புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தமிழ்ப்புத்தாண்டு பற்றிய தி.மு.க. அரசின் சட்டம் ரத்து, சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு. புதிய மசோதா நிறைவேறியது
தை மாதத்தை தமிழ் புத்தாண்டாக மாற்றி தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் தமிழக சட்டசபையில் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படும்.
கடந்த பல ஆண்டுகளாக சித்திரை மாதத்தின் (ஏப்ரல் மாதம்) முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. இதை, முந்தைய தி.மு.க. அரசு மாற்றியது.
தை மாதம் (ஜனவரி மாதம்) முதல் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று அறிவித்து, 2008-ம் ஆண்டு அதற்கான சட்டத்தை (தமிழ்ப் புத்தாண்டு விளம்புகைச் சட்டம்) அப்போதைய அரசு நிறைவேற்றியது.
அ.தி.மு.க. முடிவு
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை பழையபடி சித்திரை மாதத்தில் கொண்டாடுவதற்கு அ.தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு வழிவகை செய்வதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
2011-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) நீக்கச் சட்ட முன்வடிவு என்ற சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நேற்று சட்டசபையில் அறிமுகம் செய்தார். முன்னதாக அவர் சட்டசபையில் அதற்கான அனுமதி கோரினார்.
தாக்கல் செய்தார்
அனுமதி அளிக்கப்பட்டதும், அந்த சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டம், தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது. இந்த மசோதா மூலம், 2008-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சட்டம் நீக்கப்படுகிறது.
அறிஞர் கருத்துகள்
பொதுமக்களும், தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர்களும், வானியல் வல்லுனர்களும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள அறிஞர்களும் 2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தைப் பற்றி, `தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிவரும் வழக்க நடைமுறைக்கு அது மாறாக உள்ளது' என்ற தங்களது கருத்துகளை வெவ்வேறு ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.
2008-ம் ஆண்டு சட்டத்தை நீக்க வேண்டும் என்று சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் பழமை வாய்ந்த நடைமுறையை மீட்டுத்தர வேண்டும் என்றும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
நீக்க முடிவு
மேலும், தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பின்பற்றுவது, பொதுமக்களிடையே நடைமுறை இடர்பாடுகள், தடை, எதிர்ப்பு போன்றவற்றை 2008-ம் ஆண்டு சட்டம் ஏற்படுத்தியுள்ளது.
எனவே சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் முந்தைய வழக்கத்தை மீட்பதற்காக, 2008-ம் ஆண்டு சட்டத்தை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சட்டமசோதாவை அறிமுகம் செய்வதற்கான தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் குரல் ஓட்டுக்கு சபாநாயகர் டி.ஜெயக்குமார் விட்டார். அந்தத் தீர்மானத்துக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அ.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மேஜையைத் தட்டி உற்சாக ஒலி எழுப்பினர்.
ஜெயலலிதா
பின்னர் மதியம் தமிழ்ப்புத்தாண்டு நீக்க சட்டமசோதா மீது விவாதம் நடைபெற்றது. இதன் மீது செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), ஏ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.
பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
இந்த சட்டத்தினால் மக்களுக்கு, எந்த வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாத பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த சட்டம் அமைந்துள்ளது.
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு, இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாக கொண்டமைந்த ஆண்டு கணக்கீடு தான் பூர்வீகத்தமிழ் மரபாக இருக்க முடியும். மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும், சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதை உறுதிப்படுத்துகின்றன.
சட்டம் இயற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப்புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த சட்டத்தினை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்
மசோதா நிறைவேறியது
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து இனி சித்திரை 1-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படும்.
தினதந்தி
தை மாதத்தை தமிழ் புத்தாண்டாக மாற்றி தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் தமிழக சட்டசபையில் நேற்று ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சித்திரை 1-ந் தேதி மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படும்.
கடந்த பல ஆண்டுகளாக சித்திரை மாதத்தின் (ஏப்ரல் மாதம்) முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. இதை, முந்தைய தி.மு.க. அரசு மாற்றியது.
தை மாதம் (ஜனவரி மாதம்) முதல் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று அறிவித்து, 2008-ம் ஆண்டு அதற்கான சட்டத்தை (தமிழ்ப் புத்தாண்டு விளம்புகைச் சட்டம்) அப்போதைய அரசு நிறைவேற்றியது.
அ.தி.மு.க. முடிவு
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை பழையபடி சித்திரை மாதத்தில் கொண்டாடுவதற்கு அ.தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு வழிவகை செய்வதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
2011-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) நீக்கச் சட்ட முன்வடிவு என்ற சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நேற்று சட்டசபையில் அறிமுகம் செய்தார். முன்னதாக அவர் சட்டசபையில் அதற்கான அனுமதி கோரினார்.
தாக்கல் செய்தார்
அனுமதி அளிக்கப்பட்டதும், அந்த சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) சட்டம், தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது. இந்த மசோதா மூலம், 2008-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சட்டம் நீக்கப்படுகிறது.
அறிஞர் கருத்துகள்
பொதுமக்களும், தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர்களும், வானியல் வல்லுனர்களும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள அறிஞர்களும் 2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தைப் பற்றி, `தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிவரும் வழக்க நடைமுறைக்கு அது மாறாக உள்ளது' என்ற தங்களது கருத்துகளை வெவ்வேறு ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.
2008-ம் ஆண்டு சட்டத்தை நீக்க வேண்டும் என்று சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் பழமை வாய்ந்த நடைமுறையை மீட்டுத்தர வேண்டும் என்றும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
நீக்க முடிவு
மேலும், தை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பின்பற்றுவது, பொதுமக்களிடையே நடைமுறை இடர்பாடுகள், தடை, எதிர்ப்பு போன்றவற்றை 2008-ம் ஆண்டு சட்டம் ஏற்படுத்தியுள்ளது.
எனவே சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் முந்தைய வழக்கத்தை மீட்பதற்காக, 2008-ம் ஆண்டு சட்டத்தை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து சட்டமசோதாவை அறிமுகம் செய்வதற்கான தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் குரல் ஓட்டுக்கு சபாநாயகர் டி.ஜெயக்குமார் விட்டார். அந்தத் தீர்மானத்துக்கு ஏகோபித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அ.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மேஜையைத் தட்டி உற்சாக ஒலி எழுப்பினர்.
ஜெயலலிதா
பின்னர் மதியம் தமிழ்ப்புத்தாண்டு நீக்க சட்டமசோதா மீது விவாதம் நடைபெற்றது. இதன் மீது செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), ஏ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு) ஆகியோர் பேசினார்கள்.
பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-
இந்த சட்டத்தினால் மக்களுக்கு, எந்த வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாத பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த சட்டம் அமைந்துள்ளது.
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு, இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாக கொண்டமைந்த ஆண்டு கணக்கீடு தான் பூர்வீகத்தமிழ் மரபாக இருக்க முடியும். மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும், சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதை உறுதிப்படுத்துகின்றன.
சட்டம் இயற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப்புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த சட்டத்தினை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்
மசோதா நிறைவேறியது
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து இனி சித்திரை 1-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்படும்.
தினதந்தி
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்ப்புத்தாண்டு தினம் மாற்றப்படுகிறது - சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு
மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழ்ப்புத்தாண்டு தினம் மாற்றப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்ட மசோதா
சட்டசபையில் நேற்று வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. துறையின் அமைச்சர்கள் பி.தங்கமணி, முகமது ஜான் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார்கள்.
பின்னர் தமிழ்ப்புத்தாண்டு நீக்க சட்ட மசோதா மீது உறுப்பினர்கள் பேசினர். அப்போது பேசிய உறுப்பினர் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) தை 1-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை 1-ந் தேதிக்கு மாற்றுவது சரிதான் என்று கூறினார். ஆனால், ஏ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு) பேசும்போது, ``இந்த சட்டமசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டார். அப்போது தமிழ்ப்புத்தாண்டு நீக்க சட்ட மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்புத்தாண்டு தினம்
தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும், தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு தமிழ்ப்புத்தாண்டு (விளம்புகை) சட்டம், 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டம், ஒரு சுய விளம்பரத்திற்காக இயற்றப்பட்டதே தவிர, இந்த சட்டத்தினால் மக்களுக்கு, எந்த வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாத பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த சட்டம் அமைந்துள்ளது.
ஒரு நாட்டிலே, ஒரு சட்டம் இயற்றப்படுகிறது என்றால், அந்த சட்டம், அந்த நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் அல்லது இது போன்ற சட்டம் தேவை என்று மக்கள் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், அந்த சட்டம் இயற்றப்படுவதற்கான காரணங்கள் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். இவை எதுவுமே இல்லாமல், யாருக்கும் பயனளிக்காத ஒரு சட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து, உடனடியாக சென்னையில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சித்திரை முதல் நாள்
கருணாநிதியின் துதிபாடிகள் அனைவரும் அவரைப் போற்றினர். இதை தவிர, வேறு யாருக்கும் எந்த வித நன்மையும் இந்த சட்டத்தினால் ஏற்படவில்லை. தமிழக மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக, தமிழுக்கு மிகப்பெரிய சிறப்பினை செய்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக, இது போன்ற சட்டத்தை கருணாநிதி இயற்றியுள்ளார் என்பது தான் உண்மை.
தமிழர் காலக்கணிப்பு முறையின்படி, ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். இது சூரியனின் நகர்வை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது. சூரியன், மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும். ஆண்டின் தொடக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சித்திரை மாதத்தை ஆண்டு தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பல்லாண்டு காலமாக, சித்திரை முதலாம் நாளையே புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பண்டை தமிழர்கள்
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு, இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாக கொண்டமைந்த ஆண்டு கணக்கீடு தான் பூர்வீகத்தமிழ் மரபாக இருக்க முடியும். கோடைக்காலமே முதலாவது பருவம் என சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.
"சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா!'' என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால், சித்திரை மாதமே தமிழ்ப்புத்தாண்டுக்கு உரிய, பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். சித்திரைத்திங்கள் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடலாம் என பல அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பண்டைத்தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் சித்திரை மாதம் தான்.
வரலாற்று சான்றுகள்
சங்க இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கியமான, பத்துப்பாட்டு இலக்கியத்தின் நெடுநல்வாடையில், சூரியன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரனார் தெளிவுபடுத்தி இருக்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தால் 1912-ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியிலும் சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசவைக் கவிஞராக இருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையும் "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்'' என்ற தனது வாழ்த்துப்பாடலின் மூலம் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும், சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதை உறுதிப்படுத்துகின்றன. இந்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, இதை வரவேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி உறுப்பினர் என்.நன்மாறன், தமிழ்ப்புத்தாண்டை மாற்றி அமைத்ததற்கான காரணங்கள் இருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால், கடைசி வரையில் அதற்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை.
மக்கள் நம்பிக்கை
மேற்படி சட்டம் இயற்றப்படும் போது, அதற்கான நோக்க காரண விளக்க உரையில், தை திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால், தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து, நடைமுறைப்படுத்திட அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு சட்டம் இயற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் இயற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப்புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது சரியல்ல.
மசோதா நிறைவேறியது
எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத, காலங்காலமாக போற்றி பாதுகாத்து வந்த மரபுகளை மீறுகின்ற, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற, இந்த சட்டத்தினை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்டமசோதா ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது.
மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழ்ப்புத்தாண்டு தினம் மாற்றப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்ட மசோதா
சட்டசபையில் நேற்று வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. துறையின் அமைச்சர்கள் பி.தங்கமணி, முகமது ஜான் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார்கள்.
பின்னர் தமிழ்ப்புத்தாண்டு நீக்க சட்ட மசோதா மீது உறுப்பினர்கள் பேசினர். அப்போது பேசிய உறுப்பினர் செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) தை 1-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை 1-ந் தேதிக்கு மாற்றுவது சரிதான் என்று கூறினார். ஆனால், ஏ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு) பேசும்போது, ``இந்த சட்டமசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டார். அப்போது தமிழ்ப்புத்தாண்டு நீக்க சட்ட மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்புத்தாண்டு தினம்
தமிழ் மொழி மீதும், தமிழர்கள் மீதும், தனக்கு மட்டுமே அக்கறை இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு தமிழ்ப்புத்தாண்டு (விளம்புகை) சட்டம், 2008-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டம், ஒரு சுய விளம்பரத்திற்காக இயற்றப்பட்டதே தவிர, இந்த சட்டத்தினால் மக்களுக்கு, எந்த வித நன்மையும் இல்லை. மாறாக, ஆண்டாண்டு காலமாக சித்திரை மாத பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இந்த சட்டம் அமைந்துள்ளது.
ஒரு நாட்டிலே, ஒரு சட்டம் இயற்றப்படுகிறது என்றால், அந்த சட்டம், அந்த நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் அல்லது இது போன்ற சட்டம் தேவை என்று மக்கள் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், அந்த சட்டம் இயற்றப்படுவதற்கான காரணங்கள் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும். இவை எதுவுமே இல்லாமல், யாருக்கும் பயனளிக்காத ஒரு சட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து, உடனடியாக சென்னையில் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சித்திரை முதல் நாள்
கருணாநிதியின் துதிபாடிகள் அனைவரும் அவரைப் போற்றினர். இதை தவிர, வேறு யாருக்கும் எந்த வித நன்மையும் இந்த சட்டத்தினால் ஏற்படவில்லை. தமிழக மக்கள் மத்தியில் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக, தமிழுக்கு மிகப்பெரிய சிறப்பினை செய்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்காக, இது போன்ற சட்டத்தை கருணாநிதி இயற்றியுள்ளார் என்பது தான் உண்மை.
தமிழர் காலக்கணிப்பு முறையின்படி, ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். இது சூரியனின் நகர்வை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது. சூரியன், மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும். ஆண்டின் தொடக்கம் வசந்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், சித்திரை மாதத்தை ஆண்டு தொடக்கமாக நம் மூதாதையர்கள் கணக்கிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பல்லாண்டு காலமாக, சித்திரை முதலாம் நாளையே புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பண்டை தமிழர்கள்
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாக கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு, இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாக கொண்டமைந்த ஆண்டு கணக்கீடு தான் பூர்வீகத்தமிழ் மரபாக இருக்க முடியும். கோடைக்காலமே முதலாவது பருவம் என சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.
"சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா!'' என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தால், சித்திரை மாதமே தமிழ்ப்புத்தாண்டுக்கு உரிய, பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். சித்திரைத்திங்கள் முதல் நாளை ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடலாம் என பல அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பண்டைத்தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் சித்திரை மாதம் தான்.
வரலாற்று சான்றுகள்
சங்க இலக்கியத்தின் மிகப் பழைய இலக்கியமான, பத்துப்பாட்டு இலக்கியத்தின் நெடுநல்வாடையில், சூரியன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரனார் தெளிவுபடுத்தி இருக்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தால் 1912-ம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் பேரகராதியிலும் சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசவைக் கவிஞராக இருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையும் "சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்'' என்ற தனது வாழ்த்துப்பாடலின் மூலம் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், பல்வேறு கல்வெட்டுகளும், எண்ணற்ற இலக்கியங்களும், சித்திரை மாதம் முதல் நாளன்று தமிழ்ப்புத்தாண்டு தொடங்குவதை உறுதிப்படுத்துகின்றன. இந்த சட்ட முன்வடிவு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட போது, இதை வரவேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி உறுப்பினர் என்.நன்மாறன், தமிழ்ப்புத்தாண்டை மாற்றி அமைத்ததற்கான காரணங்கள் இருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆனால், கடைசி வரையில் அதற்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை.
மக்கள் நம்பிக்கை
மேற்படி சட்டம் இயற்றப்படும் போது, அதற்கான நோக்க காரண விளக்க உரையில், தை திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்பதால், தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து, நடைமுறைப்படுத்திட அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு சட்டம் இயற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் இயற்றப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், சித்திரை திங்கள் முதல் நாளையே கோடான கோடி தமிழ் மக்கள் தமிழ்ப்புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. மக்கள் நம்பிக்கையை சட்டம் மூலம் மாற்றுவது சரியல்ல.
மசோதா நிறைவேறியது
எனவே, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத, காலங்காலமாக போற்றி பாதுகாத்து வந்த மரபுகளை மீறுகின்ற, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துகின்ற, இந்த சட்டத்தினை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்டமசோதா ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது.
Admin wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:இதை தவிர அம்மையார் ஒன்னும் உருப்படியா செய்ய போறதில்லை.. தமிழ்நாட்டின் கேடு...
இது மிகவும் முக்கியமானதுதானே விஜி.
எதுக்கு சிவா அண்ணா ?
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
தமிழ் புத்தாண்டு மாற்றம் : கருணாநிதி கண்டனம்
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றி சட்டம் கொண்டு வந்ததற்கு, கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள, "கேள்வி-பதில்' அறிக்கை:
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில் அ.தி.மு.க., அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே?
மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு, ஐநூறு புலவர் பெருமக்கள் கூடி, அவர்கள் ஆழமாக விவாதித்து, ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்று தான், திருவள்ளுவர் ஆண்டு என்பதும், ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில் தான் என்றும் முடிவு செய்தனர். அந்த ஐநூறு புலவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின்படி, தி.மு.க., ஆட்சியில், தை முதல் நாளை தமிழாண்டு தொடக்க நாள் என்றும், அதையொட்டித் தான், திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்து கொண்டாடி வருகிறோம். தி.மு.க., அரசின் சட்டத்தை ரத்து செய்து, அ.தி.மு.க., அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த போது, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதை எதிர்த்துள்ளனரே?
அவர்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மாற்றி சட்டம் கொண்டு வந்ததற்கு, கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள, "கேள்வி-பதில்' அறிக்கை:
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில் அ.தி.மு.க., அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே?
மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு, ஐநூறு புலவர் பெருமக்கள் கூடி, அவர்கள் ஆழமாக விவாதித்து, ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்று தான், திருவள்ளுவர் ஆண்டு என்பதும், ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில் தான் என்றும் முடிவு செய்தனர். அந்த ஐநூறு புலவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின்படி, தி.மு.க., ஆட்சியில், தை முதல் நாளை தமிழாண்டு தொடக்க நாள் என்றும், அதையொட்டித் தான், திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்து கொண்டாடி வருகிறோம். தி.மு.க., அரசின் சட்டத்தை ரத்து செய்து, அ.தி.மு.க., அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த போது, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதை எதிர்த்துள்ளனரே?
அவர்களின் தமிழ் உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு: சமத்துவ மக்கள் கட்சி நன்றி - சரத்குமார் அறிக்கை
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சித்திரை திருநாள் தமிழ் மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்துவிட்ட திருநாளாகும். எனவே தான் சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டு தினம் என்று அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடி வருகிறார்கள். எந்த ஒரு தேவையும் இன்றி, அவசியமும் இன்றி தமிழ்ப்புத்தாண்டு தினத்தை தி.மு.க. ஆட்சியாளர்கள் மாற்றி அறிவித்தனர். இதனை கேட்டு தமிழ் மக்கள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
அந்த வேதனையை தீர்க்கும் அருமருந்தாக முதல்-அமைச்சரின் ஆலோசனையின்பேரில் சித்திரை திருநாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தினம் என்று மீண்டும் அறிவித்திருப்பது தமிழர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சித்திரை திருநாள் தமிழ் மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்துவிட்ட திருநாளாகும். எனவே தான் சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டு தினம் என்று அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடி வருகிறார்கள். எந்த ஒரு தேவையும் இன்றி, அவசியமும் இன்றி தமிழ்ப்புத்தாண்டு தினத்தை தி.மு.க. ஆட்சியாளர்கள் மாற்றி அறிவித்தனர். இதனை கேட்டு தமிழ் மக்கள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
அந்த வேதனையை தீர்க்கும் அருமருந்தாக முதல்-அமைச்சரின் ஆலோசனையின்பேரில் சித்திரை திருநாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தினம் என்று மீண்டும் அறிவித்திருப்பது தமிழர்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டா? கி.வீரமணி கண்டனம்
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நாகபட்டினத்தில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் தை மாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டுவரப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ளது. மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் ஏற்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதுதான் `தை' மாதம் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு தொடக்கம் என்பதாகும்.
அதை மாற்றி மீண்டும் சித்திரை முதல் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு என்று அ.தி.மு.க. அரசு, சட்டம் இயற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நாகபட்டினத்தில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் தை மாதம் முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டுவரப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ளது. மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் ஏற்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதுதான் `தை' மாதம் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு தொடக்கம் என்பதாகும்.
அதை மாற்றி மீண்டும் சித்திரை முதல் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு என்று அ.தி.மு.க. அரசு, சட்டம் இயற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.
தமிழ்ப்புத்தாண்டு மாற்றத்துக்கு பா.ஜ.க. வரவேற்பு - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ்ப்புத்தாண்டு என்ற தமிழக அரசு அறிவிப்பை முழுமனதோடு வரவேற்பதாக பா.ஜ.க.தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இது குறித்து, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கடந்த தி.மு.க.ஆட்சியில் அறிவிக்கப்பட்டபோது அதை பா.ஜ.க. எதிர்த்தது. மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்துவரும் ஒரு நிகழ்வை திடீரென மாற்றக்கூடாது என்றும், சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
இப்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு சித்திரை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதை பா.ஜ.க. முழுமனதோடு வரவேற்கிறது.
இந்த சட்டத்தை எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருவோர் மீண்டும் மாற்றம் செய்யாதபடி தகுந்த சட்ட திருத்தங்களையும் அதற்கான சட்ட நடவடிக்கைகளையும் இந்த அரசு இப்போதே நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு பா.ஜ.க. உறுதுணைபுரியும், இந்த சட்ட திருத்தம் தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அரசு பஸ்களில் பொறிக்கப்பட்டிருந்த தமிழக அரசின் `கோபுரம்' சின்னத்தை மீண்டும் இடம்பெறச்செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ்ப்புத்தாண்டு என்ற தமிழக அரசு அறிவிப்பை முழுமனதோடு வரவேற்பதாக பா.ஜ.க.தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இது குறித்து, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக கடந்த தி.மு.க.ஆட்சியில் அறிவிக்கப்பட்டபோது அதை பா.ஜ.க. எதிர்த்தது. மக்கள் பாரம்பரியமாக கடைப்பிடித்துவரும் ஒரு நிகழ்வை திடீரென மாற்றக்கூடாது என்றும், சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
இப்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு சித்திரை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதை பா.ஜ.க. முழுமனதோடு வரவேற்கிறது.
இந்த சட்டத்தை எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருவோர் மீண்டும் மாற்றம் செய்யாதபடி தகுந்த சட்ட திருத்தங்களையும் அதற்கான சட்ட நடவடிக்கைகளையும் இந்த அரசு இப்போதே நிறைவேற்ற வேண்டும்.
அதற்கு பா.ஜ.க. உறுதுணைபுரியும், இந்த சட்ட திருத்தம் தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அரசு பஸ்களில் பொறிக்கப்பட்டிருந்த தமிழக அரசின் `கோபுரம்' சின்னத்தை மீண்டும் இடம்பெறச்செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 56 அறிஞர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை விருதுகள்எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்
» தமிழ் புத்தாண்டு தேதி மீண்டும் மாற்றம்: 500 புலவர்கள் எடுத்த முடிவை மாற்றுவதா? திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
» தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?
» சுவீடனில் தமிழ்ப் புத்தாண்டு
» தமிழ்ப் புத்தாண்டு வரலாறு
» தமிழ் புத்தாண்டு தேதி மீண்டும் மாற்றம்: 500 புலவர்கள் எடுத்த முடிவை மாற்றுவதா? திருமண விழாவில் கருணாநிதி பேச்சு
» தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?
» சுவீடனில் தமிழ்ப் புத்தாண்டு
» தமிழ்ப் புத்தாண்டு வரலாறு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|