Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அர்த்தமற்ற அதேநாள்....
4 posters
Page 1 of 1
அர்த்தமற்ற அதேநாள்....
நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை
விதியின் வரைவில்
தேடல்களின் தொடர்களோடு
துறவறம் தீராத சுமைகளின்னும்
கனமாய்க் கனக்கிறது
உயிரான உறவுகளின்
பிரிவின் வலிகளோடு
துன்பம் தீராத நோய்களின்னும்
மருந்துகளற்று எரிகிறது
அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது
நிமிடங்களின் நகர்வுகளில்
காத்திருப்பின் காதல்களோடு
இன்பத்தின் தேடல்களின்னும்
அடைந்திடாது திண்டாடுகிறது
நாற்புற சுவர்களின் நடுவில்
சிறைப்பட்ட வாழ்வோடு
மடிகணனியின் துணையின்னும்
நிஜமாய்த் தெரிகிறது
மனம் வருடும் மழலையின்
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
சொக்கித் தவிப்பதின்னும்
சுடராய் ஒளிர்கிறது
ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது
உறவுகளிருந்தும்
தனிமையின் தத்தளிப்போடு
மனதின் வருத்தங்களின்னும்
மங்கலமாய்த் திகழ்கிறது
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது
மாறுமா வாழ்வென்று
கையேந்தும் பிரார்த்தனைகளோடு
உலக வரைபடத்தில்
எத்தனை மாக்களின்னுந்தான் உலவுகின்றது
Last edited by ஹாசிம் on Wed Aug 31, 2011 12:59 pm; edited 1 time in total
நேசமுடன் ஹாசிம்
Re: அர்த்தமற்ற அதேநாள்....
வாருங்க ஹாசிம்...மீண்டும் உங்கள் கவிதையை படிப்பதில் மகிழ்ச்சி....
தனிமையின் கொடுமையை சோகத்துடன் உணர்த்தி உள்ளது வரிகள்...
இது அழும் தானே...இல்லை ஆழும் என்பதற்க்கு அர்த்தம் உள்ளதா...
தவறாக நினைக்க வேண்டாம்...
அனைத்து வரிகளுமே தெளிவாக உள்ளது ஹாசிம்...
தாங்கள் நலம்தானே....
தனிமையின் கொடுமையை சோகத்துடன் உணர்த்தி உள்ளது வரிகள்...
ஆழும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
துணையின் துடிப்புகளின்னும்
இடியாய் விழுகிறது
இது அழும் தானே...இல்லை ஆழும் என்பதற்க்கு அர்த்தம் உள்ளதா...
தவறாக நினைக்க வேண்டாம்...
அனைத்து வரிகளுமே தெளிவாக உள்ளது ஹாசிம்...
தாங்கள் நலம்தானே....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அர்த்தமற்ற அதேநாள்....
மிக்க நன்றி உமா ஆளும் என்பதுதான் அது ஆட்சி என்பதை குறிப்பதற்கு பாவித்தேன் அதில் ளு வந்திருக்க வேண்டும் கவனித்திருக்கவில்லை மிக்க நன்றி
காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது
நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா
காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது
நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா
நேசமுடன் ஹாசிம்
Re: அர்த்தமற்ற அதேநாள்....
ஹாசிம் wrote:மிக்க நன்றி உமா ஆளும் என்பதுதான் அது ஆட்சி என்பதை குறிப்பதற்கு பாவித்தேன் அதில் ளு வந்திருக்க வேண்டும் கவனித்திருக்கவில்லை மிக்க நன்றி
காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது
நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா
சரிங்க அண்ணா...இருவருமே நலம் அண்ணா....
ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி அண்ணா....
கவிதைகள் எழுத நேரம் இல்லயா.... கவிதைகளே காணோமே...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அர்த்தமற்ற அதேநாள்....
உமா wrote:ஹாசிம் wrote:மிக்க நன்றி உமா ஆளும் என்பதுதான் அது ஆட்சி என்பதை குறிப்பதற்கு பாவித்தேன் அதில் ளு வந்திருக்க வேண்டும் கவனித்திருக்கவில்லை மிக்க நன்றி
காதலின் ஆட்சி என்பதாக எழுதியது அது
நான் நலம் உமா நீங்கள் குழந்தை அனைவரும் நலமா
சரிங்க அண்ணா...இருவருமே நலம் அண்ணா....
ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி அண்ணா....
கவிதைகள் எழுத நேரம் இல்லயா.... கவிதைகளே காணோமே...
சில சமயம் எழுதுவதுண்டு வேலை அதிகம் காரியாலயத்தில் பதவி மாற்றம் கொஞ்சம் அதிக சிரத்தை வேலைக்குத் தருகிறது கண்டிப்பாக பகிர்கிறேன்
நேசமுடன் ஹாசிம்
Re: அர்த்தமற்ற அதேநாள்....
ஹாசிம் wrote:
சில சமயம் எழுதுவதுண்டு வேலை அதிகம் காரியாலயத்தில் பதவி மாற்றம் கொஞ்சம் அதிக சிரத்தை வேலைக்குத் தருகிறது கண்டிப்பாக பகிர்கிறேன்
காத்திருக்கிறேன் அண்ணா....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அர்த்தமற்ற அதேநாள்....
அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது
ஹாசிம் உங்களுக்கே உரித்தான கவிதைநடை....வெகு அழகு.
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது
ஹாசிம் உங்களுக்கே உரித்தான கவிதைநடை....வெகு அழகு.
Re: அர்த்தமற்ற அதேநாள்....
Kaa Na Kalyanasundaram wrote:அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
உவகையின் தேடலின்னும்
உருவமற்று விம்பமாகிறது
ஹாசிம் உங்களுக்கே உரித்தான கவிதைநடை....வெகு அழகு.
மிக்க நன்றி கவிஞரே நன்றிகள்
நேசமுடன் ஹாசிம்
Re: அர்த்தமற்ற அதேநாள்....
உங்கள் கவிதை மிகவும் அருமை. சோகம் மிகு வரிகள், ஆறுதல் கூறுவதற்கு முன் ஒரு அறிவுரை கூறுகிறேன், உங்கள் சோகத்திநின்று நீங்கள் வெளிவர வேண்டுமானால் உங்கள் மனதை உள்ளிருந்து பார்க்காமல் வெளியில் இருந்து பாருங்கள். ஹாசிம் என்பவரை ஒரு வெளியாளாய் நினைந்து பாருங்கள் உங்கள் பிரச்சனைகள், தீர்வுகள், மாறுதல்கள் அனைத்தும் உங்களுக்கு குழப்பமின்றி தெளிவாக புரியவரும்.
சாவித்ரி- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|