புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
21 Posts - 70%
heezulia
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
1 Post - 3%
viyasan
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
213 Posts - 42%
heezulia
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
21 Posts - 4%
prajai
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
7 Posts - 1%
mruthun
153 L.B சாலை அடையாறு Poll_c10153 L.B சாலை அடையாறு Poll_m10153 L.B சாலை அடையாறு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

153 L.B சாலை அடையாறு


   
   
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Sun Aug 21, 2011 11:51 pm

153 L.B சாலை அடையாறு

153 L.B சாலை அடையாறு 20082011869

சனிக்கிழமை காலை ஃபேஸ்புக்கில் உலாவிக்கொண்டிருக்கும்போது IAC (India against corruption) ஒரு செய்தி லிங்க் வந்தது.... அடையாறில் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று. சரி இன்று நாம் அங்கு செல்வோம் என்று நானும் காலையிலேயே எதுவும் சாப்பிடாமல் அங்கே சென்றேன்.... நான் அங்கே சென்றபோது மணி 10.30. உள்ளே நுழையும் போதே ஒரு பரிச்சயமான முகம் ஒன்று தென்பட்டது. வாசலில் ANI செய்தி சேனலுக்கு பேட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார் அந்த நபர். தலையில் அந்த வெள்ளை நிற தொப்பியோடு மிகவும் அழகாக தெளிவாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார். கிட்டே சென்று பார்த்ததில் தெரிந்தது அந்த மனிதர் திரைப்படங்களில் நடிக்கும் கிட்டி ( ராஜா கிருஷ்ணமூர்த்தி..) என்பவர்.


153 L.B சாலை அடையாறு 20082011862

153 L.B சாலை அடையாறு 20082011863


அவர் பேசியதில் மிகவும் கவர்ந்தது. அந்த நிருபர் ஒரு கேள்வி கேட்டிருந்தார்....

சட்டம் கொண்டு வருவதற்கு பார்லிமென்ட் என்று ஒன்று இருக்கிறது. இப்படி உண்ணாவிரதம் இருந்து சட்டம் நிறைவேற்றுவதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கிறேன்.. நீங்கள் இரு சக்கர வாகனம் வைத்திருக்கிறீர்கள்... நாம் சாலையில் போகிறோம்... சிவப்பு சிக்னல் வந்தால் நிற்கிறோம்... மஞ்சல் சிக்னல் வந்தால் தயாராகிறோம்... பச்சை சிக்னல் வந்தால் செல்கிறோம்... எல்லாம் சட்டப்படி செய்கிறோம்... ஒரு ஆம்புலன்ஸ் ஒன்று வரும்போது எல்லோரும் மதிக்கிற சட்டத்தை அந்த ஆம்புலன்ஸ் மதிப்பதில்லை.. அது தவறா?! அதன் நோக்கம் ஒரு உயிரைக் காப்பது.. இன்று இந்திய தேசம் ஊழலில் சிக்கி சுவாசிக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது.. இந்த உயிரைக்காப்பாற்ற இப்படி ஒரு வலுவான ஜனலோக்பால் தேவை.. அப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படவேண்டுமென்றுதான் இப்படிப்பட்ட உண்ணாவிரதம் இங்கு நடைபெறுகிறது என்றார்.


உள்ளே நுழையும் வழியில் வாலண்டியர்ஸ் நிறைய பேர் கையெழுத்து பதிவு செய்யும் பணியில் இருந்தார்கள். அவர்களிடம் கையெழுத்திட்டு பதிவு செய்துவிட்டு, இன்று உண்ணாவிரதம் இருந்துக்கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டு ஆம் என்றதும், ஒரு சின்னஸ்டிக்கரில் என் பெயர் மற்றும் என்னுடைய வீட்டு தொலைபேசி எண் கேட்டு எழுதி என் சட்டையில் ஒட்டிவிட்டார்கள். இது அவசர உதவிக்கான சேவை என்று நினைக்கிறேன்.

அருகில் ஒரு பெரிய வெள்ளை நிற பலகையில் அனைவரும் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தனர். நானும் என் அங்கே என் கையெழுத்தை எழுதினேன்...


153 L.B சாலை அடையாறு 21082011880

அருகில் இந்தியா கொடி ஒன்றும், பேட்ஜ் ஒன்றும் வாங்கிக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கும் அறைக்குள் நுழைந்தேன்... "வலுவான ஜனலோக்பால் பெறும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம்" என்று பெரிய பேனரின் கீழே 40க்கும் மேற்பட்டோர் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு படி கீழே அன்றன்று உண்ணாவிரதம் (Rely Fast) இருப்பவர்கள் 100 பேருக்கும் மேல் குழுமியிருந்தார்கள்.

சேனல்கள் Times Now, X News, கலைஞர் டிவி, ரிப்போர்ட்டர்கள் வந்திருந்தனர்.

அங்கே 40" டிவி 3 இருந்தன times now / ndtv சேனல்கள் ஓடிக்கொண்டிருந்தன... இடையிடையே சுதந்திரபாடல்கள் பாடின... எல்லோரும் தொடர்ந்து ஊழலுக்கெதிரான முழக்கங்கள் ஒலித்துக்கொண்டேயிருந்தனர். அவர்களோடு சேர்ந்து உரக்க சொல்லும்போது உண்மையில் மனமும் உடலும் ஒருசேர "ஆனந்தப்பட்டுக்கொண்டேயிருந்தன.

153 L.B சாலை அடையாறு 20082011873

153 L.B சாலை அடையாறு 20082011872

S.R.M காலேஜில் இருந்து ஒரு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். மற்றும் பள்ளிக்குழந்தைகள் பள்ளி யூனிஃபார்மில் 100 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் வந்திருந்தனர். மூத்த குடிமக்கள், காக்கி ஃயூனிஃபார்மில் வந்திருந்த ஆட்டோ டிரைவர்கள், குடும்பம் குடும்பமாக வந்திருந்தவர்கள் இப்படிப்பட்ட பல தரப்பட்ட மனிதர்களை கானும்போது, நிச்சயம் மக்கள் அன்னா ஹசாரேவின் இந்த அகிம்சை வழியிலான போராட்டத்தை மெளனமாக ஆதரிக்கின்றனர் என்பது வெகுவாக தெரிந்தது.

153 L.B சாலை அடையாறு 20082011870

சிறிது நேரத்தில் பைக்ரேலி துவங்க இருக்கிறது. இரு சக்கர வாகனம் வைத்திருக்கிறவர்கள் பதிவு செய்துகொள்ளுங்கள் என்று..

அடடா நம்மிடம் பைக் இல்லையே என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே பதிவு செய்யும் இடத்திற்கு வந்தேன். அங்கே சிங்கிள் என்று ஒருவர் பதிவு செய்தார். நான் உங்களுடன் வரலாமா என்றேன். வாருங்கள் என்றார். சிறிது நேரத்தில் பைக் ரேலி தொடங்கியது.

சரியாக 2.30 மணிக்கு துவங்கியது..


153 L.B சாலை அடையாறு 20082011876


50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடைஞ்சலும் தராமல் அடையாறு துவங்கி, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, சென்ட்ரல், பாரீஸ் சென்று
இறுதியில் மெரீனா வந்தடையும்போது சரியாக மணி 6.00.

இடையில் மிகவும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம். வழியில் தாகத்திற்கு தண்ணீர் பாக்கெட் கொடுத்தார்கள். வாலன்டியர்கள். அந்த தண்ணீர் பாக்கெட்டின் கவரை கூட கீழே வீசியெறிய வேண்டாமென்று சொல்லி அதை ப்ளாஸ்டிக் பைகளில் சேகரித்துக்கொண்டார்கள்.. இடையில் குளிர்பான கொடுக்கும்போதும் அந்த பாட்டில்களை அவ்வாறு வீசியெறியவேண்டாமென்று சேகரித்து வைத்துக்கொண்டார்கள். பைக்ரேலி போராட்டம் என்று சொல்லி சாலையை குப்பையாக்காமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யாமல் இதை முடித்தவிதம் மிகவும் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்றே என்னுகிறேன்.

மாலை 6.00 மணிக்கு பைக் ரேலி மெரீனாவில் முடிவடைந்தது. அதற்குள் ஒரு 300க்கும் மேற்பட்டோர் அங்கே குழுமியிருந்தார்கள். நேரம் ஆக ஆக கூட்டம் சேர்ந்துக்கொண்டேயிருந்தது.

என் மொபைல் சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதால் மெரீனா புகைப்படங்கள் மிஸ்ஸிங்.

(தினமும் மாலை 6.00 மணியளவில் மெரீனாவில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.)

நானும் பைக் நண்பனும் மெழுகு வர்த்தி வாங்கிக்கொண்டு அங்கே அமர்ந்தோம். டம் டம் என்று ஒரு மேள சத்தம். பள்ளி மாணவர்கள் 100 பேருக்கும் மேல் தலையில் வெள்ளை தொப்பி அணிந்து இசை வாசித்துக்கொண்டு ஒரு march past நடத்தினார்கள். மாலை மறைந்து இரவு நேரம் ஆனபோது அனைத்து மெழுகுவர்த்திகளும் உயிர்பெற்றன. ஒவ்வொன்றும் கண்ணீர் விட ஆரம்பித்தன!!

அந்த இடமே ஒளிபிரவாகமாக இருந்தது. அனைவரும் கோஷங்கள் எழுப்பியும், சத்தமிட்டும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தனர்.. எனக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் தன் அம்மாவிடம், அம்மா வாம்மா பீச்ல விளையாட போகலாம்மா என்று... அதற்கு அந்த அம்மா சொன்னார்.. நாம எப்போ வேனும்னாலும் பீச்ல போய் விளையாடிக்கலாம்.. நாம் இப்போ இங்கே வந்திருக்கிறது ஒரு நல்ல விஷயத்துக்காக.. இதெல்லாம் ஆங்கில உரையாடல்கள். கேட்டது மிக சந்தோஷமாகவே இருந்தது...

சரியாக 7.30 மணிக்கு எல்லோரும் நாளை சந்திக்கலாம் என்றபடி விடைபெற்றனர். அதற்குள் வாலன்டியர்கள் வந்து பாதியளவு உருகிப்போயிருந்த மெழுகு வர்த்திகள் மற்றும் கப்களையெல்லாம் சேகரிக்க ஆரம்பித்து அதையெல்லாம் ஓரிடத்தில் சேர்த்து, இந்த இடத்திலா மெழுகுவர்த்தி போராட்டம் நடைபெற்றது என்று வியக்குமளவு சிறு குப்பையும் இல்லாமல் சுத்தப்படுத்தி சென்றனர்.

நானும் ஒரு வித ஆத்மார்த்த மனநிலையோடு வீடு வந்தேன்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை எழுந்ததும் சரி இன்றைக்கும் அங்கு செல்வோம் என்று முடிவு செய்து நேற்று வாங்கியிருந்த கொடியை மட்டும் எடுத்துக்கொண்டு அதே அடையாறை நோக்கி சென்றேன். உள்ளே நுழைந்து கொடியை கட்டும் ஒரு சின்ன பைப் ஒன்றை வாங்கிக்கொண்டு அமைதியாக உண்ணாவிரதம் அறைக்குள் நுழைந்து கொடியை அசைத்தபடி அமர்ந்திருந்தேன். நேற்றைவிட இன்று சிறுபிள்ளைகள் அதிகம். அவர்கள் அனைவரையும் உண்ணாவிரத மேடைக்கு முன்பாக நிற்கவைத்து அவர்கள் கரங்களில் தேசியக்கொடியை ஏந்தி ஆட்டியபடி புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். யாராகிலும் ஒருவர் கோஷம் எழுப்புக்கொண்டேயிருந்தனர். 2.30 மணியளவில் வாசலில் நின்று சிறிது நேரம் வாலண்டியராக நானும் செயல்பட்டேன். இரு சக்கர வாகனங்களில் வருவோரை உள்ளே வரச்சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு செல்லும்படியும் சொல்லிக்கொண்டிருந்தோம். நான் அவசர வேலையாக செல்ல வேண்டியிருந்தால் 3.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்..

"மாலை 5.30 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி மெரீனாவில் போராட்டம், மற்றும் தினந்தோறும் உண்ணாவிரதம் 153, L.B. ROAD அடையாறு, (அடையாறு டிப்போ மற்றும் HDFC வங்கி அருகில்) நடைபெறுகிறது. இந்த செய்தியை அனைவருக்கும் ஃபார்வர்டு செய்யுங்கள் குறைந்தபட்சம் நம்மால் இதை செய்யமுடியும்" என்ற குறுஞ்செய்தியை என் மொபைலில் இருந்த எண்களுக்கெல்லாம் அனுப்பிவிட்டு பேருந்தில் பயணித்தேன்..

உள்ளம் மட்டும் இரு வரிகளை அசைப்போட்டுக்கொண்டேயிருந்தது.

நம்பவே முடியாத ஊழல்கள் அரங்கேறுவது சாத்தியமாகுமென்றால்....
சாத்தியமே இல்லாத ஜனலோக்பாலும் சட்டமாவது சாத்தியாகட்டுமே!!!

153 L.B சாலை அடையாறு Candlelightgirl

https://s128.photobucket.com/albums/p163/shenisi/Adyar%20Fast%2020%20Aug/

அன்புடன்
ஷீ-நிசி

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Aug 22, 2011 12:05 am

ஈகரையில் இருந்து நம்மவர் ஒருவர் இந்த அறப் போராட்டத்தில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

இப்போராட்டம் வெற்றி பெற்று நல்லது நடக்க காத்திருப்போம்.



நட்புடன் - வெங்கட்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 22, 2011 1:12 am

உங்கள் மூலமாக நானும் இந்த அறப்போராட்டதில் கலந்து கொண்ட உணர்வு..!
பகிர்விற்கு நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 22, 2011 9:13 am

அருண் wrote:உங்கள் மூலமாக நானும் இந்த அறப்போராட்டதில் கலந்து கொண்ட உணர்வு..!
பகிர்விற்கு நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,153 L.B சாலை அடையாறு Image010ycm
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 22, 2011 10:53 am

அருண் wrote:உங்கள் மூலமாக நானும் இந்த அறப்போராட்டதில் கலந்து கொண்ட உணர்வு..!
பகிர்விற்கு நன்றி.. 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196 153 L.B சாலை அடையாறு 677196
நானும் தான் .... 153 L.B சாலை அடையாறு 1772578765

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Aug 22, 2011 11:01 am

நம் எஸ்‌கே கூட இதில் கலந்து கொண்டார்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 22, 2011 1:43 pm

நன்றி ஷீ-நிசி என்னை குவைத் இருந்து சென்னை அழைத்து சென்றது உங்களது கட்டுரை. ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் 153 L.B சாலை அடையாறு 154550

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Mon Aug 22, 2011 7:20 pm

நன்றி நண்பர்களே... உங்களுக்கு அருகில் இப்படிப்பட்ட போராட்டங்கள் நடந்தால் அதில் தவறாமல் கலந்துகொள்ளும் சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.. பல்வேறு பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி இதை பிரதானமாக நினைத்து பங்குகொள்ளுங்கள். சட்டம் நிறைவேறுகிறதோ, இல்லையோ நாம் முயற்சித்தோம் என்ற மனதிருப்தி நமக்கு நிச்சயம் உண்டாகும்.

10 பேர் மட்டும் கூடினாலும் அந்த 10 பேரில் நாமும் ஒருவராக இருப்போம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக