புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Poll_c10பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Poll_m10பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Poll_c10பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Poll_m10பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Poll_c10பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Poll_m10பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்!


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Aug 14, 2011 8:49 pm

பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Health-benefits-%26-Nutrition-of-Jambul


நகரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் நாவல் பழங்கள் விற்பதை பார்த்து ஏதோ தேவையில்லாதை பார்பதுபோல் அலட்சியமாக பார்த்து செல்வார்கள் .ஆனால் கிராமங்களில் சர்வசாதாரணமாக நாவல் மரங்களை பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ((Eugenia Jambos) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.
நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக வெட்கப்பட்டு நிற்க்கும் நாவல் மரம் சந்திரமுகியின் கண்களாக கருமை நாவல் பழங்களை கொத்துகொத்தாக தாங்கி வனப்புடன் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது.. கிராமங்களில் மரத்தில் ஏறி இதனை உதிர்த்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 50 முதல் 80 கிலோ பழங்கள் கிடைக்கும்.


பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Syzygium-cumini




பழத்தின் மருத்துவபண்புகள்
நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.

பழம் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சியை தரும். இரத்தத்தை சுத்தி செய்யும். இரத்தம் விருத்தி ஆகும். சிறுநீர்க்கழிவினைத் தூண்டுவதுடன், சிறுநீர்ச்சுருக்கை போக்கும். பழத்தை அதிகமாக உண்டால் சளி, காய்ச்சல் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாக தரையில் விழுந்த பழங்களை சாப்பிடும் போது இது போன்று நடக்கிறது!

கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என பாடியபடி இந்த பழத்தின் பளபளப்பான கருமை நிறத்தில் மயங்கி சாப்பிடும் சிலருக்கு தொண்டைக்கட்டும் ஏற்படலாம். டோண்ட் ஒரி நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக்கட்டு உண்டாகாது.
பழுக்காத நாவல் காய்கள் இருந்தால் விரயம் செய்யாமல் நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒரு தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று போக்கு குணமாகும்.
விதையின் குணங்கள்
நாவல் பழத்தை சப்பித்தின்ற பிறகு( தான் சாப்பிட்டதைதான்) மிஞ்சும் கொட்டையை நன்றாக நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் 2 முதல் 4கிராம் வீதம் மூன்று வேளை தண்ணீரில் கலந்து அருந்தினால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது. விதையை பொடித்து மாம்பருப்பு தூளுடன் சேர்த்து தர சிறுநீரை பெருக்கும். இந்த கொட்டை தூளை அதிக அளவில் உண்ண கூடாது. அது நஞ்சாகும்.
இலையின் குணம்
நாவல் கொழுந்து சாறு, மாவிலைச்சாறு ஆகிய இரண்டையும் கலந்து கடுக்காய் பொடியுடன் சேர்த்து ஆட்டுப்பாலில் கலக்கி குடித்தால், சீதக்கழிச்சல் என்ற வெப்பக்கழிச்சல் குணமடையும். நாவல் கொழுந்து, மாவிலைக் கொழுந்து ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து மை போல் அரைத்து மோரில் அல்லது தயிரில் கலக்கி சாப்பிட வயிற்று போக்கு, இரத்தத்துடன் காணப்படும் பேதி ஆகியவை குணமாகும்.
மரப்பட்டையின் குணம்
நாவல் மரம்பட்டையை சுவைத்தால் குரல் இனிமையாகும் என்று கூறுகிறார்கள். இது ஆஸ்துமா, தாகம், களைப்பு, இரத்த பேதி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்த நல்லது. நாக்கு, வாய், தொண்டைப்புண்களுக்கு இந்த மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்தால் குணம் காணலாம். மரப்பட்டையை இடித்து சலித்து எருமைத்தயிரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு கட்டுப்படும். ( ஏன் பெண்களுக்கு மட்டும் எருமை?)குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், ரத்தகழிச்சல் ஆகியவற்றுக்கு வெள்ளாட்டுபாலுடன் சேர்த்து நன்கு காய்ச்சி சங்கு அளவில் மூன்று முறை தரலாம். எதற்கும் பக்கத்தில் உள்ள பாட்டியை கேட்டுக்கொள்ளுங்கள் இந்த மரப்பட்டையின் கசாயத்தை கொண்டு புண்களை கழுவலாம். கிருமிநாசினி போல் செயல்படும் என்கிறார்கள்.

வேரின் குணம்
மரத்தின் வேரை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து அந்த நீரை குடித்தால் சர்க்கரை வியாதிக்கு நல்லது. உடலுக்கு குளிர்ச்சியையும், ஆண்மையையும் தரும்.
நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்
புரதம் 0.7 கிராம்
கொழுப்பு 0.3 கிராம்
மாவுப்பொருள் 0.9 கிராம்
கீழ்வருபவை எல்லாம் (மில்லி கிராம் அளவில்)
கால்சியம் 14.0 பாஸ்பரஸ் 15 இரும்பு 1.2 தயமின் 0.03 நியாசின் 0.2 வைட்டமின் சி 18 மெக்னீசியம் 35 சோடியம் 26.2 பொட்டாசியம் 55 தாமிரம் 0.23 கந்தகம் 13 குளோரின் 8 ஆக்சாலிக் அமிலம் 89 பைட்டின் பாஸ்பரஸ் 2 கோலின் 7 கரோட்டின் 48 இனி தெருவில் நாவல் பழத்தை பார்த்தால் வாங்கி ருசிப்பார்த்துவிடுங்களேன்! சீசன் முடியும் முன்!!
நன்றி: kaalnadaidoctor



இனியொரு விதி செய்வோம்
பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Sபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Emptyபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Pபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Emptyபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Sபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Eபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Lபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Vபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Aபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! M
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Aug 14, 2011 9:01 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...நன்றி
எங்கள் பகுதிகளில் தற்போது அதிகமாக விற்பனை செய்கிறார்கள்
கிலோ கணக்கில் இல்லாமல் படிக்கணக்கில் விற்கிறார்கள் 1 படி 40 ரூபாய் அதுவும் உப்பு மற்றும் மிளகாய் தூள் கலந்த பொடிகளை பழத்தின் மேல் தூவி கொடுப்பார்கள்... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sun Aug 14, 2011 9:06 pm

அடேயப்பா! நாவல் பழத்திற்கு இத்தனை மகிமையா? நல்ல பயனுள்ள செய்தி.. நன்றி.

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sun Aug 14, 2011 9:12 pm

நன்றி நன்றி நன்றி



இனியொரு விதி செய்வோம்
பளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Sபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Emptyபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Pபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Emptyபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Sபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Eபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Lபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Vபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! Aபளபளப்பான கருப்பு நிற கவர்ச்சி பழம்! நாவல் பழம்! M
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 14, 2011 9:18 pm

ரா.ரமேஷ்குமார் wrote:பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...நன்றி
எங்கள் பகுதிகளில் தற்போது அதிகமாக விற்பனை செய்கிறார்கள்
கிலோ கணக்கில் இல்லாமல் படிக்கணக்கில் விற்கிறார்கள் 1 படி 40 ரூபாய் அதுவும் உப்பு மற்றும் மிளகாய் தூள் கலந்த பொடிகளை பழத்தின் மேல் தூவி கொடுப்பார்கள்... நன்றி
ஆமாம் ரமேஷ், இப்ப கிருஷ்ண ஜெயந்தி ந போது இதற்க்கு சீஸன் புன்னகை மரத்தில் கால் வைத்து ஏறி பறிக்கக்கூடாது என்றும், கிருஷ்ண ஜெயந்தி கு முன்னாள் இதை சாப்பிடக்கூடாது என்றும் எங்க பாட்டி சொல்வா புன்னகை ( அது அவா காலம் புன்னகை ) அதனால் நாங்க காத்திருப்போம் கிருஷ்ண ஜெயந்திக்கு. அன்று முக்கியமான நைவேத்ய பொருள் இந்த பழம் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 14, 2011 9:20 pm

ஆஹா, பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு புன்னகை இது உடம்புக்கு ரொம்ப நல்ல பழம். இப்ப இதன் ஜூஸ் கூட டெட்ரா பாக்கெட்டுகளில் வருகிறது, சக்கரை வியாதிக்கு அருமருந்து .

பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jan 03, 2012 7:04 pm

அடடே...இவ்வோளவு சிறப்புகளா? மகிழ்ச்சி மகிழ்ச்சி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 03, 2012 7:07 pm

எனக்கு பிடித்த பழம்.
படிக்கும் காலத்தில் அதிகம் சாப்பிட்டேன்.
இப்போது கஷ்டம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக