ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம்

Go down

தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம் Empty தீவினை நீக்க ’செங்கொடி மணிமேகலை’ கோவில் கட்டுவோம்

Post by kirikasan Tue Aug 30, 2011 10:54 pm

மத்திய அரசின் தீவினையை நீக்கிட செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக்
காஞ்சியில் கட்டுவோம், வாரீர்!!

1500 வருடங்களுக்கு முன்பு கோவலனின் தலை மதுரையில் அரசனின் அசிரத்தையால்
வெட்டப்பட்டது. ஆவணி மாதம் 23 ஆம் தேதி, பௌர்ணமிக்கு இரண்டு நாளுக்கு
முன்னால் அது நடந்தது. அதே நாளில், அதே ஸ்ரீகர வருஷத்தில் மூன்று பேரை இந்திய அரசு
தூக்கில் போட உத்தரவு கொடுத்ததுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

இன்று அந்த கொடுங்கோல் உததரவை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி
வைத்திருக்கிறது.

கோவலனின் மனைவி கண்ணகியை கடைசியாகப் பார்த்து உரையாடியது செங்குன்றத்து
ஆதிவாசி மக்கள். அந்த மக்களில் ஒருத்தியாகப் பிறந்த, திருமணமாகாத 21 வயது இருளர்
குலப் பெண்ணான சரசு என்ற செங்கொடி, கண்ணகிக்கு நிகழ்ந்த அநீதி மீண்டும்
நடந்துவிடக் கூடாது என்பதற்காகவும், கண்ணகியின் கோபம் மதுரையை அழித்ததைப் போல அரசின் தவறான தீர்ப்பால் தமிழக மக்களின் வாழ்வு அழிந்து நாசமாகிவிடக்கூடாது
என்பதற்காகவும் கண்ணகியை மனதில் வேண்டி தன்னையே ஆவணி 11 ஆம் தேதியன்று நெருப்பிற்கு இரையாக்கிக் கொண்டாள்.

அதற்கு அவள் தேர்ந்தெடுத்த இடமும், தேதியும், நேரமும்தான் நம்மை அதிர்ச்சிக்குள் ளாக்குகிறது! ஆச்சர்யப்பட வைக்கிறது!!

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள தாலுகா ஆபீசின்
முன்பு, அந்தி சாயும் நேரத்தில் அவள் நெருப்போடு ஒன்றிணைந்தாள். அதே இடத்தில்,
அதே நாளில் (ஆவணி அமாவாசை), அதே நேரத்தில்தான் ( சூரிய அஸ்தமனத்தின் போது)
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்து துறவியாக மாறிய மணிமேகலை
( சரசுவின் அதே 21 வயதில் ) அமுத சுரபியை கையிலேந்தி உலகில் பசித்திருக்கும் அனைத்து
உயிர்களுக்கும் அன்பு என்ற வற்றாத அன்னத்தைப் படைக்கப் புறப்பட்டாள்.

அரச அநீதியில் இருந்து கோவலனைக் காப்பாற்றத் தவறிய மதுரையையும், அதன்
குடிகளையும் கண்ணகியின் கோபம் அழித்ததைப்போல, முருகன், சாந்தன்,
பேரறிவாளன் ஆகிய மூவருக்கு அரச அநீதி ஏற்பட்டு அதன் காரணமாகத் தமிழக மக்களின்
குடும்பங்கள் அழிந்து போகாமல் தடுக்கவே மணிமேகலையின் பேரன்பை மனதில் ஏற்றி, நம்மைக் காக்கும் நெருப்புத் தடுப்பரணாக செங்கொடி தன்னை மாற்றிக் கொண்டாள்.

நம்மை சூழ்ந்துகொண்டிருக்கும் தீவினைகளை மனிதர்களான நாம் அறிகிறோமோ
இல்லையோ இயற்கையும், பிராணிகளும் நன்கே அறிந்துள்ளன. 2004 ஆம் வருஷம் டிசம்பர் 24 அதிகாலை வந்த சுனாமிப் பேரலையை பிராணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே
உணர்ந்து கொண்டன. காடுகளில் உள்ள பாம்புகள் கூட்டம் கூட்டமாக இடம்
பெயர்ந்தன.
அதுபோலவே, இந்த ஆடிப் பௌர்ணமியன்று ( ஆகஸ்டு 13 ) கண்ணகி, மாதவி மற்றும்
கோவலன் பிறந்த நகரான காவேரிப் பூம்பட்டிணம் என்ற பூம்புகாரிலும் அதனைச்
சுற்றியுள்ள சோழ மண்டலத்தின் பெரும் பகுதிகளிலும் நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
செங்கொடி அக்கினித் தாயாக மாறிய அடூத்த 12 மணி நேரத்தில் தூக்குக் கயிறை
எதிர்நோக்கியிருக்கும் மூவரை அடைத்துவைத்திருக்கும் வேலூர் சிறையும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளும் பூகம்பத்தால் அதிர்ந்து குலுங்கியிருக்கின்றன.

மேலும் தமிழகத்தின் வடக்கில் உள்ள ஏலகிரி மலையில் இருந்து தெற்கில் உள்ள
பொதிகை ம்லைவரை உள்ள அனைத்து மலைகளிலும், அவற்றின் வனப்பகுதிகளிலும் உள்ள
பிராணிகள் இடம் பெயரத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக பாம்புகள் கூட்டம் கூட்டமாக
காடுகளில் இருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றன.

இந்தத் தீவினைகளிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தினரையும் காப்பாற்றிக்
கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

சுமங்கலிப் பெண்கள் அனைவரும் மதுரையைக் காக்கும் அன்னையான மீனாட்சி
அம்மனை மனதில் துதிக்க வேண்டும்.

மாகாளி அவதாரம் எடுத்த கண்ணகியின் உஷ்ணத்தைத் தனிக்கவல்ல கடலின் நீல
வண்ணத்திலான உடுப்பணிந்து செங்கொடியும், மணிமேகலையும் உலகிற்கு அன்பு
செய்யத் துவங்கிய காலமான அந்திசாயும் நேரத்தில் அம்மன் கோவிலுக்கு தினமும் செல்ல
வேண்டும். மத்திய அரசின் அநீதியால் தூக்கிலிடப்படவுள்ள மூவரையும் அநீதி
அரசாணையில் இருந்து விடுவிக்கக ஐப்பசி அமாவாசை வரை கார்த்திகைத்
திருவிளக்கு ஏந்தி அம்மனிடம் பரிசுத்த மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அம்மனின் கோபத்தைத் தனிக்க தினமும் ஒருவேளை விரதமிருந்து வெள்ளிக்கி ளமைகள்தோறும் நீல உடுப்பணிந்து, அக்னி சட்டியை எடுத்தால் கூடுதல் நன்மைகள் உண்டாகும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாதரசிகள் புலால் உணவை மறுத்தல் அவசியம்.

மேலும் ஆவணி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை நடக்கும் திருமணங்கள்
அனைத்திலும் மணமேடையின் பின்புறத்தை நீலத் துணியால் அலங்கரிப்பதுவும், மணமக்களின் வலது மணிக்கட்டில் நீலத் துணியைக் கட்டிக் கொள்வதும் அம்மனின் கோபத்தைத் தணிக்கும் செயல்களாகும்.

செங்கொடியும் மணிமேகலையும் உலகின் அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவதற்காக அன்புருவம் ஏற்ற அதே இடத்தில் அவர்களின் பெயரில் அன்புத் திருக்கோவிலைக் கட்டுவதே மாகாளித் தாயின் சினத்தை முற்றிலும் தனிக்கும் செயலாகும்.

செங்கொடி மணிமேகலை அன்புத் திருக்கோவிலைக் காஞ்சி மாநகரில் கட்டும்
பணியில் ஈடுபடும் ஒவ்வொரு பெண்ணின் குடும்பமும் விருத்தியடைந்து, சகல வளங்களையும் பெறும் என்பது நிச்சயம்.

- பத்துமலை முருகையன்,
ஆன்மீக அறிஞர்,
பத்துமலை, மலேசியா


(கண்டது: சந்தவசந்தத்தில்)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum