ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா ஹாசரே இவரை பற்றி தினமணியின் கருத்து

Go down

அண்ணா  ஹாசரே  இவரை பற்றி  தினமணியின் கருத்து  Empty அண்ணா ஹாசரே இவரை பற்றி தினமணியின் கருத்து

Post by இளமாறன் Fri Aug 26, 2011 6:15 pm

போதும் அண்ணா, போதும்!

First Published : 26 Aug 2011 03:48:10 AM IST

Last Updated : 26 Aug 2011 04:05:43 AM IST

எழுபத்து நான்கு வயது இளைஞரான அண்ணா ஹசாரே கடந்த பத்து நாள்கள் உண்ணாவிரதம் இருந்து, இந்தியாவை மட்டுமல்ல, இன்றைய இளைஞர்களையும் அசர வைத்திருக்கிறார். உண்ணாவிரதப் போராட்டம் என்றால், நண்பகல் ஒரு வேளை உணவு உண்ணா போராட்டம் என்பதாக மாறிப்போன இக்காலகட்டத்தில், தொடர்ந்து 10 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து, இத்தகைய சத்யாகிரகப் போராட்டத்துக்கு மீண்டும் மரியாதை சேர்த்துள்ள அண்ணா ஹசாரேவுக்கு இந்திய தேசமே நன்றி சொல்ல வேண்டும்.

÷இதைச் சொல்லும் வேளையில், அரசின் கவனத்தையும் மக்கள் கவனத்தையும் முழுமையாக ஈர்த்துவிட்ட நிலையில், நடைமுறைக்கு ஏற்ப கோரிக்கைகளைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வதுதான் இப்போது அண்ணா ஹசாரே மேற்கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய காந்திய நெறிமுறை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.

÷காந்திஜி பல நேரங்களில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை, அதன் நோக்கம் ஓரளவு மட்டுமே நிறைவேறிய நிலையில் விலக்கிக்கொண்ட சந்தர்ப்பங்கள் உண்டு. கேட்டது அனைத்தும் கிடைக்காத நிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதால் தோல்வியடைந்துவிட்டதாக யாரும் கருதிவிடுவார்களோ என்ற அச்சம் தேவையற்றது.

÷குறிப்பாக, அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைத்து எதிர்க் கட்சிகளும்கூட, பிரதமர் நடத்திய கூட்டத்துக்குப் பின்னர், உண்ணாவிரதத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்த பின்னரும், விடாப்பிடியாக, தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது, அவரது நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவாது. மற்றவர்கள் இணங்கி, இறங்கி வரும்போது உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டு, மீண்டும் இந்தப் பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் தொடர்வதுதான் சரியான முடிவாக இருக்கும்.

÷இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நவகாளியில் நடந்த இந்து - முஸ்லிம் கலவரம் முடிவுக்கு வரவும், அமைதி திரும்புவதற்காகவும் உண்ணாவிரதம் இருந்த காந்தியிடம், உண்ணாவிரதத்தை விலக்கிக் கொள்ளும்படி காங்கிரஸ் தலைவர்கள் முறையிட்ட நேரத்தில் அதற்கு உடன்பட்ட காந்தி கூறியதை இப்போது அண்ணா ஹசாரே மட்டுமல்ல, அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் காந்தியவாதிகளும்கூட நினைத்துப் பார்க்க வேண்டும்.

÷""....நான் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளத் தூய்மைக்காகவும், உடலும் மனமும் மரத்துச் செயலற்றுப்போன நிலையில் நம் உள்ளிருக்கும் ஆற்றலை வெளிக்கொணரவும்தானே தவிர, செயலிழந்து ஸ்தம்பிக்கச் செய்வதோ அல்லது செயலின்மையில் கிடக்கச் செய்வதோ அல்ல. என் உண்ணாவிரதம் தீயசக்திகளைத் தனிமைப்படுத்தியுள்ளது. தீயசக்திகளுக்குச் சுயமாக நிற்கக் கால்கள் கிடையாது. தனிமைப்படுத்தப்பட்டவுடன் அவை அழிந்துபோகும்....''

÷அன்று காந்திஜி கூறிய வார்த்தைகளை முழுமையாகப் புரிந்துகொண்டால், இந்தப் போராட்டத்தை, 10 நாள்களுக்குப் பிறகு. அரசு இதன் தீவிரத்தை உணர்ந்து இறங்கி வந்துள்ள பிறகு, கைவிட்டுவிடுவதில் எந்தக் குறையும் நேர்ந்துவிடாது.

÷ஜன லோக்பால் மசோதாவின் கருத்துகளை ஏற்க அரசு முதலில் மறுத்தது. அதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. நாடாளுமன்றத்தில் அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதாவுடன் சமூக ஆர்வலர் குழு தயாரித்துள்ள ஜன லோக்பால் மசோதாவையும் வைப்பது என்றும் அதில் சிறந்தது எது என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கட்டும் என்றும் அண்ணா ஹசாரே குழு முன்வைத்த கருத்தை அரசு ஏற்க மறுத்தது. இப்போது இந்த உண்ணாவிரதம் நாடு முழுவதும் ஏற்படுத்திய, ஊழலுக்கு எதிரான குரல்கள் அரசைப் பணியவைத்துள்ளன. பேசுவோம் என்கிறார்கள். உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள லோக்பால் மசோதாவை விலக்கிக்கொள்வதாகச் சொல்கிறது அரசு. ஜன லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வோம் என்கிறார்கள்.

÷எல்லாமும் அண்ணா ஹசாரே குழுவின் கோரிக்கைகள் பல ஏற்கப்படும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் சேர்க்க வேண்டும் என்கிற ஒன்றில் மட்டுமே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படாமல் இருக்கிறது. அதில் கருத்தொற்றுமை ஏற்படாவிட்டாலும்கூட, இப்போதைக்கு இந்த மசோதா அடித்தட்டு மக்களுக்குப் பயன்படக்கூடியதாக மாறியுள்ளது என்பது வெளிப்படை. இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றையும் பேசித் தீர்த்துவிடலாம் என்பதால் அண்ணா ஹசாரே தன் உடல்நலம் கருதி. உண்ணா விரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதே சரியான முடிவாக இருக்கும்.

÷நாங்கள் முன்வைக்கும் எல்லா கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பது என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கொச்சைப்படுத்துவதாக இருக்கும். கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்போது பிடிவாதம் பிடிப்பதால் யாருக்கு என்ன லாபம்?

÷அண்ணா ஹசாரே உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பது ஒருபுறம் இருக்க, ஆதரவுக் குரல்கள் மெல்லமெல்ல வலுவிழந்துகொண்டே போய்விடும். ஏனென்றால், ஹசாரேவுக்கு ஆதரவாக நிற்பவர்கள் லஞ்சத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர வருவாய்ப் பிரிவினர். இவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் தெருவில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்த நடுத்தர மக்களால் தொடர்ந்து போராட்டங்களில் பங்குகொள்ள முடியாது. அவரவருக்கு ஆயிரம் வேலை. பிழைப்புக்குப் போகாவிட்டால் வாழ்க்கை இருண்டுபோகும். ஆகவே, ஆதரவுக்கூட்டம் மெல்லமெல்ல கலையத் தொடங்கும்.

÷அரசு மிரண்டு கிடப்பதே நாடு முழுவதும் இந்த நடுத்தர மக்கள் திரண்டு நிற்பதைக் கண்டுதான். அவர்கள் கலைய ஆரம்பித்தால், அரசு தன் பிடிவாதத்தை ஆரம்பித்துவிடும். அதற்கு முன்பாக அண்ணாவே உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்தி லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வழிமுறைகளைக் காணாமல், பிடிவாதம் பிடிப்பதன் மூலம் ஊழலுக்கு வலு சேர்த்துவிடக் கூடாது! தினமணி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அண்ணா  ஹாசரே  இவரை பற்றி  தினமணியின் கருத்து  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum