ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது

5 posters

Go down

கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Empty கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது

Post by சிவா Sun Sep 04, 2011 9:44 am

செஸ்டர் லீ-ஸ்டிரீட், செப்.4- இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு தென்பட்டது. ஆனால் பலத்த மழையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

தெண்டுல்கர் கிடையாது

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி அடுத்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நேற்று நடந்தது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர் ஆடவில்லை. இதனால் கடைசி நேரத்தில் பார்த்தீவ் பட்டேல் வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான், காயத்தால் இடம் பெறவில்லை.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக், மேகமூட்டமான வானிலை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம் என்று கருதி இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து பார்த்தீவ் பட்டேலும், ரஹானேவும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் அசத்திய ரஹானேவுக்கு, இது தான் சர்வதேச முதலாவது ஒரு நாள் போட்டியாகும்.

இருவரும் தொடக்கத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் நிதானமாக ஆடினார்கள். முதல் 7 ஓவர்களில் 24 ரன்களே வந்தது. இதில் பார்த்தீவ் பட்டேல் (7 ரன்னில் இருந்த போது) ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பியதும் அடங்கும். இதன் பிறகு ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். ஆண்டர்சன், பிரிஸ்னன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் புயல் வேக தாக்குதலை சமாளித்து, இருவரும் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அறிமுக வீரர் என்ற போதிலும் ரஹானே, முதிர்ச்சியான பேட்ஸ்மேன் போல் பதற்றமின்றி நேர்த்தியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் 82 ரன்கள் (16 ஓவர்) சேர்த்த பிறகு பிரிந்தனர்.

பட்டேல் 95 ரன்கள்

ஸ்டூவர்ட் பிராட்டின் ஷார்ட்பிட்ச் பந்து வீச்சை, `புல்ஷாட்' அடிக்க முயற்சித்த ரஹானே (40 ரன், 44 பந்து, 6 பவுண்டரி), `பைன்லெக்' திசையில் கேட்ச் ஆனார். அடுத்து ராகுல் டிராவிட் ஆட வந்தார். தனது கடைசி ஒரு நாள் தொடரில் ஆடும் டிராவிட்டுக்கு, இந்த ஆட்டம் மறக்ககூடிய போட்டியாக அமைந்து விட்டது. அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் பார்த்தீவ் பட்டேல் நிலைத்து நின்று அரைசதத்தை கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு அவருடன் விராட் கோக்லி கைகோர்த்தார். 22-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை தாண்டியது. பார்த்தீவ்-விராட் இணை அவசர படாமல் விளையாடினார்கள். அணியின் ரன்ரேட் 5 ரன்களுக்கு குறையாமல் சென்று கொண்டிருந்தது. முதலாவத்தை சதத்தை நெருங்கிய பார்த்தீவ் பட்டேல் 95 ரன்களில் (107 பந்து, 12 பவுண்டரி), ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். ஆண்டர்சனுக்கு இது 200-வது விக்கெட்டாகும். கோக்லி-பார்த்தீவ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும்.

275 ரன்கள் இலக்கு

அவருக்கு பிறகு களம் கண்ட ரோகித் ஷர்மா, தான் சந்தித்த முதல் பந்திலேயே காயமடைந்து `ரிட்டயர்ட்ஹர்ட்' ஆகி பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். இதற்கிடையே தனது 16-வது அரைசதத்தை எட்டிய விராட் கோக்லி 55 ரன்களில் (73 பந்து, 4 பவுண்டரி) போல்டானார். இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு கேப்டன் டோனி, ரெய்னாவுடன் இணைந்து பேட் பிடித்தார்.

இந்திய அணியின் ஸ்கோர் மிதமாக உயர்ந்ததே தவிர, பெரிய அளவில் அதிரடியை பார்க்க முடியவில்லை. இங்கிலாந்தின் பீல்டர்கள் கனகச்சிதமாக செயல்பட்டு சில பவுண்டரிகளை தடுத்து நிறுத்தினர். அவர்களின் அட்டகாசமான பீல்டிங்கால் இந்தியாவின் ரன்வேகம் குறைந்தது என்றே சொல்லலாம்.

சிறிது நேரம் அதிரடி காட்டிய ரெய்னாவுக்கு, `ஷார்ட் பிட்ச்' பந்து வீச்சு என்றாலே எப்போதும் அலர்ஜி. இந்த ஆட்டத்திலும் அவர் இவ்வகை பந்துக்கே இரையானார். அவர் 38 ரன்களில் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். டோனி (33 ரன், 36 பந்து, 2 பவுண்டரி), அஸ்வின் (0) இருவரும் இறுதி ஓவரில் வீழ்ந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 300 ரன்களை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இறுதி கட்டத்தில் பேட்டிங் பவர்பிளே எடுக்கப்பட்ட போதிலும் கடைசி 10 ஓவர்களில் இந்திய வீரர்கள் 67 ரன்களே சேகரித்தனர்.

மழையால் கைவிடப்பட்டது

பின்னர் 275 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் குக் (4 ரன்), கீஸ்வெட்டர் (6 ரன்) இருவரின் விக்கெட்டுகளையும் வேகமாக இழந்தது. இரு விக்கெட்டுகளையும் பிரவீன்குமார் சாய்த்தார். இதனால் இங்கிலாந்துக்கு துவக்கத்திலேயே நெருக்கடி உருவானது. அந்த அணி 7.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கீட்டது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் நல்ல நிலையில் இருந்த இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோய் விட்டது.

இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

பார்த்தீவ் பட்டேல் (சி) கீஸ்வெட்டர் (பி) ஆண்டர்சன் 95
ரஹானே (சி) சமித் பட்டேல் (பி) பிராட் 40
டிராவிட் (சி) கீஸ்வெட்டர் (பி) பிராட் 2
கோக்லி (பி) சமித் பட்டேல் 55
ரோகித் ஷர்மா (ரிட்டயர்ட் ஹர்ட்) 0
ரெய்னா (சி) குக் (பி) டெர்ன்பேச் 38
டோனி(சி) கீஸ்வெட்டர் (பி) பிரிஸ்னன் 33
பிரவீன்குமார் (நாட்-அவுட்) 2
அஸ்வின் (பி) பிரிஸ்னன் 0
வினய்குமார் (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 8

மொத்தம் (50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு) 274

விக்கெட் வீழ்ச்சி: 1-82, 2-87, 3-190, 4-206, 5-266, 6-272, 7-272

பந்து வீச்சு விவரம்

ஆண்டர்சன் 9-0-41-1
பிரிஸ்னன் 10-0-54-2
ஸ்டூவர்ட் பிராட் 10-0-56-2
டெர்ன்பேச் 9-0-62-1
சமித் பட்டேல் 10-0-42-1
டிராட் 2-0-14-0

தினதந்தி


கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Empty Re: கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது

Post by கேசவன் Sun Sep 04, 2011 9:51 am

வறுமையால் தினமும் சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாட்டிற்கு கிரிக்கெட் தேவையா??? ,கிரிக்கெட்டால் நாட்டை கொள்ளையடிபவர்களுக்கே பயன் கிடைக்கிறது.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Empty Re: கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது

Post by ரா.ரமேஷ்குமார் Sun Sep 04, 2011 11:09 am

தொடக்கம் நன்றாக இருந்தது வினய் குமார் பந்து வீச்சை தான் டிராட் பந்தாடினார்... புன்னகை
மழை நின்று விடும் என்ற எதிர்பார்ப்பில் நானும் சில மணி நேரம் காத்திருந்தேன்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Empty Re: கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது

Post by balakarthik Sun Sep 04, 2011 11:15 am

pkesavanmca wrote:வறுமையால் தினமும் சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாட்டிற்கு கிரிக்கெட் தேவையா??? ,கிரிக்கெட்டால் நாட்டை கொள்ளையடிபவர்களுக்கே பயன் கிடைக்கிறது.

அப்போ கிரிகெட்ட ஒழிச்சிட்டா நாடு திருந்திடும் விவசாயிகள் தற்கொலை நின்னுடும் பசி பட்டினி தீர்ந்திடும் பஞ்சம் விலகி ஓடிடும் இந்தியர்கள் அனைவரும் ஓவர்நைட்டுல ஒபாமா ஆகிடுவாங்கணு சொல்லுரிங்களா நண்பா சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Empty Re: கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது

Post by அன்பு தளபதி Sun Sep 04, 2011 11:30 am

balakarthik wrote:
pkesavanmca wrote:வறுமையால் தினமும் சராசரியாக 500 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாட்டிற்கு கிரிக்கெட் தேவையா??? ,கிரிக்கெட்டால் நாட்டை கொள்ளையடிபவர்களுக்கே பயன் கிடைக்கிறது.

அப்போ கிரிகெட்ட ஒழிச்சிட்டா நாடு திருந்திடும் விவசாயிகள் தற்கொலை நின்னுடும் பசி பட்டினி தீர்ந்திடும் பஞ்சம் விலகி ஓடிடும் இந்தியர்கள் அனைவரும் ஓவர்நைட்டுல ஒபாமா ஆகிடுவாங்கணு சொல்லுரிங்களா நண்பா சோகம்

நியாயமான கேள்வி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது Empty Re: கிரிக்கெட் - இந்தியாவின் வெற்றி வாய்ப்பை மழை பறித்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
» உலக கோப்பை கிரிக்கெட்: காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து
» கடைசிப் பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது
» 2-வது டுவென்ட்டி-20 கிரிக்கெட் :ஆஸி., அணி வெற்றி
»  மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்: இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி புதிய சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum