புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
21 Posts - 4%
prajai
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தயிர் படுத்திய பாடு! Poll_c10தயிர் படுத்திய பாடு! Poll_m10தயிர் படுத்திய பாடு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயிர் படுத்திய பாடு!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 10:18 am

இப்போதெல்லாம் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில், கோயில் பக்கத்திலிருக்கும் "குவார்ட்டர்ஸ்'-இல் வசிக்கும் இல்லத்தரசிகளிடையே விமலா மாமி வீட்டுத் தயிர் ரொம்ப பிரசித்தமானது. யாருக்காவது பாலைத் தோய்க்க நல்ல தயிர் தேவைப்பட்டால், விமலா மாமியைத் தான் அணுகுகிறார்கள். விமலா மாமியின் தயிர்க் கதைதான் என்ன?

விமலாவின் கணவர் சிவராமன் சென்னை ஐ.ஐ.டி-யில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். சிறப்பான ராய்ச்சி செய்து பி.எச்.டி மற்றும் இதர பட்டங்களைப் பெற்ற ஐ.ஐ.டி பேராசியர்களின் பெரும்பாலானோருக்கு சில ருசிகரமான அல்லது அசாராரணமான குணாதியங்கள் இருக்கும். ப்ரொஃபஸர் சிவராமனுக்கோ, அலுவலகத்திலும் வீட்டிலும் எல்லா காரியங்களும் பெர்ஃபெக்ட் ஆகவும் மிக துல்லியமாகவும் நடக்க வேண்டும்.

இப்படி போய் கொண்டிருந்த அவர்கள் இல்லற வாழ்க்கையில் ஒரு தீராத பிரச்சனையாக உருவெடுத்தது தயிர். விமலா என்ன முயற்சி பண்ணியும் தயிர் சரியாக தோய மறுத்தது! சிவராமன் தினமும், "விமலா உனக்கு சரியாக தயிர் தோய்க்கக்கூட தெரியலையே,' என்று அலுத்துக் கொள்வார். விமலா தன் கணவரிடம், "பால் நன்றாக இருந்தால்தானே தயிர் நன்றாக இருக்கும்?' என்று முறையிட்டாள்.

சிவராமனோ, "விமலா, நீ சொல்வது ஒரு நொண்டிச் சாக்குதான். அது உண்மையான காரணமாக இருந்தால் எல்லா வீட்டுத் தயிரும் ஒரே மாதிரி அல்லவா இருக்க வேண்டும்? ஆனால், அப்படி இருப்பதில்லையே. சில வீடுகளில் தயிர் ஓரளவுக்க நன்றாக இருக்கிறதே. எந்தப் பிரச்னையையும் சரியாக ஆராய்ந்தால், அதற்கு சரியான விடை கிடைக்கும்' என்றார்.

விமலா சற்று கோபமாக, "தயிர் தோய்ப்பது உங்கள் ஐ.ஐ.டி. வேலை மாதிரி இல்லை. இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்கள் சரியாகத் தோய்த்துக் காட்டுங்களேன்,' என்று பேசி விட்டாள். சிவராமன் அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, ஒன்றும் பேசாமல் போய்விட்டார். அடுத்த சில நாட்கள் தயிர் ரொம்ப கொழகொழவென்று இருந்தும்கூட அவர் ஒன்றும் சொல்லவில்லை. விமலாவுக்கு தன் கணவரின் மௌனம் என்னவோபோல் இருந்தது.

ஒருநாள் சிவராமன் மாலையில் சற்று தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தார். விமலா கொண்டு வந்த காப்பியை வாங்கிக் கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தபடி, "இன்று திபரும்பி வரும் வழியில் ஐ.ஐ.டி. லைப்ரரியில் சில புஸ்தகங்களை படிக்க வேண்டி இருந்தது. அதான் லேட்!' என்றார். விமலா பாதி கிண்டலாக, "இன்று என்ன ஆராய்ச்சியோ?' என்று கேட்டாள். சிவராமன், "விமலா, முதலில் சோஃபாவில் உட்கார்ந்து கொள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்கிறாயா?' என்றார். விமலா உற்சாகத்துடன், "கேளுங்கள்' என்றாள்.

சிவராமன் புன்சிரித்தபடியே கேட்டார். "பாலும் தயிரும் சைவ உணவா அல்லது அசைவ உணவா?' விமலா அவரை முறைத்துப் பார்த்தபடி கேட்டாள். "உங்களுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? பாலும் தயிரும் நல்ல சைவ உணவுதானே?'

சிவராமன் தொடர்ந்தார். "பாலில் குறைந்த அளவிலும், தயிரில் பல கோடிக் கணக்கிலும் "லாக்டோபாஸில்லஸ்' நுண் கிருமிகள் காணப்படுகின்றன தெரியுமா? அவை நம் குடலில் ஸிம்பியாஸிஸ் முறையில் வாழ்ந்து, நமக்கு பல வகையில் உதவுகின்றன.'

"ஐயய்யோ, அப்படியென்றால் நாம் தினம் கோடிக்கணக்கான பூச்சிகளைச் சாப்பிடுகிறோமா?'

சிவராமன் ஒரு விஷமச் சிரிப்புடன் சொன்னார். "கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் ஆனதால் பரவாயில்லை. அது மட்டுமில்லை. தாய்ப்பாலில்கூட இந்த லாக்டோபாஸில்லஸ் கிருமிகள் சிறிதளவு காணப்படுகின்றன. குழந்தை உணவை ஜீரணிப்பதற்கு அவை உதவுகின்றன. இன்னொரு வேடிக்கை கேள்.'

"தயிர் தோய்ப்பதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. பாலில் உள்ள கொழுப்பு (ஃபாட்)தான் கெட்ட பாக்டீரியாக்களுக்குப் பிடித்த உணவாய் அமைந்து பாலை வேகமாக கெட்டு போக வைக்கிறது. பாலைக் காய்ச்சியதும், நம் உடல் சூட்டிற்கு ஆறியபின், பாலாடையை அகற்றிவிட வேண்டும். நாம் பாலாடையை அகற்றினாலும், பாலில் ஓரளவு கொழுப்பு மிஞ்சியிருக்கும். இது பால் தோயும்போது மேலெழுந்து ஒரு மஞ்சள் நிற படலமாக தயிரில் படர்ந்திருக்கும். ஒரு டேபிள் - ஸ்பூனால் இதை அகற்றிவிட்டு, அடியில் வெள்ளை நிறத்தில் கட்டியாக இருக்கும் தயிரை மட்டுமே தோய்ப்பதற்கு எடுக்க வேண்டும்.'

"தோய்ப்பதற்காக ஆற வைத்த பாலின் சூடு 37 டிகிரி (நம் உடல் - சூடு) இருக்கலாம். பாலை முடிந்தவரை ஃப்ரெஷாக தோய்ப்பதுதான் நல்லது. தோய்க்க உபயோகிக்கும் தயிரை ஒரே கட்டியாக எடுத்து பாலில் சேர்த்து, அது சிதறிப்போகும்வரை ஸ்பூனால் நன்றாக கிளற வேண்டும். பின், தட்டலோ அல்லது ஃபில்டர் பேப்பராலோ' மூடி வைத்துவிடலாம். எல்லா நாளும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் தோய்ப்பது நல்லது.

"தயிர் நன்றாக தோய வேண்டுமென்றால் தோய்த்த பாலில் லாக்டோபாஸில்லஸ் கிருமிகள் ஆரோக்கியத்துடன் பெருக வேண்டும். லாக்டோபாஸில்லஸ் கிருமிகள் பெருக பிராணவாயு தேவை. அதனால் சுத்தமான இடத்தி, பிராணவாயு தாராளமாகக் கிடைக்கும்படி வைத்து தோய்த்த தயிருக்கு தனி ருசி இருக்கும். அதனால் தோய்த்த பால் பாத்திரத்தை சமையல் அறையையேத் தவிர்த்து, டைனிங் மேஜைமேல் வைப்பது உத்தமம். தயிர் உறைந்து கட்டியானபின் ஃபிரிட்ஜில் வைத்துவிடலாம்.'

"மண் பாத்திரங்களில் காற்று மட்டும் புகக்கூடிய நுண்துவாரங்கள் இபுருக்கும். அதனால் தயிர் தோய்ப்பதற்கு ஏற்ற பாத்திரம். மண் பாத்திரமும், மண் மூடியும்தான் பழைய காலத்தில் தயிர்க்காரிகள் மண் பானையில் விற்று வந்த தயிரின் அருமையான ருசியை, அதை உட்கொண்ட யாராலும் மறக்கவே முடியாது!'

"வீட்டில் தயிர் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டுமென்றால் நாம் ஒரு முக்கியமான உண்மையை நினைவில் வைத்திருக்க வேண்டும். தயிர் ஒரு உயிருள்ள கிருமிக் கூட்டத்தைத் தன்னுள் தாங்கியிருக்கும் பொருள், பாலின் தரம், பராமரிக்கப்படும் சூழ்நிலை இவற்றிற்கேற்ப ஒவ்வொரு லாக்டோபாஸில்லஸ் கிருமிக் கூட்டத்துக்கும் ஒரு "ஸிக்னேசர்' (தனித்துவம்) உண்டு. அதைப் பொறுத்தே அவை உற்பத்தி செய்யும் தயிரின் ருசியும் தரமும் அமையும். நாம் நல்ல தயிரை அடைய விரும்பினால், நம் வீட்டு செல்லப் பிராணியை பராமரிப்பது போலவே, நம் வீட்டுத் தயிரில் வாழும் லாக்டோபாஸில்லஸ் கிருமிகளையும் கவனமாக பராமரிக்க வேண்டும். தயிர் தோயப்பதின் சூட்சுமம் இதுதான்.'

சிவராமன் அவருடைய ஐ.ஐ.டி. - பாணி லெக்சரை முடித்தார். விமலா உற்சாகத்துடன், "இந்தத் தயிர் பிரச்சினையை இப்படி அலசி ஆராய்ந்ததற்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. இனிமேல் நீங்கள் சொன்னபடியே பாலை தோய்க்கிறேன்.' என்றாள். பின் சற்று தயக்கத்துடன் "இருந்தாலும், ஒரு விஷயம் மனத்தை உறுத்துகிறது. சொல்லுங்களேன். பாலும் தயிரும் நிஜமாவே சைவ உணவு இல்லையா?' என்று கேட்டாள். சிவராமன் சிரித்துக் கொண்டே, "விமலா, இதைப் பற்றி நினைத்து வீணாக மனத்தை அலட்டிக் கொள்ளாதே. நம் நாட்டு கலாசாரம், நம்பிக்கை இவற்றின்படி பாலும் தயிரும் சைவ உணவுதான்,' என்று பதிலளித்தார்.

ஒரே மாதத்தில், விமலா மாமி, ஐ.ஐ.டி, குவார்ட்டர்ஸில், தயிர் தோய்ப்பதில் ஒரு எக்ஸ்பெர்ட் என்றும், ஒரு நல்ல "தயிர் வங்கி' வைத்திருப்பவள் என்றும் பெயரெடுத்துவிட்டாள்!

டாக்டர் ஜயராமன்

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Aug 24, 2011 10:28 am

நல்ல தகவல், இனி என் வீட்டுத் தயிரும் ருசிகரமாய் இருக்கும்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 10:38 am

நல்லாவே தயிர் தோய்திருக்கீங்க... அருமையிருக்கு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 4:51 pm

அட்மின், குமார் இதை நான் ஏற்கனவே Aug 13 th போட்டுள்ளேன், இரண்டையும் இணத்துவிடலாமா? சொல்லுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக