புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை வாழ விடுவோம்!
Page 1 of 1 •
- GuestGuest
'தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் இவள்
என்று பிறந்தவ ளென்றுணராத
இயல்பின ளாமெங்கள் தாய்.'
என்று பாரதி பாரதத் தாயைப் பற்றிப் பாடியது தமிழ் தாய்க்கும் முற்றும் பொருந்தும்.
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்குடி!" என்று உணர்ச்சி வயப்பட்ட முழக்கங்களை ஒதுக்கிப் பார்த்தாலும், நடுநிலையான மொழி ஆராச்சியாளர்கள் உலகின் பழமையான மொழிகளில் தமிழ் ஒன்று என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
அறிஞர்களின் ஆய்வுப்படி கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரு), இலத்தீன், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஐந்து மொழிகள் உலகின் மற்றெல்லா மொழிகளையும் விட மிகப் பழமையான மொழிகள். இவற்றில் தமிழைத் தவிர மற்ற நான்கு மொழிகளும் இன்று வழக்கொழிந்து விட்டன. அவை பேச்சு மொழிகளாகவோ, பொது மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நிலையிலோ இல்லை.
தமிழ் இன்றும் நிதமும் புதுமைப் பொலிவோடும் இளமை மிடுக்கோடும் விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்? மற்ற தொன்மையான மொழிகளுக்கு நேர்ந்த கதி தமிழுக்கு ஏன் நிகழவில்லை? – இதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.
மற்ற மொழிகள் தங்கள் தொன்மை மாறாமல், அவை இருந்த பீடத்திலிருந்து இறங்கி வராமல், காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளாமல், வெகு ஜன உபயோகத்திலிருந்து விலகி வழக்கொழிந்தன. ஆனால், தமிழ் சங்கப் பலகையிலும், சங்கப் புலவர் நாவிலும் தாண்டவமாடும். சென்னை சாலையோரத்தில் ரிக்ஷாகாரர் இஸ்துகினு போனாலும் வரும். காலம் மற்றும் தேவைக்கேற்ற மாற்றங்களுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டதால் அழியாமல் இருக்கிறது.
தமிழிலிருந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற திராவிட மொழிகள் தோன்றியது நமக்கு தெரியும். அதே நேரம், சமஸ்கிருதத்தையும் தற்போது ஓரளவு ஆங்கிலத்தையும் தனக்குள்ளே விழுங்கி எக்காலத்துக்கும் ஏற்ப விளங்குகிறது தமிழ்.
கன்னித்தமிழாக இல்லாமல், தமிழ்த் தாயாக நல்லனவற்றைப் பிற மொழிகளிலிருந்து ஏற்றும், தன் தனித்தன்மை கெடாமல் இருப்பதால் தான் இந்த இணைய உலகிலும் இனிய தமிழ் நிலைத்திருக்கிறது.
இப்படிப்பட்ட மொழியின் வலிமையறியாமல், தமிழை தூய்மைப்படுத்துகிறோம், தமிழை வளர்க்கிறோம் (வளர்க்க தமிழ் என்ன தாடியா, மீசையா என்று ஒரு கவிஞர் கேட்டது சரியே) என்று சொல்லி மற்ற செம்மொழிகளுக்கு நேர்ந்த கதியை தமிழுக்கு ஏற்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில், சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழை யாரும் வளர்க்கத் தேவையில்லை. வளர்க்க தமிழ் ஒன்றும் சிறு குழந்தையில்லை. தமிழை வீட்டில் உள்ள அறிவும் அனுபவமும் முதிர்ந்த தாய் போலப் பார்த்து, அந்த அறிவையும், அனுபவத்தையும் நமக்கு தேவையான வகையில் உபயோகப்படுத்தவேண்டும்.
கம்பனோ, வள்ளுவரோ, அவ்வையோ, பாரதியோ, தாங்கள் தமிழ் வளர்த்ததாக சொல்லிக் கொள்ளவில்லை. தமிழில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். தமிழும் வளம் பெற்றது.
முதல், இடைச் சங்கங்களைக் கடல் கோள் (சுனாமி!!) கொண்ட போதும், தமிழகத்தின் இருண்ட காலமான களப்பிரர் காலத்திலும், பின் தமிழே தெரியாத மன்னர்கள் ஆண்ட காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் தமிழ் அழியவில்லை. அதற்கு அழிவில்லை. நாம் தமிழை வளர்க்க வேண்டாம், வாழ விட்டால் போதும். அதற்கு நம் மிக எளிமையான யோசனைகள்:
1. முதலில் தமிழை ஒரு பீடத்தில் அமர்த்தும் செயலை ஆட்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் நிறுத்த வேண்டும். மேடைத்தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்று வேறு வேறு உருவம் தாங்கும் தமிழின் வளைந்து கொடுக்கும் தன்மையால் தான் அது இன்றும் வாழ்கிறது. அதை கன்னித்தமிழ், தூய தமிழ் என்று சிறையில் அடைக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். ஆங்கிலம் இலத்தீனை விழுங்கியது. தமிழ் சமஸ்க்ருதத்தை விழுங்கியது. அதில் தவறில்லை. தமிழைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று சொல்லி ஆங்கில, சமஸ்கிருத 'தீட்டை' நீக்கினால், தமிழ் அன்னியப்பட்டு விடும். வரைமுறை இருந்தால் போதும்.
2. தமிழை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ஊடகங்களில் பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப மொழி வளரும். முன்பே சொன்னது போல் தமிழை யாரும் தனியாக வளர்க்கவில்லை. பக்தி இலக்கிய காலத்தில் பக்திப் பாடல்கள் தமிழில் இயற்றப்பட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசபக்திப் பாடல்கள் தமிழில் வந்தன. அந்த காலகட்டத்தில் மக்கள் மீது தாக்கம் அதிகமாக உள்ள விஷயங்களை தமிழில் சொன்னதால், தமிழ் இன்னும் செழுமை பெற்றது. இதே போன்று இன்றைய காலகட்டத்தில் வீச்சு அதிகமாக உள்ள விஞ்ஞானம், விளையாட்டு, திரைப்படம் போன்றவற்றில் தமிழ் புக வேண்டும். தமிழை வலுக்கட்டாயமாக இவற்றில் திணிக்கக்கூடாது.
3. நெருடாத, எளிதில் புரியக்கூடிய புதிய சொற்கள் உருவாக்க வேண்டும். சில பெயர் சொற்கள் வேற்று மொழி வார்த்தைகளாக இருந்து, தமிழில் எளிமையாக மாற்றமுடியா விட்டால் அப்படியே எடுத்தாளலாம். (உம். காபி இதை கொட்டை வடி நீர், குளம்பி என்றால் குழம்பிப் போக வேண்டியது தான். நமது 'நாவாய்' என்ற தமிழ் வார்த்தை தான் இன்று ஆங்கிலத்தில் 'நேவி' என்று உபயோகத்தில் உள்ளது.
4. இருக்கும் நல்ல தமிழ் கலைச்சொற்களை இழக்கக்கூடாது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் புற நானூற்றில் பயன்படுத்திய 'மணல், இரவு, மலர், மாலை, முன்னோர், கண், நிலம், உயிர், உடம்பு’ போன்ற வார்த்தைகள் இன்றும் செலாவணியில் உள்ளன. 'ஏமம் (பாதுகாப்பு), மடங்கல் (இறுதி), வளி (காற்று), நீத்தம் (மிகுதி), பகடு (எருது), வலவன் (ஓட்டுனர்) ஆகியவற்றைத் தொலைத்து விட்டோம். எக்ஸ்க்ளூஸிவ் ரிப்போர்ட் – எல்லாம் தமிழ் கலைச்சொல் இல்லை.
5. தமிழ் பண்டிதர்கள் கலைச்சொற்களை உருவாக்கக் கூடாது. தமிழ் நாட்டில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அறிவியல், கணித பாட புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். கரடு முரடாக மொழிபெயர்த்து தமிழில் இவற்றைப் பயிலும் மாணவர்களை ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் மாற்றுவதில் யாருக்கு என்ன இலாபம்.? இதற்கு ஒரே வழி, எல்லா துறையினருக்கும் தமிழ் அறிவு தருவது. அந்த அந்த துறையில் வல்லுனர்கள் தமிழில் கலைச் சொற்களை ஆக்கினால் சொல்ல வரும் விஷயம் தமிழில் எளிதில் விளங்கும். விஞ்ஞானிகளுக்கு தமிழ் அறிவு புகட்டுவது, தமிழ் பண்டிதர்களுக்கு விஞ்ஞானத்தைப் புரிய வைப்பதை விட எளிதில்லையா? இது புதிய யோசனையுமல்ல. வரலாற்றைப் புரட்டினால் பெஸ்கி என்ற வெளிநாட்டவர் கிறித்தவத்தைப் பரப்ப தமிழை முனைந்து கற்று, பின் வீரமாமுனிவர் என்று போற்றப்பட்டு சதுர் அகராதி, பரமார்த்தகுரு கதைகள் போன்றவற்றை உருவாக்கியதில் இந்த உண்மை பொதிந்திருக்கிறது.
6. தமிழ் பேசும் குடும்பங்களோ, நண்பர்களோ சந்தித்துப் பேசும் போது கூடிய வரை தமிழில் பேசலாம். தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் கொச்சைத்தமிழை கிண்டல் செய்யும் நாம், முழுதும் ஆங்கிலத்தில் பேசுவது என்ன நியாயம்? தொலைக்காட்சி தமிழைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது ஒரு அலை, வேறு அலை விரைவில் இதை மாற்றும். அறுபது வருடங்களுக்கு முன் மணிப்பிரவாள நடை, பின் அக்ரஹார தமிழ், சென்னைத் தமிழ், சமீபத்தில் 'மொழி மாற்ற ஜுனூன் தமிழ் ( நான் சொல்லிட்டேன் உங்ககிட்ட அப்ப முன்னாடியே) எல்லாம் வந்து போகும். இவை தமிழுக்கு வேறு வேறு ஆடைகள் போல் சமயத்துக்கு தகுந்தாற் போல் மாறும். இவை தமிழின் அடையாளமாக மாறிவிடாது.
7. தமிழ் படித்த மக்களை இன்றைய ஊடகங்களுக்கு கொண்டு வர வேண்டும். திரை, தொலைக்காட்சி, இணையம் இவற்றில் அதிகம் இடம் பெறவேண்டும். ஓலைச்சுவடிகளை கறையானுக்கும், காலத்துக்கும், ஆடிப்பெருக்கில் வெள்ளத்துக்கும் தொலைத்ததுபோல் அரிய தமிழ் பொக்கிஷங்களை இன்னும் சில ஆண்டுகளுக்குள் இணையத்தில் கொண்டு வராவிட்டால் அவற்றை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். 'ப்ராஜக்ட் மதுரை' போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் தரவேண்டும். புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் இதில் முன்னணியில் உள்ளனர்.
8. தமிழ் எழுத்து சீர்திருத்தம் (80 களுக்கு பிறகு ஒன்றும் செய்யப்படவில்லை), இணைய ஒருங்கிணைப்பு போன்றவற்றை அரசாங்கங்களோ, பொது அமைப்புகளோ மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கு உருப்படியாக நிதி ஒதுக்கி சீரமைப்பது வருங்காலத்துக்கு நல்லது. இன்னமும் பழம்பெருமை மட்டும் பேசும் மாநாடுகளால் ஒரு பயனும் இல்லை.
9. தமிழை ஒரு மொழியாக பயில்விக்க முன்னுரிமை தர வேண்டும். நிலை முறைப்படி (stream based) தமிழை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். பெரும் பண்டிதராக விரும்புவோர்க்கு கடினமான இலக்கணம், சங்க காலப் பாடல்கள் கற்றுத்தரலாம். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இவற்றைத் திணிக்கத் தேவையில்லை. அவனுக்கு பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் நன்றாக வந்தால் போதுமானது. சிங்கப்பூர் அரசாங்கம் சமீபத்தில் இத்தகு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூட +2 மாணவர்கள் எடுத்துக்கொள்ளத் தயங்குவதற்குக் காரணம் தமிழில் எவ்வளவு நன்றாக எழுதினாலும் நூற்றுக்கு நூறு கிடைப்பதில்லை என்பதால் தான். இந்தக்குறையை அரசாங்கமும், தமிழ் ஆசிரியர்களும் தான் சரி செய்யவேண்டும்.
10. இறுதியாக, நம் குழந்தைகளுக்கு உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் தமிழ் கற்றுத்தர வேண்டும். நமக்கு நேரமில்லை என்று நம் மொழியை நாம் அடுத்த தலைமுறைக்கு பரிச்சயம் செய்யத்தவறினால், மொழியோடு நம் கலாச்சாரம், சரித்திரம், நாட்டின் தொடர்பு எல்லாவற்றையும் துண்டிக்கும் பாவத்தை செய்தவர்களாவோம். தமிழை நாம் ஓரளவுக்கு பயிற்றுவித்தோமானால் தமிழின் இனிமை இவர்களை ஆட்கொண்டு மேலும் கற்க தூண்டும். இது நமது தலையாய கடமை.
தமிழ் நம் மொழி என்பதில் நாம் எல்லாரும் பெருமை கொள்ளலாம். நாமக்கல் கவிஞர் ' தமிழன் என்றோரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று பாடினார். என்னைப் பொருத்தவரை தமிழருக்கு தனி குணமோ, அடையாளமோ கிடையாது. தமிழ் மட்டும் தான் நமது அடையாளம். அதுவே நம்மை இணைக்கும் பாலம். சினிமாவோ, கிரிக்கெட்டோ, அரசியலோ அல்ல. தமிழை வளர்க்க வேண்டாம். வாழ விடுவோம். வாழ்க தமிழ்!
--
சந்திரமெளலி
விகடன் இணையம்
சூழ்கலை வாணர்களும் இவள்
என்று பிறந்தவ ளென்றுணராத
இயல்பின ளாமெங்கள் தாய்.'
என்று பாரதி பாரதத் தாயைப் பற்றிப் பாடியது தமிழ் தாய்க்கும் முற்றும் பொருந்தும்.
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்குடி!" என்று உணர்ச்சி வயப்பட்ட முழக்கங்களை ஒதுக்கிப் பார்த்தாலும், நடுநிலையான மொழி ஆராச்சியாளர்கள் உலகின் பழமையான மொழிகளில் தமிழ் ஒன்று என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
அறிஞர்களின் ஆய்வுப்படி கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரு), இலத்தீன், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஐந்து மொழிகள் உலகின் மற்றெல்லா மொழிகளையும் விட மிகப் பழமையான மொழிகள். இவற்றில் தமிழைத் தவிர மற்ற நான்கு மொழிகளும் இன்று வழக்கொழிந்து விட்டன. அவை பேச்சு மொழிகளாகவோ, பொது மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நிலையிலோ இல்லை.
தமிழ் இன்றும் நிதமும் புதுமைப் பொலிவோடும் இளமை மிடுக்கோடும் விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்? மற்ற தொன்மையான மொழிகளுக்கு நேர்ந்த கதி தமிழுக்கு ஏன் நிகழவில்லை? – இதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.
மற்ற மொழிகள் தங்கள் தொன்மை மாறாமல், அவை இருந்த பீடத்திலிருந்து இறங்கி வராமல், காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளாமல், வெகு ஜன உபயோகத்திலிருந்து விலகி வழக்கொழிந்தன. ஆனால், தமிழ் சங்கப் பலகையிலும், சங்கப் புலவர் நாவிலும் தாண்டவமாடும். சென்னை சாலையோரத்தில் ரிக்ஷாகாரர் இஸ்துகினு போனாலும் வரும். காலம் மற்றும் தேவைக்கேற்ற மாற்றங்களுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டதால் அழியாமல் இருக்கிறது.
தமிழிலிருந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற திராவிட மொழிகள் தோன்றியது நமக்கு தெரியும். அதே நேரம், சமஸ்கிருதத்தையும் தற்போது ஓரளவு ஆங்கிலத்தையும் தனக்குள்ளே விழுங்கி எக்காலத்துக்கும் ஏற்ப விளங்குகிறது தமிழ்.
கன்னித்தமிழாக இல்லாமல், தமிழ்த் தாயாக நல்லனவற்றைப் பிற மொழிகளிலிருந்து ஏற்றும், தன் தனித்தன்மை கெடாமல் இருப்பதால் தான் இந்த இணைய உலகிலும் இனிய தமிழ் நிலைத்திருக்கிறது.
இப்படிப்பட்ட மொழியின் வலிமையறியாமல், தமிழை தூய்மைப்படுத்துகிறோம், தமிழை வளர்க்கிறோம் (வளர்க்க தமிழ் என்ன தாடியா, மீசையா என்று ஒரு கவிஞர் கேட்டது சரியே) என்று சொல்லி மற்ற செம்மொழிகளுக்கு நேர்ந்த கதியை தமிழுக்கு ஏற்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில், சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழை யாரும் வளர்க்கத் தேவையில்லை. வளர்க்க தமிழ் ஒன்றும் சிறு குழந்தையில்லை. தமிழை வீட்டில் உள்ள அறிவும் அனுபவமும் முதிர்ந்த தாய் போலப் பார்த்து, அந்த அறிவையும், அனுபவத்தையும் நமக்கு தேவையான வகையில் உபயோகப்படுத்தவேண்டும்.
கம்பனோ, வள்ளுவரோ, அவ்வையோ, பாரதியோ, தாங்கள் தமிழ் வளர்த்ததாக சொல்லிக் கொள்ளவில்லை. தமிழில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். தமிழும் வளம் பெற்றது.
முதல், இடைச் சங்கங்களைக் கடல் கோள் (சுனாமி!!) கொண்ட போதும், தமிழகத்தின் இருண்ட காலமான களப்பிரர் காலத்திலும், பின் தமிழே தெரியாத மன்னர்கள் ஆண்ட காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் தமிழ் அழியவில்லை. அதற்கு அழிவில்லை. நாம் தமிழை வளர்க்க வேண்டாம், வாழ விட்டால் போதும். அதற்கு நம் மிக எளிமையான யோசனைகள்:
1. முதலில் தமிழை ஒரு பீடத்தில் அமர்த்தும் செயலை ஆட்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் நிறுத்த வேண்டும். மேடைத்தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்று வேறு வேறு உருவம் தாங்கும் தமிழின் வளைந்து கொடுக்கும் தன்மையால் தான் அது இன்றும் வாழ்கிறது. அதை கன்னித்தமிழ், தூய தமிழ் என்று சிறையில் அடைக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். ஆங்கிலம் இலத்தீனை விழுங்கியது. தமிழ் சமஸ்க்ருதத்தை விழுங்கியது. அதில் தவறில்லை. தமிழைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று சொல்லி ஆங்கில, சமஸ்கிருத 'தீட்டை' நீக்கினால், தமிழ் அன்னியப்பட்டு விடும். வரைமுறை இருந்தால் போதும்.
2. தமிழை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ஊடகங்களில் பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப மொழி வளரும். முன்பே சொன்னது போல் தமிழை யாரும் தனியாக வளர்க்கவில்லை. பக்தி இலக்கிய காலத்தில் பக்திப் பாடல்கள் தமிழில் இயற்றப்பட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசபக்திப் பாடல்கள் தமிழில் வந்தன. அந்த காலகட்டத்தில் மக்கள் மீது தாக்கம் அதிகமாக உள்ள விஷயங்களை தமிழில் சொன்னதால், தமிழ் இன்னும் செழுமை பெற்றது. இதே போன்று இன்றைய காலகட்டத்தில் வீச்சு அதிகமாக உள்ள விஞ்ஞானம், விளையாட்டு, திரைப்படம் போன்றவற்றில் தமிழ் புக வேண்டும். தமிழை வலுக்கட்டாயமாக இவற்றில் திணிக்கக்கூடாது.
3. நெருடாத, எளிதில் புரியக்கூடிய புதிய சொற்கள் உருவாக்க வேண்டும். சில பெயர் சொற்கள் வேற்று மொழி வார்த்தைகளாக இருந்து, தமிழில் எளிமையாக மாற்றமுடியா விட்டால் அப்படியே எடுத்தாளலாம். (உம். காபி இதை கொட்டை வடி நீர், குளம்பி என்றால் குழம்பிப் போக வேண்டியது தான். நமது 'நாவாய்' என்ற தமிழ் வார்த்தை தான் இன்று ஆங்கிலத்தில் 'நேவி' என்று உபயோகத்தில் உள்ளது.
4. இருக்கும் நல்ல தமிழ் கலைச்சொற்களை இழக்கக்கூடாது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் புற நானூற்றில் பயன்படுத்திய 'மணல், இரவு, மலர், மாலை, முன்னோர், கண், நிலம், உயிர், உடம்பு’ போன்ற வார்த்தைகள் இன்றும் செலாவணியில் உள்ளன. 'ஏமம் (பாதுகாப்பு), மடங்கல் (இறுதி), வளி (காற்று), நீத்தம் (மிகுதி), பகடு (எருது), வலவன் (ஓட்டுனர்) ஆகியவற்றைத் தொலைத்து விட்டோம். எக்ஸ்க்ளூஸிவ் ரிப்போர்ட் – எல்லாம் தமிழ் கலைச்சொல் இல்லை.
5. தமிழ் பண்டிதர்கள் கலைச்சொற்களை உருவாக்கக் கூடாது. தமிழ் நாட்டில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அறிவியல், கணித பாட புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். கரடு முரடாக மொழிபெயர்த்து தமிழில் இவற்றைப் பயிலும் மாணவர்களை ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் மாற்றுவதில் யாருக்கு என்ன இலாபம்.? இதற்கு ஒரே வழி, எல்லா துறையினருக்கும் தமிழ் அறிவு தருவது. அந்த அந்த துறையில் வல்லுனர்கள் தமிழில் கலைச் சொற்களை ஆக்கினால் சொல்ல வரும் விஷயம் தமிழில் எளிதில் விளங்கும். விஞ்ஞானிகளுக்கு தமிழ் அறிவு புகட்டுவது, தமிழ் பண்டிதர்களுக்கு விஞ்ஞானத்தைப் புரிய வைப்பதை விட எளிதில்லையா? இது புதிய யோசனையுமல்ல. வரலாற்றைப் புரட்டினால் பெஸ்கி என்ற வெளிநாட்டவர் கிறித்தவத்தைப் பரப்ப தமிழை முனைந்து கற்று, பின் வீரமாமுனிவர் என்று போற்றப்பட்டு சதுர் அகராதி, பரமார்த்தகுரு கதைகள் போன்றவற்றை உருவாக்கியதில் இந்த உண்மை பொதிந்திருக்கிறது.
6. தமிழ் பேசும் குடும்பங்களோ, நண்பர்களோ சந்தித்துப் பேசும் போது கூடிய வரை தமிழில் பேசலாம். தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் கொச்சைத்தமிழை கிண்டல் செய்யும் நாம், முழுதும் ஆங்கிலத்தில் பேசுவது என்ன நியாயம்? தொலைக்காட்சி தமிழைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது ஒரு அலை, வேறு அலை விரைவில் இதை மாற்றும். அறுபது வருடங்களுக்கு முன் மணிப்பிரவாள நடை, பின் அக்ரஹார தமிழ், சென்னைத் தமிழ், சமீபத்தில் 'மொழி மாற்ற ஜுனூன் தமிழ் ( நான் சொல்லிட்டேன் உங்ககிட்ட அப்ப முன்னாடியே) எல்லாம் வந்து போகும். இவை தமிழுக்கு வேறு வேறு ஆடைகள் போல் சமயத்துக்கு தகுந்தாற் போல் மாறும். இவை தமிழின் அடையாளமாக மாறிவிடாது.
7. தமிழ் படித்த மக்களை இன்றைய ஊடகங்களுக்கு கொண்டு வர வேண்டும். திரை, தொலைக்காட்சி, இணையம் இவற்றில் அதிகம் இடம் பெறவேண்டும். ஓலைச்சுவடிகளை கறையானுக்கும், காலத்துக்கும், ஆடிப்பெருக்கில் வெள்ளத்துக்கும் தொலைத்ததுபோல் அரிய தமிழ் பொக்கிஷங்களை இன்னும் சில ஆண்டுகளுக்குள் இணையத்தில் கொண்டு வராவிட்டால் அவற்றை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். 'ப்ராஜக்ட் மதுரை' போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் தரவேண்டும். புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் இதில் முன்னணியில் உள்ளனர்.
8. தமிழ் எழுத்து சீர்திருத்தம் (80 களுக்கு பிறகு ஒன்றும் செய்யப்படவில்லை), இணைய ஒருங்கிணைப்பு போன்றவற்றை அரசாங்கங்களோ, பொது அமைப்புகளோ மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கு உருப்படியாக நிதி ஒதுக்கி சீரமைப்பது வருங்காலத்துக்கு நல்லது. இன்னமும் பழம்பெருமை மட்டும் பேசும் மாநாடுகளால் ஒரு பயனும் இல்லை.
9. தமிழை ஒரு மொழியாக பயில்விக்க முன்னுரிமை தர வேண்டும். நிலை முறைப்படி (stream based) தமிழை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். பெரும் பண்டிதராக விரும்புவோர்க்கு கடினமான இலக்கணம், சங்க காலப் பாடல்கள் கற்றுத்தரலாம். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இவற்றைத் திணிக்கத் தேவையில்லை. அவனுக்கு பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் நன்றாக வந்தால் போதுமானது. சிங்கப்பூர் அரசாங்கம் சமீபத்தில் இத்தகு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூட +2 மாணவர்கள் எடுத்துக்கொள்ளத் தயங்குவதற்குக் காரணம் தமிழில் எவ்வளவு நன்றாக எழுதினாலும் நூற்றுக்கு நூறு கிடைப்பதில்லை என்பதால் தான். இந்தக்குறையை அரசாங்கமும், தமிழ் ஆசிரியர்களும் தான் சரி செய்யவேண்டும்.
10. இறுதியாக, நம் குழந்தைகளுக்கு உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் தமிழ் கற்றுத்தர வேண்டும். நமக்கு நேரமில்லை என்று நம் மொழியை நாம் அடுத்த தலைமுறைக்கு பரிச்சயம் செய்யத்தவறினால், மொழியோடு நம் கலாச்சாரம், சரித்திரம், நாட்டின் தொடர்பு எல்லாவற்றையும் துண்டிக்கும் பாவத்தை செய்தவர்களாவோம். தமிழை நாம் ஓரளவுக்கு பயிற்றுவித்தோமானால் தமிழின் இனிமை இவர்களை ஆட்கொண்டு மேலும் கற்க தூண்டும். இது நமது தலையாய கடமை.
தமிழ் நம் மொழி என்பதில் நாம் எல்லாரும் பெருமை கொள்ளலாம். நாமக்கல் கவிஞர் ' தமிழன் என்றோரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று பாடினார். என்னைப் பொருத்தவரை தமிழருக்கு தனி குணமோ, அடையாளமோ கிடையாது. தமிழ் மட்டும் தான் நமது அடையாளம். அதுவே நம்மை இணைக்கும் பாலம். சினிமாவோ, கிரிக்கெட்டோ, அரசியலோ அல்ல. தமிழை வளர்க்க வேண்டாம். வாழ விடுவோம். வாழ்க தமிழ்!
--
சந்திரமெளலி
விகடன் இணையம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|