புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
92 Posts - 61%
heezulia
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
7 Posts - 5%
viyasan
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
19 Posts - 3%
prajai
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_m10எழுத்தாளர் ஜெயலலிதா!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் ஜெயலலிதா!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:07 pm

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார்.
அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை
எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.
எழுத்தாளர் ஜெயலலிதா!! Jayjay


திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த
நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும். பின்னாளில் அவர்
புரட்சிதலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக
இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்!



ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது புத்தக
வடிவத்தில் இதுவரை பதிப்பிக்கப்படவேயில்லை. பழைய புத்தக கடைகளில் தேடியும்
கிடைக்காத அந்த நாவல்களில் ஒன்று நண்பர் கிங்விஷ்வாவிடமிருந்தது (காமிக்ஸ்
புகழ் கிங்விஸ்வா).


கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை
யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய
புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து
வாங்கிவைத்திருந்தார் விஸ்வா.

நமக்கு தெரிந்த ஜெயலலிதா சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர்,
எதற்கும் அஞ்சாதவர்,கொஞ்சம் முரட்டுத்தனமான அதே சமயம் வீரமான பெண் என்பதாக
இருக்க.. நாவலை வாசிக்க தொடங்கியதுமே நமக்கு அதிர்ச்சிக்கு மேல்
அதிர்ச்சிதான்! நமக்குத்தெரிந்த முரட்டு முதல்வர் அல்ல இதை எழுதியது! மனது
முழுக்க காதலும் அன்பும் நிறைந்த ஒரு இளம்பெண்ணின் மனநிலையில்
எழுதப்பட்டிருந்தது. காதலின் ஏக்கமும் தவிப்பும் காதலனுடனான அந்த நொடிகளின்
உக்கிரமும் நாவலெங்கும் நிறைந்திருந்தது.



பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில்
விழுகிறான். அவளும் அவனை காதலிக்கிறாள்.. கர்ப்பமாகிறாள்.. பிறகுதான்
இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவரை அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்!
எண்பதுகளின் ஜெயகாந்தன் கதைகளினுடைய பாதிப்பில் எழுதப்பட்ட கதையாகவே இது
இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை
கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது
ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.


முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுக காட்சியில் தொடங்கி
இறுதிஅத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும்.
அவ்வளவு வேகமான எழுத்து நடை. படிக்கும் போது ஒருவேளை இதை அசோகமித்திரன்
எழுதியிருப்பாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல இடங்களில் கரைந்த நிழல்கள்
சாயல்!

ஒரு அத்தியாயத்தில் நடிகன் மாணவியிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வர..
அவள் அழைக்க.. அந்த அத்தியாயம் முழுக்க இருவருக்குமான தொலைபேசி உரையாடல்
மட்டும்தான். உரையாடல் என்றால் வசனங்கள் இல்லாமல் இருவருக்குமான மௌனமே
நிறைந்திருப்பது அருமை. எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம்
என்பார்கள். அதே போல காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட நன்றாகவே
எழுதியிருக்கிறார்.



இந்நாவல் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்டத்தாக சிலர்
கூறினாலும் அப்படி எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அழகான
புனைவாகவே இது இருக்கிறது.



தொடர்கதை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவின் தொடர்கதைகளைப் போல
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தேவையில்லாத டுவிஸ்ட்டோ அதிர்ச்சியோ
இல்லாமல் மென்மையாக தொடர்ந்திருப்பது பிடித்திருந்தது. வாய்ப்புகிடைத்தால்
அனைவருமே படிக்க வேண்டிய நாவல் இது. அம்மாவின் புகழ்பாடும் அதிமுகவினர் இதை
புத்தகமாக கொண்டுவர முயற்சி செய்யலாம். கலைஞர் மட்டும்தான் எழுதுவாரா எங்க
தலைவியும் இலக்கியம் படைச்சிருக்காங்க பாருங்க என மார்தட்டிக்கொள்ள
உதவும். ஜெ குமுதத்தில் எழுதிய இன்னொரு நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
உங்களிடமிருந்தால் கொடுத்து உதவலாம்.



அதிஷா




kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 08, 2011 5:11 pm

ஜெயலலிதா ஒரு எழுத்தாளரா.ஜெயலலிதாவைப் பற்றி அறியதந்தமைக்கு நன்றி எழுத்தாளர் ஜெயலலிதா!! 224747944 எழுத்தாளர் ஜெயலலிதா!! 677196 எழுத்தாளர் ஜெயலலிதா!! 678642

பகிர்விற்கு நன்றி ரெவ்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எழுத்தாளர் ஜெயலலிதா!! Image010ycm
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 5:12 pm

மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது, நம் முதல்வருக்குள் ஒரு எழுத்தாளரா? அந்த புத்தகத்தை இப்போதே படிக்க வேண்டும் போல் உள்ளது.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 5:14 pm

எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆவால்தான் உள்ளது




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 5:19 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 5:26 pm

அனைத்து திறமைகளை கொண்ட பெண்மணி அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 5:31 pm

அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை
கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது
ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.

கலைஞரும் இதுபோன்ற ஒரு கதை எழுதியிருக்கிறார். ( ஒரு கூடுதல் தகவல்)

இது எனக்கு தெரியாத புதிய செய்தி. தகவலுக்கு நன்றி !

இன்னொரு கூடுதல் செய்தி. சாகித்திய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்கள் துணிந்தவன் என்கிற ஒரு புனைகதையை எழுதியிருப்பார். அது எம்‌ஜி‌ஆர், ஜெயா இவர்கள் காலத்திற்க்கு முன்னரே எழுதியது. ஆனால் இன்று அதை படித்தல் அவர்கள் இருவரையும் வைத்து எழுதியிருப்பதாகவே தோன்றும். முடிந்தால் படித்து பாருங்கள்.


நன்றி.
ayyamperumal
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyamperumal



எழுத்தாளர் ஜெயலலிதா!! Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 6:00 pm

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த
நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும்.
பத்திரிக்கைகள் பிரபலமாக விளங்கும் நடிகர் , நடிகைகள் மற்றும் சாமியார்களை, கொண்டு நாவல்கள் வெளியிடும். ஆனால் உண்மையில் அவர் பெயரில் வேறு யாராவது பிரபலமில்லாத எழுதாளர்களே எழுதுவார்கள் இவர்களை (ghost writer) என்று சொல்வார்கள் .

ஜெயலலிதா பெயரில் யாரோ ஒரு (ghost writer) நவால்தான் அது என்று நினைக்கிறேன் .

அதை"ஜெ" எழுதியிருந்தால் ஏதாவது ஒரு வகுப்புக்கு முன்பே துணைப்பாடம் ஆக ஆக்கியிருப்பார்கள் .

அவரே அது வேண்டாம் என்றுதானே விட்டுவிட்டார்


note:A ghostwriter is a professional writer who is paid to write books, articles, stories, reports, or other texts that are officially credited to another person. Celebrities, executives, and political leaders (Wikipedia)



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 6:20 pm

கே. பாலா wrote:
note:A ghostwriter is a professional writer who is paid to write books, articles, stories, reports, or other texts that are officially credited to another person. Celebrities, executives, and political leaders (Wikipedia)

உண்மை தான் பாலா ஸார்,

இசைஞானி இளையராஜா அவர்கள் கூட தன் வாழ்க்கை வரலாறை, வைரமுத்துவை வைத்து எழுதி வெளியிட்டார். அதில் நல்ல ரசனை இருந்ததால், படிப்பவர்களுக்கு சந்தேகம் வந்தது. அவர் இசைஞானி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவ்வளவு சிறப்பாய் கவிதை எழுத மாட்டார் என்றார்கள். பின் வைரமுத்துவும் நான் தான் அவர் வாழ்க்கையை கவிதையாக்கி எழுதுனேன் என்று பேட்டி கொடுத்துவிட்டார். இந்த சம்பவம் தான் இளைய ராஜாவிற்கும். வைரமுத்துவிற்கும் இடையே பிளவை ஏற்படுத்தியதாக அறிந்தேன். ( வைரமுத்து வரை புத்தகம் )

( ஆனால் இளைய ராஜா இன்று நன்றாய் பாடல் எழுதுகிறார். வெண்பாக்கள் எல்லாம் எழுதிகிறார் )



எழுத்தாளர் ஜெயலலிதா!! Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 09, 2011 9:12 am

கே. பாலா wrote:
திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த
நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும்.
பத்திரிக்கைகள் பிரபலமாக விளங்கும் நடிகர் , நடிகைகள் மற்றும் சாமியார்களை, கொண்டு நாவல்கள் வெளியிடும். ஆனால் உண்மையில் அவர் பெயரில் வேறு யாராவது பிரபலமில்லாத எழுதாளர்களே எழுதுவார்கள் இவர்களை (ghost writer) என்று சொல்வார்கள் .

ஜெயலலிதா பெயரில் யாரோ ஒரு (ghost writer) நவால்தான் அது என்று நினைக்கிறேன் .

அதை"ஜெ" எழுதியிருந்தால் ஏதாவது ஒரு வகுப்புக்கு முன்பே துணைப்பாடம் ஆக ஆக்கியிருப்பார்கள் .

அவரே அது வேண்டாம் என்றுதானே விட்டுவிட்டார்


note:A ghostwriter is a professional writer who is paid to write books, articles, stories, reports, or other texts that are officially credited to another person. Celebrities, executives, and political leaders (Wikipedia)
அநியாயம்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக