ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்

4 posters

Go down

என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Empty என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்

Post by கே. பாலா Mon Aug 29, 2011 3:23 pm

சென்னை: எனது மகனை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூக்குத் தண்டனைக் கைதிகள் மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூருக்கு இன்று வந்த அற்புதம் அம்மாளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது மகனையும் மற்ற இருவரையும் முதல்வர் மீட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

முன்னதாக செங்கொடியின் மரணம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 3 பேரின் உயிரை காக்க அறப்போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் செங்கொடி தீக்குளித்து பலியானது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றார்.

மேலும் அவர் பேரறிவாளன் குறித்த உருக்கமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில்,

கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி எனது மகன் பேரறிவாளனை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்தோம். எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் முடித்திருந்த பேரறிவாளன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் வேப்பேரி பெரியார் திடலில் தங்கியிருந்தான்.

அங்கிருந்துதான் அவனை அழைத்து சென்றனர். அதன் பிறகு அவனை பார்ப்பதற்கே நான் போராட வேண்டியிருந்தது. பின்னர் பல நாட்கள் கழித்து சி.பி.ஐ.கோர்ட்டில் அவனை ஆஜர்படுத்தினர். அப்போது அவனுடன் என்னால் பேச முடியவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த பின்னர் 50 நாட்களுக்கு பின்னர்தான் அவனுடன் என்னால் பேச முடிந்தது.

கிரீம்ஸ் ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து சிறிதுநேரம் அவனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவன், என்னை பார்த்து பயப்படாதீர்கள் அம்மா. விசாரித்து விட்டு அனுப்பி விடுவதாக கூறியுள்ளனர். விரைவில் நான் வெளியில் வந்து விடுவேன் என கூறி தைரியப்படுத்தினான்.

சிறுவயதில் இருந்தே பேரறிவாளனுக்கு இரக்க குணம் அதிகம் உண்டு. யாரிடமும் அதிர்ந்து கூட பேசமாட்டான். எல்லோரையும் போல எனது மகனும் நன்றாக படித்து கார், பங்களா என வசதியுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அவனது வாழ்க்கை சிறையிலேயே கழிந்து வருகிறது.

எனது மகள்கள் அன்பு மணி, அருள் செல்வி. பேரறிவாளன் சிறைக்கு சென்ற சில மாதங்கள் கழித்து அன்புமணியின் திருமணம் நடைபெற்றது. பேரறிவாளன் விடுதலை ஆகும்வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அருள்செல்வி பிடிவாதமாக இருந்தாள். அவன்தான் அருள்செல்வியை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தான்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தற்போது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 3 பேரும் காப்பாற்றப்படுவார்கள் என்றார் அவர்.

தட்ஸ்தமில்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Empty Re: என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்

Post by அருண் Mon Aug 29, 2011 3:28 pm

எங்க அம்மாதான் மீண்டும் ஜனாதிபதி யை பார்க்கவேண்டும் என்று சொல்லி விட்டார்களே..! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Empty Re: என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்

Post by ரபீக் Mon Aug 29, 2011 3:31 pm

அருண் wrote:எங்க அம்மாதான் மீண்டும் ஜனாதிபதி யை பார்க்கவேண்டும் என்று சொல்லி விட்டார்களே..! சோகம்

உங்க அம்மா எதுக்கு ஜனாதிபதியை பார்க்கணும் ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Empty Re: என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்

Post by kavimuki Mon Aug 29, 2011 3:36 pm

ரபீக் wrote:
அருண் wrote:எங்க அம்மாதான் மீண்டும் ஜனாதிபதி யை பார்க்கவேண்டும் என்று சொல்லி விட்டார்களே..! சோகம்

உங்க அம்மா எதுக்கு ஜனாதிபதியை பார்க்கணும் ?

கண்ணு இருக்குல்ல பாக்கமாட்டாங்களா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார் Empty Re: என் மகனை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது-பேரறிவாளனின் தாயார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum