும் க்ளீனர் கொண்டு கோயில் தரையை சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது. கோயில் விளக்கு பாத்திரங்களை கழுவுவது என்று முழுமனதோடு பலர் செய்வதால் கோயில் பளிச் என்று மிளிர்கிறது. கோயிலுக்கு நிதி தேவைப்படும் சமயங்களில் இந்தியர்கள் ஒருங்கிணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். தைப்பூச திருவிழா இங்கு வெகுவிமரிசையுடன் காவடி எடுத்து கொண்டாடுகின்றனர். இக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் யாவருமே மிக சிறப்பான குரு பரம்பரையில் வேதம் கற்று வந்தவர்கள். விற்பன்னர்களான இவர்கள் கோயிலின் அனைத்து பூஜைகளையும் நியமப்படி செய்கின்றனர். ஆவணி அவிட்டத்தன்று உபார்மாவும் இங்கு நடத்தப்படுகிறது.

பக்தி அதிர்வுகளால் நிறைந்திருக்கும் இக்கோயிலுக்கு ஒரு முறை வந்துபோகும் யாரும் மீண்டும் மீண்டும் வரத் தவறுவது இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், மனம், ஆறுதலும் தேறுதலும் மாறுதலும் கிடைப்பது இங்கே தான் என்பது தான். அமெரிக்காவில் இருந்தாலும் அகக்கண்ணால் தரிசித்து வேண்டும் நுங்களுக்கு தன் அன்பையும் அருளையும் வாரி வழங்குவான் அந்த வடிவேலன்.

-ராதே வெங்கட்
குமுதம் பக்தி




கலிஃபோர்னியா சிவமுருகன் ஆலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக