புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானையின் எடை - பாட்டி கதைகள்
Page 1 of 1 •
- சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
வெகு நாட்களாக வெளியூர் சென்றிருந்த தெனாலிராமன் தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான்.அவன் ஊருக்குள் நுழையும்போதே மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடிப் பேசுவதைக் கண்டான்.காரணம் அறியாமல் திகைத்தபடியே தன் இல்லத்துக்குள் நுழைந்தான்.தெனாலிராமன் வீட்டு வேலைக்காரர்கள் இருவரும் அடிக்கடிக் கூடி நின்று எதைப் பற்றியோ ஆலோசனை செய்தபடி இருந்தனர்.
தெனாலி ராமனுக்கு பெரும் ஆச்சரியம். ஊருக்குள் வரும்பொழுதுதான் மக்கள் கூடிநின்று பேசினார்கள் என்றால் நம் வீட்டு வேலைக்காரர்களும் அதேபோல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே என்று யோசித்தான்.அவனால் காரணம் கண்டு பிடிக்க முடியாததால் தன் வேலைக்காரர்களுள் ஒருவனை அழைத்தான்.
"டேய், உண்மையைச்சொல். என்னகாரணமாகக் கூடிக் கூடிப் பேசுகின்றீர்கள். ஏதேனும் திட்டம் தீட்டுகிறீர்களா?"
வேலைக்காரன் பயந்தான்."ஐயா, சாமி நாங்க நம்ம ஊருக்கு வந்திருக்குற வடநாட்டு வியாபாரியைப் பற்றிப் பேசுறோமுங்க"
"அவரைப் பற்றி அப்படி என்ன பேச்சு?"
"அதுங்களா? அவரு ஒரு பொருள் வச்சிருக்கிறாராம் அதன் எடை என்னன்னு கண்டு பிடிச்சிட்டா எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம்.அப்படி கண்டு பிடிக்க முடியலைனா காலம் பூராவும் அவருக்கு அடிமையா அவருக்குப் பணிவிடை செய்து வாழணுமாம்."
தெனாலிராமன் சிந்தித்தான்.அரசபைக்குச் சென்று அந்த வியாபாரியைச் சந்தித்தான்.
மன்னர் கிருஷ்ணதேவ ராயரும் வியாபாரியின் இந்த சவாலை ஏற்கவும் முடியாமல்
விடவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார்.
தெனாலிராமன் சபைக்கு வந்ததும் மன்னர் அவரிடம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கூறினார்.
ராமகிருஷ்ணனும் அதை ஏற்றுக் கொண்டு வியாபாரியிடம் கேட்டான்.
"ஐயா, தாங்கள் எடை காணவேண்டும் என்று கூறும் பொருள் என்னவோ?"
வியாபாரி மிகுந்த கர்வத்துடன் பேசினான்."அதற்கு முன் என் நிபந்தனை தெரியுமா உமக்கு? நான் ஜெயித்தால் நீர் எமக்கு அடிமை.ஆனால் நீர் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவேன்."
"உங்கள் நிபந்தனையை நான் ஒப்புக் கொள்கிறேன்.நான் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவது என்பது உண்மைதானே?"
"ஒப்புக் கொள்கிறேன்."
"அப்படியானால் நானும் ஒப்புக் கொள்கிறேன்.எந்தப் பொருளுக்கு எடை சொல்ல வேண்டும்?சொல்லுங்கள்."
வியாபாரி புன்னகைத்தான்.கள்ளச் சிரிப்புடன் தெனாலிராமனைப் பார்த்துச் சொன்னான்.
"வீதியில் நிற்கும் என் யானையின் எடை என்ன என்று சொல்லவேண்டும்"
சபையே அதிர்ந்தது.யானையை எப்படி எடை போடுவது?எந்தத் தராசில் நிற்க வைப்பது என்று அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.மன்னரும் சிந்தனை வயப்பட்டார்.
தெனாலிராமன் இதற்கு மறுநாள் பதில் கூறுவதாகச் சொல்லி இல்லம் திரும்பினான்.
இரவு தன் மனைவியிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்குத் திடீரென்று யோசனை தோன்றியது.
மறுநாள் பொழுது விடிந்ததும் வியாபாரியிடம் அவனது யானையின் எடையைக் கூறுவதாகக் கூறி அழைத்தான். மக்களும் ராமன் எப்படி யானையை எடை போடுகிறான் என்பதைப் பார்க்கக் கூடிவிட்டனர்.
மன்னரும் மக்களுடன் சேர்ந்து ஆவலுடன் பார்த்து நின்றார்.
ராமன் வடநாட்டு வியாபாரியை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான்.அவனும் தன் யானையை நடத்திக்கொண்டு ராமனுடன் சென்றான்.நதிக்கரையை அடைந்தவுடன் அங்கிருந்த ஒரு பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான் ராமன்.அந்தப்படகில் யானையை ஏற்றியவுடன் அதைத் தண்ணீரில் மிதக்கவிடச் சொன்னான்.படகு மிதந்தது.படகு நீருக்குள் அமிழ நீர்படகில் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதைக் குறித்துக் கொண்டான்.பின்னர் மரக்கட்டைகளை அந்தப் படகில் வைத்து நீருக்குள் விட்டான். படகு அமிழ வெளிப்புறம் நீர் உயர்ந்தது.
யானையை வைத்து எடை பார்த்தபோது உயர்ந்த அதே அளவு நீர் உயர்ந்ததும் கட்டைகளை நிறுத்திவிட்டான்.இப்போது படகில் வைக்கப்பட்ட கட்டைகளின் எடைதான் யானையின் எடை. இந்தக் கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்த்தால் யானையின் எடை தெரிந்துவிடும்.
"அரசே, கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்."
மன்னர் கிருஷ்ண தேவராயர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.வியாபாரியைப் பார்த்து "அய்யா, நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்கள் ராமன் சரியான விடை தந்து விட்டான்.அவனிடம் சொன்னது போல் பரிசைத் தருவதுதான் நியாயம்."என்று கூறியவுடன் வியாபாரி தலை குனிந்து ஒப்புக் கொண்டான்.
ஆனால் இடைமறித்த ராமன் "மகாராஜா, பொறுங்கள்."என்றவன் வியாபாரியைப் பார்த்துக் கூறினான்.
"ஐயா வியாபாரியே! நான் வெற்றி பெற்றால் தாங்கள் என்ன தருவதாகக் கூறினீர்கள்?"
"எடைக்கு எடை பொன் தருவதாகக் கூறினேன்."
"அது சரி யாருடைய எடைக்கு எடை என்று நீங்கள் சரியாகச் சொல்லவில்லையே.எடையைப் பார்த்துச் சொன்னவரின் எடைக்கா அல்லது யானையின் எடைக்கா?என்பதைத் தெளிவாகச் சொல்லாததால் நான் யானையின் எடைக்கு எடை பொன் கேட்கிறேன்."
ராமனின் வார்த்தைகளைக் கேட்ட வியாபாரி மயங்கிச் சரிந்தான்.யானையின் எடைக்கு எடை பொன்னுக்கு அவன் எங்கே போவான்.எனவே அவனைச் சிறையில் அடைக்குமாறு மன்னர் கட்டளையிட்டார்.
பல நாடுகளில் மக்களை அடிமைப் படுத்திச் சிறுமைப் படுத்திய வியாபாரிக்குச் சரியான தண்டனைதான் அது.என்று மன்னர் தீர்ப்பளித்தார்.
ராமனுக்குப் பெரும் பொன்னைப் பரிசாகக் கொடுத்து அவனை வாழ்த்தினார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபித்த தெனாலிராமனை மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
எனவே யாரையும் துன்புறுத்தி மகிழ்தல் தவறு என்பதையும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதையும் நாம் புரிந்து கொண்டால் நலமடைவோம்.
மூலம் - http://chuttikadhai.blogspot.com
தெனாலி ராமனுக்கு பெரும் ஆச்சரியம். ஊருக்குள் வரும்பொழுதுதான் மக்கள் கூடிநின்று பேசினார்கள் என்றால் நம் வீட்டு வேலைக்காரர்களும் அதேபோல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களே என்று யோசித்தான்.அவனால் காரணம் கண்டு பிடிக்க முடியாததால் தன் வேலைக்காரர்களுள் ஒருவனை அழைத்தான்.
"டேய், உண்மையைச்சொல். என்னகாரணமாகக் கூடிக் கூடிப் பேசுகின்றீர்கள். ஏதேனும் திட்டம் தீட்டுகிறீர்களா?"
வேலைக்காரன் பயந்தான்."ஐயா, சாமி நாங்க நம்ம ஊருக்கு வந்திருக்குற வடநாட்டு வியாபாரியைப் பற்றிப் பேசுறோமுங்க"
"அவரைப் பற்றி அப்படி என்ன பேச்சு?"
"அதுங்களா? அவரு ஒரு பொருள் வச்சிருக்கிறாராம் அதன் எடை என்னன்னு கண்டு பிடிச்சிட்டா எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம்.அப்படி கண்டு பிடிக்க முடியலைனா காலம் பூராவும் அவருக்கு அடிமையா அவருக்குப் பணிவிடை செய்து வாழணுமாம்."
தெனாலிராமன் சிந்தித்தான்.அரசபைக்குச் சென்று அந்த வியாபாரியைச் சந்தித்தான்.
மன்னர் கிருஷ்ணதேவ ராயரும் வியாபாரியின் இந்த சவாலை ஏற்கவும் முடியாமல்
விடவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார்.
தெனாலிராமன் சபைக்கு வந்ததும் மன்னர் அவரிடம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கூறினார்.
ராமகிருஷ்ணனும் அதை ஏற்றுக் கொண்டு வியாபாரியிடம் கேட்டான்.
"ஐயா, தாங்கள் எடை காணவேண்டும் என்று கூறும் பொருள் என்னவோ?"
வியாபாரி மிகுந்த கர்வத்துடன் பேசினான்."அதற்கு முன் என் நிபந்தனை தெரியுமா உமக்கு? நான் ஜெயித்தால் நீர் எமக்கு அடிமை.ஆனால் நீர் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவேன்."
"உங்கள் நிபந்தனையை நான் ஒப்புக் கொள்கிறேன்.நான் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவது என்பது உண்மைதானே?"
"ஒப்புக் கொள்கிறேன்."
"அப்படியானால் நானும் ஒப்புக் கொள்கிறேன்.எந்தப் பொருளுக்கு எடை சொல்ல வேண்டும்?சொல்லுங்கள்."
வியாபாரி புன்னகைத்தான்.கள்ளச் சிரிப்புடன் தெனாலிராமனைப் பார்த்துச் சொன்னான்.
"வீதியில் நிற்கும் என் யானையின் எடை என்ன என்று சொல்லவேண்டும்"
சபையே அதிர்ந்தது.யானையை எப்படி எடை போடுவது?எந்தத் தராசில் நிற்க வைப்பது என்று அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.மன்னரும் சிந்தனை வயப்பட்டார்.
தெனாலிராமன் இதற்கு மறுநாள் பதில் கூறுவதாகச் சொல்லி இல்லம் திரும்பினான்.
இரவு தன் மனைவியிடம் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்குத் திடீரென்று யோசனை தோன்றியது.
மறுநாள் பொழுது விடிந்ததும் வியாபாரியிடம் அவனது யானையின் எடையைக் கூறுவதாகக் கூறி அழைத்தான். மக்களும் ராமன் எப்படி யானையை எடை போடுகிறான் என்பதைப் பார்க்கக் கூடிவிட்டனர்.
மன்னரும் மக்களுடன் சேர்ந்து ஆவலுடன் பார்த்து நின்றார்.
ராமன் வடநாட்டு வியாபாரியை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான்.அவனும் தன் யானையை நடத்திக்கொண்டு ராமனுடன் சென்றான்.நதிக்கரையை அடைந்தவுடன் அங்கிருந்த ஒரு பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான் ராமன்.அந்தப்படகில் யானையை ஏற்றியவுடன் அதைத் தண்ணீரில் மிதக்கவிடச் சொன்னான்.படகு மிதந்தது.படகு நீருக்குள் அமிழ நீர்படகில் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதைக் குறித்துக் கொண்டான்.பின்னர் மரக்கட்டைகளை அந்தப் படகில் வைத்து நீருக்குள் விட்டான். படகு அமிழ வெளிப்புறம் நீர் உயர்ந்தது.
யானையை வைத்து எடை பார்த்தபோது உயர்ந்த அதே அளவு நீர் உயர்ந்ததும் கட்டைகளை நிறுத்திவிட்டான்.இப்போது படகில் வைக்கப்பட்ட கட்டைகளின் எடைதான் யானையின் எடை. இந்தக் கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்த்தால் யானையின் எடை தெரிந்துவிடும்.
"அரசே, கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்."
மன்னர் கிருஷ்ண தேவராயர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.வியாபாரியைப் பார்த்து "அய்யா, நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்கள் ராமன் சரியான விடை தந்து விட்டான்.அவனிடம் சொன்னது போல் பரிசைத் தருவதுதான் நியாயம்."என்று கூறியவுடன் வியாபாரி தலை குனிந்து ஒப்புக் கொண்டான்.
ஆனால் இடைமறித்த ராமன் "மகாராஜா, பொறுங்கள்."என்றவன் வியாபாரியைப் பார்த்துக் கூறினான்.
"ஐயா வியாபாரியே! நான் வெற்றி பெற்றால் தாங்கள் என்ன தருவதாகக் கூறினீர்கள்?"
"எடைக்கு எடை பொன் தருவதாகக் கூறினேன்."
"அது சரி யாருடைய எடைக்கு எடை என்று நீங்கள் சரியாகச் சொல்லவில்லையே.எடையைப் பார்த்துச் சொன்னவரின் எடைக்கா அல்லது யானையின் எடைக்கா?என்பதைத் தெளிவாகச் சொல்லாததால் நான் யானையின் எடைக்கு எடை பொன் கேட்கிறேன்."
ராமனின் வார்த்தைகளைக் கேட்ட வியாபாரி மயங்கிச் சரிந்தான்.யானையின் எடைக்கு எடை பொன்னுக்கு அவன் எங்கே போவான்.எனவே அவனைச் சிறையில் அடைக்குமாறு மன்னர் கட்டளையிட்டார்.
பல நாடுகளில் மக்களை அடிமைப் படுத்திச் சிறுமைப் படுத்திய வியாபாரிக்குச் சரியான தண்டனைதான் அது.என்று மன்னர் தீர்ப்பளித்தார்.
ராமனுக்குப் பெரும் பொன்னைப் பரிசாகக் கொடுத்து அவனை வாழ்த்தினார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபித்த தெனாலிராமனை மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
எனவே யாரையும் துன்புறுத்தி மகிழ்தல் தவறு என்பதையும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதையும் நாம் புரிந்து கொண்டால் நலமடைவோம்.
மூலம் - http://chuttikadhai.blogspot.com
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
யாரையும் துன்புறுத்தி மகிழ்தல் தவறு என்பதையும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு
நல்ல அருமையான பதிவு.
தெனாலிராமனின் கதைகளில் சிந்தனையோடு நகைச்சுவை இருக்கும்.
இதில் கொஞ்சம் மாறுபட்டு சிந்தனைப் பற்றி உள்ளது.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|