Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
+16
திவா
kitcha
பாலாஜி
அசுரன்
அப்துல்
kirikasan
கௌசிகன்
rameshnaga
கே. பாலா
மகா பிரபு
உதயசுதா
உமா
அகிலன்
Admin
ராஜா
கேசவன்
20 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
First topic message reminder :
தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்
தூக்கு தண்டனைக்க காத்திருக்கும் சாந்தன் முருகன் பேரரிவாழன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிப்பது பற்றி தங்கள் கருத்தை கூறவும்
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
மிகச்சரியாக சொல்ல வேண்டும் என்றால் தமிழனின் மதிப்பு எவ்வளவு சீரழிந்து தாழ்ந்து போய் விட்டது என்பதை இந்த தூக்கு தண்டனை காட்டுகிறது. இதை சீரழித்த பெருமை கருணாநிதியையே சேரும். அவருடைய கீழ்த்தரமான செயல்களால் தமிழன் மதிப்பு தரை மட்டமாகி இன்று கிள்ளு கீரையாகி விட்டான். தமிழினத்தை வைத்து காசு சம்பாதிக்க, சொத்து சேர்க்க தெரிந்த கருணாநிதிக்கு ஈழத்தில் தமிழன் படுகொலை செய்யப்பட்டபோதும் இன்று மூன்று தமிழர்கள் தூக்கு தண்டனை பெறப்போகும் சூழ்நிலையிலும் கவலை இல்லை. அடித்த கொள்ளைக்கு சோனியா, காங்கிரஸ் தயவு இருந்தால் போதும். இந்த தூக்கு தண்டனை பெற்ற மூன்று பேரும் உத்தமர்கள் இல்லை. ஆனால் அவர்களும் சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டனர். 166 பேரை கொன்ற கசாபுக்கும் பாராளுமன்றத்தை தாக்கிய அப்சல் குருவுக்கும் உள்ள மரியாதை கூட தமிழனுக்கு இல்லை. தமிழனுக்குள் ஒற்றுமை தேவை;
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
என்ன சொல்றதுன்னு தெரியல.. ஆனா கண்டிப்பா இவங்க 3 பேருக்கும் அவுங்க ராஜீவை கொல்ல போறவங்களுக்கு உதவுரோம்னு தெரியாது நு நினைக்குறேன்.. என்ன பெரிய உதவி பண்ணிருப்பாங்க. வீட்டுல தங்க வச்சதும் சாப்பாடு போட்டதுமா தான் இருக்கும்.. ஆனா இந்த 3 பேர பார்த்தா பாவமா தான் இருக்கு.. 20 வருஷம் ஜெயில் வாழ்க்கை ரொம்ப கொடுமையா இருந்திருக்கும்.. இப்போ தூக்கு வேற தேவையா..?
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
இந்திய நடுவன் அரசின் பூரண ஆசியுடன் நடத்தப்பட்ட தமிழின அழிப்பின் போரின் போது 40,000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பலர் சொல்லொனாத் துயரை அனுபவிக்க நேர்ந்தது. உலகத்திற்கு அகிம்சையைக் கற்றுக்கொடுத்த காந்தி வாழ்ந்த இந்திய தேசம், கருணையற்ற முறையில் நடந்து கொள்கிறது என்பதை வைத்துப் பார்க்கும்போது இந்திய தேசம் தமிழினத்தின் மீதே தனது வக்கிரத்தை காட்ட முயலுகிறது என்பதைக் காட்டுகிறது. இளமை கரைந்து, வசந்தம் தொலைந்து சிறைக் கம்பிகளுக்குப் பின், மரணத்தின் நிழலில் காலம் கடந்தேனும் ஒரு வசந்தம் தோன்றாதா என்ற ஏக்கத்துடன் தவித்திருக்கும் இந்த இளம் தமிழர்கள் மீதான அரசியல் படிந்த கொடிய தீர்ப்புக்களும், கருணை மனுக்கள் நிராகரிப்பும் இந்தியா குறித்த தமிழர்களின் அபிப்பிராயங்களில், மேலும் சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளன. ஈழத்தமிழர் அழிவைக் கண்டு கொதித்தெழுந்து, அவர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருவேன் என்று சவால் விட்டுச் செயற்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலையிட்டால் மூன்று பேரையும் காப்பாற்றலாம். சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று பாராமுகமாக ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இருந்துவிட்டால் மூன்று பேரை தமிழினம் இழப்பது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழினத்திற்கே தலைகுனிவையே இது ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை. இதனை மனதில் வைத்தாவது தமிழக முதல்வர் செயற்படுவார் என்று உலகத்தமிழர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏன் இந்தத் திடீர் முடிவு? 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. ஒரிசா, ஆந்திரா வழியாக அவர் சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத சிறிபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், விடுதலைப்புலிகளைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மே 21-ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார்.
விடுதலைப்புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என இந்திய புலனாய்வுத்துறை அறிவித்தது. ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே விடுதலைப்புலிகள்தான் இந்தப் படுகொலையை செய்தார்கள் என அறிவித்தார்கள் இந்திய உயர் அதிகாரிகள். அரசியல் ஆதிக்கம் இல்லாமல் சட்டத்தை மதிக்கும் எந்தவொரு நிகழ்வையும் பார்ப்போமேயானால், ஒரு கொலைகாரனையும் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முன்னர் ஒருபோதும் குற்றவாளி என்ற பதத்தை பாவிக்கக்கூடாது. மாறாக, அந்த நபரை குற்றம் சாட்டப்பட்டவர் என்றே அழைக்க வேண்டும். ஆனால், குற்ற விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே புலிகள்தான் குற்றவாளிகள் என்று அறிவித்த பின்னர் விசாரணை குழுவை நியமித்து குற்றவாளிகளை இனம்காணுவதென்பது இந்த விசாரணை குழு வெறுமனே அரசியல் காரணங்களுக்காகவே நியமிக்கப்பட்ட குழுவாகவேதான் பார்க்கவேண்டும். காரணம், ஏற்கனவே புலிகள்தான் கொலைகாரர்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த விசாரணைக் குழுவினர் புலிகள்தான் கொலைகாரர்கள் என்ற கண்ணோட்டத்துடனேதான் விசாரணையை தொடங்கும். ஆகவே, விசாரணையின் முடிவில் எப்படியாவது புலிகள்தான் இதைச் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவதற்கு தேவையான ஆதாரங்களை திரட்டத்தான் இந்த குழு உதவுமே தவிர, உண்மையான கொலைகாரர்களை கண்டுபிடிக்க ஒரு பொழுதும் முனையாது. 1993-ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத்துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில்தான் நடந்தது.
ஏறத்தாள 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளவர்கள் மீது எதற்காக இப்படியான திடீர் முடிவை இந்திய ஜனாதிபதி எடுத்தார் என்பது வெறும் அரசியல் காரணங்களுக்காகவேதான் என்று கூறுகிறார்கள் சட்ட ஆய்வாளர்கள். தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய அடுத்த கணமே குறித்த கருணை மனுவை நிராகரித்துள்ளார் இந்திய ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ஆதரவுடன் இடம்பெற்ற தமிழின படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவேன் என்று அறைகூவல் விட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்திய நடுவன் அரசிற்கும் தொடர்ந்தும் தனது அழுத்தங்களை பிரயோகிக்கிறார் ஜெயலலிதா. இவைகள் அனைத்தையும் மழுங்கடிக்க ஏதேனும் ஒரு துருப்புச்சீட்டு இந்திய நடுவன் அரசிற்கு உடனடியாகவே தேவைப்பட்டது. அத்துடன், ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் இவ்வேளையில் குறித்த கருணை மனு நிராகரிப்பானது முக்கியத்துவம் பெறுகிறது. சோனியா காந்தி அரவர்கள் உலகத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பவில்லையெனில், சோனியா காந்தி இல்லாத சமயத்தில் செய்தால் சோனியா காந்தி மீது பழி வராது என்று இந்திய நடுவன் அரசும், ஜனாதிபதி அவர்களும் கருதி உள்ளார்கள் போலும். எது என்னவாக இருப்பினும், குறித்த திடீர் முடிவானது இந்திய நடுவன் அரசின் திட்டமிட்ட செயலாகவேதான் கருதப்படுகிறது.
மானிடத் தர்மத்திற்கே முரணானது கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கருவியாயகவேதான் மரண தண்டனையைப் பார்க்க முடியும். அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகிய வாழ்வுரிமைக்கு எதிரானது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் கருத்தின்படி, “மரண தண்டனை அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதென்பதால் மரண தண்டனையானது அரசுகள் மேற்கொள்கின்ற படுகொலை என்றே கருதப்பட வேண்டும”. மிகவும் தெட்டத்தெளிவாக இக்கருத்தை உலக அரங்கில் கூறி வருகிறது குறித்த மன்னிப்புச் சபை. ஐக்கிய நாடுகள் சபை கூட மரணதண்டனையைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டுமென உலக நாடுகளின் அரசுகளைக் கோரி வருகிறது. உலக நாடுகள் 193-இல் இன்று மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டோ அல்லது நடைமுறைப்படுத்தப் படாமலோ இருப்பதென்பதும்இ 58 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. சர்வாதிகார நாடுகளும், பல இஸ்லாமிய மதத்தைத் தழுவும் நாடுகளுமே மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் இரக்கம் காட்டுவதை இந்திய அரசியல் சட்டத்தின் கடமையாகச் (பிரிவு 15எ) சொல்லப்பட்டுள்ளது.
அரசியல் அவதானிகளின் கருத்தின்படி, ராஜீவ் கொலை வழக்கில் மூன்று தளங்களில் குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அரசியல் மயப்பட்ட நிலையில் இவ் வழக்கு நடைபெற்றமை இவ் வழக்கில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்தது. இது இவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட முதலாவது தளம் ஆகும். தடா சட்டத்தின் கீழ் இவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டமை இரண்டாவது தளமாகும். இதேவளை 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு – ஒரு ஆயுட்தண்டனைக் காலத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவிட்ட இவர்களுக்கு – இவ்வளவு காலம் தாழ்த்தி மரணதண்டனையினை உறுதி செய்துள்ளது நீதி மறுக்கப்படும் மூன்றாவது தளம் ஆகும். காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும் நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரித்தானிய பிரிவி கௌன்ஸில் 1993-இல் தீர்ப்பளித்தது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் கீழ் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தமிழக ஆளுனராலும் மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கான பரிந்துரையினை வழங்க முடியும். உலகத்தமிழர்களின் உணர்வுகளையும்இ உரிமைக்குரலையும் பிரதிபலித்து நிற்கும் தமிழக முதலமைச்சர் இவ்விடயத்தில் தலையிட்டு மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என பல தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள்களை விடுத்துள்ளன. பல தரப்பினர் தங்களால் இயன்ற வகையில் போராட்டங்களையும் நடத்திவருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய ஏகாதிபத்திய சட்ட மரபுகளை பின்பற்றும் நாடுகளின் சட்ட யாப்பின்படி, குறித்த ஒரு தீர்ப்புக்கு ஒத்ததாக பிறிதொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமேயானால் குறித்த தீர்ப்பின்படி இத்தீர்ப்பையும் மாற்ற முடியும். அவ்வகையில், ஏற்கனவே 1974-ஆம் ஆண்டு கவிஞர் கலியப்பெருமாள் வழக்கில் கேரளாவை சேர்ந்த பாலன் என்பவருக்கு அந்த மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் காரணமாக மன்னிப்பு வழங்கபட்டது. இதை உதாரணமாக வைத்து குறித்த மூன்று பேரையும் காப்பாற்ற முடியும்.
தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று தமிழர்களின் அவலக்குரலையாவது ஆட்சியாளர்கள் செவிமடுப்பார்களா என்பதே இப்போது எழும் கேள்வி. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக அரசு பரிந்துரை செய்தால் ஆளுநரினால் இறுதி முடிவு எடுக்கப்படும். இதன் மூலமாக மூன்று தமிழ் இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும். மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென்கிற குரலுக்கு பக்கத் துணையாக இருக்கும் காந்தி பிறந்த தேசம்இ மரண தண்டனைக்கே உயிர் வடிவம் கொடுத்தால் மாபெரும் தவறை இந்திய தேசம் செய்கிறது என்றே அர்த்தப்படும். வரலாற்றுத் தவறுகளை செய்யாமல், மானிடத் தர்மத்தின் பக்கம் இந்தியா தொடர்ந்தும் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் இவ்வுலகில் வாழும் பல கோடி மக்களின் நம்பிக்கையை இந்தியா பொய்ப்பிக்காது என்று நம்புவோமாக
விடுதலைப்புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என இந்திய புலனாய்வுத்துறை அறிவித்தது. ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள்ளேயே விடுதலைப்புலிகள்தான் இந்தப் படுகொலையை செய்தார்கள் என அறிவித்தார்கள் இந்திய உயர் அதிகாரிகள். அரசியல் ஆதிக்கம் இல்லாமல் சட்டத்தை மதிக்கும் எந்தவொரு நிகழ்வையும் பார்ப்போமேயானால், ஒரு கொலைகாரனையும் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முன்னர் ஒருபோதும் குற்றவாளி என்ற பதத்தை பாவிக்கக்கூடாது. மாறாக, அந்த நபரை குற்றம் சாட்டப்பட்டவர் என்றே அழைக்க வேண்டும். ஆனால், குற்ற விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே புலிகள்தான் குற்றவாளிகள் என்று அறிவித்த பின்னர் விசாரணை குழுவை நியமித்து குற்றவாளிகளை இனம்காணுவதென்பது இந்த விசாரணை குழு வெறுமனே அரசியல் காரணங்களுக்காகவே நியமிக்கப்பட்ட குழுவாகவேதான் பார்க்கவேண்டும். காரணம், ஏற்கனவே புலிகள்தான் கொலைகாரர்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த விசாரணைக் குழுவினர் புலிகள்தான் கொலைகாரர்கள் என்ற கண்ணோட்டத்துடனேதான் விசாரணையை தொடங்கும். ஆகவே, விசாரணையின் முடிவில் எப்படியாவது புலிகள்தான் இதைச் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவதற்கு தேவையான ஆதாரங்களை திரட்டத்தான் இந்த குழு உதவுமே தவிர, உண்மையான கொலைகாரர்களை கண்டுபிடிக்க ஒரு பொழுதும் முனையாது. 1993-ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத்துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில்தான் நடந்தது.
ஏறத்தாள 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளவர்கள் மீது எதற்காக இப்படியான திடீர் முடிவை இந்திய ஜனாதிபதி எடுத்தார் என்பது வெறும் அரசியல் காரணங்களுக்காகவேதான் என்று கூறுகிறார்கள் சட்ட ஆய்வாளர்கள். தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய அடுத்த கணமே குறித்த கருணை மனுவை நிராகரித்துள்ளார் இந்திய ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ஆதரவுடன் இடம்பெற்ற தமிழின படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவேன் என்று அறைகூவல் விட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்திய நடுவன் அரசிற்கும் தொடர்ந்தும் தனது அழுத்தங்களை பிரயோகிக்கிறார் ஜெயலலிதா. இவைகள் அனைத்தையும் மழுங்கடிக்க ஏதேனும் ஒரு துருப்புச்சீட்டு இந்திய நடுவன் அரசிற்கு உடனடியாகவே தேவைப்பட்டது. அத்துடன், ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் இவ்வேளையில் குறித்த கருணை மனு நிராகரிப்பானது முக்கியத்துவம் பெறுகிறது. சோனியா காந்தி அரவர்கள் உலகத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்பவில்லையெனில், சோனியா காந்தி இல்லாத சமயத்தில் செய்தால் சோனியா காந்தி மீது பழி வராது என்று இந்திய நடுவன் அரசும், ஜனாதிபதி அவர்களும் கருதி உள்ளார்கள் போலும். எது என்னவாக இருப்பினும், குறித்த திடீர் முடிவானது இந்திய நடுவன் அரசின் திட்டமிட்ட செயலாகவேதான் கருதப்படுகிறது.
மானிடத் தர்மத்திற்கே முரணானது கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கருவியாயகவேதான் மரண தண்டனையைப் பார்க்க முடியும். அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகிய வாழ்வுரிமைக்கு எதிரானது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் கருத்தின்படி, “மரண தண்டனை அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதென்பதால் மரண தண்டனையானது அரசுகள் மேற்கொள்கின்ற படுகொலை என்றே கருதப்பட வேண்டும”. மிகவும் தெட்டத்தெளிவாக இக்கருத்தை உலக அரங்கில் கூறி வருகிறது குறித்த மன்னிப்புச் சபை. ஐக்கிய நாடுகள் சபை கூட மரணதண்டனையைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டுமென உலக நாடுகளின் அரசுகளைக் கோரி வருகிறது. உலக நாடுகள் 193-இல் இன்று மரணதண்டனை முற்றாக ஒழிக்கப்பட்டோ அல்லது நடைமுறைப்படுத்தப் படாமலோ இருப்பதென்பதும்இ 58 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது. சர்வாதிகார நாடுகளும், பல இஸ்லாமிய மதத்தைத் தழுவும் நாடுகளுமே மரண தண்டனையை நடைமுறையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் இரக்கம் காட்டுவதை இந்திய அரசியல் சட்டத்தின் கடமையாகச் (பிரிவு 15எ) சொல்லப்பட்டுள்ளது.
அரசியல் அவதானிகளின் கருத்தின்படி, ராஜீவ் கொலை வழக்கில் மூன்று தளங்களில் குறித்த குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். அரசியல் மயப்பட்ட நிலையில் இவ் வழக்கு நடைபெற்றமை இவ் வழக்கில் இவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்தது. இது இவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட முதலாவது தளம் ஆகும். தடா சட்டத்தின் கீழ் இவர்கள் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டமை இரண்டாவது தளமாகும். இதேவளை 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு – ஒரு ஆயுட்தண்டனைக் காலத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவிட்ட இவர்களுக்கு – இவ்வளவு காலம் தாழ்த்தி மரணதண்டனையினை உறுதி செய்துள்ளது நீதி மறுக்கப்படும் மூன்றாவது தளம் ஆகும். காலம் தாழ்த்தி மரண தண்டனையினை நடைமுறைப்படுத்துவது மனித உயிரினை இழிமைப்படுத்தும் செயலெனவும் நீண்ட சிறைப்படுத்தலின் பின்னர் ஒருவரைத் தூக்கிலிடுவது அருவருக்கத்தக்க செயலெனவும் பிரித்தானிய பிரிவி கௌன்ஸில் 1993-இல் தீர்ப்பளித்தது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் கீழ் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முடிவின் அடிப்படையில் தமிழக ஆளுனராலும் மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கான பரிந்துரையினை வழங்க முடியும். உலகத்தமிழர்களின் உணர்வுகளையும்இ உரிமைக்குரலையும் பிரதிபலித்து நிற்கும் தமிழக முதலமைச்சர் இவ்விடயத்தில் தலையிட்டு மரணதண்டனையினை ரத்துச் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என பல தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள்களை விடுத்துள்ளன. பல தரப்பினர் தங்களால் இயன்ற வகையில் போராட்டங்களையும் நடத்திவருகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய ஏகாதிபத்திய சட்ட மரபுகளை பின்பற்றும் நாடுகளின் சட்ட யாப்பின்படி, குறித்த ஒரு தீர்ப்புக்கு ஒத்ததாக பிறிதொரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமேயானால் குறித்த தீர்ப்பின்படி இத்தீர்ப்பையும் மாற்ற முடியும். அவ்வகையில், ஏற்கனவே 1974-ஆம் ஆண்டு கவிஞர் கலியப்பெருமாள் வழக்கில் கேரளாவை சேர்ந்த பாலன் என்பவருக்கு அந்த மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் காரணமாக மன்னிப்பு வழங்கபட்டது. இதை உதாரணமாக வைத்து குறித்த மூன்று பேரையும் காப்பாற்ற முடியும்.
தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று தமிழர்களின் அவலக்குரலையாவது ஆட்சியாளர்கள் செவிமடுப்பார்களா என்பதே இப்போது எழும் கேள்வி. மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக அரசு பரிந்துரை செய்தால் ஆளுநரினால் இறுதி முடிவு எடுக்கப்படும். இதன் மூலமாக மூன்று தமிழ் இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும். மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென்கிற குரலுக்கு பக்கத் துணையாக இருக்கும் காந்தி பிறந்த தேசம்இ மரண தண்டனைக்கே உயிர் வடிவம் கொடுத்தால் மாபெரும் தவறை இந்திய தேசம் செய்கிறது என்றே அர்த்தப்படும். வரலாற்றுத் தவறுகளை செய்யாமல், மானிடத் தர்மத்தின் பக்கம் இந்தியா தொடர்ந்தும் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் இவ்வுலகில் வாழும் பல கோடி மக்களின் நம்பிக்கையை இந்தியா பொய்ப்பிக்காது என்று நம்புவோமாக
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
.Admin wrote:இது மிகவும் தாமதமானது. அரசு, எல்லா எதிர்ப்பையும் மீறி இந்த தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபட நினைக்கும் எல்லா கிரிமினல்களுக்கும் இது பாடமாக அமைய வேண்டும்.
ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து...இந்த தண்டனையை அவர்கள் முன்னமே கொடுத்து இருந்தால்
நல்லா இருந்து இருக்கும்....ஆயுள் தண்டனை எதற்க்கு???????????
இப்போ தூக்கு எதற்க்கு ?????????
அவர்கள் நிச்சயம் சாக வேண்டியவர்கள் தான்....
ஆனால் இது மிக மிக தாமதமே.......
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
மேலே உள்ள கருத்துக்கள் எல்லாமே நான் படித்த கருத்துக்கள்தான் உமா. என்னுடைய கருத்துகள் அல்ல.
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
இந்த மூணு பேருக்கும் கண்டிப்பா தூக்கு தண்டனை நிறைவேத்த போறதில்லை,ஏதாச்சும் காரணம் சொல்லி தள்ளி வைப்பாங்க.இல்லைன்னா தூக்கு தண்டனை வாங்குன இந்த மூணு பேரும் சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்ளை பண்ணி இன்னும் பத்து வருஷத்துக்கு இந்த கேஸ் இழுத்துகிட்டே இருக்கும்.ராஜிவோட கொள்ளு பேரன் வந்தா கூட இது முடிய போறதில்லை
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
Admin wrote:மேலே உள்ள கருத்துக்கள் எல்லாமே நான் படித்த கருத்துக்கள்தான் உமா. என்னுடைய கருத்துகள் அல்ல.
உங்களின் கருத்தையும் சொல்லுங்க அண்ணா..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
இப்பொழுது என்னுடைய கருத்தைக் கூறுகிறேன்.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொண்டு, தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்கும் இந்தியாவில் மூன்று ஜீவன்கள் 20 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு தூக்கிலிடப்படவுள்ளனர் என்பது வேதனையான செய்தி. இந்தியாவின் சர்வாதிகார ஆட்சியினரின் முகத்திரை கிழிந்து அவர்களின் உண்மையான முகம் வெளிப்படும் நேரம் இது.
இந்திய ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்து விட்டாராம். அவர் இவர்கள் அனுப்பிய மனுவைப் பிரித்துப் படித்தாரா என்பதே சந்தேகம்தான். சுயேட்சையாக முடிவெடுக்க முடியாத ஜனாதிபதிக்கு மனு அனுப்பி என்ன நேர்ந்துவிடப் போகிறது.
தமிழர்கள் என்பதற்காகக் கூறவில்லை. எந்த ஒரு மனிதனையும் இத்தனை வருடங்கள் கொடுமை செய்ததற்குப் பிறகு கொல்வது என்பது சிறிதும் மனிதாபிமானமற்ற செயல். தமிழர்களை அழிக்கத் துடிக்கும் சோனியாவின் இனவெறிக்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான சகோதர உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இனிமேலும் இழக்கக் கூடாது.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொண்டு, தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்கும் இந்தியாவில் மூன்று ஜீவன்கள் 20 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு தூக்கிலிடப்படவுள்ளனர் என்பது வேதனையான செய்தி. இந்தியாவின் சர்வாதிகார ஆட்சியினரின் முகத்திரை கிழிந்து அவர்களின் உண்மையான முகம் வெளிப்படும் நேரம் இது.
இந்திய ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்து விட்டாராம். அவர் இவர்கள் அனுப்பிய மனுவைப் பிரித்துப் படித்தாரா என்பதே சந்தேகம்தான். சுயேட்சையாக முடிவெடுக்க முடியாத ஜனாதிபதிக்கு மனு அனுப்பி என்ன நேர்ந்துவிடப் போகிறது.
தமிழர்கள் என்பதற்காகக் கூறவில்லை. எந்த ஒரு மனிதனையும் இத்தனை வருடங்கள் கொடுமை செய்ததற்குப் பிறகு கொல்வது என்பது சிறிதும் மனிதாபிமானமற்ற செயல். தமிழர்களை அழிக்கத் துடிக்கும் சோனியாவின் இனவெறிக்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான சகோதர உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இனிமேலும் இழக்கக் கூடாது.
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
தூக்குத்தண்டனை என்று ஒன்று இல்லாவிட்டால் நாட்டில் குற்றங்கள் பெருகிவிடும் என்பதே என் கருத்து.
அதற்காக நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது.
அதற்காக நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: தூக்கு தண்டனை பற்றி தங்கள் கருத்தை கூறவும்
Admin wrote:இப்பொழுது என்னுடைய கருத்தைக் கூறுகிறேன்.
உலகின் மாபெரும் ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொண்டு, தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுக்கும் இந்தியாவில் மூன்று ஜீவன்கள் 20 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு தூக்கிலிடப்படவுள்ளனர் என்பது வேதனையான செய்தி. இந்தியாவின் சர்வாதிகார ஆட்சியினரின் முகத்திரை கிழிந்து அவர்களின் உண்மையான முகம் வெளிப்படும் நேரம் இது.
இந்திய ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்து விட்டாராம். அவர் இவர்கள் அனுப்பிய மனுவைப் பிரித்துப் படித்தாரா என்பதே சந்தேகம்தான். சுயேட்சையாக முடிவெடுக்க முடியாத ஜனாதிபதிக்கு மனு அனுப்பி என்ன நேர்ந்துவிடப் போகிறது.
தமிழர்கள் என்பதற்காகக் கூறவில்லை. எந்த ஒரு மனிதனையும் இத்தனை வருடங்கள் கொடுமை செய்ததற்குப் பிறகு கொல்வது என்பது சிறிதும் மனிதாபிமானமற்ற செயல். தமிழர்களை அழிக்கத் துடிக்கும் சோனியாவின் இனவெறிக்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான சகோதர உறவுகளை நாம் இழந்துவிட்டோம். இனிமேலும் இழக்கக் கூடாது.
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» கசாப்புக்கு தூக்கு தண்டனை
» தூக்கு தண்டனை நிறைவேற்றுவது எப்படி?
» துபாயில் இந்தியருக்கு தூக்கு தண்டனை
» தூக்கு தண்டனை – நகைச்சுவை
» கசாப்புக்கு தூக்கு தண்டனை
» தூக்கு தண்டனை நிறைவேற்றுவது எப்படி?
» துபாயில் இந்தியருக்கு தூக்கு தண்டனை
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|