ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்"

2 posters

Go down

அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Empty அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்"

Post by கே. பாலா Sat Aug 27, 2011 1:51 pm

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் பன்னிரண்டாவது நாளை எட்டியுள்ளது. லோக்பால் மசோதா தொடர்பாக அவரது குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு என்று நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் வேண்டுமானால் மசோதா தொடர்பான யோசனைகளை அந்தக் குழுவிற்கு அனுப்பலாம் என்றும் அந்த யோசனைகள் மசோதாவில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவே, அண்ணாஹசாரே குழுவினருடன் நடத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசிய ஷரத்துக்கள் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டுள்ளது என்கிற அதிருப்தியின் காரணமாகவே முழுமையான மசோதா தயாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையிலேதான் ஹசாரே அவர்கள் இப்போது தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

ஹசாரேவுக்கான நாளுக்கு நாள் பெருகும் ஆதரவுக் குரல்கள் மத்திய அரசினைப் படிப்படியாக இறங்கி வர வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திஹார் சிறையில் அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த போதே வெளியில் அண்ணாவுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்து விட்டது. அண்ணா ஹசாரே வெறும் அரசியல்வாதியல்ல அவரது போராட்டங்களைச் சட்டென்று ஒடுக்கி விடுவதற்கு. அவரது பேச்சும், அவ்வப்போதைய அறிவிப்புகளும் மிகவும் கண்ணியமாக உள்ளன. மகாத்மாவின் அடியொட்டிய தியாகத்தின் அடிப்படையிலானவை என்பதற்கான அடையாளங்கள் அங்கே உணரப்படுகின்றன. அண்ணலின் உண்ணாநோன்பு என்பது தன்னை வருத்திக் கொள்ளும் சத்தியத்தின் அடிப்படையிலானது. அதன் சக்தி மகத்தானது. அதன் மகிமை நம் மக்களின் ஊனோடு உணரப்பட்ட ஒன்றாக இன்றும் விளங்குகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மக்கள் எல்லாக் காலங்களிலும் நேர்மையின் பக்கமானவர்கள்தான். அது அவர்களின் ரத்தத்தோடு ஊறிய ஒன்று. காலத்தின் கட்டாயத்தில் சமூகம் இப்படிச் சீரழிந்து போய்க்கிடக்கிறதே என்கிற வேதனையில் தங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேறு வழியின்றி அவர்கள் சில பிறழ்ச்சிகளை மேற்கொண்டிருக்கலாம். தொலையுது போ என்கிற வேதனையின் பாற்பட்டவை அவை. ஆனால் அப்படியான ஒரு ஜோதி அவர்களின் கண்களுக்குத் தென்படுமானால் நிச்சயம் அதை வணங்கத் தவறமாட்டார்கள் என்பதன் அடையாளம்தான் அண்ணாஹசாரே அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள மக்களின் ஆதரவு.

நம் அரசியல்வாதிகள் விழிப்போடு வேறு வழியின்றிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா ஹசாரேவுக்குத் தங்கள் பகிரங்க ஆதரவைத் தெரிவிப்பதா வேண்டாமா, அப்படித் தெரிவித்தால் அவை அவர்களுக்கு நன்மை பயக்குமா பயக்காதா, அதன் மூலம் தேர்தல் அரசியலுக்கு அது சாதகமாய் அமையுமா அமையாதா என்பதெல்லாம் அவர்களின் யோசனையாகவே இருந்து கொண்டிருக்கிறது.

இந்த அரசியல்வாதிகள் அப்படித் தங்களின் பகிரங்க ஆதரவைத் தெரிவித்தால் அம்மாதிரி ஒரு கட்டத்தில் அதை எப்படி எதிர்கொள்வது, அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதா வேண்டாமா அல்லது இருந்து விட்டுப் போகட்டும் என்று மேம்போக்காக விட்டுவிடுவதா அல்லது நல்ல விஷயத்திற்குத்தானே ஆதரவு கொடுக்கிறார்கள் என்று அருகில் இழுத்து நிறுத்திக் கொள்வதா அல்லது முற்றிலும் ஏற்பதற்கில்லை. இது தேசத்தின், இந்த மக்களின் முழுமையான நலனின் பாற்பட்ட தன்னலமற்ற தியாகத்தின் அடிப்படையிலான விஷயம். எனவே நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக அறிவிப்பதா, அப்படி அறிவிக்கும் பட்சத்தில் அது எந்த அளவுக்கு இந்த நன்னோக்கைப் பாதிக்கும், கடைசிவரை கொண்டு செல்வதற்கு இவர்களின் கைகளையும் சேர்த்துப் பிடித்தே முன்னேற வேண்டுமா, கூடாதா என்று பல்வகையிலும் அண்ணா ஹசாரே குழுவினர் இதுவரை யோசித்திருக்க வாய்ப்பேயில்லை. இது போகப் போகத்தான் எப்படித் திசை மாறக் கூடும் என்று பார்க்க வேண்டும்.

ஆனால் அண்ணா ஹசாரேவுக்கு இப்பொழுது மாணவர்களின் ஆதரவு பெருகியிருக்கிறது. மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும், மாநிலங்களின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த ஆதரவின் அலைகளைக் காண முடிகிறது. கூடியிருக்கும் கூட்டத்தினரின் எண்ணிக்கை ஒரு அளவாக இருந்தாலும், வந்து ஆதரவு தெரிவித்துப் பதிவேட்டில் கையொப்பமிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை அதிகம்.இது அலைகடலெனப் பெருகும் வாய்ப்பு உண்டு என்றே நம்பலாம். மக்கள் அமைதியான போராட்டத்திற்கு என்றுமே தயாரானவர்கள்தான். கலகத்தை விரும்பாதவர்கள். மொத்தமான அமைதிப் போராட்டத்தில் ஏற்படும் நஷ்டங்களை எதிர்கொள்ளும் மனநிலை உண்டு என்று சொல்லலாம். நம் மக்களுக்கு அந்த அளவுக்கான சகிப்புத் தன்மையைக் கற்றுக் கொடுத்தது நம் தேசத் தந்தை மகாத்மாவின் அஹிம்சைக் கொள்கைதான். அது இன்னும் உயிரோட்டமாக நம் மக்களின் ஊனில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இடங்களிலெல்லாம் நம் கண் முன்னே பளிச்சென்று தெரிவது நமது தேசியக்கொடிதான்.

தேசியக்கொடி பிடித்து நமது தேசத்திலேயே, நமது தேசத்திற்காக, நமது மக்களுக்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எதை, யாரை எதிர்நோக்கி? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை எதிர்த்து. அதாவது அதன் தலைமையிலான மத்திய அரசினை எதிர்த்து. நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலான காங்கிரஸ்காரர்கள் என்பது வேறு. இப்போது இருப்பவர்கள் என்பது வேறு. இவர்களின் பேச்சும் நடவடிக்கைகளும் வெறும் அரசியல்வாதியின் அடையாளங்களாகவே இன்றுவரை பரிணமிக்கிறது. அன்றிருந்தவர்கள் தேசியவாதிகள். சுயநலமில்லாதவர்கள். இன்றிருப்பவர்கள் எப்படியென்று விலாவாரியாகச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மக்கள் நன்கு அறிவார்கள். ஊடகங்கள் அந்தப் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. அது காண்பிக்கக் கூடிய செய்தியில் எது நியாயம், எது தவறு என்று மக்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.

தேச பக்தியும் தெய்வ பக்தியும் நிறைந்த நாடு நமது இந்தியா. அப்படித்தான் ஆரம்பித்தது. இன்றும் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. அரசியலைச் சாக்கடையாக்கி, சுயநலமிகள் தலை தூக்கியதால் அது பெரும் விருட்சமாகி நம்மையெல்லாம் பயமுறுத்துகிறது. ஆனாலும் சத்தியத்திற்கு என்றுமே அழிவில்லை. அதன் அடையாளமாகத்தான் அண்ணா ஹசாரே தோன்றியிருக்கிறாரோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

ஆட்சியாளர்களுக்கும் சரி, அண்ணா ஹசாரேக்கும் சரி, இந்த தேசத்தின் நலன், தேசத்தை உள்ளடக்கிய இந்த மக்களின் நலன் என்ற ஒன்றே மையப்புள்ளியாக இருக்குமேயானால் முழுக்க முழுக்க நன்மை பயக்கும் ஒரு முழுமையான லோக்பால் மசோதா நிறைவேற்றமாகும். அப்படியான ஒரு நோக்கம் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும், ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா என்பதுதான் இந்த நிமிடம் வரையிலான சந்தேகமாக இருந்து கொண்டிருக்கிறது. இழுக்கும் இழுவையைப் பார்த்தால் இது ஊர்ஜிதமாகிறது.

அந்த அதிருப்தியோடேயே மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உயிரோசை நன்றி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" Empty Re: அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்"

Post by ராஜா Sat Aug 27, 2011 3:40 pm

அண்ணா ஹசாரே -"ஆதரவும் அவசியமும்" 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum