ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

+6
அருண்
பிளேடு பக்கிரி
kavimuki
dsudhanandan
அன்பு தளபதி
balakarthik
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by balakarthik Mon Sep 05, 2011 2:31 pm

திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன்

அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித்து மும்மூர்த்திகளையும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.

கும்பம்

கங்கை புனிதமானது. எல்லாவற்றையும் தூய்மை செய்வது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின்றன. ஆகையால், மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபட வேண்டும்.

ஓமம்

அனைத்துக்கும் அக்னியே சாட்சி. ‘நீயே உலகுக்கொரு காட்சி’ என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லையானால் உயிர் நிலைபெற மாட்டாது. இதனால் அக்னியை வழிபட வேண்டும். ஓமப்புகை ஆயுளையும் வளர்க்கும்.

நவகோள் வழிபாடு

ஞாயிறு முதலிய நவகோள்கள் இந்த உலகை இயக்குகின்றன. அதனால், நவகோள்களை வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்களின் நல்லருள் துணை செய்யும்.

மாப்பிள்ளை அழைப்பு

பெரும்பாலும் பெண்கள் வீட்டில்தா‎ன் திருமணம் நடக்கும்.இந்த காலம் போல் ‏இல்லாது,அப்போது மற்றவர்கள் சுகம்,துக்கத்தில் அந்த அந்த ஊர்கார்ர்கள் பங்கு கொள்வதுடன் நல்லது,கெட்டது ‏இவற்றை மற்றவர்களுட‎ன் கலந்து கொள்வார்கள்.தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையை முதல் நாள் ‏இரவு ஊரை சுற்றி தனியாக அமர வைத்து கல்யாணம் நடைபெறும் ‏‏இடத்திற்கு அழைத்து வருவார்கள்.அப்போது அந்த மாப்பிள்ளையை பார்க்கும் ஊர் மக்கள் யாராவதுஅவரை பற்றி வெளியூர் சென்றவர்கள் விபரம் அறித்தவர்கள், ஏதாவது நல்லது கெட்டது பற்றி அறிந்திருந்தால், அதை எனக்கு உட‎ன் தெரிவிக்கவும் என்று கூறாமல் கூறுவதற்க்கு தான் இந்த சடங்கு. அப்படி கெட்ட செய்திகள் ஏதாவது மாப்பிள்ளையை பற்றி அறிந்தால் உட‎ன் அந்த செய்தியை, மணமகள் வீட்டாருக்கு தெறிவித்து திருமணத்தை நிருத்தி விடுவார்கள்.நமக்கு ஏன் ஊர் வம்பு எண்று ஒதுங்கவும் மாட்டார்கள்,பொய்யான தகவலும் தரமாட்டார்கள்.அதனால் தான் திருமணத்திற்க்கு முதல் நாள் இந்த சடங்கு செய்யப்பட்டது.

தாலி/மஞ்சள் கயிறு

பழங்காலத்தில் அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்தபோது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. ‘தாலம்’ என்பது பனையோலையைக் குறிக்கும். அந்தப் பனையோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளையார் சுழியிட்டு ‘இன்னாருடைய மகளை, இன்னாருடைய மகன் மணந்து கொண்டார். வாழ்க’ என்றெழுதி, அதைச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலையில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. நாகரிகம் வளர்ந்த பிறகு (பனையோலை தண்ணீர் பட்டு நைந்து போவதால்) தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக் கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வமாதலின் கணவருடைய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தைச் செய்து மார்பில் தரித்துக் கொண்டனர்.

பெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கலநாண் உயிரினும் சிறந்தது. பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும், திருமாங்கல்யத்தைக் கழற்றக் கூடாது. சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழுது, எல்லா அணிகலன்களையும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அணி செய்து கொண்டிருந்தது.

முன்பு எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும்,திருமணத்திற்க்கு மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அதற்க்கு காரணம் ஒரு பெண்ணை பார்த்த உட‎ன் அவள் கழுத்தில் உள்ள தாலியை பார்த்த உட‎ன் அவள் திருமணம் ஆனவள் என்பதை உணரத்தா‎ன். பல வகை தங்க நகைகள் அவள் கழுத்தில் இருந்தாலும் அந்த மஞ்சள் கயிறு தாலியை மாற்ற மாட்டார்கள். தினம் குளிக்கும் போது அந்த கயிற்றுக்கும், முகத்திற்க்கும் மஞ்சள் தடவுவார்கள். அந்த கயிறு நிறம் மாறாமலும், வழுவாக இருப்பதிற்க்கும். அத்துடன் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவதால், வசீகரமும், தோல் வியாதிகள் வராமல் தடுப்பதுடன் முடிகள் முளைப்பதையும் தடுக்கும்.


உறவு முறைகள்

கல்யாணத்தின் போது ஏகபட்ட கூட்டம் வரும், அவர்கள் ஒவ்வருவருக்கும் கல்யாண வீட்டார்கள் மாப்பிள்ளை அல்லது மணமகள் வீட்டார்கள், உறவு முறைகளை விளக்கி கூறிக்கொண்டு இருக்க முடியாது. அதனால் தான் பல சடங்குகளும், சம்பிராதயமும் நம் திருமணத்தின் போது ஊருவாக்கினர்.மாப்பிளை யின் தங்கை அல்லது அக்கா இவர்களை அறிமுகபடுத்த, நாத்தி விளக்கு பிடித்து கொண்டு மணமக்கள் பின் நிற்பார்கள். மாப்பிள்ளையின் காலில் மிஞ்சு (மொட்டி)அனிபவர் மணமகளின் தங்கை அல்லது அக்காவாக இருப்பார்கள்.மணவரையில் மாப்பிளை கையை பிடித்து வளம் வருபவர் மணமகளின் தம்பி அல்லது அண்ணன் ஆவார். தாரை வார்த்து தருபவர் அப்பா, அம்மா, பொண்னுக்கு பட்டம் கட்டுபவர்கள் தாய்மாமன் மற்றும் மாமன் ஊறவு முறை என்பதையும், தெரிந்து கொள்வதற்காக இம்மாதிரி சடங்குகளை நம் முன்னோர்கள் கடை பிடித்தனர்.

அட்சதை

திருமாங்கல்ய தாரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள். க்ஷதம் என்றால் குத்துவது என்று பொருள்: அகரம் அண்மைப் பொருளைத் தெரிவிக்கிறது. அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாதது என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல் உள்ளது. திருமணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து, முறையோடு அதில் பன்னீர் தெளித்து, மஞ்சள்பொடி தூவி, அந்த அட்சதையை மணமக்கள் தலையிலே இறைவனுடைய மந்திரங்களைச் சொல்லித் தெளித்தால் ஜீவகளையுண்டாகும்.

அம்மி மிதித்தல்

மணமக்கள் அக்னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும். மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மணமகன் செய்வான். அதன் பொருள் ‘‘இந்தக் கல்லைப்போல் உறுதியாக இரு’’ என்பதாகும். தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும். ஆனால், கல் வளையாது; பிளந்து போகும்.

மணமகளே! கற்பில் நீ கல்லைப்போல் உறுதியாக இரு. அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்த அகலிகையைக் கல்லாயிருக்கச் சொன்னார் கௌதமர். அதனாலேதான் ‘நீ கல்லைப் போல் உறுதியாக இரு’ என்று, கணவன் கூறும் பாங்கில் மனைவியின் காலைப் பற்றி அந்த அம்மிமேலே வைப்பது.

அம்மி மிதித்து அருந்ததியை வணங்குவார்கள். அருந்ததி = அ+ருந்ததி (கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள்)


மிஞ்சி அணிதல்(மெட்டி)

பெண்களுக்கு தாலி எப்படி அவள் திருமணம் ஆனவள், என்பதை அடையாளம் காட்ட அமைந்ததோ, அது போல ஆண்களுக்கு திருமணம் ஆனவர் என்பதை அடையாளம் காட்டத்தான், அவர்கள் காலில் மிஞ்சி அதாவது மெட்டி அணியும் வழக்கத்தை நம் முன்னோர்கள் இந்த சடங்கை கடை பிடித்தனர். பிற்காலத்தில் இந்த பழக்கம் மறைந்து விட்டது அல்து மறுக்கப்பட்டது.

மங்கள இசை( நாதஸ்வரம்)

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொறு மங்கள நிகழ்ச்சியின் போது நாதஸ்வரம் இசைக்கப்படுவது வழக்கம். மணவிழாவில் போது இது கட்டாயம் இருக்கும். இசை கருவிகளிலேயே நாதஸ்வரம்தான் மிக இனிமையாகவும், அதிக ஓசை உடையதாகவும் இருக்கும். மணவிழாவின்போது உற்றார், உறவினர் என்று பலர் கூடுவார்கள். அவர்கள் அந்த இடத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரிப்பார்கள். அப்போது நல்ல விசயங்களும்,கெட்ட விசயங்களும் பேசும் சூழ்நிலை ஏற்படும். ஒரு நல்ல காரியம் நடை பெறும் போது மற்றவர்கள் பேசும் கெட்ட வார்த்தைகள் மணமக்களுக்கு காதில் விழுவது அபசகுணமாகவும், அந்த வார்த்தைகள் மனதிற்கு சங்கடத்தையும் ஏற்படுத்தும். அதனால் தான் நம் முன்னோர்கள் நாதஸ்வர இசையை இசைப்பதை வழக்கமாக கொண்டனர். ஏன் என்றால் நாதஸ்வர இசையின் ஒலியில் மற்றவர்கள் பேசும் சத்தம் கேட்காது, அத்துடன் தாலி கட்டும் போது கெட்டிமேளம் கொட்டுவதும் இதன் அடிப்படையில் வந்த வழக்கம்தான்.

நன்றி:- சுகவர்திணி இணயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 2:34 pm

அருமையான விளக்கம்
(இதெல்லாம் செய்ய தயாராயிட்டீங்க)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by dsudhanandan Mon Sep 05, 2011 2:44 pm

உங்களுக்கு திருமணம் நெருங்குகிறது என புரிந்துகொண்டோம் புன்னகை

பகிர்வுக்கு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by kavimuki Mon Sep 05, 2011 2:49 pm

கல்யாணம் நெருங்கினாலே அக்கு வேற ஆணிவேரா பற்பொம்ன்றது இதுதானா ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by பிளேடு பக்கிரி Mon Sep 05, 2011 2:51 pm

maniajith007 wrote:அருமையான விளக்கம்
(இதெல்லாம் செய்ய தயாராயிட்டீங்க)

ரொம்ப உபயோகமான பதிவு.... நன்றி தல கண்ணடி
யோவ் மணி உனக்கு தான் அந்த கொடுபினையே இல்லையே.. :அடபாவி:



திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by அருண் Mon Sep 05, 2011 2:57 pm

தெளிவான விளக்கம் அறிய தந்தமைக்கு நன்றி பாஸ்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by aathma Mon Sep 05, 2011 3:10 pm

balakarthik wrote:d]நன்றி:- சுகவர்திணி இணயம்

நல்ல கட்டுரையை பதிவு செய்து இருக்கிறீர்கள் நண்பரே , மிக்க நன்றி

இது என்ன தளம் , sukravathanee.org இந்த தளமா ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 3:13 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அருமையான விளக்கம்
(இதெல்லாம் செய்ய தயாராயிட்டீங்க)

ரொம்ப உபயோகமான பதிவு.... நன்றி தல கண்ணடி
யோவ் மணி உனக்கு தான் அந்த கொடுபினையே இல்லையே.. :அடபாவி:

ஏண்டா ஏன் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by பிளேடு பக்கிரி Mon Sep 05, 2011 3:15 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அருமையான விளக்கம்
(இதெல்லாம் செய்ய தயாராயிட்டீங்க)

ரொம்ப உபயோகமான பதிவு.... நன்றி தல கண்ணடி
யோவ் மணி உனக்கு தான் அந்த கொடுபினையே இல்லையே.. :அடபாவி:

ஏண்டா ஏன் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

அய்யோ..... உனக்கு இல்ல தல நமக்கு ... சிரி சிரி சிரி



திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by அன்பு தளபதி Mon Sep 05, 2011 3:16 pm

பிளேடு பக்கிரி wrote:

அய்யோ..... உனக்கு இல்ல தல நமக்கு ... சிரி சிரி சிரி

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்? Empty Re: திருமணத்தில் சமயச் சடங்குகள் செய்வது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum