ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

+3
ஜாஹீதாபானு
உமா
இளமாறன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by இளமாறன் Sat Aug 27, 2011 2:16 pm

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
சென்னை, ஆக.27-

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 3 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் கிடக்கிறது. நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இடி காற்றுடன் மழை பெய்ததால் அம்பத்தூர், வண்ணாரப்பேட்டை, மணலி, மாதவரம், மயிலாப்பூர் பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது. அண்ணாநகர் அய்யப்பன் கோவில் அருகில் இன்று அதிகாலை ஒரு மரம் காற்றில் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பக்கத்து ரோடு வழியாக சுற்றி சென்றனர். பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்த பிறகே அங்கு மீட்பு குழுவினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.

இதேபோல் கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு போட்டி நகரத்திலும் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்து மாநகராட்சி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று மரத்தை அப்புறப்படுத்தினார்கள். கோயம்பேட்டில் மழை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் மார்க்கெட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மார்க்கெட்டுக்குள் சென்றாலும் உள்ளே சகதிக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்லவே அறுவறுப்பாக உள்ளது.

வெங்காயம், முட்டை கோஸ் கழிவுகள் அழுகி சகதியோடு சேர்ந்துள்ளதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மூக்கை பொத்திக்கொண்டுதான் செல்ல முடிகிறது. மார்க்கெட்டின் பல பகுதிகள் உழுது போட்ட வயல்காடு போல் சேறும் சகதியுமாக இருப்பதால் சகதிபட்டு உடைகள் அசிகங்கமாகி விடுகிறது. இதனால் நிறைய பேர் மார்க்கெட்டுக்குள் செல்லாமல் திரும்பி சென்று விடுகின்றனர்.

விடிய விடிய பெய்த மழை காரணமாக சென்னை ரிசர்வ் பாங்க் அருகே உள்ள சுரங்கப்பாதை, சென்ட்ரல், பூங்காநகர் அருகே உள்ள சுரங்கப் பாதைகளில் சாக்கடை கலந்த தண்ணீர் தேங்கி கிடப்பதால் மக்கள் சுரங்கப்பாதையில் நடந்து செல்வதை தவிர்த்தனர்.

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வள்ளுவர் கோட்டம் ரோட்டிலும் சாக்கடை கலந்த தண்ணீர் ரோட்டில் ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவஸ்தைபடுகின்றனர். தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள மாகரட்சி விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் மைதானங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் இளைஞர்கள் விளையாட முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் 20-க்கும் அதிகமான தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் இன்று தொழிற்சாலைகள் பல இயங்கவில்லை. தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அம்பத்தூர் எஸ்டேட் பஸ்நிலையம் பகுதியிலும் தண்ணீர் கிடப்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

ஆவடி பட்டாலியன் பகுதியில் மெயின்ரோட்டில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பஸ்கள் மெதுவாக சென்று வருகின்றன. வியாசர்பாடி சுரங்கப் பாதையிலும் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

சென்னையில் கடந்த 25-ந்தேதி மட்டும் 161.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மறுநாள் (26-ந்தேதி) 17.6 மி.மீட்டர் மழையும் பெய்தது பதிவாகி உள்ளது. 3 நாள் மட்டும் 205 மி.மீட்டர் மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது.

இதற்கிடையே கனமழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அதிகாரி அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை சீசன் காரணமாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது வெப்பசலனம் ஏற்பட்டு மழை பெய்கிறது. அதனால்தான் கடந்த 3 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. இன்று வளிமண்டலத்தின் மேல் அடுக்கிய காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் மதியத்திற்கு பிறகு மழை பெய்யும். இரவில் இடியுடன் கூடிய கனமழையை எதிர் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by உமா Sat Aug 27, 2011 2:22 pm

ரொம்ப சிரமமா இருக்கு அலுவலகம் வரவே...
அவ்வளவு தண்ணீர், டிராபிக் .... சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by ஜாஹீதாபானு Sat Aug 27, 2011 2:28 pm

எங்க ஆபீஸ் பக்கமெல்லாம் முட்டிக்கால் அளவு தண்ணீர் வரவே முடியல சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by krishnaamma Sat Aug 27, 2011 2:37 pm

ஆனால் மழை பெய்தால் என்க்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும் ; எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நான் மழையை திட்டவே மாட்டேன் , வராதே என்று சொல்ல மாட்டேன் ஜாலி ஜாலி ஜாலி சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Duck_in_rainசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 2008-08-14-rainசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Happy-rain-cloud


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by உமா Sat Aug 27, 2011 4:01 pm

நானும் அப்படிதான் அம்மா...மழை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது I-love-rain



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by ராஜா Sat Aug 27, 2011 4:06 pm

ஃபிரான்ஸ்ல இருந்து ஒருத்தர் சென்னையில் மழை பெய்யுதுன்னு போஸ்ட் போடுறார் , உமா & பானு நீங்க ரெண்டு பெரும் என்ன பண்ணுரிங்க , ஒரு போட்டோ எடுத்து போடலாம்ல இங்க நாங்க மழைன்னு ஒண்ண பார்த்தே வருஷக்கணக்குள ஆகுது. சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by krishnaamma Sat Aug 27, 2011 4:12 pm

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Rain

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Rain24-hours

என்ன அடத்தியா மழை பெய்கிறது பாருங்கோ ராஜா, இங்க பங்களூரில் போன வாரம் பூரா சாயங்காலம் மழை பெய்தது, இப்ப 3 நாட்களாக சொல்லி வைத்தது போல 9 மணிக்கு பேய் மழை ஒரு 1/2 மணி பெய்கிறது, அப்புறம் தூறல். யாரோ வானத்திலிருந்து பக்கெட்டால் கொட்டுவது போல பேய் மழை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by ராஜா Sat Aug 27, 2011 4:15 pm

krishnaamma wrote:
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Rain24-hours

என்ன அடத்தியா மழை பெய்கிறது பாருங்கோ ராஜா, இங்க பங்களூரில் போன வாரம் பூரா சாயங்காலம் மழை பெய்தது, இப்ப 3 நாட்களாக சொல்லி வைத்தது போல 9 மணிக்கு பேய் மழை ஒரு 1/2 மணி பெய்கிறது, அப்புறம் தூறல். யாரோ வானத்திலிருந்து பக்கெட்டால் கொட்டுவது போல பேய் மழை சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837 சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837 சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837
அருமை அக்கா , இந்த போட்டோவை பார்க்கும் பொது மழையில் நனைவது போல உள்ளது , மிக்க நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by krishnaamma Sat Aug 27, 2011 4:16 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Rain24-hours

என்ன அடத்தியா மழை பெய்கிறது பாருங்கோ ராஜா, இங்க பங்களூரில் போன வாரம் பூரா சாயங்காலம் மழை பெய்தது, இப்ப 3 நாட்களாக சொல்லி வைத்தது போல 9 மணிக்கு பேய் மழை ஒரு 1/2 மணி பெய்கிறது, அப்புறம் தூறல். யாரோ வானத்திலிருந்து பக்கெட்டால் கொட்டுவது போல பேய் மழை சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837 சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837 சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது 755837
அருமை அக்கா , இந்த போட்டோவை பார்க்கும் பொது மழையில் நனைவது போல உள்ளது , மிக்க நன்றி

ஏன் ராஜா, அங்கு மழையே இல்லையா? சவுதி இல் கூட ஒரு , 1 வாரம் 10 நாள் மழை வருமே? அங்கு வராதா? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by உதயசுதா Sat Aug 27, 2011 6:13 pm

உண்மைய்லுமே உங்க போட்டவ பார்த்த பின்னாடி மழையில் நனைந்த ஒரு சிலிர்ப்பு வந்துச்சு கிருஷ்ணாம்மா.ரொம்ப நாளாச்சு மழையா பார்த்தே


சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Uசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Dசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Aசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Yசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Aசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Sசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Uசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Dசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Hசென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது Empty Re: சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை
» சென்னையில் 2வது நாளாக இன்றும் பனிமூட்டம்... வாகன, விமானப் போக்குவரத்து பாதிப்பு !
» காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம்: 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை- சென்னையில் பலத்த மழை
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum